ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

3 posters

Go down

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Empty அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

Post by சிவா Sun Apr 09, 2023 11:41 pm


மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும்.

‘எப்போ பார்த்தாலும் சண்டை, ஏன்டா ரிலேஷன்ஷிப்ல கமிட் ஆனோம்னு இருக்கு’ என்று ஃபீல் செய்பவரா நீங்கள்? உங்கள் ரிலேஷன்ஷிப்பை அழகாக்கவும், அன்பைப் பெருக்கவும் ஆலோசனைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ப்ரீனு...

‘‘காதலில் பிரச்னைகள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால், புரிந்துணர்வு இன்மை, நாம் அன்பு செலுத்தியவர் நம்மை விட்டுப் போய் விடுவாரோ என்ற பயம், உறவில் நம்பிக்கையின்மை, நாம் அன்புக்குரியவரின் மீதான பொசசிவ்னெஸ்ஸில் அவரைக் கட்டுப்படுத்துதல் போன்றவைதான். இவை காதலில் மட்டுமல்ல, நட்பு, சகோதர உறவு, பெற்றவர்களுடனான உறவு என எதிலும் வரலாம். இதுபோன்ற சண்டைகள் வராமல் இருக்க, உங்களைப் பற்றியும் உங்கள் அன்பு பற்றியும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியவைப்பது அவசியம். ரிலேஷன்ஷிப்பில் விரிசல் விழாமல் இருக்க, அன்பு வைப்பது மட்டும் போதாது. அதனை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், பரிசுகள் கொடுத்து அன்பை வெளிப்படுத்துதல், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், ஸ்பரிசம் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், நேரம் செலவிடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என அன்பை வெளிப்படுத்துவதில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இதில் உங்கள் பார்ட்னருக்கு எது பிடித்திருக்கிறது, அவர் எந்த வகையான அன்பை எதிர்பார்க்கிறார் என்பதை முதலில் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என்பது, பார்ட்னரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வது, அவரது உடல்நலனில் அக்கறை காட்டுவது போன்றவை. இப்படி செயல் மூலம் அன்பை வெளிப்படுத்தும்போது, உங்கள் பார்ட்னர் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது போன்று உணர்வார்.

எதிர்பாராத நேரத்தில் நெற்றியில் முத்தமிடுதல், கைகளை இறுகப்பற்றுதல் போன்றவை தொடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துவதில் சேரும். இவை, உங்களின் பார்ட்னருக்கு, ‘எது நடந்தாலும் நாம் சேர்ந்து பயணிப்போம், உன்னுடன் நான் இருக்கிறேன்’ என்பது போன்ற மன தைரியத்தை விதைக்கும்.

ரிலேஷன்ஷிப்பில் தவிர்க்க முடியாதவை அன்பளிப்புகள். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் மற்றும் பரிசுகள் கொடுப்பதன் மூலம ரிலேஷன்ஷிப்பில் நெகிழ்ச்சி நிறைந்த நிமிடங்களையும், நினைவுகளையும் உருவாக்கலாம். பார்ட்னரின் சின்னச் சின்ன முயற்சிகளையும் பாராட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். பாராட்டுகள் உறவில் உள்ள வெறுப்புகளை அகற்றி, உறவை நீட்டிக்கச் செய்யும்.

நேரம் செலவிடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவது, மற்றொரு வகை. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உங்கள் பார்ட்னருடன் இருக்கிறீர்கள் என்பதைவிட, இருக்கும் நேரத்தில் அவரை எப்படிப் பார்த்துக்கொள்கிறீர்கள், எப்படி அன்பைப் பரிமாறுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம்.

மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சாரி, தேங்க்ஸ் போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தயங்காதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பார்ட்னர் கோபத்தில் இருக்கும் சூழலில் நீங்கள் சொல்லும் இந்த மேஜிக் வார்த்தைகள் அவரை கூல் செய்யும். கோபத்தைத் தணித்து உங்கள்மீது மதிப்பை ஏற்படுத்தும்.

இப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழக்கிறோமோ என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். நெருக்கமான உறவுகளிடம் நாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதிலோ அவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்வதிலோ உங்கள் மரியாதை கெடப்போவதில்லை.

சில நேரங்களில், பிரேக் அப் ஆன பிறகும்கூட நீங்கள் பயன்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள் வெறுப்பை நீக்கி, அன்பை வளர்க்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Empty Re: அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

Post by Dr.S.Soundarapandian Mon Apr 10, 2023 1:18 pm

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Empty Re: அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

Post by T.N.Balasubramanian Mon Apr 10, 2023 4:24 pm

அன்பை பெருக்க
இன்முகத்துடன் கூடிய நீட்டிடும் கைகள்
ஒன்றே போதுமே .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Empty Re: அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

Post by சிவா Mon Apr 10, 2023 6:12 pm

T.N.Balasubramanian wrote:அன்பை பெருக்க
இன்முகத்துடன் கூடிய நீட்டிடும் கைகள்
ஒன்றே போதுமே .
மேற்கோள் செய்த பதிவு: undefined

மிக அருமை தலைவரே....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Empty Re: அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum