ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Fri Jun 02, 2023 10:22 pm

First topic message reminder :

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 YCsrIUi

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயில் விபத்தில் காயமடைந்த 132 பயணிகள் கோபால்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இது தவிர, காயமடைந்த 47 பேர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி முகமைகளின்படி, சென்னையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியதால், அதன் பல பெட்டிகள் தடம் புரண்டன.

பாலசோர் அருகே உள்ள பஹனகா பஜார் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்தது.

உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.

பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் இரங்கல்


ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்


மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவிப்பு.

ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.


Last edited by சிவா on Sat Jun 03, 2023 9:58 pm; edited 4 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sat Jun 03, 2023 9:54 pm

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்!

ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாக தெகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நேற்று 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் காயம் அடைந்து வெற்றி பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. http://ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் சென்று பார்த்து தங்கள் உறவினர் நிலையை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sat Jun 03, 2023 9:55 pm

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: 43 ரயில்கள் ரத்து..!



ஒடிசாவின் கோரமண்டல ரயில் விபத்து காரணமாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் கடும் அவதியில் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sat Jun 03, 2023 9:57 pm

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.’

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு அதிவிரைவு ரயில் (வ.எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல மேற்கு வங்கத்தின் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு கோரமண்டல் விரைவு ரயில் (வ.எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி ஹவுரா அதிவிரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதில் சில பெட்டிகள் கவிழ்ந்து விழுந்தன. அதில் சில ரயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அந்த சமயம் ஹவுரா எக்ஸ்பிரஸ் பெட்டிகள் விழுந்த ரயில் தடத்தில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்த நிலையில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில ரயில் பெட்டிகள் அதற்கும் அடுத்த ட்ராக்கில் விழுந்த நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் மோதி அதுவும் விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாகவும், 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல தமிழர்கள் பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நபர்கள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

இன்று வரை மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sat Jun 03, 2023 10:00 pm

ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒடிஷா செல்லும் பாஜக உதவிக் குழு



ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர பாஜக குழு அங்கு செல்லவுள்ளதாக’ அக்கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து நடைபெற்ற பகுதிக்கு அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு இருவரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ’’ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வரவும், அவர்களுக்குத் தேவையாக உதவிகள் செய்யவும் தமிழக பாஜக சார்பில் குழு ஒடிஷா செல்லவுள்ளது’’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sun Jun 04, 2023 8:52 pm

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கின்றனர் அதானி, ஷேவாக்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Tamil_News_large_333870120230604200832

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க உள்ளதாக தொழில் அதிபர் அதானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர் வீரேந்திர ஷேவாக் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் கவலை கொண்டுள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கல்வியை அதானி குழுமம் கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு ஆகும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுக்கு சிறந்தநாளை கொடுங்கள் என பதிவிட்டு உள்ளார்.

இதே போல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், ஒடிசா ரயில் விபத்தில் பலியான பெற்றோர்களின் குழந்தைகள் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. அவர்களுக்கு ேஷவாக் இன்டர்னேஷனல் பள்ளியில் உறைவிட வசதியுடன் இலவச கல்வியை வழங்க உள்ளேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sun Jun 04, 2023 9:19 pm

சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை



ஒடிசா ரயில் விபத்தில் 275 போ் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இதுவரை 275 பேர் பலியாகியாகி உள்ளதாகவும், 88 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 187 உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. உடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. 1,175 பேர் காயமடைந்துள்ளதாக அம்மாநில தலைமைச் செயலாளர் பி.கே.ஜெனா கூறியுள்ளார்.

