ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:33 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்

Go down

இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம் Empty இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்

Post by சிவா Fri Jun 02, 2023 1:56 am

இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம் 2dGLMQl

தலையெழுத்து மாறணுமா...



தவறுதலாக ஒரு எழுத்தை பேப்பரில் எழுதினால் அதை ரப்பரால் அழிக்க முடியும். பலருக்கு நினைத்த செயல் நடக்கவில்லை என்றாலோ, நடந்த செயல் தாமதப்பட்டாலோ எல்லாம் தலையெழுத்து என பிரம்மாவை நினைத்து தன்னை தானே நொந்து கொள்வர். சரியில்லாத தலையெழுத்தை அழித்து எழுத ரப்பர் ஒன்று இருக்கிறது. இது தெரியாமல் நிறைய பேர் துன்பப்படுகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ள தயங்குகின்றனர். அவர்களுக்கான ரப்பர் தான் முருகப்பெருமானின் திருவடி என்கிறார் அருணகிரிநாதர். திருச்செந்துாரிலுள்ள மீன்கள் விளையாடி அங்குள்ள வயல்களும், முருகன் கழுத்திலுள்ள கடம்பமாலை மணத்தினால் பெண்களின் மனமும், முருகன் கையிலுள்ள வேல்பட்டு சூரனும் அவனுடைய மலையும் அழிந்தது. அதைப்போல பிரம்மா எழுதிய என் தலையெழுத்து முருகப்பெருமானின் திருவடி பட்டு அழிந்தது என்கிறார். தினமும் இப்பாடலை பாடினால் தலையெழுத்து மாறும்.

சேல்பட்டு அழிந்தது செந்துார் வயல் பொழில் தேன் கடம்பின்

மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வேர்ப்பும் அவன்

கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன்கையெழுத்தே.

நால்வர் அருள் வேண்டுமா...



விநாயகர், முருகன், சிவபெருமான், பெருமாளின் அருளை ஒரு சேர பெற வேண்டுமா... கீழ்கண்ட இந்த பாடலை தவறாமல் பாடுங்கள். நம்புங்கள் நல்லதே நடக்கும். நால்வர் அருள் கிடைக்கும்.

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்.

வளமான வாழ்க்கைக்கு...



நம் மனதிற்கு அதிபதியான சந்திரன் முழு ஒளியோடு திகழும் நாளே பவுர்ணமி. அன்று வழிபாடு செய்தால் மனமும் பூரண சந்திரனைப்போல் பிரகாசமாக இருக்கும். அதிலும் முருகப்பெருமானோடு தொடர்புடைய விசாகம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்கள் பவுர்ணமி நாளை ஒட்டியே வரும். இந்த மூன்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாட்கள். அதிலும் முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தன்று அவரை வழிபடுவோம். வளமான வாழ்க்கையை பெறுவோம்.
மூலமந்திரம்

* முருகனின் மூலமந்திரம் - ஓம் சரவணபவாய நமஹ

* முருகனுக்கு விசாகன் என்றும் பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருள்.

* நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அவதாரம் என பலரும் பாடியுள்ளனர்.

* கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, திருப்பரங்குன்றம் என பல இடங்களில் முருகனுக்கு குடைவரைக்கோயில்கள் உள்ளன.

* அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் பாடல்களில் முருகப்பெருமானை, 'பெருமாளே' என போற்றுகிறார்.

குமாரஸ்வாமி



உலகத்தில் எல்லாமாகவும் இருக்கிற பரமாத்மாவை 'ஸ்வாமி' என அழைக்கிறோம். சிவபெருமான், மஹா விஷ்ணு, விநாயகர் என அனைவரையும் பொதுவாக நாம் இப்படி குறிப்பிடுவோம். ஆனால் இந்த 'ஸ்வாமி' என்கிற பெயர் ஒருவருக்கு மட்டும்தான் சொந்தமானது. அனைவரும் இவரிடம் இருந்தே அந்தப் பெயரையே கடனாக பெற்றுள்ளனர். அவர் யார் தெரியுமா? குழந்தையாக இருக்கும் குமாரஸ்வாமியான முருகப்பெருமான்.
சமஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்' என்று பெயர். 'கோசம்' என்றால் 'பொக்கிஷம்'. இதை இயற்றியவரின் பெயரை வைத்து 'அமரம்' என்கிற பெயர் வந்தது. இந்த நுாலில் வேறெந்த தெய்வத்துக்கும் 'ஸ்வாமி' என்ற பெயர் இல்லை. சுப்ரமணியருக்கு மட்டுமே உண்டு. இதோ அந்த பாடலின் வரி.

தேவஸேனாபதி; சூர; ஸ்வாமீ கஜமுகாநுஜ

வயலுார் இருக்க அயலுார் எதற்கு?



'வயலுார் இருக்க அயலுாரைத் தேடி அலைவானேன்?' என்பது பழமொழி. பன்னிரண்டு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் முருகன்இருக்கும் ஊர் திருச்சி வயலுார். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்து உயிர் விட எண்ணிய அருணகிரிநாதரை கைகளால் தாங்கிய முருகன், 'வயலுாருக்கு வா' என கட்டளையிட்டார். அங்கு தான் திருப்புகழின் முதல் பாடலுக்கு 'முத்தைத்தரு பத்தித்திருநகை' என அடி எடுத்துக் கொடுத்தார். 1307 பாடல்கள் கொண்ட திருப்புகழில் 18 பாடல்கள் பெற்றது இத்தலம்.

தெரியுமா உங்களுக்கு...



எந்தக்கடவுளுக்கும் இல்லாத சிறப்பு முருகனுக்கு உண்டு. குழந்தை, குமரன், வயோதிக கோலத்தில் காட்சி தருபவர் இவர் மட்டுமே. குழந்தை வேலாயுத சுவாமியாக பழநி அடிவாரத்திலுள்ள திருஆவினன் குடியிலும், குமரனாக திருப்பரங்குன்றம், திருத்தணி கோயில்களிலும், வயோதிகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலையிலும் அருள் பாலிக்கிறார். இம்மூன்று வடிவத்தையும் வணங்கினால் நன்மை கிடைக்கும்.

எமனும் கூட அஞ்சுவான்



'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மா. அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் முருகன். பின்னர் தானே படைப்புத் தொழிலில் ஈடுபட்டார். அவரால் படைக்கப்பட்ட அனைவரும் பாவச் செயலில் ஈடுபடாமல் இருந்தனர். எமதர்மனும்

அவர்களைக் கண்டு அஞ்சினான். இதனால் தான் மரணத்தின் பிடியில் உள்ளவர்கள் கூட முருகப்பெருமானைச் சரணடைகிறார்கள். திருச்செந்துார் பன்னீர் இலை விபூதியும், ஆதிசங்கரர் பாடிய சுப்பிரமணிய புஜங்கம் ஸ்தோத்திரமும் நோய் தீர்க்கும் மகிமை கொண்டவை.

திசைக்கு ஒரு காட்சி



திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசல தலம், விட்டணு துருவம், கந்த மாதனம், கந்த மலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல் படைவீடு என திருப்பரங்குன்றத்திற்கு பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்கில் கைலாயம் போலவும், கிழக்கில் பெரும் பாறையாகவும், தெற்கில் யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் இந்த மலை காட்சியளிக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum