புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
1 Post - 2%
M. Priya
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
4 Posts - 4%
Baarushree
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
3 Posts - 3%
Rutu
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
3 Posts - 3%
prajai
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
3 Posts - 3%
Jenila
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
2 Posts - 2%
manikavi
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனதுக்கு மூன்று மருந்து Poll_c10மனதுக்கு மூன்று மருந்து Poll_m10மனதுக்கு மூன்று மருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுக்கு மூன்று மருந்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 10 Apr 2023 - 1:27


அடர்ந்த காடு அது. பகைவர்களால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அவர்களிடம் சிக்கிக்கொண்டால், அவன் உயிர் தப்பிப்பது கடினம். காலனின் தூதர்களைப் போன்று அவர்கள் தங்களின் குதிரைகளில் துரத்திவர, மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான் அந்த மனிதன்.

குதிரைகளின் குளம்படி ஓசை, அவனுக்கு இடியோசை போன்று இருந்தது. வனப்புறத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் அவனையும் அறியாமல், அருகிலிருந்த மலைப்பாதையில் ஓடத் தொடங்கினான். அவர்களும் விடாமல் துரத்தினார்கள்.

இதோ மலை விளிம்புக்கே வந்துவிட்டான். இனி ஓடுவதற்குப் பாதை இல்லை. அதல பாதாளமே தெரிந்தது. அதேநேரம் குதிரைகளின் கனைப்பொலியும் மிக அருகில் கேட்டது. `வேறு வழியில்லை; குதித்துவிட வேண்டியதுதான்’ என்று கருதியவன் குதித்துவிட்டான். நல்லவேளையாக மரக்கிளை ஒன்று கைகளில் அகப்பட பிடித்துக்கொண்டான். ஆனாலும் ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை. இவன் தரையில் குதித்தால் கடித்துக்குதறிவிட, அங்கே இரண்டு சிங்கங்கள் காத்திருந்தன.

மேலே நோக்கினான்... அங்கே வில்லில் நாணேற்றி, இவனை நோக்கி அம்பு தொடுக்கக் குறிபார்த்துக்கொண்டிருந்தார்கள் பகை வர்கள். அதேநேரம் மரக்கிளையில் ஏதோ நெளிவது போன்று தெரிந்தது. சந்தேகமே இல்லை... அதுவொரு விஷப்பாம்புதான்.

இப்படியான ஆபத்துகளால் அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த தருணத்தில் மரத்தில் கூடுகட்டியிருந்த தேன்கூட்டிலிருந்து வழிந்த ஒரு சொட்டுத் தேன் அவன் வாயில் விழ, அதன் தித்திப்பைச் சுவைத்தவன் `ஆஹா...’ என்றானாம்!

இப்படித்தான் நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தற்காலிக சந்தோஷத்தில் திளைத்துப்போகிறோம்; கேளிக்கைகளில் மனம் லயித்துவிடுகிறோம். தவறான பழக்கவழக்கங்களுக்கும் சிலர் ஆளாகிவிடுகிறார்கள்.

கேளிக்கைகளைச் சிலர் பிரச்னைகளை மறப்பதற்கான மருந்தாகக் கருதுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்... மது, புகைப் பழக்கம் போன்றவற்றால் `மைண்ட் ரிலாக்ஸ் ஆகிடும்’ என்று காரணம் சொல்வார்கள். தவறான போக்கு இது. இந்த நிலை உங்களை மேன்மேலும் சிக்கல்களுக்கு ஆளாக்குமே தவிர, ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடித் தராது.

மேற்படிப்போ, செய்யும் தொழிலோ, பணியோ... நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதைச் செலுத்தி, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யவேண்டும். கேளிக்கைகள் சிரத்தையை நீர்த்துப்போகச் செய்துவிடும். நம் சிந்தனையைச் சிதறடித்துவிடும்.

துல்லியத் தன்மையுடன் இலக்கை வென்றடைய நம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயணிப்பது மிக மிக அவசியம். எண்ணத்தில் ஒன்றிருக்க, சொல்லும் செயலும் வேறொன்றை வெளிப்படுத்தினால், தோல்விகளே பரிசாகக் கிடைக்கும். வீண் கேளிக்கைகளும் வேண்டாத பழக்கவழக்கங்களும் மேற்காணும் மூன்றையும் வெவ்வேறு பாதைகளிலேயே பயணிக்க வைத்துவிடும்.

எனில், பிரச்னைகளாலும் வேலைப்பளுவாலும் சஞ்சலம் கொள்ளும் - சோர்வடையும் மனதுக்கு மருந்துதான் என்ன?

‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ, அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்று கீதையில் வழிகாட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா. இதற்கு தியானம், யோகா போன்ற சாதனங்கள் உதவும். ஆனால், இவற்றைக் கடைப்பிடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா?

வைராக்கியத்துடன் கடைப்பிடிக்கத் தொடங்கினால், எதுவும் சாத்தியமே!

ஒருவேளை `இந்தப் பயிற்சிகள் எல்லாம் நமக்குச் சாத்தியம் இல்லை... கடினம்’ என்று தோன்றுகிறதா? எனில், உங்களுக்காகவே மூன்று எளிய வழிகளைச் சொல்லித் தந்துள்ளனர் பெரியோர்கள்.

முதலாவது, தினமும் இரவில் படுக்கச்செல்லுமுன் உங்கள் மனதோடு பத்து நிமிடங்களேனும் அளவளாவுங்கள். அந்தத் தினத்தில் நீங்கள் செய்த காரியங்கள், மேற்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் யாவும் சரியானவைதானா? அலுவலரிடம் கோபித்துக் கொண்டேனே... அதிகாரியிடம் முரண்பட்டேனே... என் வாடிக்கையாளரைக் கடிந்துகொண்டேனே... இவை சரிதானா என்று மனதிடம் கேளுங்கள்.

மாலைக்குமேல் உணர்ந்த சோர்வுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று மனதிடமே விசாரியுங்கள். வீட்டுக்கான கடமைகளில் என் தரப்பில் ஏதேனும் குறைகள் உண்டா என்று விவாதம் நிகழ்த்துங்கள்... மெள்ள மெள்ள மனதின் குரல் உள்ளுக்குள் ஒலிக்கும். உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்; பல பிரச்னைகளுக்கான தீர்வும் புலப்படும். ஒருவகையில் தியானத்தின் ஆரம்ப நிலையும் இதுதான்!

இரண்டாவது வழி... நீங்கள் கைக்கொண்டிருக்கும் முயற்சி அல்லது வேலையில் சோர்வோ மனத்தளர்ச்சியோ ஏற்படும் நேரங்களில், வேறொரு சிறு வேலையைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். அந்தச் சிறிய வேலையை முடிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருந்த மனத்தளர்ச்சியும் சோர்வும் விடைபெற்றிருப்பதை உணர்வீர்கள். பிறகு உற்சாகத்தோடு பழைய வேலையில் கவனம் செலுத்தலாம்.

மூன்றாவது வழி எல்லோருக்கும் தெரிந்ததுதான்... புத்தகங்கள் வாசித்தல்! பிரச்னைகளால் அழுத்தப்படும் தருணங்களில் சிந்தனைப் புலன்கள் ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்கும். அப்படியான தருணங்களில் அவற்றுக்குப் புதுவித மலர்ச்சியைத் தரும் சூட்சுமம், உங்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு நிச்சயம் உண்டு!

இப்படியாக நம் மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போது, நம் சிந்தனை சிறக்கும்; செயல்கள் வெற்றியைச் சந்திக்கும். எவ்விதப் பிரச்னைகளையும் எளிதில் கையாளும் வல்லமை பிறக்கும்; ஜென் குரு இக்கியு என்பவரைப்போல!

ஜென்குரு இக்கியு இளைய பருவத்தில் ஒரு மடத்தில் சீடராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

தேநீர்க் கோப்பை ஒன்றைச் சுமந்தபடி வந்தார் இக்கியு. வாயிற்படியில் கால் தவறி, கோப்பை நழுவி விழுந்து உடைந்துபோனது. தேநீர் தரையெங்கும் சிந்திப் பரவியது. சக சீடர்கள் இக்கியுவைக் கேலி செய்தார்கள். `குருவுக்கான தேநீர் அது. அவர் கோபம் கொள்வார். அவரின் தண்டனைக்கு ஆளாகப்போகிறாய்’ என்று பயமுறுத்தவும் செய்தார்கள்.

இக்கியு சலனப்படவில்லை; வருத்தம் கொள்ளவில்லை. நிலைமையைச் சமாளிக்க இயலும் என்ற நம்பிக்கையும் தைரியமும் அவரிடம் இருந்தது. குருவிடம் சென்றார். ஒரு கேள்வியை முன்வைத்தார்.

``மரணத்தை எவரும் விரும்புவதில்லை. ஆனால், விரும்பாத ஒன்றை அவர்கள் கட்டாயம் ஏற்கும்படி ஆகிறதே... ஏன் அப்படி... எனக்குப் புரியவில்லையே?’’ என்று கேட்டார்.

``மரணம் திணிக்கப்பட்டதாக இருந்தால் தான் அது கட்டாயம் ஆகும். அது திணிக்கப்பட்டதல்ல. பிறப்பைப் போலவே இறப்பும் இயல்பான விஷயம். பிறந்தவர் ஒருநாள் இறப்பது நியதி. அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை’’ என்றார் குரு.

உடனே இக்கியு சொன்னார்: ``மிகச் சரி... உங்களுடைய தேநீர்க் கோப்பை இப்போது தவிர்க்கமுடியாமல் செத்துப்போனது.

வருத்தப்படாதீர்கள்!’’

தேநீர்க் கோப்பை என்றதும் வேறொரு கதையும் நினைவுக்கு வருகிறது. அவரும் ஒரு ஜென் குரு. சீடரிடம் கோப்பை ஒன்றைக் கையளித்தவர், ``கவனமாக எடுத்துச் செல். கீழே போட்டு உடைத்தாய் என்றால் தண்டனை கிடைக்கும்’’ என்றார்.

``சீடனும் மிகக் கவனமாகக் கையாளுவேன்’’ என்றான். ஆனால் அவன் நகருமுன் அவன் தலையில் ஓங்கிக் குட்டினார் குரு.

சீடனுக்கு வலி பொறுக்கவில்லை. தலையைத் தடவிக்கொண்டே கேட்டான்... ``நான்தான் கோப்பையை உடைக்கவில்லையே. பிறகு ஏன் குட்டினீர்கள்?’’

ஜென் குரு சொன்னார், ``உடைத்தபிறகு குட்டி என்ன பயன்?!’’


தி.தெய்வநாயகம்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 10 Apr 2023 - 14:47

மனதுக்கு மூன்று மருந்து 3838410834 மனதுக்கு மூன்று மருந்து 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக