ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்

Go down

ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Empty ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்

Post by சிவா Tue May 30, 2023 9:24 pm

ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர் Linges10

உலக உயிர்களின் ஒவ்வோர் அசைவையும் நிர்ணயிப்பவை நவகோள்கள். உலகின் இயக்கத்துக்குச் சூரிய-சந்திரரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறது அறிவியல். ஜோதிடமோ சூரியனை ஆத்மகாரகன் என்றும் சந்திர பகவானை மனோகாரகன் என்றும் போற்றுகிறது.

இதைப்போலவே ஜாதகரீதியாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது போன்ற கிரகங்களும் மனிதரின் வினைகளுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் வழங்குகின்றன என்கின்றன ஜோதிடநூல்கள். விதிப்படி கிரகங்கள் தரும் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதேநேரம், சகல படைப்புகளின் தலைவனான ஈசனின் திருவருள் இருந்தால் வினைகளில் இருந்து விடுபடலாம்; கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது நிஜம். அவ்வகையில் சிவனருள் நிறைந்த, கிரக தோஷங்களைப் பொசுக்கும் ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றுதான் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்!

நவகோள்கள் தனித்தனியே ஈசனை வணங்கி அருள்பெற்ற தலங்கள் அந்தந்த கிரகங்களுக்கான பரிகாரத் தலங்களாக வணங்கப்படுகின்றன. அந்த வகையில் தொண்டைநாட்டு நவகிரகத் தலங்கள், கும்ப கோணம் நவகிரகத் தலங்கள் போன்றவை பிரசித்திபெற்றுத் திகழ்கின்றன.

அபூர்வமாக சில தலங்களில்... ஒன்பது கிரகங்களும் ஒன்றிணைந்து ஈசனை வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள். அந்தத் தலங்கள் ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக் கும் விமோசனம் வழங்குவதாகத் திகழ்கின்றன.

திருக்குவளை எனும் கோளிலி, நவகிரகங் களும் வணங்கி அருள் பெற்ற தலமாகும். இங்கு வந்து வேண்டும் அன்பர்களுக்குக் கோள்கள் எந்தத் தீமையும் புரியாது என்பதால் கோள்-இலி என்றானதாம்.

இதைப்போலவே மற்றுமோர் அற்புதமான தலம் ஒன்று நடுநாட்டில் உள்ளது.

புதுச்சேரியை அடுத்துள்ள கண்டமங்கலம்ஒன்றியம், பங்கூர் அருகே அமைந்திருக்கும் `நவம்மாள் காப்பேர்' என்ற கிராமம்தான் அந்தத் தலம். இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு நவாம்பிகை சமேத நவகோள் லிங்கேஸ்வரரை நவகிரகங்களும் வழிபட்டு அருள்பெற்றுள்ளார்கள் என்கிறது தலபுராணம்.

உலகிலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் கருவறையிலேயே ஈசனை நவகிரகங்களும் வணங்கி நிற்கிறார்கள். அதனாலேயே இந்தப் பரமன், `நவகோள் லிங்கேஸ்வரர்' எனும் திருப்பெயர் கொண்டு அருள் புரிகிறார். இங்கே நவகிரகங்கள் வழிபடக் காரணம்?

ஒருமுறை நவகிரகங்களுக்குள் `தானே பெரியவன்' என்ற போட்டி யும் பொறாமையும் உண்டாயின. இதனால் கோள்கள் தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டத் தொடங் கின. கோள்களின் இந்தப் போக்கி னால் மாற்றத்தால் இயற்கை பிழை யானது. இதனால் மண்ணுலகில் பஞ்சமும் பசியும் உருவாயின.

அதுமட்டுமா? வேள்விகள், அறங் கள் குறைப்பட்டு நிற்க, தர்மம் வீழ்ந்து அதர்மம் மேலோங்கியது. இந்திரன், திருமால், பிரம்மன் முதலானோர் சமரசம் பேசியும் பயனில்லாமல் போனது. நவ கோள்களும் ஆணவத்தால் தங்களுக் குள் மோதலை வளர்த்து வந்தன.

இதனால் சகலரும் சர்வேஸ்வர னிடம் சென்று முறையிட்டார்கள். விளைவு... `சித்தர் காடு' என்று வழங்கப்பட்ட புதுச்சேரி கண்ட மங்கலம் பகுதியில் அடர்ந்த வேணு வனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன் றினார். நவகோள்கள் அனைத்தையும் அங்கு வரச்செய்து கண்டித்தார்.

``பிரபஞ்ச நலனுக்காகவே இங்கு சகலமும் இயங்குகின்றன. பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அவரவர் பொறுப்பு உணர்ந்து எமது கட்டளைக்கு இணங்கி இயங்கும்போது, கோள்களாகிய நீங்கள் இப்படிப் பொறாமை கொண்டு அலைவதா!'' என்று ஈசன் நவகோள்களைக் கண்டித்தார்.

தங்கள் தவற்றை உணர்ந்த நவகோள்களும் ``இனி உயிர்களின் நன்மைக்காக இணைந்து செயல்பட்டு பிரபஞ்சத்தின் நலம் காப்போம்'' என உறுதி அளித்தன. அதுமட்டுமன்றி ஈசனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தன.

``ஸ்வாமி! எங்களை ஒருங்கிணைத்துப் பாடம் நடத்திய இந்தத் தலத்தில், எங்களுக்குக் காட்சி தந்த இதே கோலத்தில் தாங்களும் இங்கேயே எங்களுடன் வீற்றிருக்க வேண்டும். இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர் களுக்குக் கோள்களாகிய நாங்கள் ஒன்பது பேரும் எல்லாவித நன்மைகளையும் அருள் வோம்!' என்றும் உறுதி கூறின.

`அப்படியே ஆகுக' என்று ஆமோதித்தார் பரமன். அவரின் திருவருளால் அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. பரமனுக்கும் அற்புதமாய் ஆலயம் எழும்பியது!

நவகிரகங்கள் தாங்கள் கூறியபடியே, இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் அன்பர் களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் வழங்கி வருகிறார்கள்.

புராணச் சிறப்புமிக்க இந்த ஆலயம், சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப் பட்டு, வழிபாடுகளும் சிறப்புற நடந்து வந்தனவாம். பின்னர், காலப்போக்கில் ஏதோ காரணங்களால் ஆலயம் சிதைந்து போனது. எல்லாம் வல்ல சிவமும் தன்னை மறைத்துக் கொண்டது. ஊரும் புராணப் பெருமைகளை இழந்து கிராமமாகச் சுருங்கிப் போனது.

`நவகோள் காப்பேறு' என்ற பெயர் மருவி `நவம்மாள் காப்பேர்' என்றானது. காலம் கனிய, காலமறிய முடியாத ஈசன் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டார். அவரை, ஊர் மக்கள் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த வகையில் பூஜைகள் செய்து கொண் டாடி வந்தனர்.

இந்த நிலையில் ஈசனின் கருணையால் திருவண்ணாமலையில் வாழும் சித்தர் ஒருவர் இவ்வூரைப் பற்றி அறிந்தார். தன் அடியார்களை இவ்வூர் கோயிலைப் பற்றித் தெரிந்து வர அனுப்பினார்.

அதன்படி இங்கு வந்த அடியார்கள் இந்த ஊரில் உள்ள ஈசன், ஆலயம் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சித்தர் அளித்தத் தகவல்களால் இவ்வூர் புராண மகிமைகள் தெரியவந்தன.

இங்குள்ள அம்பாள் மற்றும் மூல மூர்த்தி யின் திருப்பெயர்கள் நவாம்பிகை உடனுறை நவகோள் லிங்கேஸ்வரர் என்பதையும் உள்ளூர் அன்பர்கள் அறிந்தனர். கோயில் திருப்பணிக்கான முயற்சிகள் தொடங்கின.

புதுவை சிவனடியார்கள் திருக்கூட்டமும் இவ்வூர் மக்களும் இணைய, ஆலயம் அழகுற எழும்பியது; 2018-ம் ஆண்டு தை மாதம் குட முழுக்கு நடைபெற்றது.

சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகுந்த சாந்நியத்துடன் சிறப்பாக வழிபடப்பட்டு வருகிறது. நவகோள்களும் கருவறையில் ஈசனுடன் வீற்றிருக்க, நவாம்பிகை தனிச் சந்நிதியில் அருள்கிறாள்.

`இங்கு வந்து ஈசனை மனமுருக வணங் கினால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்குகின்றன' என்கிறார்கள் பெரியோர்கள். வரப் பிரசாதியான அம்பிகையை வணங்கி வழிபட்டால், மங்கல வாழ்வு நிலைக்கும் என்கிறார்கள் பெண்கள்.

இங்கு நவகிரக பரிகார பூஜை, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நவகோள் லிங்கேஸ்வரர் சேவை அறக்கட்டளையின் கீழ் அன்னதானம், கோசாலை, ஏழை மாணவ மாணவிகளுக்குக் கல்வி போன்ற தரும காரியங்கள் செய்யப் படுகின்றன.

`க்ஷண நேரம் இங்கு வந்து பிரார்த்தித்தாலும் ஏழேழ் ஜன்மங்களுக்குத் தொடர்ந்து வரும் கிரக தோஷங்கள் யாவும் தீரும்' என்பது இத்தலத்தின் நம்பிக்கை. நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வாருங்கள்; நவகோள் லிங்கேஸ்வரரின் திருவருளால், கிரக தோஷங்கள் நீங்கும் நன்மைகள் யாவும் உண்டாகும்!

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum