Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
2 posters
அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 41r-W2MUguL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/41r-W2MUguL.jpg)
மெலூஹாவின் அமரர்கள் சிவா முத்தொகுதி 1
இது ஒரு மனிதனின் கதை.
காலம் தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை.
கிமு 1900. இன்றைய இந்தியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாக குறிப்பிடுவது வழக்கம்.
அன்று வாழ்ந்தவர்களோ, அந்த நிலப்பரப்பை மெலூஹா என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய ஏறக்குறைய அற்புதமான சாம்ராஜ்யம்.
காலத்தில் ஒரு புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான சூரிய வம்சிகள், பல ஆபத்துகளைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திர வம்சகளிடமிருந்து பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விகாரமடைந்த முகமும் உடலுமாய், பல அற்புத சக்திகள் படைத்த நாகர்கள் என்னும் குலத்தாருடன் சந்திர வம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது.
இப்போது சூரியவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: ’தீமை தலை விரித்தாடும்போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லை என்ற நிலை ஏற்படும் போது ஒரு வீரன் வருவான்.’
யாரது? கரடு முரடான திபேத்திய நாட்டிலிருந்து குடிப்பெயர்ந்து வரும் சிவன் தானோ?
உலகைக் காப்பாற்றும் அந்த வீரனாய் உருவாவதில் அவருக்கு சம்மதம் தானா?
கடமை மட்டுமில்லாது, காதலாலும் கவர்ந்திழுக்கப்படுபவர். உண்மையில் சூரிய வம்சிகளை வழிநடத்தி அவர்களுக்காகத் தீமையை அழித்து விடுதலையளிப்பாரா?
சிவா முத்தகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப் பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய் மகா தேவராய் மாற்றிய கதை.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #மெலூஹாவின்_அமரர்கள் |
Last edited by சிவா on Thu Apr 27, 2023 6:36 am; edited 2 times in total
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 51YxMvzlCxL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/51YxMvzlCxL.jpg)
நாகர்களின் இரகசியம் சிவா முத்தொகுதி 2
இன்று, அவர் தெய்வம்.
4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன்.
வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகின்றவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கத்தனமான எதிரியை அழிக்கலாம் விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்: பழிவாங்க வேண்டும் என்ற அவரது துடிப்பும், தீமையின் பாதையும், நாகர்களின் வாயிலுக்கே அவரை இட்டுச் செல்லும்.
தீயசக்திகளின் அராஜகமோ, நாளுக்கு நாள் வெட்டவெளிச்சமாகி வருகிறது; அதன் ஊடுருவல் உலகின் எல்லை வரை பாய்ந்துவிட்டது. அபூர்வ மருந்து ஒன்று கிட்டாத காரணத்தால் பணயக் கைதியாக ஒரு நாடே கிடக்கும் அவலம். பட்டத்து இளவரசன் ஒருவனின் அகால துர்மரணம். சிவனுக்கு இதுவரை உருதுணையாய் இருந்து, தத்துவ மார்கத்தில் வழிநடத்தி வந்த வாசுதேவர்கள், இப்போது தீமையின் பக்கம் நிற்கின்ற கொடுமை. உலகின் மிகச் சிறந்த, ஒப்புவமையில்லாத மெலூஹப் பேரரசும் தப்பவில்லை; அதன் ஆதாரமான மயிகாவில் ஒரு பயங்கர உண்மை புதைந்துள்ளது. சிவன் அறியாமல், கண்ணுக்குத் தெரியாத ஒருவர், மாயத்திரைக்குப் பின்னாலிருந்து, எல்லோரையும் ஆட்டி வைக்கிறார்.
காலங்காலமாய்ப் புதைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடி, பண்டய இந்தியாவின் முடியிலிருந்து அடிவரை பயணித்து, ஒன்றன்பின் ஒன்றாய்ப் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் சிவனிற்கு, ஒன்று மட்டும் நன்றாய்ப் புரிகிறது: கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய். இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு மாயத் தோற்றம் உண்டு.
கடுமையான போர். அதிசயக் கூட்டணிகள். படிப்போரை அதிசயத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் இரகசியங்கள்; அவற்றின் அபூர்வ வெளிப்பாடுகள். இவையனைத்தும், மெலூஹாவின் அமரர்களுக்குப் பின் வரும், சிவா முத்தொகுதியின் இரண்டாவது பகுதியான, விற்பனையில் சாதனை படைத்த இப்புத்தகத்தில் கிடைக்கும்.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #நாகர்களின்_இரகசியம் |
Last edited by சிவா on Thu Apr 27, 2023 6:31 am; edited 1 time in total
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 51nS5zys9PL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/51nS5zys9PL.jpg)
வாயுபுத்ரர் வாக்கு சிவா முத்தொகுதி 3
தீமை உயிர்பெற்று எழுந்துவிட்டது.
தெய்வத்தால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.
சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்மையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார்.
ஆழிப்பேரலையாய் தொடர்ந்து மூழ்கடித்துத் தாக்கும் பல கொடூரப் போர்களால் இந்தியா நிலைதடுமாறுகிறது; தவித்துத் தத்தளிக்கிறது. இந்தப் புனித தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும் முயற்சியில் நடக்கும் போராட்டங்களில், பலர் உயிரிழக்கப்போவது நிச்சயம். விலை எப்பேர்ப்பட்டதாய் இருந்தாலும், இந்தப் போரிலிருந்து சிவன் பின்வாங்கக்கூடாது; முடியாது. வழி தெரியவில்லை; பாதை புரியவில்லை. யாரை அணுகுவது? இதுவரை தனக்கு எவ்வித உதவியும் அளிக்காதவர்களையா? ஆயினும், சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியில், சிவன் சென்றடைவோர்: வாயுபுத்ரர்கள்.
அவரது முயற்சியில் வெற்றி கிட்டுமா? தீமையை அழிக்கும் பெரும்போராட்டத்தில் இந்தியா – ஏன், அவரது உள்ளம் – இன்னும் எதையெதையெல்லாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்?
விற்பனையில் சாதனை படைத்த சிவா முத்தொகுதியின் இந்த இறுதிப் பகுதியில், மேற்சொன்ன மர்மக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் காத்திருக்கின்றன.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #வாயுபுத்ரர்_வாக்கு |
Last edited by சிவா on Thu Apr 27, 2023 6:31 am; edited 1 time in total
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 51Noslqz4AL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/51Noslqz4AL.jpg)
ராம்: இக்ஷ்வாகு குலத்தோன்றல் இராமச்சந்திரா தொகுதி 1
இராமராஜ்யம். உன்னத தேசம். ஆனால், மகோன்னதத்திற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்தது அவன்.
இந்தியா, கி மு 3400. பிரிவினையால் பாழ்பட்டுக் கிடக்கிறது அயோத்யா. யுத்தத்தின் கொடூரம் அதன் உயிர்ச்சக்தியை உறிஞ்சியெடுத்துவிட்டது. ஆழமாய் ஊடுருவியுள்ளது, இச்சிதைவு. தோற்றோர் மீது ஆட்சியைச் சுமத்தவில்லை அரக்க மன்னன், இலங்கை மன்னன் இராவணன். இல்லை; வர்த்தகத்தைச் சுமத்துகிறான். சாம்ராஜ்யத்தினின்று செல்வம் வாரியெடுத்துச் செல்லப்படுகிறது; ஏழ்மை, ஊழல், மனச்சோர்வு எனத் துன்புறுகின்றனர், சப்தசிந்து மக்கள். கொடும் புதைகுழியான இந்த வாழ்க்கையினின்று மீட்க ஒரு தலைவன் வர மாட்டானா எனக் கதறுகின்றனர்.
அவர்கள் தேடும் தலைவன், அவர்களிடையேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர் யாருமில்லை. அவனை அவர்கள் அறிவர். சமூகம் விரட்டியடித்த புண்பட்ட இளவரசன். அவர்கள் உடைக்க முயன்ற இளங்கோ. இராமன். வாட்டியெடுப்பது தன் மக்களேயாயினும், நாட்டின் மீது அவனுக்குள்ள பற்று குறையவில்லை. சட்டத்தின் பக்கம் அவன் மட்டுமே. இருள் போல் சமூகத்தைச் சூழும் அவலத்தை, சீரழிவை எதிர்ப்பது அவனும், சகோதரர்களும், மனைவி சீதாவும் மட்டுமே.
சமூகம் சுமத்தும் அவக்கேட்டை மீறி உயர முடியுமா இராமனால்? சீதாவின் மீதுள்ள காதல், ஆழிப்பேரலையாய் மூழ்கடிக்கப் போகும் போராட்டத்தினின்று மீட்குமா? இளம்பருவத்தை இரக்கமின்றி அழித்த அரக்க மன்னன் இராவணனை வீழ்த்த முடியுமா அவனால்? விஷ்ணுவுக்கேயுரிய பிறவிப்பயனை இராமனால் நிறைவேற்ற முடியுமா?
அமீஷின் புத்தம்புதிய இராமச்சந்திரா தொகுதியுடன் இதோ – ஒரு அபார பயணத்திற்குத் தயாராகுங்கள்.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #ராம் #இக்ஷ்வாகு_குலத்தோன்றல் #இராமச்சந்திரா |
Last edited by சிவா on Thu Apr 27, 2023 6:30 am; edited 1 time in total
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 41wTeHU5UAL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/41wTeHU5UAL.jpg)
சீதா: மிதிலைப் போர்மங்கை இராமச்சந்திரா தொகுதி 2
அவள்தான் நாம் தேடும் வீரமங்கை. அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள். இந்தியா. கி மு 3400 |
பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்குகின்றனர். ஒரே ஒரு தீப்பொறி போதும்; சமூகச் சீர்கேடு வெடிக்கக் காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். செய்வதறியாது செயலிழந்த சப்தசிந்துவிற்குள் இலங்கையின் அரக்க மன்னன் இராவணனது கொடூர நச்சுப்பற்கள் ஆழமாக இறங்கிவிட்டன.
போதும் இந்த அவலம் என முடிவெடுக்கின்றன தெய்வீக இந்தியாவின் காவலர்களான சக்தி வாய்ந்த இரு குலங்கள். தேவை, அவர்களை மீட்க ஒரு சக்தி. ஒரு உன்னதப் பிறவி. தேடல் துவங்குகின்றது.
அநாதைக் குழந்தையொன்று வயலில் கண்டெடுக்கப்படுகிறது. குதறத் துடிக்கும் ஓநாய்க்கூட்டத்திடமிருந்து பருந்து காக்கும் அதிசய குழந்தை. அரசியல் செல்வாக்கற்று, சுற்றியுள்ள இராஜ்யங்களால் புறக்கணிக்கப்பட்ட மிதிலைச் சிற்றரசின் மன்னனால் வளர்க்கப்படுகிறாள், அவள். வளர்ந்து என்ன சாதித்துவிடப்போகிறாள்? என்பதே மக்களின் கேள்வி; அவள் குறித்து அவநம்பிக்கை; அலட்சியம். ஆனால், அவர்களது கணிப்பு தவறு. இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் சீதா.
அமீஷின் புதிய நூலின் மூலம், இக்காவியத்தின் அதிசய பயணத்தை தத்துக்குழந்தை மக்களின் பிரதம மந்திரியாக உயர்ந்து, அவர்கள் தொழும் தெய்வமாக அவதாரமெடுக்கும் அபூர்வ வரலாற்றை தொடருங்கள்.
இராமச்சந்திரா தொகுதியின் இரண்டாம் பாகம், உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். துவக்கத்திற்கும் முன்னால்.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #சீதா #மிதிலைப்_போர்மங்கை #இராமச்சந்திரா |
Last edited by சிவா on Thu Apr 27, 2023 6:30 am; edited 1 time in total
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 51ClWXg1ejL](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/51ClWXg1ejL.jpg)
ராவணன்: ஆர்யவர்த்தாவின் எதிரி இராமச்சந்திரா தொகுதி 3
இந்தியா 3400 பிசிஈ:
அமளி, ஏழ்மை, மற்றும் குழப்பங்கள் நிறைந்த ஒரு நாடு. நிறைய மனிதர்கள் மௌனமாக அவதிப் படுகின்றனர். சிலர் போராடுகின்றனர். சிலர் சிறந்த உலகுக்காக சண்டையிடுகின்றனர். சிலர் தங்களுக்காகவே போராட்டத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு எந்த அக்கறையும் இல்லை.
ராவணன். அவன் தந்தை அவருடைய காலத்தில் மிகுந்த பிரசித்தி பெற்ற ஒரு ரிஷி. யாருக்குமே இல்லாத சிறப்பு ஆற்றல்களை கடவுள்களிடம் இருந்து அருளாகப் பெற்றவர். விதி அவரை கொடுமையின் எல்லைக்கு அழைத்துச் சென்றது. பதின் பருவத்திலேயே அனைவரின் மனதிலும் திகிலை உண்டாக்கக் கூடிய கடக் கொள்ளைக்காரன், சம அளவில் தைரியம், குரூரம் மற்றும் செதே முடிப்பேன் என்ற மனத் திண்மை ஒருங்கே பெற்றவன். மனிதர்களுள் சிறந்தவனாக ஓங்கி வளர வேண்டும், அடக்கி ஆண்டு, கொள்ளை அடித்து, தான் நினைக்கும் சிறப்பை எப்படியாவது அடைந்தே தீருவது என்ற திண்மை.
முரண்களின் வடிவானவன், படு கொடுமைகளை அஞ்சாமல் செபவன், மெத்த படித்த மேதாவி. எதிர்பார்ப்பின்றி அன்பையும் வைப்பான், குற்ற உணர்ச்சியின்றி கொலையும் செய்வான்.
இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம், ராவணனை, இலங்கையின் மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது. அவன் வரலாறு காணாத கொடூரனா, அல்லது, எப்பொழுதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரண மனிதனா?
இந்த புராணம் சார்ந்த, மிகவும் சிக்கலான, கொடூரம் நிறைந்த, உணர்ச்சி குவியாலான, பல சாதனைகளைச் சாதித்த சாதனையாளனைப் பற்றிய கதையை படியுங்கள்.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #ராவணன்: #ஆர்யவர்த்தாவின்_எதிரி #இராமச்சந்திரா |
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
![அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள் 51wCTLGZP7L._SX311_BO1,204,203,200_](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T2/images/I/51wCTLGZP7L._SX311_BO1,204,203,200_.jpg)
நிலைத்த புகழ் இந்தியா
இந்தியா, நாகரிகத்தின் விடியலைக் கண்ட ஒரு கலாச்சாரம். அது மற்ற கலாச்சாரங்களின் எழுச்சியைக் கண்டது மற்றும் அவை மண்ணாக மாறுவதைப் பார்த்தது. இது கொண்டாடப்பட்டு தாக்கப்பட்டது. போற்றப்பட்டது மற்றும் அவமதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், வரலாற்றின் அனைத்து ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகும், அது இன்னும் இங்கே இருக்கிறது! இப்போது, சில நூற்றாண்டுகளின் சரிவுக்குப் பிறகு, அது மீண்டும் ஒரு புதிய விடியலை இயக்குகிறது. அஜனாபவர்ஷ், பாரதம், இந்துஸ்தான், இந்தியா என்று பெயர்கள் மாறலாம். ஆனால் இந்த பெரிய நிலத்தின் ஆன்மா அழியாதது.
கூர்மையான கட்டுரைகள், நுணுக்கமான பேச்சுக்கள் மற்றும் புத்திசாலித்தனமான விவாதங்கள் மூலம் இந்தியாவைப் புரிந்துகொள்ள அமிஷ் உங்களுக்கு உதவுகிறார். அவரின் ஆழமான புரிதலின் அடிப்படையில் மதம், புராணம், பாரம்பரியம், வரலாறு, சமகால சமூக விதிமுறைகள்,ஆட்சி மற்றும் நெறிமுறைகள் பற்றி விளக்கியுள்ளார். “நிலைத்த புகழ் இந்தியா” என்ற இந்த புத்தகத்தின் மூலம் இளம் நாடு, காலமற்ற நாகரிகம், ஒரு பழங்கால கலாச்சாரத்தின் பரந்த நிலப்பரப்பை நவீன கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் அமிஷ்.
Mediafire
அல்லது
Google Drive
குறிச்சொற்கள் #அமிஷ்_திரிபாதி #Amish_Tripathi #நிலைத்த_புகழ்_இந்தியா |
Re: அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
அமிஷ் -> இலங்கைப் போர் நாவல் இருந்தால் பகிரவும் நண்பரே.
kargan86- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 08/04/2020
கண்ணன், Harriz and kondagobi9991 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
» தமிழ் மின்நூல்கள் -Tamil E-books
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
» மின்நூல்கள் தரவிறக்கம்
» தமிழ் மின்நூல்கள் -Tamil E-books
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
» மின்நூல்கள் தரவிறக்கம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|