இந்நிலையில், பாலாசோர் கோர ரயில் விபத்துக்கான "மூலக் காரணம்" மற்றும் அதற்கு காரணமான "குற்றவாளிகள்" அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒடிசாவின் பாலாசோர் கோர ரயில் விபத்து குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிர்வாகத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, பாலாசோர் கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது,” என்றார். மீட்புப் பணிகள் நிறைவடைந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான மனிதவளம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 7க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், இரண்டு விபத்து நிவாரண ரயில்கள், மூன்று நான்கு ரயில்வே மற்றும் சாலை சீரமைக்கும் கிரேன்கள் ஈடுபட்டுள்ளது. தண்டாளம் தொடர்பான பணிகள் முடிந்து மேல்நிலை வயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by சிவா Sun Jun 04, 2023 10:29 pm

இரவு பகல் பாராமல் மீட்புப் பணி, விடிய விடிய ரத்ததானம்.. மனிதம் காக்கப் போராடிய மக்களின் கதை



ஒடிசாவின் பாலாசூர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை, இரவு 7:30 மணியளவில் நடந்த ரயில் விபத்து இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியிருக்கிறது. தற்போதுவரை, இந்த ரயில் விபத்தால் 294 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ரயில் வழித்தடங்களைச் சீரமைக்கும் பணி இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்தக் கோர விபத்தில் சிக்கி மரணிக்கும் தறுவாயில் இருந்த பலரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறது அந்த உள்ளூர் மக்களின் மனிதம். மீட்புப் பணிகளில் பங்கெடுத்தது முதல்... விடிய விடிய ரத்ததானம் கொடுக்க வரிசையில் காத்துக் கிடந்தது வரையென, பல நெகிழ்ச்சியான சம்பவங்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை!

ரயில் விபத்தை முதலில் பார்த்த பாலாசூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் கிரி, பிப்ராடா பேக், ஆஷா பேகரா, அசோக் பேரா ஆகியோர் ஒடிசா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``இரவு 7 மணியளவில், நாங்கள் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அருகில் ஒரு டீக்கடையில், டீ குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, பலத்த சத்தம் கேட்டது... அதன் பிறகு மக்களின் அழுகுரல்... ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தோம்.

நேரத்தை வீணடிக்காமல் சம்பவ இடத்துக்குச் சென்றோம். என்ன செய்வது என்று தெரியவில்லை, காவல்துறையினருக்கு முதலில் தகவலைச் சொன்னோம். எங்களால் முடிந்தவரை காயமடைந்தவர்களை மீட்டு, எங்களின் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குறைந்தது 50 பேரையாவது, மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்போம்" என்றனர்.

அசோக் பேரா பேசியபோது, "விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம் என்று, ரத்ததானம் செய்ய மருத்துவமனைக்குச் சென்றேன். எனது வயதைக் காரணம் காட்டி, ரத்தம் எடுக்க மருத்துவர்கள் மறுத்தனர். உடனடியாக நான் என்னுடைய உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை அழைத்து ரத்ததானம் செய்ய அறிவுறுத்தினேன். காயமடைந்தவர்களில் பலர், தங்களின் பெற்றோர்களிடம் பேச விரும்பினர். எனது செல்போனைக் கொடுத்து பலரையும் பேச வைத்தேன்" என்று கூறினார்.

கணேஷ் எனும் இளைஞர், விபத்து நடந்த நேரத்திலிருந்து மீட்புப்பணிகள் முழுமையாக முடிவடையும் வரை, அங்கேயே இருந்து மீட்புப் படையினருக்கு உதவியிருக்கிறார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தனிப்பட்ட முறையில் 200 - 300 பேரை மீட்டிருப்போம்" என்றார்.

பாசூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாகாரிகா ஊடகங்களிடம் பேசுகையில், "500-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், 100-க்கும் அதிகமான பர்ஸ்கள், பைகளை விபத்து நடந்த இடத்திலிருந்து கைப்பற்றியிருக்கிறோம்.. மேலும் இதுவரை திருட்டுச் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சிலர், விபத்து நடந்த பகுதியிலிருந்து செல்போன்கள், பைகளைச் சேகரித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பகுதி மக்களுக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்" என்று நெகிழ்ந்தார்.

பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் மீட்புப் பணிகளை இவ்வளவு துரிதமாகச் செய்திருக்க முடியாது. மதம், மொழி, இனம் கடந்து... எந்த ஓர் எதிர்பார்ப்பும் இன்றி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து மனிதத்தைக் காத்த அந்தப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சல்யூட்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து - Page 2 Empty Re: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
» அதி பயங்கர ரயில் விபத்து
» மஹா., ரயில் விபத்து: பிரதமர் இரங்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum