ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

Go down

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  Empty பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்

Post by சிவா Sat Apr 15, 2023 9:28 pm

பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்  OGbBWl3

``கர்ப்பம் உறுதியானதும் எல்லாப் பெண்களுக்கும் இயல்பிலேயே மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கும். பிரசவ தேதி நெருங்க நெருங்க, அந்த மகிழ்ச்சி காணாமல் போய், பயமும் பதற்றமும் அதிகரிக்கும். பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற தவிப்பு இருக்கும். பிரசவமானதும் அந்த உணர்விலிருந்து விடுபடுவார்கள். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... அதனால் உணரப்படும் உடல்வலி, தாய்ப்பால் கொடுப் பதில் அசௌகர்யம், கூடவே ஹார்மோன் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்துகொண்டு சிலருக்கு மனநிலையில் தடு மாற்றங்களை ஏற்படுத்தலாம். 3-4 வாரங்கள் வரை இப்படி உணர்வது இயல்பானதுதான். அதைத் தாண்டியும் தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

சில பெண்களுக்கு பிரசவமான உடனே ஒருவித மன அழுத்தம் ஆரம்பிக்கும். சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். பிரசவமான சில வாரங்கள் தொடங்கி சில மாதங்கள் வரை கூட இந்த மன அழுத்தம் தொடரலாம். பிரசவத்தை அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் மன அழுத்தத்தை ‘பேபி ப்ளூஸ்’ (Baby blues) அல்லது ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' (Postpartum Blues) என்று சொல்வோம். 3- 4 வாரங்களுக்கு மேலும் அந்த மன அழுத்தம் அதிகரித்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum depression) என்று சொல்வோம். கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கும் இந்த டிப் ரெஷன், பிரசவத்துக்குப் பிறகும் தொடரும் பட்சத்தில், அதை ‘பெரிபார்ட்டம் டிப்ரெஷன்' (Peripartum Depression) என்று சொல்வோம்.

ஆரம்பகட்ட அறிகுறிகள்...


* தூக்கமின்மை

* சாப்பிடப் பிடிக்காதது

*குழந்தையைத் தூக்கி கொஞ்சவோ, தாய்ப்பால் ஊட்டவோ பிடிக்காதது

* கணவர் அருகில் வந்தாலே வெறுப்பாக உணர்வது

* பயம்...

அறிகுறிகள் மோசமாவதை உணர்ந்தால் உடனே கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். யார், என்ன நினைப் பார்களோ, தான் நல்ல அம்மா இல்லை என சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் பயந்து மன அழுத் தத்தை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒருகட்டத்தில் அது தீவிர மடையும்.

தீவிர அறிகுறிகள்...


மன அழுத்தம் தீவிரமாகும்போது தனிமை உணர்வு, அதீத பயம், தற்கொலை எண்ணம், குழந்தையைத் துன்புறுத்தும் எண்ணம் போன்றவை வரலாம். யாரோ பேசுவது காதில் ஒலிப்பதாக உணர்வது, எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னை பற்றியே பேசுகிறார்கள் என்று நினைப்பது போன்றெல்லாம் தோன்றினால் சற்றும் தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ (Postpartum psychosis) எனப்படும் அது சற்று தீவிரமான, ஆபத்தான நிலை.

தீர்வுகள்...


பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரையே முதலில் அணுகலாம். அவர் அந்தப் பெண் ணின் மனநிலை மாற்றங்களை, அறிகுறிகளைக் கேட்டறிந்து, ஆரம்பகட்ட மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துகள் எடுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாமா, அது குழந்தையை பாதிக்குமா என்றெல்லாம் பயப்படத் தேவை யில்லை. இது சாதாரண மருந்துகளுக்குக் கட்டுப்படுமா அல்லது மனநல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பதை யும் மகப்பேறு மருத்துவரே முடிவு செய்வார்.

தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தகட்டமாக தெரபி பரிந்துரைக்கப் படும். ‘ஆமாம்... நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்... உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. நீங்கள் கற்பனையாகச் சொல்ல வில்லை...’ என சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆணுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் தெரபிஸ்ட்டுகளின் முதல் சிகிச்சை. மற்றவர் களிடம் உதவி கேட்கக் கற்றுத் தரப்படும். கிடைக்கிற ஓய்வை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளச் சொல்வோம். முன்பெல் லாம் இரவிலும் விழித்திருந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று பிரெஸ்ட் பம்ப் உதவியோடு தாய்ப் பாலை சேகரித்து வைத்து, மற்றவர் உதவியோடு குழந்தைக்குக் கொடுக்கச் சொல்லலாம்.

தூக்கம் இல்லாததால்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பாதிக்கிறது. எனவே, அது முதலில் சரிசெய்யப்பட வேண்டும். புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தெரபியின்போது கணவரும் உடனிருக்க வலியுறுத்துவோம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் சப்போர்ட் இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணால் சீக்கிரம் இந்தப் பிரச்னையில் இருந்து மீள முடியும். மன அழுத்தத்திலிருந்து மீளும் இந்தப் போராட்டப் பயணத்தில் கணவரும் நிச்சயம் கைகோக்க அறிவுறுத்துவோம். மனநிலையில் முன்னேற்றம் தெரியும்பட்சத்தில் மருந்து களைப் படிப்படியாகக் குறைக்கச் சொல் வார்கள் மருத்துவர்கள். அப்படியே மன அழுத்தத்திலிருந்தும் முழுமையாக வெளியே வந்துவிடலாம்.

ஆண்களையும் பாதிக்கலாம்!


`போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்' பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது கணவர்களையும் பாதிக்கும். சட்டென மாறிப்போன சூழல், பொருளாதார நெருக்கடி, குழந்தையைப் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், அத் துடன் வேலையையும் பார்க்க வேண்டிய நிர்பந்தம், மனைவியின் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பியது போன்ற வையே ஆண்களுக்கு இந்தப் பிரச்னை பாதிப்பதற்கான காரணங்கள். கவுன்சலிங் மற்றும் தெரபி மூலம் இவர்களையும் இதிலிருந்து மீட்கலாம்.”

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள்
» Dysmenorrheal - மாதவிடாய் வலி... காரணங்கள் மற்றும் தீர்வுகள்
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» நுண்ணுயித் தொகுதி பாதிப்படைய காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum