ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

2 posters

Go down

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Empty இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

Post by சிவா Sat Jun 03, 2023 10:40 pm


2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கத்தெளலி அருகே கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த ரயில் புரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

2017, ஜனவரி 22 : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.

2016, நவம்பர் 20: கான்பூருக்கு அருகிலுள்ள புக்ராயனில் ஒரு பெரிய ரயில் விபத்து நடந்தது, இதில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

2015, மார்ச் 20: டேராடூனில் இருந்து வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

2014, மே 4: திவா சாவந்த்வாதி பயணிகள் ரயில் நாகோடானே மற்றும் ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

2013, டிசம்பர் 28: பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து 26 பேர் பலியானார்கள். குளிரூட்டப்பட்ட பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2012, ஜூலை 30 : இந்திய ரயில்வே வரலாற்றில், 2012 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு சுமார் 14 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதல்கள் இரண்டும் அடங்கும். 2012 ஜூலை 30 ஆம் தேதி டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2011,ஜூலை 07: உத்திரப் பிரதேசத்தில் ரயில் பேருந்து மீது மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

2010 செப்டம்பர் 20 : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில் குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, ஜூலை 19: மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்டன. இதில் 62 பேர் இறந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, மே 28,: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 170 பேர் உயிரிழந்தனர்.

2009, அக்டோபர் 21,: உத்தரப் பிரதேசத்தில் மதுரா அருகே மேவார் எக்ஸ்பிரஸின் கடைசி ரயில் பெட்டு மீது கோவா எக்ஸ்பிரஸின் இஞ்சின் மோதியது. இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.

2009, பிப்ரவரி 14 : (ரயில் பட்ஜெட் தினம்) ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

2008 ஆகஸ்ட் 01: செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமி எக்ஸ்பிரஸ் இரவில் தீப்பிடித்தது. இதன்காரணமாக 32 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

2005, ஏப்ரல் 21: குஜராத்தில் வதோதரா அருகே சாபர்மதி எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

2005 பிப்ரவரி 3: மகாராஷ்டிராவில் நாக்பூர் நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயில், டிராக்டர்-டிராலியுடன் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

2003 ஜூன் 22: மகாராஷ்டிராவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

2003, ஜூலை 2,: ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள வாரங்கலில், மேம்பாலத்தின் மேலே இருந்து கோல்கொண்டா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் இன்ஜினும் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

2003, மே 15 : பஞ்சாபில் லூதியானா அருகே ஃபிராண்டியர் மெயிலில் தீப்பிடித்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்.

2002, செப்டம்பர் 9: ஹவுரா-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்தனர்.

2001, ஜூன் 22: மங்களூர்-சென்னை மெயில், கேரளாவில் கடலுண்டி ஆற்றில் விழுந்தது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.

2001, மே 31: உத்திரப் பிரதேசத்தில் ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது ரயில் மோதியது. 31 பேர் உயிரிழந்தனர்.

2000, டிசம்பர் 2 : கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹவுரா மெயில் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் 44 பேர் பலியானார்கள். 140 பேர் காயமடைந்தனர்.

1999, ஆகஸ்ட் 3 : டெல்லி நோக்கிச் சென்ற பிரம்மபுத்ரா மெயில் மேற்கு வங்கத்தில் உள்ள கேசல் என்ற இடத்தில் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 285 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 312 பேர் காயமடைந்தனர்.

1998, நவம்பர் 26 : பஞ்சாபின் கன்னாவில் ஃபிராண்டியர் மெயில், சீயல்தா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 108 பேர் இறந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

1997, செப்டம்பர் 14 : அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.

1996, ஏப்ரல் 18: எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தெற்கு கேரளாவில் பேருந்து மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

1995, ஆகஸ்ட் 20 : புது டெல்லி சென்றுகொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஃபிரோஸாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 250 பேர் பலியானார்கள். 250 பேர் காயமடைந்தனர்.

1993, டிசம்பர் 21: கோட்டா-பீனா எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானில் சரக்கு ரயில் மீது மோதியது. 71 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1990 ஏப்ரல் 16 : பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீப்பிடித்தது. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.

1985, பிப்ரவரி 23: ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. இதில் 50 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

1981, ஜூன் 6 : பிகாரில் புயல் காரணமாக ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Empty Re: இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 04, 2023 1:12 pm

காரை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள்! ஆனால் அதில் உள்ள குறையை இன்றுவரை யாரும் கண்டுகொள்வதில்லை! காலில் மிதிக்கும் வேகத்தை அதிகப்படுத்தும் தகட்டையும் , பிரேக்கையும் அடுத்தடுத்து வைப்பார்களா? இதைப்போன்று உள்ள ஒரு பிழைதான் இப்போது நடந்துள்ளதும்! நாலுபேர் சொல்லிவிட்டால் போதும் கண்ணை மூடிக்கொண்டு அதிலேயே போகவேண்டியது! கண்ணை மூடிக்கொண்டு போகாதே என்று சொல்லும்போதுதான் ‘பகுத்தறிவு’ பேசவேண்டி வருகிறது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum