புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
91 Posts - 61%
heezulia
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
6 Posts - 4%
viyasan
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
1 Post - 1%
eraeravi
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
283 Posts - 45%
heezulia
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
19 Posts - 3%
prajai
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
7 Posts - 1%
mruthun
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_m10₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 1:58 pm

₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி 042b9aa0-f64b-11ed-92cc-b3a9bf1f67e9

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.

இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.

இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சில கேள்விகளும் பதில்களும்


இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?

பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.

செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபருக்கு பிறகு செல்லாது - ஆர்பிஐ இதற்கு சொல்லும் விளக்கம் என்ன?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?


ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.

2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?


பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.

₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?


ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.

₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?


ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?


பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.

கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.

₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?


வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.

மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?


பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.

வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?

ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?

ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?

வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?

வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.

ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?

₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?


முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?

சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.

பணமதிப்பிழப்புக்கு பிறகு அறிமுகமான ரூ. 2000 நோட்டுகள்

2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த அடுத்த சில மாதங்களில், அதாவது 2016, நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திடீரென ஒரு நாள் இரவு பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கையை பணப்பிழப்பு அறிவிப்பு என்று அழைக்கப்பட்டது.

மேலும், பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் 500 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் பல ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று 2021ஆம் ஆண்டில் அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் ஆக இருந்த அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

பிபிசி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:01 pm

2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மாநில அரசுகளிடம் ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதற்கு பல அரசியல்வாதிகளிடமிருந்து கண்டன கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு இது குறித்து கூறிய போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுமுன் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:02 pm

ரூ.2000 நோட்டை வாங்கி கொள்ளுங்கள்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தல்..!

டாஸ்மாக் கடையில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாயை தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே மது வாங்க செல்வார்கள் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:03 pm

என்னிடம் ரூ.2,000 நோட்டு இல்லை, திமுகவுக்குதான் பாதிப்பு: அண்ணாமலை

என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பால் திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்திருக்கின்றனர்

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணம் மதிப்பழப்பு நடவடிக்கை இல்லை.

மூன்றரை வருடங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:04 pm

ரூ.2000 நோட்டை பயன்படுத்தி வங்கிக்கடனை அடைக்கலாமா? பிக்சட் டெபாசிட் செய்யலாமா?

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக நேற்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் அந்த நோட்டை மாற்றுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பதிவாகின.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் அவற்றை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பர் தங்களது சேமிப்பு கணக்கு மட்டுமின்றி வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதேபோல் 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்போர் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

எனவே 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் கருப்பு பணமாக இல்லாமல் இருந்தால் தாராளமாக எந்த வழியில் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:07 pm

கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! ரூ.2000 நோட்டு விவகாரம் குறித்து முதல்வர்..!

கர்நாடக மாநிலத்தின் தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் தான் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது குறித்து கூறியிருப்பதாவது:

500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!





திருடிச் சேர்த்த பணமெல்லாம் இப்படி மண்ணோடு மண்ணாக போக போகுதே... ஏ... பாசிச பாஜக அரசே... ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி 1f600 ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி 1f600



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 9:05 pm

₹2000 தடை... பொய்ச் செய்திகளும், பெருச்சாளிகளின் பதட்டமும்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 9:54 pm



வங்கிகளில் ₹2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கீழ் காணும் படிவத்தை நிரப்ப வேண்டும்.

₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி UR90GXp

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:23 pm

ரூ. 2000 நோட்டு விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு

500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது இமாலயப் பிழை. அதை தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொள்கிறார்கள் என்பது எனக்கு திருப்தியளிகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனை இணைந்து ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், ‘’கருப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தனர். 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தது மிகப்பெரிய பிழை. அதை மக்கள் புறக்கணித்தார்கள்.

சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்தப் பணம் அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம் உள்ளது. அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும். ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்கள். அதுவே மிக்க மகிழ்ச்சி’’என்று அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:24 pm

2 ஆயிரம் ரூபாய் நோட்டு: ‘கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ - அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புகரனேந்தலில் தமிழக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த ஒன்றிய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி.

இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளைப்போல கர்நாடகாவிலும் கொடுக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.

தமிழகத்தில் இலவசங்கள் கூடாது என விமர்சனம் செய்த பா.ஜ.க-வினர் பிற மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோயில் என்பதைப்போல உபதேசங்களை பிறருக்கு சொல்லும் பா.ஜ.க-வினர் அதனை கடைபிடிப்பது இல்லை’ என்றார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக