Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு
2 posters
Page 1 of 1
Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு
![Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு Mygov_1673941600457853](https://static.mygov.in/saas/s3fs-saas/ddd/styles/home-slider-image/public/mygov_1673941600457853.jpg?Q5a6siPP3rbMemMXQNvwPH9Ia2-ANQg)
வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. பிரதமராக மோடி கடந்த 2014-ல் பதவியேற்ற பிறகு, அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 11:30 மணி வரை, ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற தலைப்பில், வானொலியில் ஹிந்தியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 100வது பகுதி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
"பிரதமர் மோடியின் "மன் கி பாத்தின்" 100வது பகுதி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை செய்யப்பட உள்ளதால், ஒரு வரலாற்று தருணத்திற்கு தயாராகுங்கள்!" ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது எபிசோட் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்திய நேரப்படி ஒளிபரப்பப்படும், அது நியூயார்க்கில் ஞாயிறு நள்ளிரவு 1:30 மணிக்கு. ஐநா தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். இது ஐ.நா.வின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் ஒளிபரப்பப்படும்.
நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், சமூக அமைப்புகளுடன் இணைந்து, நியூஜெர்சியில் உள்ள இந்திய-அமெரிக்க மற்றும் புலம்பெயர் சமூகத்தின் உறுப்பினர்களுக்காகம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் 'மன் கி பாத்தின்' 100வது அத்தியாயத்தின் ஒளிபரப்பை மதியம் 1:30 மணிக்கு ஒலிபரப்ப உள்ளது. "ஏப்ரல் 30, 2023 அன்று 0130 மணி EST மணிக்கு #MannKiBaat100 என்னும் நிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்! மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிலழ்ச்சி மூலம் இந்தியர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களிடையே இணைந்திருக்கும் நிலையில், #MannKiBaat நிகழ்ச்சியின் முக்கிய மைல்கல்லான 100வது எபிசோடைக் கொண்டாடுவோம்" என்று அமெரிக்க கான்சிலகம் ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தொகுத்து வழங்கும் 'மன் கி பாத்' வானொலியில் நாட்டு மக்களிடயே பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சாதனைகளைகள் உரையாற்றி வருகிறார். இது முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது, மேலும் அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க்கில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. 30 நிமிட நிகழ்ச்சியின் 100வது பகுதி ஏப்ரல் 30 அன்று ஒளிபரப்பாகிறது. ஆங்கிலம் உள்பட நம் அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், சத்தீஸ்கரி, லடாகி உள்ளிட்ட 29 வட்டார மொழிகள், சீன மொழி, பிரஞ்சு, அரபி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகள் என 63 மொழிகளில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
![Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு Mann-ki-batt](https://i.postimg.cc/pLmMNvgk/Mann-ki-batt.webp)
இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 அத்தியாயங்களைக் கொண்டாடும் வகையில் 100 ரேடியோக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கலைஞர் பட்நாயக், சுமார் ஏழு டன் மணலைப் பயன்படுத்தி 8 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 100 மணல் ரேடியோக்களில் பிரதமரின் மணல் சிற்பத்தையும் உருவாக்கினார். அவரது மணல் சிற்ப கலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிற்பத்தை முடிக்க அவருடன் இணைந்து பணியாற்றினர்.
ஜீ தமிழ் நியூஸ்
Re: Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு
பிரதமரின் 'மனதின் குரலில்' நிறைந்திருந்த தமிழகம்! |
நம் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் வைத்துள்ள அன்பு அளவில்லாதது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்திற்காக அவர் செய்துள்ள நலப் பணிகள் ஏராளம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழ் இலக்கியங்களின் பெருமையை, நாடு முழுதும் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்லவும் அவர் தவறுவதில்லை.
அது மட்டுமல்ல, பிரதமர், நாட்டு மக்களோடு நேரடியாக உரையாடும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் மிகச் சிறப்பான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.
இதுவரை நடந்துள்ள 99 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், தமிழகம் குறித்தும், தமிழ் மக்கள் குறித்தும் பிரதமர் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். அவற்றில் இரண்டு ஆண்டுகளில் பிரதமர், தமிழர், தமிழகம் மற்றும் தமிழை பெருமைப்படுத்திய தருணங்களை, உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
அது குறித்த ஒரு தொகுப்பு இதோ:
வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓடும் வறண்டு போயிருந்த நாகநதியை, நம் சகோதர சகோதரிகள் சீரமைத்து, அதை உயிர்ப்பித்தது குறித்து பெருமையாகப் பேசி இருந்தார்
துாத்துக்குடி மாவட்டத்தில், கரையோர மணல் திட்டுகளில் பனை மரங்களை நட்டு, கடல் அரிப்பை தடுக்க, நம் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்
சென்னையைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் விருப்பமான, 'அடுத்த 25 ஆண்டுகளில், பாரதம், பாதுகாப்புத் துறையிலும் விண்வெளித் துறையிலும் மிகப்பெரிய சக்தியாக விளங்க வேண்டும்' என்பதை, பெருமையுடன் தன் உரையில் மேற்கோள் காட்டியிருந்தார்
உடுமலைப்பேட்டை தாயம்மாள், இளநீர் விற்று சேமித்த பணம் 1 லட்சம் ரூபாயை, அரசுப் பள்ளிக் கட்டடம் கட்ட நன்கொடையாகக் கொடுத்ததை, பிரதமர் நன்றியுடன் பாராட்டியிருந்தார்
சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன,- 700 ஆண்டுகள் பழமையான, வேலுார் ஆஞ்சநேயர் சிலையை, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து மீட்டுக் கொண்டு வந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்
'உலகிலேயே தமிழ் மொழி தான் தொன்மையானது; தமிழ், நம் நாட்டின் மொழி என்பதில், இந்திய மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்' என்று பெருமையுடன் எடுத்துக் கூறியுள்ளார்
தமிழரான சர்.சி.வி.ராமனால், 'ராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட நாளான பிப்ரவரி 28, தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுவது பற்றி எடுத்துரைத்தார்
சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, 150க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களைச் சீரமைத்த சாதனையை, நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினார்
கணித மேதை ராமானுஜம் குறித்தும், ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜ் குறித்தும், அவர்கள் உருவாக்கிய வைதீக கணிதத்தின் சிறப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்துஉள்ளார்
கிராமப் பகுதிகளை முன்னேற்ற, தகவல் தொழில்நுட்பத்தை கிராமப்புற இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் ஸ்ரீதர் வேம்பு பற்றிப் பேசியிருந்தார்
தஞ்சாவூர் சுயஉதவிக் குழு சகோதரிகள் பரிசளித்த, தஞ்சாவூர் பொம்மை குறித்தும், கைவினைப் பொருட்கள் மூலம் மகளிர் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வு மேம்பட்டிருப்பது குறித்தும், பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்
சென்னை மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களான 'அக்னிகுல்' மற்றும் 'ஸ்கைரூட்' ஆகியவை உருவாக்கியுள்ள ஏவு வாகனங்களைக் குறித்து பேசிஇருந்தார்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ், விளையாட்டுத் துறையில் பெண்களும் சாதிக்க உத்வேகமாக விளங்குவதாக பெருமையுடன் பிரதமர் கூறியுள்ளார்
குப்பையை மறுசுழற்சி செய்து, உரம் மற்றும் பிற பொருட்களைத் தயாரிக்கும் 'வாழ்க்கைக்கான மறுசுழற்சி' என்ற புதுச்சேரியைச் சேர்ந்த இயக்கத்தையும், நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியையும் பெருமையுடன் குறிப்பிட்டார்
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன், நாட்டுக்காகச் செய்த தியாகம் குறித்து, உணர்வுடன் நினைவு கூர்ந்தார்
சென்னையில் நடந்த 44வது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி பற்றியும் பெருமிதம் தெரிவித்தார்
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதேவி வரதராஜன் அனுப்பிய தேசத்தின் சிறுதானிய வரைபடத்தைக் குறிப்பிட்டு, புறநானுாறு, தொல்காப்பியத்தில் உள்ள சிறுதானியங்கள் பற்றிய குறிப்புகளையும் பற்றிப் பேசினார்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கே.எழிலன், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ், சூரியசக்தியைப் பயன்படுத்தி, விவசாயத்திற்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்திருப்பதை பெருமையுடன் கூறினார்
கோவை, ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள், மண்ணால் ஆன 10 ஆயிரம் தேனீர் கோப்பைகளை தாங்களே உருவாக்கி, ஏற்றுமதியும் செய்திருப்பதைப் பாராட்டினார்
கிராம சபைகள் அமைப்பது குறித்த ஒரு சிறிய அரசியல் அமைப்புச் சட்டமே, உத்திரமேரூரில் கிடைத்த 1100 -- 1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருப்பது குறித்து, ஆச்சரியத்துடன் பேசியிருந்தார்
வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், பறவைகள் சரணாலயத்தை ஆண்டாண்டு காலமாகப் பாதுகாத்து வருவதையும் பெருமையாகக் குறிப்பிட்டார்
தமிழகத்துக்கும் வட மாநிலங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகக் கொண்டாடப்பட்ட 'காசி தமிழ்ச் சங்கமம்' மற்றும் 'சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்' ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்
மதுரையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், தமிழ்ச் சங்கமம் குறித்து எழுதிய கடிதத்தைக் குறிப்பிட்டு, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு, நாட்டின் முன்னேற்றத்திற்கு, தமிழக மக்களின் ஒவ்வொரு பங்களிப்பையும் அடையாளம் கண்டு, அவர்களைப் பெருமைப்படுத்தும் பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றி.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு
“எந்த உலகத் தலைவரும் நிகழ்த்தாத சாதனை” - பிரதமரின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வு குறித்து அண்ணாமலை
"இதுவரை, உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100-வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும், "எனது அருமை நாட்டு மக்களே" என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தன் உரையை தொடங்கும், "மனதின் குரல்" நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது. காணொளி தொடர்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் இக்காலக் கட்டத்தில், வானொலி மூலம் மக்களை வசீகரித்து, வாகை சூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது "மான் கி பாத்" நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. 100வது முறையாக "மனதின் குரல்"-ஆக தமிழில் மலர இருக்கிறது.
ஒரே நேரத்தில், நாடு முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியை, தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு மாவட்டந்தோறும், ஒவ்வொரு மண்டல் தோறும், கிளை அளவில் அனைவரும் காணும் வகையில், மக்களின் மனம் கவர்ந்த "மான் கி பாத்" நிகழ்ச்சியின் ஒலி, ஒளி பரப்புகள் பாஜகவின் கார்யகர்த்தர்களால் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100வது முறையாக "மான் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார்.
சாமானியர்களின் சாதனையை, மக்களின் கருத்தை, விருப்பத்தை, மக்களுக்காக வெளிப்படுத்தும் மகத்தான நிகழ்ச்சி "மான் கி பாத்". நூறாவது மான் கி பாத் நிகழ்ச்சியில் நம் பாரத பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
» அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
» வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
» மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
» அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
» வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
» மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|