புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
1 Post - 50%
heezulia
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
284 Posts - 45%
heezulia
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
20 Posts - 3%
prajai
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_m10மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 11:31 pm

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? NWSP7Qk

மக்கள் தொகையில் விரைவில் சீனாவை இந்தியா முந்தவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடி போக, இதனால் ஏற்படக்கூடிய வேறு தாக்கங்கள் என்ன?

2023ஆம் ஆண்டின் மத்தியில் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும்போது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அந்தத் தருணத்தில் சீனாவைவிட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் இருப்பார்கள்.

34 கோடியுடன் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா இருக்கும். 70 ஆண்டுகளுக்கு உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் ஆசிய நாடுகளில்தான் இருப்பார்கள்.

இந்திய மக்கள் தொகை இந்த அளவுக்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுவது ஒரு உத்தேசமான கணிப்புதான். காரணம், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தியாவில் கடந்த 140 ஆண்டுகளாக ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவந்தது. 2021ல் இருந்த கோவிட் பரவல் காரணமாக இது 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போடப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024ல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டியது. ஆனால், வளர்ச்சி விகிதம் என்பது முன்பிருந்ததைப் போல அதிகமாக இல்லை என்பதோடு, 1950களில் இருந்த அளவுக்கு குறைவாகவும் இருக்கிறது.

இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும், அதன் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சீனாவில் அமலில் இருந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை 2016லேயே கைவிடப்பட்டுவிட்டது என்றாலும், அடுத்த ஆண்டு முதல் சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பது, பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்வது ஆகியவை சீனாவின் மக்கள் தொகை குறைவதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில், 1950ல் ஒரு பெண்ணுக்கு 5.7 குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்தது. அது தற்போது ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தை என்ற விகிதத்திற்குக் குறைந்துள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, வேகமாக அதிகரித்துவந்த மக்கள் தொகை நாட்டின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாக இருந்தது. 70களில் இந்தக் கவலை உச்சத்தைத் தொட்டு, மிக பெரிய அளவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தியா உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடாக மாறிய பின் என்ன நடக்கும்?


இந்தியா உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக மாறிய பிறகு, மக்கள் தொகையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும். உலகம் தோன்றியதிலிருந்து அதிக மக்கள் வசித்த ஒரு நாடாக இந்தியா உருவெடுக்கும்.

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தபோது, அதன் மனித வளத்தைச் சிறப்பாக பயன்படுத்திய சீனா, உலகின் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பான அச்சத்தை இந்தியாவும் சீனாவும் ஒரே காலத்தில் எதிர்கொண்டன. ஆனால், சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சியென்பது மிகப் பெரிய அளவில் ஏற்பட ஆரம்பித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகை வீழ்ச்சி மிக மெதுவாகவே நடந்துவருகிறது. இதனால், இந்தியாவில் இளம் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் சற்று குறைவானவர்களே 50 வயதுக்குட்பட்டவர்கள்.

மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்ட காலம் உலகம் முழுவதும் மாறியிருக்கிறது. இப்போது இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதுமே, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட நின்றுபோயிருக்கும் நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி அடையும் நாடுகளைப் பொறுத்தவரை பெரிய சாதகம் இருப்பதாகக் கருதுகின்றன. வேலை செய்யக்கூடிய ஆட்கள் இந்த வளரும் நாடுகளில் இருந்து கிடைப்பார்கள் எனக் கருதுகின்றனர்.

ஆனால், இந்தியாவிற்குள் இதுபற்றி மாறுபாடான பார்வை இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வேகமாக இருந்ததோடு, உணவுப் பற்றாக்குறையும் இருந்தது. இந்த இரண்டு பெரும் பிரச்சனைகளையும் அரசு சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் மிக தீவிரமான மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் பசுமைப் புரட்சி போன்ற உணவு உற்பத்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு முயற்சிகளுமே சிறப்பாக பலனளித்திருக்கின்றன.

மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் என்ன?


மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போக்கை தனது South Vs North: India's Great Divide நூலில் குறிப்பிடுகிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன். அதாவது, கெடுபிடிப் போர் காலகட்டத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான தங்கள் யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டை அமெரிக்கா முன்வைத்தது. ஏழை நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்தால் அது கம்யூனிசப் புரட்சியை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருதியது. இதனால் தெற்காசியா நாடுகளை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்கா வலியுறுத்தியது என்கிறார் அவர்.

"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கண்டிப்பாக ஒரு சிக்கல்தான். இந்தியா மக்கள் தொகை அதிகரிப்பை எதிர்கொண்ட விதமும் சீனா எதிர்கொண்ட விதமும் வெவ்வேறானவை. 1991ல் இந்தியாவின் தனிநபர் வருவாயும் சீனாவின் தனி நபர் வருவாயும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது அல்லது இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சீனாவில் தனிநபர் வருவாய் இந்தியாவின் தனிநபர் வருவாயைப் போல ஐந்து மடங்கு அதிகம். இதற்கு காரணம், அங்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி.

இரு நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ந்தது என்றாலும், நம்மால் சீனா அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை. 2004க்கும் 2014க்கும் இடையில் உயர் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதே இதுதான் நிலைமை. இப்போது வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால் அது 10 சதவீதம் அளவுக்கு வளர வேண்டும். சீனாவில் 2000 முதல் 2014வரை அந்த அளவுக்கு வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்தியாவில் இப்போது அப்படி வளர்ச்சியில்லை. ஆகவே, மேலும் பலர் ஏழ்மைக்குள்தான் தள்ளப்படுவார்கள்" என்கிறார் புள்ளியியல் நிபுணரும் South VS North நூலின் ஆசிரியருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகைக் கட்டுப்பாடு 1970களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது. எல்லாக் கொள்கைகளையும் போலவே இந்தக் கொள்கையும் இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் அமலாக்கப்பட்டது.

இதனால் சில மாநிலங்களில் அதீதமான மக்கள் தொகை பெருக்கமும் சில மாநிலங்களில் மிகக் குறைவான அதிகரிப்பும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் 1971க்கும் 2011க்கும் மத்தியில் ராஜஸ்தானில் 166 சதவீத அதிகரிப்பும் உத்தரப்பிரதேத்தில் 138 சதவீத அதிகரிப்பும் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதமும் கேரளாவில் வெறும் 56 சதவீதமும்தான் அதிகரித்தது. அதாவது ராஜஸ்தானில் 1971ல் 2.57 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011ல் 6.86 கோடியாக உயர்ந்தது. கங்கைச் சமவெளி மாநிலங்கள் முழுக்கவே இந்த நாற்பதாண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற விகிதம் வந்துவிட்டால் மக்கள் தொகை நிலைபெற ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை வந்துவிட்டது. ஆனால், பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருவுறும் விகிதம் இரு மடங்காக இருக்கிறது. பிஹாரில் 3.2ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 3 ஆகவும் இது இருக்கிறது. இது இந்தியாவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

"அதீத மக்கள் தொகை வளர்ச்சி உள்ள பகுதி மற்றும் மக்கள் தொகை வளராமல் நிலைபெற்றுவிட்ட பகுதி ஆகிய இரண்டு பகுதிகளுமே ஒரே நாட்டில் இருப்பது பெரிய பிரச்சனைதான். மக்கள் தொகையைக் குறைத்த பகுதியினர் அதன் பலனை அடைய நினைப்பார்கள். ஆனால், அவர்களால் அதன் பலனை அடையவே முடியாது. கூடுதலாக வரி பகிர்வு, பிற மாநிலத்தினர் வருகை போன்றவை இதில் சிக்கலை ஏற்படுத்தும். முடிவில் இரு தரப்பு மக்களுக்கும் இடையிலான மோதலில்தான் போய் முடியும்" என்கிறார் அவர்.

2019ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, 2018-19ஆம் ஆண்டின் எகனாமிக் சர்வே ஆகியவற்றில் இருந்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே மக்கள் தொகை குறைவது முதலில் தமிழ்நாட்டில்தான் நடக்கும் எனத் தெரியவருகிறது. 2031-41ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி - 0.1ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவதன் அபாயம் குறித்துப் பேசிவரும் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன், மக்கள் தொகை வளர்ச்சி நாட்டின் இரு பகுதிகளிலும் வெவ்வேறு பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்கிறார்.

"பிரதமர் மக்கள் தொகை அதிகரிப்பின் பலன்கள் குறித்துப் பேசுகிறார். மக்கள் தொகை அதிகரிப்பதன் மூலம் பலன் கிடைக்க வேண்டுமென்றால், அந்த மக்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ஆகவே, இது மிகப் பெரிய ஏற்றத்தாழ்வைத்தான் கொண்டுவரப் போகிறது. தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துகொண்டே போகிறது. கேரளாவில் பல பள்ளிகளை மூடுகிறார்கள். தமிழ்நாட்டில் சராசரி வயது 35 என ஆகிவிட்டது. ஆனால், வட மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கிறது.

சீனாவோடு நாம் இப்போது பொருளாதார ரீதியில் போட்டியிடவே முடியாது. சீனப் பொருளாதாரத்தின் அளவு 17 ட்ரில்லியன். நாம் ஐந்து ட்ரில்லியனைத் தொடவே போராடிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக நாம் சீனாவைவிட அதிக அளவில் வளர வேண்டும். அப்போதுதான் பத்தாண்டுகளிலாவது அவர்களை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால், அப்படி நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

மேலும், 2026ல் தொகுதி மறுசீரமைப்பிலும் இது பெரிய பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சனை


இந்தியா சுதந்திரமடைந்த ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டது. 1952ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் 494 தொகுதிகள் இருந்தன. இதற்குப் பிறகு, 1962ல் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. 1973 இந்த எண்ணிக்கை 543ஆக உயர்த்தப்பட்டது.

1975ல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002ல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. இந்த 25 ஆண்டு 2026ல் முடிவுக்கு வருகிறது. அப்போது தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

நிதி ஒதுக்கீட்டு, அதிகாரப் பகிர்வு போன்ற எல்லாமே மக்கள் தொகையின் அடிப்படையில்தான் இருக்கும் ஒரு நாட்டில், ஒரு பகுதியில் மட்டும் மக்கள் தொகை அதிகரிப்பது ஆரோக்கியமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லாது என்கிறார்கள் நிபுணர்கள்.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 2:59 am

சீனாவை முந்தினால், கிட்டத்தட்ட 142 கோடி மக்கள்தொகையுடன், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். இது ஐரோப்பா (74 கோடி) மற்றும் அமெரிக்க (100 கோடியே 40 லட்சம்) கண்டத்தின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

1960 மற்றும் 1980க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்தது. மேலும் 70 ஆண்டுகளுக்குள், அதன் மக்கள் தொகையில் கூடுதலாக 100 கோடி பேர் இணைந்தனர். மக்கள்தொகை தற்போதும் அதிகரித்து வருகிறது, ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே வளர்ச்சி விகிதத்தில் இல்லை. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை குறையப் போகிறது என்று அர்த்தம் கொள்ளலாமா? இந்தியாவின் மக்கள்தொகை ஏற்றம் மற்றும் வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை விளக்கும் ஐந்து விளக்கப்படங்கள் இங்கே உள்ளன.

குறுகிய காலத்தில் 100 கோடி மக்கள்


இந்தியாவின் தற்போதைய சரியான மக்கள் தொகை என்ன என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. எனெனில், 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

அதேவேளையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, 1950 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்தது. அதாவது, 1951ல் 36 கோடியாக இருந்த மக்கள் தொகை 1981ல் 68 கோடியாக அதிகரித்தது. 30 அண்டுகளில் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்திய மக்கள் தொகையில் இணைந்தனர். ஐ.நா.வின் கருத்துப்படி, கடந்த 70 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமானோர் இந்திய மக்கள் தொகையில் இணைந்துள்ளனர்.

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? 92cf1b00-e008-11ed-8df1-d74cbf1089d7

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியுள்ளதால், மக்கள் தொகையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் உதய சங்கர் மிஸ்ரா கருத்துப்படி, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துவிட்டது, ஆனால் அது தொடர்ந்து வளரும்.

சீனாவிலும் 140 கோடி மக்கள் உள்ளனர், ஆனால் பல ஆண்டுகளாக அதன் மக்கள்தொகை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

"தற்போதைய மக்கள்தொகை வேகத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள்தொகை வளர்ச்சி நிலையானதாக இருக்கும் நிலைத்தன்மையை அடைய குறைந்தது 40 ஆண்டுகளாவது நமக்கு ஆகும்" என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார்.

வேகமாக அதிகரித்து தற்போது குறைந்துவரும் மக்கள் தொகை


1950-1990 இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் இறப்பு விதித்திற்கும் பிறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், நிகர இடம்பெயர்வு விகிதம் ஆகியவை கொண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.

"இந்தியாவின் இறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. எனினும், சமீப ஆண்டுகளில் கருவுறுதல் குறைந்து வருவது, இந்தியாவின் விளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதற்கு மிகக் முக்கிய காரணியாக உள்ளது" என்றும் மிஸ்ரா குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Ab635f50-e008-11ed-8df1-d74cbf1089d7

2021 இல், இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.68% ஆகக் குறைந்தது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது, அந்நாட்டின் மக்கள் தொகை 2017லும் 2 சதவீதத்திற்கு அதிகமாகவே இருந்தது. இதன் பொருள், இப்போது அதிகமான மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் மற்றும் குறைந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள், வளர்ச்சி விகிதத்தை சரிவுக்கு கீழே தள்ளுகிறார்கள்.

தற்போதில் இருந்து 2050க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஒட்டுமொத்த அதிகரிப்பு என்பது அதிக கருவுறுதல் விகிதம் உடைய நாடுகளிலும் துணை-சஹாரா ஆப்பிரிக்க மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட ஒட்டுமொத்த பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளிலும் ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இந்தியாவின் கருவுறுதல் விகிதம் கடந்த 20 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

குறைந்து வரும் கருவுறுதல் விகிதம்


இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களிடையேயும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக தேசிய குடும்ப நல ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80% உள்ள இந்துக்களில் பெண்களின் கருவுறுதல் என்பது 1.9 சதவித குழந்தைகள் பெற்றெடுத்தல் என்ற விகிதத்தில் உள்ளது. 1992 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இது ஒரு பெண்ணுக்கு 3.3 குழந்தைகள் என்று இருந்தது. - 1992 மற்றும் 2019 க்கு இடையில் ஒரு பெண்ணுக்கு 1.4 குழந்தைகள் குறைந்துள்ளது.

இதேபோல், அதிக கருவுறுதல் விகிதத்டைக் கொண்ட இஸ்லாமிய மதத்திலும் 1992ஆம் ஆண்டை ஒப்பிடும்போது பெரிய வீழ்ச்சி தெரிகிறது. சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரும் சமீப ஆண்டுகளில் குறைவான குழந்தைகளையே பெற்றுகொள்கின்றனர்.

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? C008b630-e008-11ed-8df1-d74cbf1089d7

அதே நேரத்தில், இதன் காரணமாக இந்திய மக்கள் தொகை வரும் ஆண்டுகளில் திடீர் சரிவைக் காணும் என்று எண்ணத் தேவையில்லை.

"இளைய பெண்களிடையே கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் காண்கிறோம் என்றாலும், வயதான பெண்களுக்கு இன்னும் அதிக கருவுறுதல் விகிதம் உள்ளது, இது இந்தியாவின் மக்கள்தொகை வேகத்தை குறைந்தது இன்னும் 40 ஆண்டுகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளும்", என்று டாக்டர் மிஸ்ரா கூறினார்.

ஐநாவின் கணிப்புப்படி, சமீபத்திய ஆண்டுகளில் காணப்படுவது போன்று கருவுறுதல் விகிதங்கள் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து கொண்டே இருந்தால், இந்தியாவின் மக்கள்தொகை 2100 இல் 150 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய அதிகரிப்புதான்.

மக்கள் குழந்தை பெற்றுகொள்ளாமல் இருப்பதை விரும்புவது போன்ற பல்வேறு சமூக - பொருளாதார காரணங்களையும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடர்பாக டாக்டர் மிஸ்ரா குறிப்பிட்டார்.

தற்போது, இந்தியாவின் கருவுறுதல் விகிதம் அமெரிக்கா (ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள்) மற்றும் சீனா (ஒரு பெண்ணுக்கு 1.2 குழந்தைகள்) ஆகியவற்றை விட சிறப்பாக உள்ளது, ஆனால்,1992 (ஒரு பெண்ணுக்கு 3.4 குழந்தைகள்) அல்லது 1950 (ஒரு பெண்ணுக்கு 5.9 குழந்தைகள்) என முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது இந்தியாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைவு.

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? Df475e70-e008-11ed-8df1-d74cbf1089d7

இளைய தலைமுறையின் நாடு


இளைய தலைமுறையினர் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கும் இது தொடரும். இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் மேல் 25வயதுக்கும் குறைவானவர்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்டோராக இருந்தாலும் இந்தியர்களின் சராசரி வயது 28 ஆக உள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? D1fbbe50-e008-11ed-8df1-d74cbf1089d7

முதியோர்களின் எண்ணிக்கை எப்படி உள்ளது?


சீனா, அமெரிக்கா, ஐப்பான் போன்ற பிற நாடுகளைப் போல், இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரவில்லை. சீனாவில் 10 நபர்களை எடுத்துக்கொண்டால் அதில் 1.4 நபர்கள் 65 வயதை கடந்தவராக உள்ளார். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் அங்கு 10ல் 1.8 பேர் 65 வயதை கடந்தவராக உள்ளார்.

ஆனால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் மட்டுமே 65 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 2100ல் இந்த எண்ணிக்கை 23 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஐநாவின் கணிப்புகளின்படி, 2078 ஆம் ஆண்டில், இது 23.9% ஆக குறையும். அதற்கு இன்னும் 50 ஆண்டுகள் உள்ளன. ஆனால், 2063 வரை இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியா இளைய தலைமுறையினர் நிறைந்த தேசமாகவே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 27, 2023 5:38 am

‘மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா’ - ஜெர்மனி பத்திரிகை கார்ட்டூனால் கொதிப்படைந்த இந்தியர்கள்



மக்கள் தொகையில் சீனாவை முந்தவிருக்கும் இந்தியா; சாதக, பாதகங்கள் என்ன? 981391

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) என்ற வார இதழ் கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்பட்டது. அது இந்தியர்களை கொதிப்படைய செய்யும் வகையில் உள்ளது.

அந்தக் கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் ரயில்கள் இரண்டு அதன் தடங்களில் செல்கின்றன. அதில் இந்திய நாட்டின் ரயில், சீன ரயிலை முந்துகிறது. இந்திய ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் மேற்கூரை உட்பட பெரும்பாலான இடங்களில் பயணிப்பது போல இந்தக் கார்ட்டூனில் உள்ளது. அதோடு இதில் சீனாவின் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில் அவர்கள் புல்லட் ரயிலில் பயணிப்பது போல சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.

“ஜெர்மனி, இது இனவெறியை பரப்பும் வகையில் உள்ளது. இந்தக் கார்ட்டூன் இந்தியாவின் யதார்த்தத்துடன் எந்த வகையிலும் பொருந்தவில்லை. இதன் நோக்கம் இந்தியாவைத் தாழ்த்துவதே” என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

இது இனவெறி ரீதியிலான கருத்தியலாக மட்டுமல்லாது முற்றிலும் தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ரயில் கூரை மீது வங்கதேச மக்கள் பயணிப்பதை இந்தியா என ஜெர்மனியர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என கருதுகிறேன் என இசைக் கலைஞர் மைக்கேல் மகால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான ரயில் தடங்கள் மின்மயமாக இருக்கும் சூழலில் இந்த கார்ட்டூன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அன்ஷுல் சக்சேனா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2023 6:48 pm

ரயில் மீது மக்கள் பயணம் 
இந்தியாவில் இல்லை என மறுப்புக் கூறி 
இந்திய தூதரகம் ஜெர்மனியில் அறிக்கை விடுவதுடன் 
ஜெர்மானிய அரசு மன்னிப்பு கூறி,தவறை திருத்தவேண்டும் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக