Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
3 posters
Page 1 of 1
திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது.
இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Last edited by சிவா on Sun Apr 30, 2023 1:48 am; edited 1 time in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
தானியங்கி மது விற்பனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
இந்த திமுக ஆட்சியில், தமிழ்நாட்டை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டப்பேரவையிலும், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக் காட்டியுள்ளேன். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக் கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த திமுக அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசைக்கூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கெனவே பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த திமுக அரசு.
மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இந்த திமுக அரசின் முதல்வர் மக்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. நவீனமயமாகி வரும் கல்வித் துறை, சுகாதாரத்துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அரசை, அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
தானியங்கி மது விற்பனை: இபிஎஸ்-க்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
தானியங்கி மது விற்பனை குறித்த எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ளதுபோன்று பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சோதனையில் அடிப்படையில் சென்னையில் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பணம் செலுத்தினால், தேவையான மதுபான வகை வந்துவிடும். 21 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே இந்த இயந்திரத்தின் மூலம் மதுபானம் பெற முடியும்.
அத்துமீறலை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளனர். டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதை தடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
தானியங்கி மது இயந்திரத்தை நிறுத்தவில்லை என்றால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை..!
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டு உள்ள நிலையில் அதை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏராளமான மது கடைகள் இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் புதிதாக மது வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.
ஏடிஎம் மெஷின் போலவே இருக்கும் இந்த இயந்திரத்தில் தேவையான மதுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவருக்கு ஒரு இருப்பதாவது:
சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மது, தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என தெரிவித்துள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
தானியங்கித் தொழில் நுட்பம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
- Code:
அத்துமீறலை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளனர். டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதை தடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக்கில் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க தானியங்கிகள் .
அதன் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ..
எங்களுக்கு வெட்டவேண்டியதை வெட்டினால்தான்
தானியங்கி இயந்திரம் பக்கமே உங்களை விடுவோம்
என மதுபிரியர்களிடம் கூறி வசூல் வேட்டை தொடரும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
T.N.Balasubramanian wrote:
- Code:
அத்துமீறலை தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளனர். டாஸ்பாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதை தடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக்கில் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க தானியங்கிகள் .
அதன் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ..
எங்களுக்கு வெட்டவேண்டியதை வெட்டினால்தான்
தானியங்கி இயந்திரம் பக்கமே உங்களை விடுவோம்
என மதுபிரியர்களிடம் கூறி வசூல் வேட்டை தொடரும்.
நீங்கள் ஒரு தீர்க்கதரிசி தலைவரே.
Similar topics
» தமிழக அரசின் புத்தாண்டு மது விற்பனை இலக்கு ரூ.250 கோடி
» அ.தி.மு.க., அரசின் 100 நாள் சாதனை: அழகிரி
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
» திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு
» 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
» அ.தி.மு.க., அரசின் 100 நாள் சாதனை: அழகிரி
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
» திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு
» 'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|