Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
First topic message reminder :
அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி,"12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் சட்ட மசோதாவை எதிர்கிறோம்" என்றார். இதே போல, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப் பெருந்தகை, "இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள்" என்று தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் உரிமை எல்லாம் பறிக்கின்ற இந்த சட்டம் முன் வடிவு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது, தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும், தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் விளக்கம் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், "இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை. விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றார்.
அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.
தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதா திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. |
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் ) சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மமக, விசிக, பாஜக, மதிமுக, பாமக உள்பட பெரும்பாலான எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். |
8 மணி நேரம் வேலை நீர்த்துப்போக செய்யும் மசோதா
அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி,"12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் சட்ட மசோதாவை எதிர்கிறோம்" என்றார். இதே போல, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயன்
காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப் பெருந்தகை, "இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள்" என்று தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார்.
தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரிக்கை
தொழிலாளர்களின் உரிமை எல்லாம் பறிக்கின்ற இந்த சட்டம் முன் வடிவு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது, தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும், தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் விளக்கம்
இதற்கு பதில் விளக்கம் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், "இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை. விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றார்.
முதல் முறையாக வெளிநடப்பு
அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.
Re: 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
12 மணி நேர வேலை சட்டம் தமிழக தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்: விக்கிரமராஜா
தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கும் மசோதாவை தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா வரவேற்றுள்ளார்.
தொழிற்சாலைகளுக்கு நெகிழ்வான வேலை நேரத்தை அனுமதிக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட மசோதாவை சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றியது. இதன்மூலம் தனியார் தொழிற்சாலைகளில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், காலம் மாறி வருவதால், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்ற சட்டத் திருத்தத்தை வரவேற்பாக தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
”தொழிலாளர் நெருக்கடி மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. வட இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் உள்ளூர் வேலைகளை கைப்பற்றுவதாக நமது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்து அதற்கேற்ப ஊதியம் பெறுவதை நான் காண்கிறேன். இந்த மசோதாவுக்குப் பிறகு, தமிழகத் தொழிலாளர்கள் கூட 12 மணி நேர வேலைக்குச் சமமான சம்பளத்தைப் பெறுவார்கள்,” என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும், “மக்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பது தவறான கருத்து. எட்டு மணி நேரத்தில் அவர்களின் டிஃபன், தேநீர், மதிய உணவு மற்றும் காபி நேரம் ஆகியவை அடங்கும். உழைப்பின் சரியான நேரத்தை நாம் கணக்கிட வேண்டும் என்றால், அது மிகவும் குறைவாக இருக்கும். போட்டி நிறைந்த இந்த உலகில் இதுபோன்ற செயல்கள் தேவை” என்றும் அவர் கூறினார்.
Re: 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
60 ஆண்டுகளுக்கு முன்னர்,
PWD இல் வேலை செய்த ஜுனியர் என்ஜினீயர் நண்பர் கூறியது,
10 மணி ஆபீஸ் 1025 வரை வரலாம்.
கையெழுத்து போட்டுவிட்டு ட்ரேயில் இருக்கும் பேப்பர்களை மேலோட்டமாக
பார்த்தால்.
1100 முதல் 1110 வரை அலுவலக நண்பர் வரவு எதிர்பார்ப்பு.
1115 நண்பர் வரவில்லையெனில் அவர் டிபார்ட்மென்டுக்கு சென்று பேசுதல்.
1115 -1145 வெளியில் வந்து டி .காபி அருந்தல். அரசியல் பேசுதல்.நடுநடுவே
கிசுகிசுக்களும் கிளம்பி களை கட்டும்.
1200 --1230 ஆபீஸ் வேலை. 01 00 மணிவரை வலது பக்க ட்ரேயில் உள்ள பேப்பர்கள்
இடது பக்க ட்ரெய்க்கு மாறும்.
மதிய நேர வேலை.
0100 முதல் சாப்பாடு அரைமணி இடைவேளை --சில சமயம் 0200 வரை போகும்.
0300 மணிக்கு டி நேரம், வெளியே சென்று டி .காபி அருந்தல் .
0330 முதல் 0530 ஆபீஸ். மாலை 5 மணிக்கே கிளம்பி விடலாம்.
இது 60 வருடத்திற்கு முன் கதை. இப்போதெல்லாம் எப்பிடி என தெரியாது.
அதிக நேரம் ஆபீசில் இருந்தால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாமாம்
PWD இல் வேலை செய்த ஜுனியர் என்ஜினீயர் நண்பர் கூறியது,
10 மணி ஆபீஸ் 1025 வரை வரலாம்.
கையெழுத்து போட்டுவிட்டு ட்ரேயில் இருக்கும் பேப்பர்களை மேலோட்டமாக
பார்த்தால்.
1100 முதல் 1110 வரை அலுவலக நண்பர் வரவு எதிர்பார்ப்பு.
1115 நண்பர் வரவில்லையெனில் அவர் டிபார்ட்மென்டுக்கு சென்று பேசுதல்.
1115 -1145 வெளியில் வந்து டி .காபி அருந்தல். அரசியல் பேசுதல்.நடுநடுவே
கிசுகிசுக்களும் கிளம்பி களை கட்டும்.
1200 --1230 ஆபீஸ் வேலை. 01 00 மணிவரை வலது பக்க ட்ரேயில் உள்ள பேப்பர்கள்
இடது பக்க ட்ரெய்க்கு மாறும்.
மதிய நேர வேலை.
0100 முதல் சாப்பாடு அரைமணி இடைவேளை --சில சமயம் 0200 வரை போகும்.
0300 மணிக்கு டி நேரம், வெளியே சென்று டி .காபி அருந்தல் .
0330 முதல் 0530 ஆபீஸ். மாலை 5 மணிக்கே கிளம்பி விடலாம்.
இது 60 வருடத்திற்கு முன் கதை. இப்போதெல்லாம் எப்பிடி என தெரியாது.
அதிக நேரம் ஆபீசில் இருந்தால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாமாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு சொல்லும் காரணங்கள் என்ன?
தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தொழிலாளர்களின் நலன்களில் எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் உறுதியளித்தனர். இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
முன்னதாக, சட்டப்பேரவையின் சமீபத்திய கூட்டத்தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, பேரவையில் இருந்து முதல் முறையாக ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்ச்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 24ஆம் தேதி இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிடக் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தன.
அரசின் சட்டத்திருத்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன், வேலை நேரத்தை அதிகரித்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் குறையும். எனவே, தமிழ்நாடு முதல்வர் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது? |
இந்த நிலையில், நடைபெற்ற இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு ஐந்து பக்க செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.
1) 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்திருத்த முன்வடிவின் முக்கியமான பிரிவுகளில் குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும் இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
2) தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றியும் அரசு அக்கறை கொண்டுள்ளதால், தொழிலாளர் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவுக்கு அக்கறையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
3) இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இச்சட்ட முன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர். இந்த விஷயத்தில் தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
4) இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக ஆளும் திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டது என்பதை பட்டியலிட்ட அரசு, இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால் அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து அவர்களின் கருத்துகளுக்கு இணங்க, அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் உறுதியாக இருக்கும்.
5) அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருச்ச சட்ட முன்வடிவு மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சந்தித்த கடும் அரசியல் நெருக்கடி |
தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் கேட்டபோது, "ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு அதை கூட்டத்தொடருக்கு வெளியே திரும்பப் பெற வழியில்லை. ஒரு அறிக்கை மூலம் அதை செய்ய முடியாது. அதனால் தான் அந்த சட்டத்திருத்தத்தின் அமலாக்கத்தை அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது," என்று கூறினார்.
அரசின் முடிவு தமக்கு ஆச்சரியமிளிக்கவில்லை என்று கூறிய அவர், "தன்னோடு கூட்டணி அரசியலில் உள்ள மற்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகள் மட்டுமின்றி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஆசிரியர் வீரமணி போன்றோர் கூட தமிழக அரசின் 12 மணி நேர சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு இது அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது," என்றும் சுட்டிக்காட்டினார்.
"மக்கள்தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கம் சம்பந்தப்பட்ட இதுபோன்ற விஷயத்தில் முதல்வர் கொஞ்சம் முழு ஈடுபாடு காட்டி இந்த சட்டத்திருத்தத்தின் தாக்கம் அல்லது பின்விளைவை முன்கூட்டியே யோசிக்கத் தவறி விட்டார். அத்தகைய தவறு எதிர்காலத்தில் நிகழாமல் அவர் பார்த்துக் கொள்வது நல்லது," என்றும் லட்சுமணன் தெரிவித்தார்.
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருநங்கைகள் உரிமை மசோதா: திருச்சி சிவா முயற்சிக்கு திமுக பாராட்டு
» கௌரவ கொலைகளைத் தடுக்க புதிய மசோதா: பிருந்தா காரத் வலியுறுத்தல்
» விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!
» கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா
» கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக.
» கௌரவ கொலைகளைத் தடுக்க புதிய மசோதா: பிருந்தா காரத் வலியுறுத்தல்
» விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!
» கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா
» கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|