ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி?

Go down

நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி? Empty நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி?

Post by சிவா Thu Apr 13, 2023 9:13 pm

நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி? DEHYDRATION

இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கூடவே, கோடைக்கால நோய்களான Heat Strokes (வெப்ப பக்கவாதம், Sun burns, Food Poisoning (உணவு நஞ்சாகுதல்) போன்றவையும் நம்மை பாதிக்கக் கூடும்.

இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளையில் நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீரிழப்பு உள்ளது. மயக்கம், உடல் சோர்வு தொடங்கி கிட்னி செயலிழப்பு போன்ற பாதிப்புகளையும் நீரிழப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு நாம் கூடுதல் கவனம் கொடுப்பது அவசியமாகிறது.

நீரிழப்பு என்றால் என்ன?


நமது உடலில் திரவமே அதிகமாக உள்ளது. உடலுக்கு இன்றிமையாததும் தண்ணீர்தான். அதனால்தான் அதிகளவு தண்ணீரை பருக வேண்டும் நம்மிடம் வலியுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள நீரில் இழப்பு ஏற்படுவதை நீரிழப்பு என்று அழைக்கிறோம் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மீனாட்சி பஜாஜ்.

"எளிதாக கூற வேண்டும் என்றால் நம் உடலுக்கு தேவையான நீரை விட நாம் குறைவாக நீரை உட்கொள்வதன் மூலமோ, அதிகளவு நீர் நம் உடலில் இருந்து வெளியேறுவது மூலமோ நீரிழப்பு ஏற்படுகிறது. இரைப்பைக் குடல், தோல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் தான் நாம் அதிகமாக நீரை இழக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிகப்படியாக வேர்வை வெளியேறுவது, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது போன்றவை மூலம் நீரிழப்பு ஏற்படும்," என்று விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீரிழப்பு அனைத்து வயதினருக்கும் பொதுவானதுதான் என்றாலும் குழந்தைகள், பெரியோர் ஆகியோருக்கு இதனால் அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இதேபோல், ஒருசிலர் உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவார்கள், பின்னர் உடலில் இருந்து கலோரிகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களே வாயில் விரல்களை விட்டு வாந்தி எடுப்பது, பேதி மாத்திரையை உட்கொள்வது போன்ற செயலில் ஈடுபடுவர்கள். இதற்கு புலிமியா நெர்வோசா என்று பெயர். இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கும் நீரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்றார்.

இதேபோல், ஒருவர் அதிகமாக மது அருந்துபோது அவர் இயல்பை விட அதிகமாக சிறுநீரை வெளியேற்றுவார். உடலில் இருந்து நீர் அதிகமாக வெளியேறுவதால் இதுவும் நீரிழப்பின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிட்ட அவர், காபி, கார்பனேடட் குளிர்பானங்களை அதிகளவு குடிப்பதும் சிறு நீர் அதிகம் வெளியேற வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

நீரிழப்பின் அறிகுறிகள் என்ன?


காலநிலை, நாம் சாப்பிடும் உணவு, நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி போன்றவற்றை பொருத்து நீரிழப்பின் அறிகுறிகள் வேறுபடுவதாக மீனாட்சி தெரிவிக்கிறார். "நீரிழப்பு ஏற்பட்டால் நாக்கு, வாய் போன்றவை வறண்டு காணப்படும், தாகம் அதிகமாக இருக்கும். சோர்வாக இருப்பீர்கள், தலைவலி , தலை சுற்றல் ஏற்படும், சிறுநீர் மிகவும் அடர் நிறத்திலும் இயல்பை விட குறைவாகவும் வெளியேறும், தசைகளில் வலி ஏற்படும், இதயத்துடிப்பு அதிகப்படியாக இருக்கும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிடும்," என்றார்.

வயதானவர்களுக்கு நீரிழப்பால் பாதிப்பு அதிகம் என்று குறிப்பிட்ட அவர், வயதானவர்களுக்கு சர்க்கரை வியாதியும் இருந்து நீரிழப்பும் ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்தார். தீவிர நீரிழப்பு ஏற்பட்டால், கிட்னி செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நீரிழப்பு ஏற்பட காரணங்கள்


போதிய அளவை நீரை பருகாமல் இருப்பது பிரதானமான காரணமாக உள்ளது. இதை தவிர்த்து, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை காரணமாகவும் நீரிழப்பு ஏற்படும். வயிற்றுப் போக்கின்போது நமது உடலில் இருந்து குறைந்த நேரத்திலேயே அதிகளவு நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறிவிடும். இதனுடன் வாந்தியும் சேர்ந்தாலும் உடலில் இருந்து மிதமிஞ்சிய அளவு நீர், உப்பு சத்துகள் போன்றவை வெளியேறும் என்பதால் நீரிழப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிகளவில் வேர்க்கும் என்பதால், உடலில் இருந்து வேர்வையாக நீர் அதிகளவு வெளியேறுகிறது. இதனாலும் நீரிழப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோடைக்காலத்திற்கும் நீரிழப்புக்கும் என்ன தொடர்பு என்று மருத்துவர் மீனாட்சி பஜாஜிடம் கேட்டப்போது, "பொதுவாக கோடைக்காலம் சிறுவர்களுக்கு ஆண்டு விடுமுறை நாட்களாக இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் வெளியே அதிக நேரம் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடலில் இருந்து சோடியம் குறைந்தால் நீரும் குறைந்துவிடும். அதனை சரி செய்ய, மோர் எலுமிச்சை சாறு போன்றவற்றை பருவ வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் போன்ற வெயிலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கும் நீரிழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது," என்றார்.

கடைகளில் சமைக்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது வயிறுப்போக்கை ஏற்படுத்தும். இது நீரிழப்பு நோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கும் மீனாட்சி பஜாஜ், "அசைவ உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடவேண்டும் அல்லது தரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமற்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்," என்றார்.

நீரிழப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


முடிந்தவரை உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ், பூசணி போன்ற காய்கறிகளை உணவுகளில் சேர்த்துகொள்வது நீரிழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் என்கிறார் அவர்.

"சிலர் கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்வதற்காக கார்பனேடட் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்துகொள்வார்கள். ஆனால், இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தாது, மாறாக நீரிழப்பையே ஏற்படுத்தும். எனவே, கார்பனேடட் குளிர்பானங்களை பருகுவதற்கு பதிலாக மோர், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு, இளநீர், எலுமிச்சை கிரீன் டீ போன்றவற்றை பருகலாம். தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களை அதற்கேற்ற சீசனில் சாப்பிடலாம். சரியாக சமைக்காத உணவுகள், சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்ளும்போது, டைஃபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்றார்.

அதே நேரத்தில், இணை நோய் இருப்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் போது மருத்துவர்களின் ஆலோசனைபடி அவர்கள் உணவுமுறையை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என்றும் மீனாட்சி பஜாஜ் பரிந்துரைக்கிறார். சர்க்கரை வியாதி உள்ள ஒருவருக்கு வெயில் காலத்தில் தினமும் இளநீர் பருக வேண்டும் என்று நாம் பரிந்துரைக்க முடியாது. அப்படி செய்தால் உடலில் சர்க்கரையின் அளவுதான் அதிகரிக்கும். சிறியளவில் மட்டுமே நீரிழப்பு ஏற்பட்டால் மோர், கஞ்சி, ஜூஸ், இளநீர் போன்றவற்றை பருகுவதன் மூலம் வீட்டிலேயே சரி செய்துகொள்ளலாம். ஆனால், இதுவே கடுமையான நீரிழப்பு என்றால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்வதே சரியாக இருக்கும் என்றார்.

குறிச்சொற்கள் #நீரிழப்பு #Dehydration
பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி? Empty Re: நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி?

Post by சிவா Thu Apr 13, 2023 9:25 pm

உடல் வரட்சியை கட்டுபடுத்த குடிக்கும் தண்ணீர் மட்டும் போதாது:


தண்ணீர் அதிகம் குடிப்பதால், எப்போதும் நன்மைதான் உண்டாகும். இந்நிலையில் நமது உடல் இயக்கத்திற்கும் , சருமம் பொலிவாக காட்சியளிக்கவும் நாம் குடிக்கும் தண்ணீர் உதவுகிறது.

ஆனால் நாம் குடிக்கும் சாதாரண தண்ணீர் உடல் வரட்சியை கட்டுப்படுத்த உதவாது என்று கூறப்படுகிறது. மேலும் நாம் அதிகம் தண்ணீர் குடிக்கும்போது, அது நமது உடலை விட்டு வெளியே செல்லும். இந்நிலையில் எலக்ட்ரோலைட்ஸ் அளவு மீண்டும் நிரப்பபடவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நாம் #எலக்ட்ரோலைட்ஸ் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

எலக்ட்ரோலைட்ஸ்?


எலக்ட்ரோலைட்ஸ் என்பது பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட மினரல்ஸை கொண்டது. இந்நிலையில் இந்த எலக்ட்ரோலைட்ஸ் நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து கிடைக்கிறது. இந்நிலையில் இந்த எலக்ட்ரோலைட் முக்கிய செயல்பாடுகளை நமது உடலில் செய்கிறது. உடலில் உள்ள சத்துக்களை எல்லா செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. மேலும் செல்களிலிருந்து கழிவை எடுத்துக்கொண்டு செல்வது, சேதமான சதைகள் மீண்டும் வளர்ச்சியடைவது, உடலில் உள்ள பி.எச் (PH) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நரம்புகள், தசைகள், இதயம், மூளை ஆகியவை சீராக செயல்பட உதவுகிறது.

இந்நிலையில் நாம் குடிக்கும் தண்ணீரில், எலக்ட்ரோலைட் இருப்பது குறைவு. நாம் பல்வேறு வகையில் தண்ணீரை சுத்திகரித்துதான் பருகுகிறோம். இந்நிலையில் நாம் உடல் பயிற்சி செய்தால், அல்லது வயிற்றுப் போக்கு , காய்ச்சல் நேரத்தில் எலக்ட்ரோலைட்ஸ் இழப்பு ஏற்படும்.

இந்நிலையில் நாம் சிறுநீர் கழிக்கும்போது, இந்த எலக்ட்ரோலைட் ஒவ்வொரு முறையும் குறையும். இந்நிலையில் மலைகள், கிணறு அல்லது பூமி ஊற்றில் கிடைக்கும் தண்ணீரில்தான் கால்சியம், மெக்னீஷியம், க்ளோரைட் இருக்கிறது. ஆனால் இந்த தண்ணீர் நமக்கு கிடைப்பது மிகவும் அரிது.

தண்ணீரில் எப்படி எலக்ட்ரோலைட்ஸை சேர்ப்பது


இந்நிலையில் நாம் குடிக்கும் தண்ணீரில், கடல் உப்பை சேர்க்க வேண்டும். அல்லது தண்ணீரில் இஞ்சி, தண்ணீர் பூசணி போட்டு குடிக்கலாம்.

தேங்காய் தண்ணீரில் எலக்ட்ரோலைட் அதிகமாகவே இருக்கிறது.

எலக்ட்ரோலைட் தண்ணீர் செய்முறை :


அரை கப் ஆரஞ்சு ஜூஸ், 2 கப் தண்ணீர், ¼ கப் எலுமிச்சை சாறு, உப்பு, தேவைப்பட்டால் தேன் சேர்த்துகொள்ளலாம். இதை நாம் குடித்தால், நமக்கு தேவையான எலக்ட்ரோலைட் கிடைக்கும்,
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum