புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
11 Posts - 44%
ayyasamy ram
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
9 Posts - 36%
mohamed nizamudeen
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
1 Post - 4%
mruthun
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
1 Post - 4%
Rathinavelu
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_lcapஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_voting_barஇன்னம்பூர் எழுத்தறிநாதர் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னம்பூர் எழுத்தறிநாதர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 03, 2023 11:25 pm

இன்னம்பூர் எழுத்தறிநாதர் Eluththarinathar

இன்னம்பூர் ஈசன் சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றியீசர் என்றும், எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உண்டு

ப்ரீ-கே.ஜி தொடங்கி அரசு வேலை; வெளிநாட்டு வாய்ப்புகள் வரை எல்லாவற்றிலுமே தேர்வு, எங்கெங்குமே தேர்வு என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தேர்வுகள் இப்போது நடைபெற்றுவருகின்றன. என்னதான் இரவும் பகலும் படித்து நல்லவிதமாகக் கற்றிருந்தாலும் என்னவோ ஒரு பயமும் தயக்கமும் வந்து மாணவ மாணவிகளை ஆட்கொண்டு கலங்கச் செய்யும். படித்தது எல்லாம் மறந்துபோக வைக்கும். கவலை வேண்டாம், உங்களைத் தெளிவாகவும் திறமையாகவும் இயங்கச் செய்து சகல தேர்வுகளிலும் வெற்றிகொள்ளச் செய்யும் ஈசன் இன்னம்பூரில் எழுத்தறிநாதனாக வீற்றிருக்கிறான்! வாருங்கள், சகல சபைகளிலும் முந்தியிருக்கச் செய்யும் அவனை தரிசித்துவிட்டு வருவோம்.

இனன் என்றால் சூரியன், நம்பூர் என்றால் நம்பி சரண் அடைந்த ஊர். சூரியன் வழிபட்டு சாபம் தீர்ந்து ஆற்றல் பெற்ற ஊர் இது என்பதால் ஆண்டுதோறும் ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 ஆகிய நாள்களின் காலையில் சூரிய ஒளி ஈசன்மீது விழுவது சிறப்பு. துர்வாசர் தந்த தெய்விக மாலையை அலட்சியம் செய்த ஐராவத யானை விமோசனம் பெற்ற தலமும் இதுவே. சாபம் பெற்ற சூரியன், இங்கு தரிசிக்க வரும்போது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை ஈசனை மறைத்து நின்றன. இதனால் தன் சாபம் தீர வேண்ட, சூரியனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை விலகி வழி கொடுத்தனர். இதனால் நந்தி விலகிய தலங்களில் இந்தத் தலமும் ஒன்று என்பது சிறப்பு.

ஈசனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்திய மாமுனிக்கு ஈசன் இங்குதான் தமிழின் எண்ணையும் எழுத்தையும் இலக்கணத்தையும் அறிவித்தான். அதனால் ஈசன் எழுத்தறிநாதராக எழுந்தருளினார் என்கிறது புராணம். இந்த ஆலயத்தின் கணக்கரான சுதன்மன், இந்தக் கோயிலின் பராமரிப்புக் கணக்குகளை மன்னனிடம் ஒப்படைத்தான். மன்னனுக்கு அந்தக் கணக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. இதனால் கலங்கிய சுதன்மன் இவ்வூர் ஈசனிடம் முறையிட்டான். ஈசன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று கணக்குகளை விளக்கி சந்தேகம் தீர்த்தான். மன்னனும் தெளிந்து சுதன்மனை(ஈசனை) பாராட்டினான். அதுகேட்டு வியந்த சுதன்மன் ‘எனக்காக எம் வடிவில் வந்து வினை தீர்த்தனையோ!' என்று இந்தக் கோயிலை எழுப்பினார் என்றும் தலவரலாறு கூறுகின்றது.

இன்னம்பூர் ஈசன் சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றியீசர் என்றும், எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உண்டு. சுகந்த குந்தளாம்பிகை, நித்யகல்யாணி என்ற இரு தேவியர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். போக சக்தியான நித்யகல்யாணி, எப்போதும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இவளை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். யோகசக்தியான சுகந்த குந்தளாம்பிகை தவக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். இவளை வழிபட நிம்மதியும் ஞானமும் கிட்டும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரையில் அமைந்துள்ள 45-வது தலமிது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமிது. கருவறை மூலவர் எழுத்தறிநாதர், மிகப்பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்க, கணபதி, முருகப்பெருமான், நடராஜர், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், நால்வர், விசாலாட்சி, ஸ்ரீமகாலட்சுமி, சண்டேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கிறார்கள். பலா, செண்பகம் தல விருட்சங்கள். ஐராவதம் உண்டாக்கிய ஐராவத தீர்த்தம் சாபம் தீர்க்கும் சாப விமோசனியாக உள்ளது.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் ஐந்து கலசங்கள் கொண்டுள்ளது. இவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. கிழக்கு நோக்கிய இக்கோயிலில் கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. ஈசனின் கருவறை முன்புறம் உள்ள டிண்டி, முண்டி என்ற தூவரபாலகர்கள் வேறெங்கும் இல்லாத வடிவங்கள் கொண்டவர்கள்.

பேச்சில் வல்லமை பெறவும், நேர்முகத் தேர்வில் விளக்கவும் இங்கு வந்து ஈசனை வேண்டி அர்ச்சனை செய்து, தேனை வைத்து மந்திரத்தை எழுதி

‘ஓம் ஸ்ரீ அக்ஷரபுரீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ அகஸ்தியாய நம:
ஓம் ஸ்ரீசரஸ்வதியே நம:'



என்று பிரார்த்தனை செய்தால் பலன் பெறலாம் என்கிறார்கள். பிறந்த குழந்தை முதல் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் வரை இங்கு வந்து பலன் பெற்றோர் அநேகம் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

திருமண வரம் வேண்டும் ஆண்கள் 60 மஞ்சள் கிழங்குகளும், பெண்கள் 61 மஞ்சள் கிழங்குகளும் வாங்கி, அதோடு தேங்காய், பழம், எலுமிச்சை, மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு பௌர்ணமி நாளில் வரவேண்டும். நித்யகல்யாணி அம்மை சந்நிதியில் அர்ச்சனை செய்தபின், அவர்கள் வாங்கி வந்த மாலையைப் போடுவார்கள். ஆலயத்தை வலம் வந்து வணங்கிச் சென்றால், 60 நாள்களுக்குள் கல்யாணம் முடிந்துவிடும் என்பது ஐதிகம்.

பள்ளியில் சேரும் முன்பாக குழந்தைகளை இங்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்துகொள்ளலாம். இங்கு முதன்முறையாக அவர்களுக்கு நெல்லில் எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குச் செம்பருத்திப்பூவைத் தட்டில் கொட்டி எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுத்திறமை குறைந்தவர்கள், படிப்பறிவு மந்தமானவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக்கூர்மை பெறுவர் என்பது நம்பிக்கை.

குழந்தை பாக்கியம் பெற இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள். மேலும், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்யச் சிறந்த தலம் இது எனப்படுகிறது. இங்கு பிராகார வலம் வர சகல தோஷங்களும் பாவங்களும் தீரும் என்பதும் நம்பிக்கை.

காலை 7.00 முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும். கும்பகோணம் - சுவாமிமலை வழியில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்தில் இன்னம்பர் கோயில் அமைந்துள்ளது.

தலை எழுத்தும், நாம் வாழும் கணக்கெழுத்தும் நல்லபடி அமைய இன்னம்பூர் எழுத்தறிநாதரை வணங்கிக்கொள்வோம்.

`கனலும் கண்ணியும் தண்மதி யோடுடன்
புனலும் கொன்றையும் சூடும் புரிசடை,
அனலும் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.’ - அப்பர்



T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக