புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
28 Posts - 53%
heezulia
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 2%
prajai
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
216 Posts - 43%
heezulia
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
24 Posts - 5%
i6appar
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
12 Posts - 2%
prajai
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_m10பூலோக அமிர்தம் நெல்லிக்கனி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூலோக அமிர்தம் நெல்லிக்கனி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 2:18 am

#நெல்லிக்கனி பூமியில் எப்படித் தோன்றிற்று என்ற கதை தெரியுமா?

முன்னொரு காலத்தில், வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடல் கடையப்பட்டது. தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக நின்று அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள்.

அப்போது ஐராவதம் என்னும் வெள்ளை யானை, உச்சைச்வரம் என்னும் வெண்குதிரை, காமதேனு என்ற பசு உள்ளிட்டவைங்கள், பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. இறுதியில் திரண்டு வந்தது #அமிர்தம்.

திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றி அமிர்தம் தேவர்களுக்கே கிடைக்குமாறு செய்தார். அமிர்தத்தை தேவர்களின் அரசனான இந்திரன் உள்பட எல்லாத் தேவர்களும் அருந்தினார்கள்.

இந்திரன் அருந்தும்போது சற்றுக் கவனமாக அருந்தக்கூடாதா? அவனது கவனமின்மையால் ஒரு நற்பயன் நேர்ந்தது. உயிரை வளர்க்கக் கூடிய உத்தமமான அமிர்தத்தில் ஒரே ஒரு சொட்டு பூமியில் விழுந்துவிட்டது.

விழுந்த சொட்டு விதையாக மாறி மரமாய் வளர்ந்தது. அந்த மரமே #நெல்லி மரம். அதன் கனியே இன்று நமக்குக் கிட்டும் நெல்லிக் கனி.

ஒவ்வொரு நெல்லிக்கனியும் ஓரொரு அமிர்தச் சொட்டுதான். அதனால்தான் நெல்லிக் கனியைச் சாப்பிட்டால் ஆயுள் வளரும் என்கிறார்கள்.

ஆதிசங்கரர் அருளிய சுலோகம் ஒன்றின் பின்னணியில் நெல்லிக் கனி ஒளிவீசுகிறது.

சங்கரர் துறவியாவதற்கும் முன்பாக அருளிய அவரது முதல் படைப்புத்தான் கனகதாரா ஸ்தோத்திரம். கனகம் என்றால் பொன். தாரை என்றால் மழை. கனகதாரா என்றால் பொன்மழை என்று பொருள்.

இந்த ஸ்தோத்திரத்தை `பொன்மழைப் பாடல்கள்` என்ற தலைப்பில் அழகாகத் தமிழாக்கியுள்ளார்

கவியரசர் கண்ணதாசன்.

`மாலவன் மார்பில் நிற்கும்

மங்கலக் கமலச் செல்வி

மரகத மலரில் மொய்க்கும்

மாணிக்கச் சுரும்பு போன்றாய்!`

என வரும் வரிகள், அதன் இலக்கிய நயம் நிறைந்த தொடக்க வரிகள்.

அன்று ஏகாதசி. அயாசகன் இல்லத்தில் என்றுமே ஏகாதசிதான். வறுமையின் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்து வந்தார்கள் அவனும் அவன் மனைவியும்.

ஏகாதசி முடிந்தால் மறுநாள் துவாதசி. பட்டினியை முறித்து ஏதேனும் சாப்பிடும் நாள். அப்படிச் சாப்பிடுவதற்காக ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனியை தன் இல்லத்து மாடப் பிறையில் வைத்திருந்தான் அயாசகன்.

காலை வேளையில் அவன் நதியில் நீராடச் சென்றிருந்தான். மனைவி இல்லத்தில் இருந்தாள்.

அன்று இளம் ஆதிசங்கரர் கையில் பிச்சை பாத்திரத்தோடு அவன் இல்லத்தின் முன் வந்து நின்றார். குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் பிச்சை எடுத்துச் சாப்பிடுவதுதானே வழக்கம்? `பவதி பிட்சாம் தேகி, எனக்கு உணவிடுங்கள்' என வீட்டு வாசலில் நின்று உரக்கக் குரல் கொடுத்தார்.

இல்லத்தின் உள்ளிருந்த அயாசகனின் மனைவி அந்தக் குரலைக் கேட்டுப் பரவசமடைந்தாள். என்ன குரல் இது? குழலோசையை வெல்லும்போல் இருக்கிறதே இந்தக் குரலோசை? எந்த மனிதக் குயில் இப்படி இசைக்கிறது? வாயிலில் வந்து பார்த்தாள்.

அருள்பொங்கும் முகத்தோடு நின்று கொண்டிருந்தது சங்கரன் என்ற தெய்வீகக் குழந்தை.

அடடா. இந்தக் குழந்தையின் பிச்சை பாத்திரத்தில் போட மணியரிசி இல்லையே? என்ன செய்வேன்?

தன் பசியை அவள் பொறுத்துக் கொள்வாள். ஆனால் ஒரு பச்சிளம் பாலகனுக்கு உணவிட முடியாத நிலை அவள் மனத்தை வாட்டி வதைத்தது.

பரபரப்போடு அங்குமிங்கும் தேடினாள். மாடப்பிறையில் இருந்த அந்த ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனி கண்ணில் பட்டது.

வேறு வழியில்லை. இதையாவது அந்தச் சிறுவனுக்கு அளிப்போம்.

நெல்லிக் கனியைக் கையிலெடுத்தாள். இதையும் ஓர் உணவாக அளிக்கிறோமே என்ற தாளாத கூச்சத்தோடு சங்கரரின் பிச்சை பாத்திரத்தில் நெல்லிக்கனியைப் போட்டுவிட்டுக் கண்ணீர் வழிய வீட்டின் உள்ளே ஓடிவிட்டாள்.

நிலைமையைப் புரிந்துகொண்டார் சங்கரர். தன்னிடமிருந்த ஒரே நெல்லிக் கனியையும் எனக்குத் தந்துவிட்டுப் போகிறாளே? என்ன கருணை அவளுக்கு?

இந்தக் குடும்பத்தினருக்கா வறுமை? இது என்ன நியாயம்?

தாயே லட்சுமி தேவி! இவர்கள்மேல் உன் பார்வை படக்கூடாதா? கர்ம வினை காரணமாக இவர்களுக்கு இந்நிலை என்றால், உன் கருணை மழை அந்தக் கர்ம வினையை அடித்துக் கொண்டு போகலாகாதா?

ஆதிசங்கரரின் அதரங்களில் இருந்து பிறந்தது `அங்கம் ஹரே' எனத் தொடங்கும் கனகதாரா ஸ்தோத்திரம். அதை அவர் பாடி முடித்த மறுகணம் லட்சுமி அந்த வீட்டினர்மேல் கருணை கொண்டாள். பின்னே பரிந்துரைத்தது சங்கரர் ஆயிற்றே?

அந்த ஏழைப் பெண் கொடுத்த ஒரே ஒரு நெல்லிக்கனிக்கு பதிலாக தங்க நெல்லிக்கனி மழையையே அவர்கள் வீட்டில் பொழியச் செய்தாள்.

கூரையைப் பிய்த்துக்கொண்டு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிறார்களே? அயாசகன் வீட்டில் உண்மையிலேயே கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்க நெல்லிக்கனிகள் கொட்டுக் கொட்டென்று கொட்டித் தீர்த்தன.

இன்றும் கேரளத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலடி என்ற ஷேத்திரத்தில் பொன்மழை பொழிந்த இல்லத்தை நாம் தரிசிக்கலாம்.

சங்கரர் ஒருமுறை கொல்லூருக்கு விஜயம் செய்தார். பிச்சை ஏற்க ஓர் அன்பர் இல்லத்திற்குச் சென்றார். கணவரும் மனைவியுமாக சங்கரருக்கு உணவிடும்போது அவர்களின் விழிகளில் இருந்து அருவிபோல் கண்ணீர் வழிந்தது.

அவர்களின் துயரத்திற்குக் காரணமென்ன எனப் பரிவுடன் வினவினார். தங்கள் மகன் பிறந்ததில் இருந்து வாய்பேசாதிருக்கிறான் எனக் கூறிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

மகனை அழைத்துவரப் பணித்தார். சிறுவன் அவர்முன் வந்து நின்றான். பிறவியிலேயே மெய்ஞ்ஞானி அவன் என்பதை அவனின் ஒளிவீசும் விழிகள் புலப்படுத்தின.

அவனிடம் `நீ யார்?' எனக் கேட்டார். அவன் திடீரென்று பேசத் தொடங்கினான். பெற்றோர் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீ யார் என்ற கேள்விக்கு உலகியல் ரீதியாக தான் இன்னாரின் பிள்ளை என்றோ தன் பெயர் இன்னதென்றோ அவன் பதில் கூறவில்லை.

ஆன்மிக ரீதியாக கடவுள் என்னும் பெருங்கடலில் தான் ஒரு திவலை என்பதாக அத்வைத தத்துவ சாரத்தையே பதிலாகக் கூறினான்.

அதுவும் கவிதைகளாய்ப் பொழிந்தான் அவன். அப்போது அந்தச் சிறுவன் பாடிய பதினான்கு செய்யுள்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தில் நிலைத்துள்ளன.

உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அத்வைத தத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கிய அவனுக்கு ஹஸ்தாமலகர் எனப் பெயரிட்டார் சங்கரர். (ஹஸ்தம் என்றால் கை. ஆமலகம் என்றால் நெல்லிக்கனி.)

இந்நிகழ்வுக்குப் பின் ஹஸ்தாமலகரைத் தன் சீடனாகவே ஏற்றுக்கொண்டார் சங்கரர் என்கிறது சங்கரரின் திருச்சரிதம்.

சங்கரர் வாழ்வில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும் என்றும் தெவிட்டாத ஓர் இலக்கிய நெல்லிக் கனி இடம்பெற்றுள்ளது.

அவ்வையார் மேல் மிகுந்த மதிப்பும் பாசமும் வைத்திருந்தான் தகடூரை ஆண்டுவந்த வள்ளல் அதியமான். அவன் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு கருநெல்லி மரத்தைக் கண்டான்.

கருநெல்லி மரம் அபூர்வம் என்றால் அதில் நெல்லிக்கனி விளைவது அதனினும் அபூர்வம். அந்தக் கருநெல்லி மரத்தில், ஆயுளை நீட்டிக்கும் அரிய நெல்லிக்கனி ஒன்றே ஒன்று கனிந்திருக்கக் கண்டான்.

அதைப் பறித்தான். அவன் மனம் சிந்தித்தது. அந்தக் கருநெல்லிக்கனியை உண்டால் அவன் ஆயுள் நீட்டிக்கும்.

ஆனால் தன் ஆயுள் நீள்வதை விட அவ்வையின் ஆயுள் நீள்வதல்லவா இன்னும் நல்லது? அவ்வை எழுதும் அழகிய கவிதைகளால் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் தழைக்குமே? தான் வாழ்வதை விடத் தமிழ் வாழ்வதல்லவா முக்கியம்?

கனியை பத்திரமாக அரண்மனைக்குக் கொண்டுவந்தான். அவ்வையை அழைத்து அதன் பெருமையைச் சொல்லாமலே அதைக் கொடுத்து உண்ணச் செய்தான்.

அதன் பின்னர், தான் உண்ட நெல்லிக்கனியின் மகத்துவத்தை அறிந்த அவ்வை, தன்மேலும் தமிழ்மேலும் அதியமான் வைத்திருக்கும் அதிகமான பாசத்தை எண்ணி வியந்தாள்.

`...பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத் தடக்கிச்

சாதல் நீங்க எமக்கீந்தனையே! '

என அவ்வை பாடிய புறநானூற்றுப் பாடல் அதிகமானை நெஞ்சாரப் புகழ்கிறது.

நெல்லியில் திருமால் வாசம் செய்கிறார். அதனால் நெல்லிக்கு `ஹரிபிரியா' என்ற பெயரும் உண்டு.

துவாதசியில் நெல்லிக்கனி உண்பவனுக்கு கங்கையில் நீராடிய பயன் கிட்டும். கோவில் கோபுரக் கலசங்களின் உட்புறத்தில் நெல்லியையும் போடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நெல்லி மரத்தை வலம்வருவது சிறப்பு.

சத்துக்களைப் பொறுத்தவரை இரண்டு நெல்லிக்காய்கள் ஓர் ஆப்பிளுக்கு சமம். நெல்லிக்காய் கண்களுக்குத் தெளிவைக் கொடுப்பதுடன் தலைமுடி உதிராமலும் நரைக்காமலும் இருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

`மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்' எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. நெல்லிக்கனி உண்ணும்போது முதலில் கசப்பதாகத் தோன்றும். ஆனால் அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்தால் தண்ணீர் தேனாய்த் தித்திக்கும்.

மூத்தவர்களின் சொற்களும் அப்படித்தான். முதலில் கசப்பாய் இருந்தாலும், காலம் போகப் போக நடைமுறையில் அவர்களின் அறிவுரையைக் கடைப்பிடித்தோமானால் வாழ்க்கை தித்திக்கும்.

நாம் நெல்லிக் கனியின் ஆன்மிகப் பயனையும் உலகியல் பயனையும் ஒருசேர அடைவோமாக.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக