புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
69 Posts - 41%
heezulia
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
3 Posts - 2%
manikavi
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
320 Posts - 50%
heezulia
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
22 Posts - 3%
prajai
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 0%
manikavi
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 3:02 am



நினைத்த காரியம் கைகூட, எடுத்த செயல் இடையூறின்றி முடிய, விநாயகரை வழிபட்டுச் செயலைத் தொடங்குவது இந்து மரபு. தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் பிள்ளையார் கோவில்களை நாம் காண்கிறோம்.

ஆனால் அப்படிப்பட்ட #விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு அந்நியம், எட்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்துக்கே இவ்வழிபாடு கொண்டுவரப்பட்டது என்பதுபோன்ற கதைகள் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன் சொல்லப்படும்.

விநாயகர் தமிழ் மண்ணுக்கு அந்நியம் என்பதற்கு ஆதாரமாக சங்க இலக்கியங்கள் எதிலும் விநாயகர் அல்லது பிள்ளையார் அல்லது யானைமுகத்தோன் குறித்து நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பார்கள். சங்க இலக்கியங்கள் சமய இலக்கியங்கள் அன்று. பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் மட்டுமே சமயம் சார்ந்தவை. சங்க இலக்கியத்தின் திணைக்கோட்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது மட்டும்தான் தமிழர் தெய்வங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற நாட்டார் தெய்வங்கள் குறித்தும்தான் சங்க இலக்கியத்தில் இல்லை.

நரசிம்மப் பல்லவன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தாக்கி அழித்து, இரண்டாம் புலிகேசியைக் கொன்றது 642-ம் ஆண்டு. அப்போது அவருடைய படையில் தளபதியாக இருந்த பரஞ்சோதி என்பவர் அங்கிருந்து கணபதி சிலையைக் கொண்டுவந்து தன் ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவியதாக ஒரு கதை உள்ளது. இவர்தான் பிற்காலத்தில் சிறுத்தொண்டர் என்ற நாயன்மாராக அறியப்பட்டார் என்றும் சொல்வர். இதனால்தான் முத்துசாமி தீக்ஷிதர் ‘வாதாபி கணபதிம்’ என்ற கிருதியை இயற்றினார் என்பதும் பொதுவாக இதற்குச் சான்றாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இப்போது திருச்செங்காட்டங்குடியில் இருப்பது சாளுக்கியக் கலையம்சம் கொண்ட கணபதி சிலை அல்ல.

பல்லவர், பாண்டியர் இருவரும் களப்பிரரை வென்று, தத்தம் ஆட்சிகளை நிலைநிறுத்தி கருங்கல்லில் குகைக்கோவில்களை உருவாக்கத் தொடங்கினர். பல்லவர் காலக் கட்டுமானங்களில் ராஜசிம்மன் காலத்தில்தான் (690-725) கோவில்களில் மிகத் தெளிவாகப் பிள்ளையார் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், பாண்டியர், முத்தரையர் குகைகளில் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. ஒரு குறை, இந்தக் குகைகளின் தெளிவான காலகட்டம் நமக்குக் கிடைப்பதில்லை. அங்கிருக்கும் ஒருசில கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவ அமைதியைக் கொண்டே அவற்றின் காலத்தைக் கணிக்கமுடிகிறது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குகைக்கோவிலில் உள்ள கல்வெட்டைப் பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். சா.கணேசன் இதனை ஏழாம் நூற்றாண்டு என்றும் இரா.நாகசாமி ஆறாம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடுகின்றனர். 1990-களில் ஐராவதம் மகாதேவன் நேரில் சென்று பிள்ளையார்பட்டிக் கல்வெட்டை ஆய்வு செய்தார். வட்டெழுத்தின் ஆரம்பகட்டம் இந்த எழுத்துகள் என்பது அவருடைய முடிவு. “கி.பி. 6-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்” என்று மிகத் தெளிவாக அவர் சொல்கிறார்.

பெரும்பாலான பாண்டியர் குகைகளிலும் கிட்டத்தட்ட அனைத்து முத்தரையர் குகைகளிலும் விநாயகர் சிலைகள் காணப்படுகின்றன. இவை எல்லாமே பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி எழுப்பப்பட்டவை. ஆண்டிச்சிப்பாறையில் முற்றுப்பெறாத பாண்டியர் குகை ஒன்று உள்ளது. அதில் இரு சிற்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று விநாயகர் சிற்பம். எனவே தொடக்கக்கட்டப் பல்லவர் குகைகளில் கிடைக்கவில்லை என்பதனாலேயே விநாயகர் வழிபாடு வெளியிலிருந்து வந்தது என்று முடிவுகட்டக்கூடாது.

2015-ம் ஆண்டு, வட தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமம் என்னுமிடத்தில் உள்ள எமதண்டீஸ்வரம் என்னும் கோவிலில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறித்த விநாயகர் சிலை கிடைத்துள்ளது. அதனை ஆராய்ச்சி செய்த கல்வெட்டியல் நிபுணர்களும் இது, 4 முதல் 6-ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட எழுத்தே என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சம்பந்தர் போன்ற நாயன்மார்கள் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றத் தொடங்குகின்றனர். இவர்களுடைய பதிகங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளும் விநாயகர் வழிபாடும் வருகின்றன.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நரசிம்மவர்மப் பல்லவனும் பரஞ்சோதியும் ஏழாம் நூற்றாண்டில்தான் வாதாபியிலிருந்து விநாயகரைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. சங்கம் மருவிய காலத்திலிருந்தே, நான்காம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு உள்ளது என்பது தெளிவாகிறது.

பத்ரி சேஷாத்ரி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக