Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
Page 1 of 1
சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
![சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி 26af6a70-dc2e-11ed-a326-53f375769f4b](https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/96f4/live/26af6a70-dc2e-11ed-a326-53f375769f4b.jpg)
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே எழுந்த அதிகாரப் போட்டி பெரும் மோதலாக வெடித்துள்ளது. இதில், இதில் இந்தியர் ஒருவர் உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தைப் பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளன. தலைநகரில் மட்டும் 17 பொதுமக்கள் உள்பட 55 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பலாம் என்ற முன்மொழிவே இந்த மோதலுக்குக் காரணம். இரவு முழுவதும் சண்டை நீடித்த நிலையில், கார்டோம் நகரில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ராணுவம், அதற்கு எதிராக போரிடும் துரித உதவிப் படைகள்(Rapid Support Forces) ஆகிய இரு தரப்புமே கூறுகின்றன. |
தலைநகருக்கு வெளியேயும் விரியும் சண்டை
தலைநகர் கார்டோமிற்கு அருகில் உள்ள ஒம்துர்மான், பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கடும் சண்டை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. செங்கடல் துறைமுகமான போர்ட் சூடானிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
துணை ராணுவப் படைத் தளங்கள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவில் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த விமானப்படை, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ராணுவம் - துணை ராணுவப்படைகள் சண்டையால் பீதியடைந்துள்ள கார்டோம் நகரவாசிகள் பிபிசியிடம் பேசுகையில், அருகில் உள்ள வீட்டின் மீதே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக தெரிவித்தனர்.
சூடான் முழுவதும் ஆங்காங்கே நீடிக்கும் இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. ராணுவத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறும் மருத்துவர்கள் குழு, பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்தத்தில் 595 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது.
காப்கபியா தளத்தில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே மூண்ட மோதலில் ஐ.நா. துணை அமைப்பான உலக உணவுத் திட்டப் பணியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள், சூடானில் வறுமையால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.
இந்தியர் ஒருவர் பலி
சூடானில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே வெடித்துள்ள மோதலில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார். சூடானில் டால் குரூப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியர் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது குடும்பத்துடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
சண்டையை நிறுத்த ஐ.நா., உலக நாடுகள் வலியுறுத்தல்
சூடானில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ ஜெனரல்களே ஆட்சி நடத்தி வந்தனர்.
ராணுவ ஆட்சியாளரான ஜெனரல் அப்டெல் ஃபட்டா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான ராணுவப் படைகளுக்கும், துணைத் தலைவராக செயல்பட்ட முகமது ஹம்தான் டெகலோ ஆதரவு துணை ராணுவப் படைகளுக்கும் இடையே தற்போது சண்டை நடக்கிறது.
அனைத்து ராணுவத் தளங்களையும் கைப்பற்றும் வரை சண்டை நீடிக்கும் என்று ஹெமிடிட் என்று அழைக்கப்படும் முகமது ஹம்தான் டெகலோ உறுதிபடக் கூறியுள்ளார்.
ராணுவத் தரப்போ, துரித உதவிப் படைகள் என்ற துணை ராணுவப்படை முற்றிலுமாக கலைக்கப்படும் வரை பேச்சுவார்த்தையே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சண்டையை உடனே நிறுத்துமாறு இரு தரப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளன. இரு தரப்பு தலைவர்களையும் தொடர்பு கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எகிப்து ராணுவத்தினரை சிறைபிடித்த துணை ராணுவப் படை
அதிபர் மாளிகை, ராணுவ தளபதியின் இல்லம், 3 விமான நிலையங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் புர்ஹான் அளித்துள்ள நேர்காணலில் இதனை மறுத்துள்ளார்.
அரசுத் தொலைக்காட்சி நிலையத்திலும் சண்டை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அலுவலகம் தற்போது துணை ராணுவப் படை கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக சண்டையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, கார்டோம் நகருக்குத் தெற்கே தங்களது ஒரு தளம் தாக்குதலுக்கு இலக்கானதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்திருந்தன. துணை ராணுவப் படைகள் மீது ராணுவம் விமான தாக்குதல் நடத்துவதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதன் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
துணை ராணுவப் படையினர் ராணுவ முகாம்களை தாக்கியதோடு, ராணுவ தலைமையகத்தையும் கைப்பற்ற முயன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
"ஆங்காங்கே சண்டை நீடிக்கிறது. நாட்டைப் பாதுகாக்கும் கடமையை ராணுவத்தினர் ஆற்றி வருகின்றனர்" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாபில் அப்துல்லா கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூடானில் வடக்கேயுள்ள மெரோவெ நகரிலும் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மெரோவெ நகரில் எகிப்திய துருப்புகள் சரணடையும் வீடியோவை துணை ராணுவப் படைகள் வெளியிட்டுள்ளன. சூடான் ராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற தனது படை வீரர்கள், தற்போதைய புதிய சூழலில் தங்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள சூடான் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.
சூடானில் திடீர் சண்டை ஏன்?
2021-ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ தளபதிகள் ஒருங்கிணைந்து இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்துகின்றனர். அதன் தலைவராக ஜெனரல் புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெடியும் இருக்கின்றனர்.
சூடானில் மீண்டும் ஜனநாயக ஆட்சிக்குத் திரும்புவதற்கான முன்மொழிவுப்படி, ராணுவத்துடன் துணை ராணுவப் படைகளை எப்போது இணைப்பது என்பதில்தான் மோதல் வெடித்துள்ளது. இதனை 2 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் என்று ராணுவமும், 10 ஆண்டுகள் தாமதிக்க வேண்டும் என்று துணை ராணுவப் படைகளும் கூறுகின்றன.
2003-ம் ஆண்டு டார்புர் நகரில் தொடங்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான சண்டையில் ஹெமிடிக்கு பிரதான பங்கு உண்டு.
இருதரப்பும் சண்டையைக் கைவிட்டு ஜனநாயக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று மேற்கத்திய வல்லரசுகளும், ஆப்ரிக்க பிராந்திய தலைவர்களும் வலியுறுத்தியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரச்னை தீர்ந்து போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ராணுவமும் ஜனநாயகத் தலைவர்களும் கூட்டாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்ட 2 ஆண்டு கால ஆட்சியை 2021-ம் ஆண்டு ராணுவப் புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. சூடானை நீண்ட காலம் ஆட்சிபுரிந்த சர்வாதிகாரி அதிபர் ஒமர் அல் பஷிர் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு அவ்வாறான உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
2021 புரட்சிக்குப் பின்னர் தலைநகர் கார்டாமில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது வாடிக்கையாக மாறிவிட்டிருந்தது.
பிபிசி தமிழ்
Re: சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
சூடான் நாட்டில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். |
சூடான் நாட்டில் அந்நாட்டின் ராணுவ ஜெனரலான ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்தினர் இடையேயே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் போராக வெடித்துள்ள நிலையில் சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை சூடான் ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். துணை ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சூடானில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மத்திய ராணுவத்தை அடித்து நொறுக்கிய துணை ராணுவம் சூடான் விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் சூடானில் வாழும் இந்தியர்களை எச்சரித்துள்ளது. வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Re: சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. |
3500 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் 20 சுகாதார நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. மேலும், 12 சுகாதார நிலையங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என இந்தியாவின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஐநாவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி
சூடான்: பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை குழு ஆலோசனை
#சூடான் நிலவரம் குறித்து உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சூடானிற்கான இந்திய தூதர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, சூடானின் உண்மையான களநிலவரம் குறித்த நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார்.
குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த வாரம் உயரிழந்த இந்தியருக்கு, பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். மேலும் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், விழிப்புடனும் ஏற்பட்டு வரும் களநிலவரம் குறித்து கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தடையின்றி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் கடந்த ஒரு வாரமாக இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|