Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.
இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில கேள்விகளும் பதில்களும்
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?
பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபருக்கு பிறகு செல்லாது - ஆர்பிஐ இதற்கு சொல்லும் விளக்கம் என்ன?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?
ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.
2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.
₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?
ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.
கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?
பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?
ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.
ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பிறகு அறிமுகமான ரூ. 2000 நோட்டுகள்
2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த அடுத்த சில மாதங்களில், அதாவது 2016, நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திடீரென ஒரு நாள் இரவு பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கையை பணப்பிழப்பு அறிவிப்பு என்று அழைக்கப்பட்டது.
மேலும், பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் 500 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் பல ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று 2021ஆம் ஆண்டில் அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் ஆக இருந்த அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
பிபிசி
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மாநில அரசுகளிடம் ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதற்கு பல அரசியல்வாதிகளிடமிருந்து கண்டன கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு இது குறித்து கூறிய போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுமுன் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மாநில அரசுகளிடம் ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதற்கு பல அரசியல்வாதிகளிடமிருந்து கண்டன கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு இது குறித்து கூறிய போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுமுன் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டை வாங்கி கொள்ளுங்கள்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தல்..!
டாஸ்மாக் கடையில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாயை தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே மது வாங்க செல்வார்கள் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
டாஸ்மாக் கடையில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாயை தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே மது வாங்க செல்வார்கள் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
என்னிடம் ரூ.2,000 நோட்டு இல்லை, திமுகவுக்குதான் பாதிப்பு: அண்ணாமலை
என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பால் திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்திருக்கின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணம் மதிப்பழப்பு நடவடிக்கை இல்லை.
மூன்றரை வருடங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பால் திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்திருக்கின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணம் மதிப்பழப்பு நடவடிக்கை இல்லை.
மூன்றரை வருடங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டை பயன்படுத்தி வங்கிக்கடனை அடைக்கலாமா? பிக்சட் டெபாசிட் செய்யலாமா?
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக நேற்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் அந்த நோட்டை மாற்றுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பதிவாகின.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் அவற்றை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பர் தங்களது சேமிப்பு கணக்கு மட்டுமின்றி வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதேபோல் 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்போர் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
எனவே 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் கருப்பு பணமாக இல்லாமல் இருந்தால் தாராளமாக எந்த வழியில் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக நேற்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் அந்த நோட்டை மாற்றுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பதிவாகின.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் அவற்றை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பர் தங்களது சேமிப்பு கணக்கு மட்டுமின்றி வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதேபோல் 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்போர் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
எனவே 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் கருப்பு பணமாக இல்லாமல் இருந்தால் தாராளமாக எந்த வழியில் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! ரூ.2000 நோட்டு விவகாரம் குறித்து முதல்வர்..!
கர்நாடக மாநிலத்தின் தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் தான் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது குறித்து கூறியிருப்பதாவது:
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
கர்நாடக மாநிலத்தின் தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் தான் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது குறித்து கூறியிருப்பதாவது:
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
திருடிச் சேர்த்த பணமெல்லாம் இப்படி மண்ணோடு மண்ணாக போக போகுதே... ஏ... பாசிச பாஜக அரசே...
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
₹2000 தடை... பொய்ச் செய்திகளும், பெருச்சாளிகளின் பதட்டமும்
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
வங்கிகளில் ₹2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கீழ் காணும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
ரூ. 2000 நோட்டு விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு
500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது இமாலயப் பிழை. அதை தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொள்கிறார்கள் என்பது எனக்கு திருப்தியளிகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனை இணைந்து ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், ‘’கருப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தனர். 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தது மிகப்பெரிய பிழை. அதை மக்கள் புறக்கணித்தார்கள்.
சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்தப் பணம் அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம் உள்ளது. அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும். ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்கள். அதுவே மிக்க மகிழ்ச்சி’’என்று அவர் கூறினார்.
500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது இமாலயப் பிழை. அதை தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொள்கிறார்கள் என்பது எனக்கு திருப்தியளிகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனை இணைந்து ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், ‘’கருப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தனர். 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தது மிகப்பெரிய பிழை. அதை மக்கள் புறக்கணித்தார்கள்.
சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்தப் பணம் அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம் உள்ளது. அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும். ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்கள். அதுவே மிக்க மகிழ்ச்சி’’என்று அவர் கூறினார்.
Re: ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
2 ஆயிரம் ரூபாய் நோட்டு: ‘கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ - அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புகரனேந்தலில் தமிழக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த ஒன்றிய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி.
இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளைப்போல கர்நாடகாவிலும் கொடுக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் இலவசங்கள் கூடாது என விமர்சனம் செய்த பா.ஜ.க-வினர் பிற மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோயில் என்பதைப்போல உபதேசங்களை பிறருக்கு சொல்லும் பா.ஜ.க-வினர் அதனை கடைபிடிப்பது இல்லை’ என்றார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புகரனேந்தலில் தமிழக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த ஒன்றிய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி.
இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளைப்போல கர்நாடகாவிலும் கொடுக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் இலவசங்கள் கூடாது என விமர்சனம் செய்த பா.ஜ.க-வினர் பிற மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோயில் என்பதைப்போல உபதேசங்களை பிறருக்கு சொல்லும் பா.ஜ.க-வினர் அதனை கடைபிடிப்பது இல்லை’ என்றார்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றித் தராததால் ரிசர்வ் வங்கி முற்றுகை
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
» பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
» பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|