புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_m10சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 12:35 am

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 876c5500-dd1c-11ed-9d6a-e9233d4ad622

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாத சுவாமி திருக்கோவிலில் யாக சாலைக்கு மண்ணெடுக்கத் தோண்டியபோது 20க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளும் நூற்றுக்கணக்கான செப்பேடுகளும் கிடைத்துள்ளன.

குடமுழுக்கு பணிகள்


சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 422ebde0-dd38-11ed-8df1-d74cbf1089d7

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பணிகள் நடந்துவருகின்றன. மே 24ஆம் தேதி அங்கு குடமுழுக்குச் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், அந்த விழாவுக்கு யாக சாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோவிலுக்குள் மேற்குக் கோபுர வாசல் அருகே நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டடி ஆழம் தோண்டிய நிலையில், சில சிலைகள் தட்டுப்பட்டன. இதையடுத்து, மிகக் கவனமாக பணிகள் நடைபெற்றன.

அப்போது அந்தப் பள்ளத்தில் இருந்து விநாயகர், முருகன், வள்ளி - தெய்வானை, சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிவகாமி உள்பட 23 செப்புச் சிலைகள் கிடைத்தன.

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 3a2302f0-dd3d-11ed-8df1-d74cbf1089d7

இந்தச் சிலைகள் அரையடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. இதுதவிர, 493 செப்பேடுகளும் 16 பூஜை பொருட்களும் 15 பீடங்களும் 50 வேறு சில உலோகப் பொருட்களும் கிடைத்தன.

இங்கு கிடைத்த செப்பேடுகளில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அனைத்து செப்பேடுகளையும் முழுமையாகப் படித்த பிறகே, அதில் என்னென்ன பாடல்கள் அல்லது தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும்.

இதுபோல பொருட்கள் கிடைத்த தகவல் தெரிந்ததும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு அவற்றைப் பார்வையிட்டார்.

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 476f3f50-dd3d-11ed-8df1-d74cbf1089d7

'மிகப் பெரிய அதிசயம்'


இந்தப் பொருட்கள் கிடைத்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். ஆனால், அந்தப் பொருட்களை வருவாய்த் துறையினர் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இந்தப் பொருட்கள் கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச்சுவடி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நூலாக்கக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சென்னையிலிருந்து சீர்காழி சென்று அந்த செப்பேடுகளில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.

"இது மிகப் பெரிய அதிசயம். இதுவரை தமிழ்நாட்டில் செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை. ஆனால், தேவாரப் பாடல்கள் செப்பேட்டில் எழுதப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சிதம்பரம் கோவிலில் குலோத்துங்கச் சோழனிடமும் அவனது மகன் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன் என்பவன் செப்பேடுகளில் தேவாரப் பாடல்களை எழுதியதாக சிதம்பரம் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே தற்போது கிடைத்துள்ள செப்பேடுகள் அவனால் எழுதப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம்


சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 31392890-dd38-11ed-8df1-d74cbf1089d7

குலோத்துங்கச் சோழனிடமும் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன், சிதம்பரம் கோவிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கோவிலில் இரண்டு பெரிய நுழைவாயில்களைக் கட்டவும் சந்நிதியை விரிவுபடுத்தவும் செய்தார். ஊர்வலப் பாதைகளில் விளக்குகளை எரியச் செய்தார். நடராசர் பிட்சாடன யாத்திரையில் செல்வதற்காக ரிஷப வாகனம் ஒன்றை அமைத்துத் தந்தார். அதோடு நூறு கால் மண்டபம் ஒன்றையும் கட்டினார்.

இவர் திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்ததோடு, மூவர் தேவாரத்தை செப்பேடுகளில் எழுதவும் ஏற்பாடு செய்ததாக தனது பெரிய புராண ஆய்வு நூலில் மா. ராசமாணிக்கனார் கூறியிருக்கிறார்.

இந்தச் சிலைகளும் செப்பேடுகளும் ஏன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன?

"தமிழ்நாட்டின் மீது பல முறை அந்நியர் படையெடுப்பு நடந்திருக்கிறது.

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள் 6f3795d0-dd1c-11ed-8df1-d74cbf1089d7

மாலிக் கபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து நடந்திருக்கிறது. இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பதால் மாலிக் கபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் பாலசுப்பிரமணியம்.

தமிழ்நாட்டில் இதுவரை செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை என்றாலும், கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள திருவிடைவாயிலில் உள்ள புண்ணியநாதர் கோவிலில் 1912ஆம் ஆண்டில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பாடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சைவத் திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்ற பதிகத்தைப் பாடியது இந்தத் தலத்தில்தான் என நம்பப்படுகிறது.

இக்கோயிலில் நாற்பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னர்களின் காலத்திலேயே கட்டப்பட்ட இந்தக் கோவில் தொடர்ந்து சோழ மன்னர்களால் மேம்படுத்தப்பட்டது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 2:24 pm

சீர்காழியில் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய செப்பு பட்டயங்கள் தேவாரம் பாடிய வரிகள் செதுக்கபட்ட பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன‌

ஆனால் ஒரு தமிழனால் இதனை இன்று வாசிக்க முடியுமா என்றால் முடியாது, இவ்வளவுக்கும் தமிழில் தமிழர்களால் எழுதபட்ட தமிழ் பட்டயம்

ஆனால் சுமார் 3 ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய சீன கல்வெட்டை சீனரால் வாசிக்க முடியும் அதையே தம் தம் நாடுகளில் இத்தாலிகாரனால் லத்தீனையும், யூதனால் ஹீப்ரூ மொழியினையும் பல்லாயிரம் வருடத்துக்கு முந்தைய வடிவில் இருந்தாலும் படிக்க முடியும்

தமிழனால் அது முடியாது

காரணம் அய்யா ராம்சாமி செய்த எழுத்து சீர்திருத்தம் அவருக்கு வழிகாட்டிய அந்த பெஸ்கி எனும் இத்தாலிகாரனும் செய்த சதியும் அப்படி

தமிழன் தன் தொன்மையினை படிக்க முடியாமல் போக செய்யபட்ட சதி அது, இதோ அந்த சதி சரியாக வேலை செய்கின்றது, நம் மொழியினை நம்மாலே படிக்கமுடியவில்லை

எவ்வளவு பெரிய வீழ்ச்சி இது?

விரைவில் திராவிடத்துக்கு முடிவு கட்டி சங்ககால தமிழை மறுபடியும் கொண்டுவரவேண்டியது அவசியம்

அது ஒன்றும் சிக்கலே அல்ல, முதலில் கடினமாகத்தான் இருக்கும், ஓரிரு தலைமுறை திணறும் ஆனால் வருங்கால தலைமுறை முன்னோர்கள் கண்ட தமிழுடன் இணைந்துவிடும்

அதை அவசியம் செய்தல் வேண்டும்

தமிழுக்கு தலைவைத்தார்கள் , தமிழ்மொழி காக்க 100 பேர் செத்தார்கள், மொழிபோர் என்றெல்லாம் அரசியல் செய்யபடும் தமிழகத்தில் தமிழ் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றது

தஞ்சையில் மராட்டியன் கட்டிவைத்த சரஸ்வதி மாளிகையும், அவன் சேகரித்த சுவடிகளையும் நோக்கும் போது, மராட்டியனுக்கிருந்த தமிழ் ஆர்வம் கூட இந்த தமிழ் திராவிட கோஷ்டிக்கு இல்லை என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது

காரணம் அவன் இந்து எனும் வகையில் தமிழ் சுவடிகளை இந்து சொத்துக்களாய் சேகரித்தான், இவர்களுக்கோ அடிப்படையிலே இந்துவெறுப்பு

அந்த வெறுப்பில்தான் தமிழை சிதைத்தார்கள்

எவவளவு பெரிய பாவத்தை இந்த அபலை இனம் மேல் சூட்டியிருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது , இதனையெல்லாம் களைய நம்மிடம் ஒரு தலைவன் இல்லை எனும் பொழுது நெஞ்சம் விம்முகின்றது

"விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

தமிழச் சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?"

என அழுத பாரதிதான் நினைவுக்கு வருகின்றான்

அந்த சுவடிகளை கையில் ஏந்தி ஆசை தீர படித்து கொண்டாடி, நம் குலசொத்து நம் பாரம்பரிய சொத்து என கொண்டாட வேண்டிய தமிழகம், ஊமை தாயினை கண்ட குருட்டு குழந்தை போல அருமை சுவடிகள் கிடைத்தும் வாசிக்க முடியாமல் தலை குனிந்து இயலாயமையில் கதறி நிற்கின்றது

#பிரம்ம_ரிஷியார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 18, 2023 6:27 pm

சங்க தமிழ் --பழந்தமிழ் --என பெருமை படலாம்.

ஆனால் தற்கால ஜனங்களும் வரும் சந்ததியரும் 

பெருங்குழப்பம் அடைவர்.

எனது சொந்த கருத்து ----எவருக்கும் எதிராக /எதிர்ப்பாக இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக