புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_m10தமிழகத்தில் விநாயகர் வழிபாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 3:02 am



நினைத்த காரியம் கைகூட, எடுத்த செயல் இடையூறின்றி முடிய, விநாயகரை வழிபட்டுச் செயலைத் தொடங்குவது இந்து மரபு. தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் பிள்ளையார் கோவில்களை நாம் காண்கிறோம்.

ஆனால் அப்படிப்பட்ட #விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு அந்நியம், எட்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்துக்கே இவ்வழிபாடு கொண்டுவரப்பட்டது என்பதுபோன்ற கதைகள் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன் சொல்லப்படும்.

விநாயகர் தமிழ் மண்ணுக்கு அந்நியம் என்பதற்கு ஆதாரமாக சங்க இலக்கியங்கள் எதிலும் விநாயகர் அல்லது பிள்ளையார் அல்லது யானைமுகத்தோன் குறித்து நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பார்கள். சங்க இலக்கியங்கள் சமய இலக்கியங்கள் அன்று. பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் மட்டுமே சமயம் சார்ந்தவை. சங்க இலக்கியத்தின் திணைக்கோட்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது மட்டும்தான் தமிழர் தெய்வங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற நாட்டார் தெய்வங்கள் குறித்தும்தான் சங்க இலக்கியத்தில் இல்லை.

நரசிம்மப் பல்லவன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தாக்கி அழித்து, இரண்டாம் புலிகேசியைக் கொன்றது 642-ம் ஆண்டு. அப்போது அவருடைய படையில் தளபதியாக இருந்த பரஞ்சோதி என்பவர் அங்கிருந்து கணபதி சிலையைக் கொண்டுவந்து தன் ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவியதாக ஒரு கதை உள்ளது. இவர்தான் பிற்காலத்தில் சிறுத்தொண்டர் என்ற நாயன்மாராக அறியப்பட்டார் என்றும் சொல்வர். இதனால்தான் முத்துசாமி தீக்ஷிதர் ‘வாதாபி கணபதிம்’ என்ற கிருதியை இயற்றினார் என்பதும் பொதுவாக இதற்குச் சான்றாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இப்போது திருச்செங்காட்டங்குடியில் இருப்பது சாளுக்கியக் கலையம்சம் கொண்ட கணபதி சிலை அல்ல.

பல்லவர், பாண்டியர் இருவரும் களப்பிரரை வென்று, தத்தம் ஆட்சிகளை நிலைநிறுத்தி கருங்கல்லில் குகைக்கோவில்களை உருவாக்கத் தொடங்கினர். பல்லவர் காலக் கட்டுமானங்களில் ராஜசிம்மன் காலத்தில்தான் (690-725) கோவில்களில் மிகத் தெளிவாகப் பிள்ளையார் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், பாண்டியர், முத்தரையர் குகைகளில் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. ஒரு குறை, இந்தக் குகைகளின் தெளிவான காலகட்டம் நமக்குக் கிடைப்பதில்லை. அங்கிருக்கும் ஒருசில கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவ அமைதியைக் கொண்டே அவற்றின் காலத்தைக் கணிக்கமுடிகிறது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குகைக்கோவிலில் உள்ள கல்வெட்டைப் பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். சா.கணேசன் இதனை ஏழாம் நூற்றாண்டு என்றும் இரா.நாகசாமி ஆறாம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடுகின்றனர். 1990-களில் ஐராவதம் மகாதேவன் நேரில் சென்று பிள்ளையார்பட்டிக் கல்வெட்டை ஆய்வு செய்தார். வட்டெழுத்தின் ஆரம்பகட்டம் இந்த எழுத்துகள் என்பது அவருடைய முடிவு. “கி.பி. 6-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்” என்று மிகத் தெளிவாக அவர் சொல்கிறார்.

பெரும்பாலான பாண்டியர் குகைகளிலும் கிட்டத்தட்ட அனைத்து முத்தரையர் குகைகளிலும் விநாயகர் சிலைகள் காணப்படுகின்றன. இவை எல்லாமே பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி எழுப்பப்பட்டவை. ஆண்டிச்சிப்பாறையில் முற்றுப்பெறாத பாண்டியர் குகை ஒன்று உள்ளது. அதில் இரு சிற்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று விநாயகர் சிற்பம். எனவே தொடக்கக்கட்டப் பல்லவர் குகைகளில் கிடைக்கவில்லை என்பதனாலேயே விநாயகர் வழிபாடு வெளியிலிருந்து வந்தது என்று முடிவுகட்டக்கூடாது.

2015-ம் ஆண்டு, வட தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமம் என்னுமிடத்தில் உள்ள எமதண்டீஸ்வரம் என்னும் கோவிலில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறித்த விநாயகர் சிலை கிடைத்துள்ளது. அதனை ஆராய்ச்சி செய்த கல்வெட்டியல் நிபுணர்களும் இது, 4 முதல் 6-ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட எழுத்தே என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சம்பந்தர் போன்ற நாயன்மார்கள் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றத் தொடங்குகின்றனர். இவர்களுடைய பதிகங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளும் விநாயகர் வழிபாடும் வருகின்றன.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நரசிம்மவர்மப் பல்லவனும் பரஞ்சோதியும் ஏழாம் நூற்றாண்டில்தான் வாதாபியிலிருந்து விநாயகரைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. சங்கம் மருவிய காலத்திலிருந்தே, நான்காம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு உள்ளது என்பது தெளிவாகிறது.

பத்ரி சேஷாத்ரி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக