Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளச் சாராய மரணங்கள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கள்ளச் சாராய மரணங்கள்
First topic message reminder :
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Last edited by சிவா on Thu May 18, 2023 9:05 pm; edited 1 time in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கள்ளச் சாராய மரணங்கள்
‘கரண்ட தொட்டா ரூ.2 லட்சம், சாராயம் குடிச்சா?’ - அரசை சாடிய செல்லூர் ராஜு
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு தீர்ப்பு வரவேற்கக் கூடியது.
சட்ட நுணுக்கங்கள் அறிந்து அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தொகுதி நிதிகளை போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் 10 கோரிக்கைகள் பெறப்பட்டது. தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. நம்முடைய முதல்வருக்கு அப்பப்ப ஞாபக மறதி வந்துடுது.
ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட கிடைக்காது என்று கூறினார்கள். தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது. கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் பலரது உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
குடும்பமே கள்ளச் சாராயம் குடித்து இறக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில், சாலை விபத்தில் இறப்பு ரூ.2 லட்சம், மூன்று லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவுக்கே இந்த அரசாங்கம் முன்னோடியாக உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கியது இல்லை. சாராய வியாபாரிகளின் சொத்தை பறிமுதல் செய்து அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம். ஆனால் அரசு நிதி கொடுத்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது. முதலமைச்சர் பொம்மை முதல்வர் என்பதை மீண்டும் பலமுறை உறுதி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மாற்றுத்திறனாளி தமிழக அரசையே ஏமாற்றி உள்ளார்.
உள்ளூர் அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைவரையும் ஏமாற்றி உள்ளார். அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் நிர்வாகம் சரி இல்லை என்பதால்தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச்சாராய தரகர்களுக்கு அமைச்சர்கள் துணை போகிறார்கள். கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
தி.மு.க ஆட்சி காலத்தில் மதுரையை ஒரு தீவுபோல் மாற்றிவிட்டார்கள். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் மதுரை மேயர் வேலை பார்க்காமல் அமைதியாக இருக்கிறார்.
தி.மு.க-வில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலை கடைகளில் ஆதார் அட்டைகளை வலுக்கட்டாயமாக வாங்குவதாக புகார் வந்துள்ளது. தி.மு.க வட்டச் செயலாளர், தி.மு.க நிர்வாகிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்’ என்றார்.
Re: கள்ளச் சாராய மரணங்கள்
கள்ளச்சாராய சாவுகள்: ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த அ.தி.மு.க
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த 22பேர் கள்ளச்சாராயம் அருந்தி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி, சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு ஒப்படைத்து, சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அ.தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளது.
Re: கள்ளச் சாராய மரணங்கள்
மெத்தனத்தால் விளைந்த மரணங்கள் - விகடன் தலையங்கம்
‘குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்ற இளைய சமுதாயத்தினருக்கு வளமிக்க எதிர்காலம் உருவாக மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க நாங்கள் ஆட்சி அமைத்ததும் நடவடிக்கைகளை எடுப்போம். மதுவின் மூலம் வரும் வருவாய் மட்டுமே முக்கியமல்ல, மக்களின் நலன், சமூக மாற்றம், மாணவர்கள், தாய்மார்களின் நலன் போன்றவை அதைவிட முக்கியம்.’ - அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின்போது, இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், முதல்வரான பிறகு தான் கூறிய வார்த்தைகள் அவருக்கு மறந்துவிட்டதோ என்ற எண்ணம் இப்போது பொதுமக்கள் பலருக்கும் எழுகிறது.
காரணம், கள்ளச்சாராயம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருப்பதுதான். ஒரே நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 15-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிவருகிறார்கள். அத்தனை எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் சந்திக்க வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
‘கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்' என்று சொன்ன முதல்வர், இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை தீவிரமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி உட்பட பல போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல்வரின் அறிவிப்புக்கான விமர்சனங்களும் சரி, ‘இத்தனை நாள்களாக இல்லாமல் இருந்த கள்ளச்சாராயம் மரணங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திடீரென்று எப்படி நிகழ்ந்தன?' என்பது போன்ற கேள்வியும் சரி...தமிழ்நாடு முழுவதும் இப்போது உரக்கக் கேட்கின்றன.
கள்ளச்சாராய மரணம் என்பது வேண்டுமானால் இப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆனால், கள்ளச்சாராயப் புழக்கம் நீண்டநாள்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்துவருகிறது என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த மரணங்கள் நிகழ்ந்ததும் பல மாவட்டங்களிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். மதுவிலக்கு போலீஸார் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள், போலீஸாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் அவர்கள் செயல்பட்டிருக்க முடியுமா என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால், கள்ளச்சாராயம் தயாரிக்கிறவர்களின் கைகளுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து, இந்த விஷத்தின் மூலத்தை அகற்றுவோம்' என, துப்பறியும் நிபுணரைப் போல இப்போது சொல்லும் அரசு, இத்தனை நாள்களாக இதுகுறித்த எந்தத் துப்பும் இல்லாமல் எப்படி இருந்தது?
நடந்திருக்கும் கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணம் மெத்தனால் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தின் மெத்தனமும்தான். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். கள்ளச்சாராயமோ, டாஸ்மாக் மதுவோ, தறிகெட்டு விற்கப்படும் போதைப்பொருள்களோ, எல்லா போதை அடிமைத்தனங்களின் பிடியிலிருந்தும் மக்களை விடுவிப்பதே ஒரு நல்லரசின் இலக்காக இருக்க வேண்டும்.
Re: கள்ளச் சாராய மரணங்கள்
கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.
கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (மே20) பா.ஜ.,வின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
பாஜ.,வினர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை
» தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழப்பு ! (2009-2011)
» சாராய வேட்டைக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டுக்கு அடி, உதை!! 11 பெண்கள் உள்பட 23 பேர் கைது
» சாராய வியாபாரியின் தந்திரம் :சிக்கிக்கொண்ட போலீசார்
» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
» தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழப்பு ! (2009-2011)
» சாராய வேட்டைக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டுக்கு அடி, உதை!! 11 பெண்கள் உள்பட 23 பேர் கைது
» சாராய வியாபாரியின் தந்திரம் :சிக்கிக்கொண்ட போலீசார்
» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|