Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
2 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
First topic message reminder :
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்' என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.
தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
"திமுக ஆட்சியில் ராணுவ வீரரைக் கொல்வதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சாதாரணமாக நடக்கிறது!"
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்' என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.
தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
ஸ்டாலின் மீது தி.மு.க 2-ம் கட்ட தலைவர்கள் அதிருப்தி; கனிமொழி தலைவர் ஆவார்: அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மு.க. ஸ்டாலின் கடந்த 4 நாள்களாக பதற்றத்தில் இருக்கிறார். தனக்கு பின்னர் கட்சி கனிமொழி கருணாநிதி வசம் சென்றுவிடுமோ என நினைக்கிறார்.
அடுத்து உதயநிதியை துணை முதலமைச்சராக்க நினைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை ஒரு பூத் ஏஜென்ட் கூட பெரிய பதவிகளில் வரமுடியும்.
ஆனால் இது திமுகவில் சாத்தியமா? குஜராத்தில் சாதாரணமாக பூத் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து, இன்று நாட்டின் உள்துறை அமைச்சராக உயர்ந்து சேவை செய்துவருகிறார்.
இதனை அவரே கூறியுள்ளார். திமுக டி.ஆர். பாலு அமைச்சராக இருந்த போது தினமும் 9 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டதாக கூறுகிறார்கள்.
பாஜக ஆட்சியில் தற்போது ஒரு நாளைக்கு 40 கிலோ சாலை போடப்படுகிறது. மேலும், ஒருமுறை அமைச்சராக இருந்த பாலுவை மீண்டும் அமைச்சராக்க அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை.
அது ஏன்? ஊழலில் அதிகம் திளைத்த அமைச்சர்கள் என்றால் அது டிஆர் பாலுவும், ஆ. ராசாவும்தான். மேலும் நீட் தேர்வு வருவதற்கு முன்பு தனியார் மருத்துவ கல்லூரியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது.
இதனை ஆற்காடு வீராசாமி கருணாநிதியிடம் கூறியுள்ளார். ஆகவே இதைப் பற்றி திமுக பேச எந்த அருகதையும் கிடையாது. தொடர்ந்து, அமித் ஷாவின் பேச்சு குறித்து பதிலளிக்கையில், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
25 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்” என்றார். தொடர்ந்து, திமுக இரண்டு ஆண்டுகளில் பதற்றத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடுதான் மு.க. ஸ்டாலினின் பிதற்றல்.
அமித் ஷா வரும் போது மின்சாரத்தை ரத்து செய்துவிட்டார்கள். இதெல்லாம் பயத்தின் வெளிப்பாடு” என்றார்.
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
பழைய செய்தி நினைவுக்கு வருகிறது.
திரு கருணாநிதி பொதுக்கூட்டத்தில் கூறியது.
திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை. நினைத்தவர்களை மடாதிபதியாக ஆக்குவதற்கு.
பொது சபை நிர்ணயம் செய்யும் என்றார்.
ஆனால் ஸ்டாலின்தான் முன்னிறுத்தப்பட்டார். அதை செவ்வனே செய்தவர் கருணாநிதி.
தனிக்கூட்டம் ஒன்றுண்டு.
நெடுஞ்சேழியன் / இ வி கே சம்பத் (பெரியாரின் உறவுமுறை மகன் ) எல்லோரும் ஓரம் கட்டப்பட்டனர் .
அவரே பொதுச்சபையில் ஸ்டாலினை தேர்வு செய்யவும் வழிமொழியவும் ஆட்களை தேர்ந்துஎடுத்தார்.
மற்ற தலைவர்களும் /வழித்தோன்றல்களும் ஓரம் கட்டப்பட்டனர்.
கருணாவின் மூளையாக செயல்பட்ட மாறனின் மகன் /துணைவியின் மகள் சாமர்த்தியமாக
டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்..
கருணா /ஸ்டாலின்/உதயநிதி /இன்பநிதி .மற்ற உடன்பிறந்தோரின் நிதிகள் காணப்படுவதே இல்லை.
மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டால் உண்டு.
திரு கருணாநிதி பொதுக்கூட்டத்தில் கூறியது.
திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை. நினைத்தவர்களை மடாதிபதியாக ஆக்குவதற்கு.
பொது சபை நிர்ணயம் செய்யும் என்றார்.
ஆனால் ஸ்டாலின்தான் முன்னிறுத்தப்பட்டார். அதை செவ்வனே செய்தவர் கருணாநிதி.
தனிக்கூட்டம் ஒன்றுண்டு.
நெடுஞ்சேழியன் / இ வி கே சம்பத் (பெரியாரின் உறவுமுறை மகன் ) எல்லோரும் ஓரம் கட்டப்பட்டனர் .
அவரே பொதுச்சபையில் ஸ்டாலினை தேர்வு செய்யவும் வழிமொழியவும் ஆட்களை தேர்ந்துஎடுத்தார்.
மற்ற தலைவர்களும் /வழித்தோன்றல்களும் ஓரம் கட்டப்பட்டனர்.
கருணாவின் மூளையாக செயல்பட்ட மாறனின் மகன் /துணைவியின் மகள் சாமர்த்தியமாக
டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்..
கருணா /ஸ்டாலின்/உதயநிதி /இன்பநிதி .மற்ற உடன்பிறந்தோரின் நிதிகள் காணப்படுவதே இல்லை.
மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டால் உண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
T.N.Balasubramanian wrote:பழைய செய்தி நினைவுக்கு வருகிறது.
திரு கருணாநிதி பொதுக்கூட்டத்தில் கூறியது.
திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை. நினைத்தவர்களை மடாதிபதியாக ஆக்குவதற்கு.
பொது சபை நிர்ணயம் செய்யும் என்றார்.
ஆனால் ஸ்டாலின்தான் முன்னிறுத்தப்பட்டார். அதை செவ்வனே செய்தவர் கருணாநிதி.
தனிக்கூட்டம் ஒன்றுண்டு.
நெடுஞ்சேழியன் / இ வி கே சம்பத் (பெரியாரின் உறவுமுறை மகன் ) எல்லோரும் ஓரம் கட்டப்பட்டனர் .
அவரே பொதுச்சபையில் ஸ்டாலினை தேர்வு செய்யவும் வழிமொழியவும் ஆட்களை தேர்ந்துஎடுத்தார்.
மற்ற தலைவர்களும் /வழித்தோன்றல்களும் ஓரம் கட்டப்பட்டனர்.
கருணாவின் மூளையாக செயல்பட்ட மாறனின் மகன் /துணைவியின் மகள் சாமர்த்தியமாக
டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்..
கருணா /ஸ்டாலின்/உதயநிதி /இன்பநிதி .மற்ற உடன்பிறந்தோரின் நிதிகள் காணப்படுவதே இல்லை.
மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டால் உண்டு.
மக்கள் புரிந்து கொண்டு விட கூடாது என்பதற்காகத்தானே ஆண்களுக்கு டாஸ்மாக்கும் பெண்களுக்கு சீரியல்களும் செயல்படுகிறது.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
"ஜெயலலிதா பற்றி அண்ணாமலை தவறாக எதுவும் பேசவில்லை"- சீமான்..!
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
கேள்விக்கென்ன பதில் || நெருங்கும் தேர்தல் .. நெருக்கும் ரெய்டுகள்.. அதிரடி காட்டும் அண்ணாமலை
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம்: அண்ணாமலை
கூட்டணி தர்மத்தை யாரும் சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை தான் நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள #அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
மோடியின் அரசியல் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். எனது மனசாட்சிப்படி தமிழகத்தில் நான் அரசியல் செய்து வந்துள்ளேன். தமிழகத்தில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காகவும் அரசியலை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன்.
தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவு கொள்கைகளை அடமானம் வைக்க விரும்பவில்லை.
கூட்டணிக் கட்சியையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் வழிநடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் கூற முடியாது.
கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதை நாங்களும் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. தலைமை செயலகத்தில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி வருவது இது முதல்முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
அரசியல் அனுபவமில்லா குழந்தை அண்ணாமலை: சசிகலா
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா. அம்மா உணவகம் தந்து , அன்ன லட்சுமியாய் விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அவருக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவையில்லை.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரின் சாதனைகளை முறியடிக்க முடியாது. அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எதுவும் தெரியவில்லை.
அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால் #அண்ணாமலை அவர் சார்ந்து இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்- அண்ணாமலை
சமீபத்தில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறியதாக தகவல் வெளியானது.
இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. நேற்று அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், பாஜக – அதிமுக இடையேயாப கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் #அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் உள்ளது. ன்ஒரு குறிப்பிட்ட ஆட்சியைக் கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறியதாக தகவல் வெளியானது.
இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. நேற்று அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், பாஜக – அதிமுக இடையேயாப கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் உள்ளது. ன்ஒரு குறிப்பிட்ட ஆட்சியைக் கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''ஜெயலலிதாவின் பெயரை நான் எங்குமே குறிப்பிடவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.'' என்று தெரிவித்துள்ளார்.
Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
`மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் திறனற்ற திமுக அரசு” - அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை, இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ``திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் சிதிலமடைந்த சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும், இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கான தரமான கட்டடங்கள் இல்லாமல், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திறனற்ற திமுக அரசு.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும், அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஆசிரியர்களின் பணி நியமனம் எப்போது மேற்கொள்ளப்படும் என்று இன்னும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழகப் பள்ளிகள் அணி தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் என்பது, ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவு. பள்ளி அளவிலான தேசியப் போட்டிகள், மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும், அவர்களுக்கான அடுத்த கட்ட பயிற்சிக்கும், நல் வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், தமிழகம் சார்பாக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல், மாணவர்களை வஞ்சித்துவிட்டு, துறைகள் மீது மாற்றி மாற்றி பழி போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
இப்படி, ஏழை எளிய மாணவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்புகளையும், தங்கள் மெத்தனப் போக்கினால் கோட்டை விட்ட தமிழக அரசு, இதன் உச்சகட்டமாக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் கல்விக் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது திறனற்ற திமுக அரசு. 2021 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு 3767.55 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவில் குறைத்திருக்கிறது திமுக அரசு. இதனால், மீதக் கட்டணத்தை, பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க, பள்ளிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. திமுகவின் இத்தகைய ஏழை எளிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைவருக்கும் கல்வி உரிமைத் திட்டம் என்ற நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்காக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல், தொடர்ந்து, கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பது, காலதாமதமாக வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக. திறனற்ற திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள், திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனடைவதற்காக, ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர வாய்ப்புகளைச் சிதைக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறதோ என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்திருக்கிறது. உடனடியாக, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கும்படியான எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எபோலா - செய்தித் தொகுப்புகள்
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
» 2024 மக்களவைத் தேர்தல் களம் | செய்தித் தொகுப்புகள்
» விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!
» கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
» 2024 மக்களவைத் தேர்தல் களம் | செய்தித் தொகுப்புகள்
» விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!
» கல்லூரி மாணவர்கள் போராட்டம் - செய்தித் தொகுப்புகள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|