புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
15 Posts - 3%
prajai
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_lcapசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_voting_barசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 24, 2023 4:41 am

First topic message reminder :

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 Artifi10

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன.

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. கணினித் தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, மனித ஆற்றலை அதனால் ஈடுசெய்ய இயலுமா, அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன...

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


“ஒரு ரோபோ இப்படித்தான் செயல்படும் என்று வரையறுக்கப் பட்டதை (programming) தாண்டி சுயமாக சிந்தித்தால் எப்படி யிருக்கும் என்கிற கற்பனைதான் `எந்திரன்’ திரைப்படம். ஓரளவில் இந்தச் செயற்கை நுண்ணறிவை `எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோவோடு ஒப்பிடலாம். நமது தகவல்களை அடிப்படை யாக வைத்து நமக்கு எதுவெல்லாம் தேவைப்படும் என் பதை யூகித்து வழங்குவதுதான் செயற்கை நுண்ணறிவு செய்கிற வேலை.

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. எப்படி ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் நாம் ஒவ்வொன்றையும் பயிற்றுவிக்கிறோமோ, அதேபோல் கணிப் பொறித் தொழில் நுட்பத்திலும் உள்ளீடு (feed) செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. `கோடிங்' (Coding) வழியாக இதற்கு பயிற்றுவித்திருப்பார்கள்.

நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் வாட்ச் ஒன்று வாங்கலாம் எனத் தேடுகிறீர்கள். அதன் பிறகு ஃபேஸ்புக்குக்குச் சென்றால் வேறொரு ஷாப்பிங் வெப்சைட்டின் வாட்ச் விளம்பரம் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் எந்த விலையில் தேடினீர்களோ அதற்கு நிகரான விலையில் காட்டும். இதுதான் செயற்கை நுண்ணறிவின் வேலை.

நம் தேவைகள், விருப்பங்கள் பற்றி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படி தெரியும்?


மெயில் ஐடிகள், சமூக வலைதளங்கள், மொபைல் சேவைகள் என நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்குக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில், நம் தேவை என்ன, நமக்கு எதன் மேல் நாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தொடர்புடையவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

உதாரணமாக, கூகுள், ஃபேஸ் புக் ஆகியவற்றில் கணக்கு ஆரம் பிக்க நமது வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்களைக் கொடுத்திருப் போம். அந்தத் தகவலை அடிப் படையாகக் கொண்டு எந்தெந்த வயதினருக்கு எந்தெந்தப் பொருள்களின் மீது நாட்டம் இருக்கும் என்கிற யூகத்தில் அதற்கான விளம்பரங்களைக் காட்டும். ஃபேஸ்புக்கில் ‘உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள்’ என சிலரது கணக்குகளை முகநூல் பரிந்துரைக்கும். எப்படி? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு நபரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்திருக்கிறோம் என்பதை `ஜிபிஎஸ்' (GPS - Global Positioning System) மூலமாகக் கணக்கில்கொண்டு இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையைப் பறிக்குமா?


ஐடி துறையை எடுத்துக்கொண்டால் கோடிங் மற்றும் அக்கவுன்ட்ஸ் ஆகியவைதான் மிக முக்கியமான பணிகள். டேலி, மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற மென் பொருள்கள் அக்கவுன்ட்ஸை எளிமையாகச் செய்து முடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் அக்கவுன்ட்ஸை கணிப்பொறியே தன்னிச்சையாக மேற்கொள்ள முடியும். நாம் மேற்பார்வை மட்டும் பார்த்து அப்ரூவ் செய்தாலே போதுமானது. இதனால் மனித உழைப்பு பெரிய அளவுக்குத் தேவையில்லாமல் போகும். அதேபோல, ஒரு அப்ளிகேஷனைத் தயார் செய்ய வேண்டும் என்றால், இத்தனை ஆண்டுகளில் எழுதப்பட்ட கோடிங்கை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவே கோடிங்கை எழுதி விடும். மனிதர்கள் அதனை மேற்பார்வை பார்த்தால் மட்டுமே போதுமானது. ஐடி துறை போல, இப்படி வங்கி முதல் மீடியா வரை ஒவ்வொரு துறையிலும் AI-யால் மனிதன் செய்த பணிகளைச் செய்ய முடியும். அதனால்தான், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நிறைய பேருடைய வேலையை காலி செய்யும் என்கிற அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.

பெருநிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்கை நுண்ணறிவை 2010ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பெரு நிறுவனங் களிடம் மட்டுமே இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இன்றைக்கு `Open AI' செயலி மூலம் பொதுமக்களுக்குப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

`சாட்ஜிபிடி' (chatGPT) என்று சொல்லப்படுகிற, செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தில் சென்று அதனுடன் `சேட்' செய்யலாம். நாம் என்ன கேட்கிறோமோ அந்தத் தகவல்களை துல்லியமாக அது வழங்கும். ஹிமாச்சலில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் இருக் கின்றன என்று கேட்டால் வரிசையாகப் பட்டியலிடும். ஓர் இடத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ஒரு கட்டுரை கேட்டால் அசத்தலாகத் தரும். இப்படியாக இன்றைக்கு சிறு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்துகிற சூழலை `chatGPT' உருவாக்கியிருக்கிறது.

ஆகவேதான் இத்தனை காலமாக இல்லாமல் சமீபமாக செயற்கை நுண்ணறிவு வேலையைப் பறித்துவிடும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

மனிதனை வெல்ல முடியுமா?


காலத்துக்கு ஏற்றாற்போல் நவீனத் தொழில் நுட்பம் வருவது இயல்புதான். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தால், மனித மூளையின் அளவுக்குச் செயலாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது இருக்கிற தகவல்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் யூகமே தவிர, சுய சிந்தனை கிடையாது. அது தன்னிச்சையாக இயங்குகிறது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில்தான் இயக்கப்படுகிறது.

வேறு என்ன ஆபத்து?


`டீப்ஃபேக்ஸ்' (Deep Fakes) தொழில்நுட்பம்... அச்சுறுத்தும் இதன் பாதகம். இதன் மூலம் பொய்ச் செய்திகளை உருவாக்கி, மக்கள் குழுக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்த முடியும். நாடுகள், அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என அந்தப் பிரதிநிதிகளின் பொய்யான வீடியோ, ஆடியோக்களை உருவாக்கி, மக்களைத் தூண்டி, போராட்டங்களை எரிய வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நமக்குத் தெரிந்தவர்போல குரலை மாற்றி (voice morphing) பேசி, பணம் பறிக்க முடியும். இவ்வாறாக, சாமான்ய மக்களுக்கு உண்மை, பொய்யைப் பிரித்தறியும் சாத்தியத்தைச் செயற்கை நுண்ணறிவு வெகு தொலைவில் வைக்கும்.

தீர்வு என்ன?


செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் சட்ட வரையறைகள், நிறுவனங்களுக்கான பொதுவான, பகிரப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள், உண்மை, பொய்யைப் பிரித்தறிய வைக்கும் முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதனால் தான், அதுவரை செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை நிறுத்திவைக்கக் கோரி உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை செயற்கை நுண்ணறிவின் சாதகங்களால் பயன்பெறப் போகிறோம். கூடவே, இனி எந்தச் செய்தியிலும் பொய்க்கான சாத்தியம் வலுக்கிறது என்ற விழிப்புணர்வையும் நாம் பெற வேண்டும்.’’

குறிச்சொற்கள் #AI_தொழில்நுட்பம் #செயற்கை_நுண்ணறிவு #chatGPT #Artificial_intelligence

விகடன்


ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 8:35 pm

வைரஸ்களை உருவாக்கும் AI தொழில்நுட்பம்!



Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து வரும் காலகட்டத்தில். இதைத் தவறாக பயன்படுத்தி வைரஸ்களைக் கூட உருவாக்க முடியும் என எச்சரித்துள்ளார் கூகுள் இணை நிறுவனர்.

ChatGPT-ன் வருகைக்குப் பிறகு நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பல ஏஐ கருவிகளும், மென்பொருட்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் மனிதர்களின் வாழ்க்கைமுறை எளிதாக்கிவிட்டது என நாம் நினைத்தாலும், அவற்றால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடூரமான வைரஸ் தொற்று நோய்களையும், கம்ப்யூட்டர் வைரஸ்களையும் AI பயன்படுத்தி உருவாக்கலாம் என்று கூகுள் டீப் மைண்ட் இணை நிறுவனர் முஸ்தபா சுலைமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒரு நோய்க்கிருமி மக்களை பாதிக்கும்போது அதைத் தடுப்பதற்கு எப்படி பல கட்டுப்பாடுகளை நாம் மேற்கொள்கிறோமோ, அதேபோல AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் மற்றும் கருவிகளை மக்கள் கட்டுப்பாடுடன் பயன்படுத்துவதற்கான வழிமுறையை நாம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை சமீபத்தில் அவர் பேசிய ஒரு பாட்காஸ்ட் ஒன்றில் அவர் கூறியுள்ளார். "மனிதர்களை அழிக்கும் நோய்க்கிருமிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு பயன்படலாம். அதனால் அதிகத் தீங்கை விளைவிக்க முடியும். இதனால் மக்கள் தங்களுக்கே தெரியாமல் நோய்க்கிருமிகளை உருவாக்கி பரிசோதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இது நமக்கு கட்டுப்பாடுகள் தேவை. உருவாக்கப்பட்ட கருவிகள் மற்றும் மென்பொருட்களை வைத்து எவ்விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட யாரையும் அனுமதிக்க கூடாது. இதை தொடக்க நிலையிலேயே கட்டுபடுத்தி முன்னெச்சரிக்கையோடு அணுகவேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சமீபத்தில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் படியான செயல்களில் AI ஈடுபட்டால். அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும். தனிநபரின் வாழ்க்கையில் நுழையும் இணையவாசிகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜூ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 8:39 pm

செயற்கை நுண்ணறிவால் எழுத்தாளர்களுக்கு சிக்கல்!



ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்தே உலகம் முழுவதும் வித்தியாசமாக மாறிவிட்டது எனலாம். எல்லா இடங்களிலும் இதைப் பற்றிய பேச்சுதான் அதிகம் நிலவுகிறது. நாம் எந்த கேள்வி கேட்டாலும் மனிதர்கள் போலவே சிந்தித்து பதில் கூறிவிடுகிறது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மேலும் ஆய்வுகள் செய்யவும், கட்டுரைகள் எழுதவும், ஓவியம் வரையவும் பலர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் உண்மையான எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

ChatGPT-ஐ பயன்படுத்தி ஒரு புத்தகத்தை அந்த எழுத்தாளரின் அனுமதி இல்லாமலேயே அதன் சுருக்கத்தை நம்மால் பெற முடியும். இதுதான் தற்போது பிரச்சினையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான மைக்கேல் சாபெல் மற்றும் அவருடன் சேர்ந்து சில எழுத்தாளர்கள், சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் OpenAI நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் OpenAI நிறுவனம் ChatGPTஐ பயிற்றுவிப்பதற்காக தங்களுடைய படைப்புகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக, ChatGPT செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்க, எங்களின் படைப்புகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். எனவே பதிப்புரிமை மீறலுக்கான வழக்கு OpenAI நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மீது பதிப்புரிமை மீறலுக்கான பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் நீதிபதி முன்னிலையில் நடந்து அவர்களுக்கான இழப்பீடும் தர வேண்டும் என்பது எழுத்தாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சியளிக்க அவர்களின் அனுமதி இல்லாமல் தங்களின் நூல்களை பயன்படுத்தக்கூடாது என, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து கடிதம் எழுதியுள்ளனர்.

இவைகள், தங்களின் எழுத்து நடை, கதைகள் மற்றும் சிந்தனைகளுக்கு போலியான வடிவம் கொடுப்பதாகவும், அதற்கான வெகுமதி எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் எழுத்தாளர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எழுத்தாளர்களின் நிலை மோசமாக மாறிவிடும் என சொல்லப்படுகிறது.



செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக