ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
VENKUSADAS
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 
VENKUSADAS
மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_m10மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள்.

Go down

மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள். Empty மது தரும் பரிசு - 200 வகையான நோய்கள்.

Post by சிவா Thu Apr 20, 2023 9:21 pm



மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்னைகளையும் மதுக்குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் மது அருந்துவோர் குறித்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது ஜெர்மனியிலுள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம். 2010 முதல் 2017 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த ஆய்வின் முடிவில், மதுவுக்கு அடிமையானவர்களை 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் `லான்செட்' ஆங்கில இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் மது குடிப்பவர்களை ஒதுக்கி வைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இன்று, மது அருந்துவது தவறல்ல என்ற மனோபாவம் வளர்ந்துவிட்டது. பள்ளி மாணவர்கள்கூட மதுக்கடைக்குச் சென்று எவ்வித அச்சமும் இல்லாமல் புட்டிகளை வாங்கும் அவலம் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கொண்டாடுவதற்கும், கூடிப்பிரிவதற்கும் மட்டுமே உலகம் முழுவதும் மது குடிக்கிறார்கள். ஆனால், இங்கு குடி என்பது நோயாக மாறியிருக்கிறது. சிறு வயதிலேயே பலமிழந்து, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள்.

``மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்னைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மது அருந்துவதால் `ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ்ஆர்டர்’ (Alcohol Induced Psychotic Disorder) என்ற மனப்பிறழ்வு நோய் ஏற்படுகிறது. மனப்பிறழ்வு என்பதை `பித்துப்பிடித்தாற்போல’ என்றும் குறிப்பிடலாம். அதாவது, காதில் மாயக்குரல்கள் கேட்பது, தன்னை யாரோ கத்தியால் குத்தவோ, வெட்டவோ வருவதுபோன்ற மாயப்பிம்பங்கள் தோன்றுவது, தனக்கு யாரோ செய்வினை அல்லது சூனியம் வைத்துவிட்டதுபோல நினைப்பது, பிறர் தன்னைப் பற்றியே பேசுவதாக நினைப்பதுபோன்ற பல்வேறு மனநிலைக்கு ஆளாவார்கள். இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது, கொலை செய்வதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மதுப்பழக்கம் உள்ள சிலர், தன்னுடைய மனைவி மீது சந்தேகப்படுவார்கள். இதன் விளைவாக இருவருக்கும் இடையே பிரச்னைகள் உருவாகி, அது கடைசியில் விவாகரத்தில் முடியும். சமீபகாலமாக, 'ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ்ஆர்டர்' பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

உடல்நலப் பாதிப்புகள்!


தொடர்ச்சியாக மது அருந்துவதால் நரம்பியல் கோளாறுகள், கைகால் தளர்ந்துபோவது, கால் எரிச்சல், `எரெக்டைல் டிஸ்பங்ஷன்’ (Erectile dysfunction) என்ற ஆண்மைக் கோளாறு போன்றவை ஏற்படும். `சிரோசிஸ் ஆஃப் த லிவர்’ (Cirhosis of the liver) என்பது மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவலாகக் காணப்படும் கல்லீரல் நோய். இதுமட்டுமன்றி பார்வைக் கோளாறுகள், உடல்பருமன் மற்றும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மது அருந்துவதால் உணவுக் குழாய் முழுவதும் பாதிக்கப்படும்.

சிலர் நீண்டநாள் மது அருந்தாமல் இருப்பார்கள். திடீரென இரண்டு, மூன்று நாள்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார்கள். இதனால் கணையம் அழற்சிக்குள்ளாகி, `அக்யூட் பேங்கிரியாட்டிடிஸ்’ (Acute Pancreatitis) என்ற நிலைக்குப்போய் மரணம்கூட சம்பவிக்கலாம். மிதமிஞ்சிய மதுப்பழக்கத்தால் `கிரானிக் பேங்கிரியாட்டிடிஸ்’ (Chronic Pancreatitis) எனும் நிலைக்குச்சென்று அடிவயிற்றில் வலி (Nagging Pain) ஏற்படும். ஆகவேதான் மதுப்பழக்கத்தை `குடி நோய்’ என்கிறோம்.

சோஷியல் டிரிங்கிங்!


இன்றைய வாழ்க்கைச்சூழல் மனஅழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல், நிலையற்ற அரசியல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பணிச்சுமை போன்றவையும் அதிகரித்திருக்கின்றன. எனவே, அவற்றை எதிர்கொள்ள மதுப்பழக்கம் நல்லது என்றும், அது ஆசுவாசப்படுத்தும் என்றும் தவறாகக் கற்பிக்கப்படுகின்றன. இதனால், இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை பலரும் குடிப் பழக்கத்தில் அடிமையாகிக் கிடக்கின்றனர்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் இளைஞர்கள் சிலர் தன்னுடைய கழுத்துப்பட்டையைக்கூட கழற்றாமல் மதுக்கூடங்களில் மது அருந்துவதைச் சென்னை போன்ற பல நகரங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி என மாநகரங்களில் உள்ள பப்புகள், பார்கள் எல்லாம் நிரம்பிவழிகின்றன. பணத்தைப் பற்றி கவலைப்படாமல், `நாளை காலைக்குள் இந்த உலகம் அழிந்துவிடும். அதற்குள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும்’ என்பதுபோல மதுவை வெறித்தனமாக குடிக்கின்றனர். அதேபோல சோஷியல் டிரிங்கிங் (social drinking) ஈடுபடும் எல்லோரும் குடிநோயாளிகளாக மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கல்லூரி மாணவர்கள் 10 பேரிடம் மதுப்பழக்கம் அறிமுகமானால், அதில் ஆறு பேர் தப்பிவிடுவார்கள். ஆனால், நான்கு பேர் தீவிர மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 35 வயதிலிருந்து 40 வயதுக்குள் எல்லாவகையான உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஆளாகிவிடுவார்கள். சில நேரங்களில் `மதுப்பழக்கம் என்பது மரபணுக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குடிநோயாளிகளாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் அது பரவும்’ என்கிற தியரி உண்டு. அதனால், முன்னோர் மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அடுத்த தலைமுறையினர் மதுவிலிருந்து விலகியிருப்பதே நல்லது.

மீள்வது எப்படி?


ஒரேநாளில் ஒருவரால் மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாது. மதுப்பழக்கத்திலிருந்து ஒருவரை மீட்க நீண்டகால சிகிச்சை தேவைப்படும். `ஆல்கஹாலிக் வித்ட்ராவல் சின்ட்ரோம்’ (Alcohol Withdrawal Syndrome) என்று ஒன்று உள்ளது. ஒரு குடிநோயாளி மதுவை நிறுத்தினால் அவருக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கும்; குழப்பமான மனநிலை ஏற்படுவதுடன் வியர்த்துக்கொட்டும்; உறக்கம் வராது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும்விதமான சிகிச்சை மையங்களை அரசு கூடுதலாகத் திறக்க வேண்டும். அதற்குரிய மருத்துவர்களை அதிகமாக நியமிக்கவேண்டியது அவசியம். மதுவினால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தை மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டும். மாவட்டம், நகரம்தோறும் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மையங்கள் தொடங்கினால் மதுவைக் கைவிட நினைக்கும் பலரும் இத்தகைய மையங்களை நாடிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் படித்தவர்கள் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். ஆனால், நம் நாட்டில் குடிக்கு அடிமையானவர்களில் பலர் படிப்பறிவில்லாதவர்களே. அவர்களில் பலர் மதுவிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை குறித்துத் தெரியாமல் இருக்கின்றனர். அவர்களை மீட்கக் கடைநிலை மக்களையும் சென்றடையும்வகையில் மிகப்பெரும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க வேண்டும். சில அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பிடுவதுபோல படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாம். இதனால் இளைய தலைமுறை மதுவைச் சுவைக்காமல் நாம் காப்பாற்றிவிடலாம்.

இவற்றுக்கும் மேலாகத் தனிமனித ஒழுக்கம் அவசியமானது. தமிழகத்தை எய்ட்ஸ் நோய் அச்சுறுத்தியபோது தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்தோம். அதேபோல மிகப்பெரிய பிரசாரங்கள், உதவிக் குழுக்கள் அமைப்பது, மருத்துவர்களை ஒருங்கிணைப்பது, மாநாடுகள் நடத்துவது எனத் தொடர்ச்சியான செயல்பாடுகள்மூலம் சமூகத்தில் மதுவுக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டுவர அரசால் மட்டுமே முடியும். செய்வார்களா..?” என்ற கேள்வியோடு முடிக்கிறார் எஸ்.மோகன வெங்கடாசலபதி.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum