ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

3 posters

Go down

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Empty மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by சிவா Mon Apr 03, 2023 2:44 am

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Claypot

#மண்பானைகள் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பானைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் பாரம்பரியத்திற்கேற்ற வகையில் பானைகளும், மண்பாண்டங்களும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளன.

#மண்பானை களிமண்ணால் செய்யப்படும் ஒரு பாத்திர வகையாகும். சமையலுக்கும், பல்வேறு பொருட்களை பத்திரப்படுத்தவும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டன.

தேவைக்கும், அதில் சேமிக்கப்படும் பொருட்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு அளவுகளில் மண்பானைகள் தயாரிக்கப்பட்டன. உதாரணமாக நீரை சேமித்து வைக்கவும், சமைக்கவும் சராசரி அளவுடைய மண்பானைகள் தயாரிக்கப்பட்டன. குழம்பு வைப்பதற்கு அளவில் சிறிய பானைகளும், தானியங்களை சேமிக்க பெரிய அளவிலான பானைகளும் உருவாக்கப்பட்டன.

அளவில் மிகப்பெரிய பானைகளை குறுக்கை என்று அழைப்பார்கள். இதை மருவிய நிலையில் குலுக்கை என்று கூறுவோரும் உண்டு. இவற்றில் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைப்பார்கள். இவை சில அடி உயரங்களில் இருந்து, ஆள் உயரத்தையும் தாண்டி பெரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பானைகள் உருண்டை வடிவிலும், உள்ளே வெற்றிடம் கொண்டதாகவும் இருக்கும். கழுத்துப்பகுதி சிறுத்தும், கையில் பிடிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பானை தயாரிக்க பல முறைகள் உள்ளன. மண்ணின் தன்மைக்கு ஏற்ப இதன் தயாரிப்பு முறை மாறுபடும். பானையை உருவாக்க களிமண் பயன்படுத்தப்படும். இதை நீர்சேர்த்து கெட்டியாக பிசைந்து கொண்டு, பானை உருவாக்கும் பிரத்தியேக சக்கரத்தில் சாந்தை சுழலவிட்டு கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வனைந்து மண்பானையை தயாரிப்பார்கள். பிறகு அதை தீயில் சுட்டு எடுப்பார்கள்.

மண்பானை தயாரிப்பில் வெறும் களிமண் மட்டுமல்லாது கருப்பட்டி, உப்பு, கடுக்காய் சேர்க்கப்படுவது உண்டு. வண்ணத்திற்காக நிறப்பொடிகளையும் சேர்க்கிறார்கள்.

உலகம் முழுக்க மண்பாண்டப் பொருட்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பானைக்கும் தனிப் பெயர் உண்டு. சோறு சமைக்கப் பயன்படும் பானையை அடிசிற்பானை என அழைத்தனர். கஞ்சியை வடிப்பதற்கான வாய் அகன்ற மற்றொரு பானையை பயன்படுத்தினர். இதை கஞ்சிப்பானை என்று அழைத்தனர்.

அடிப்புறம் சுருங்கி, மேற்பகுதி விரிந்தபானை, அக்குப்பானை எனப்படுகிறது. இதேபோல மேல்பகுதியும், அடிப்பகுதியும் சிறுத்து, நடுப்பகுதி அகலமாக இருக்கும் பானை, அகட்டுப்பானை எனப்பட்டது.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பயன்படுத்தப்படும் பானைகளை அடுக்குப்பானை என குறிப்பிட்டனர்.

அதேபோல திருமணத்தின்போது நாட்டப்படும் அரசாணி கால் கம்பத்திற்கு அருகே ஒரு மங்கலப்பானையை வைப்பார்கள், அதற்கு அரசாணிப் பானை என்று பெயர். மேலும், பழமையான திருமணங்களில் 7 பானை வரிசை என்ற பெயரில் பானைகளை அடுக்கி வைத்து ஒருவகை சடங்கு நடத்தப்பட்டிருக்கிறது.

உறியடி திருவிழா பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பானையில் மஞ்சள் கலவை புனித நீர் அல்லது சில பொருட்களை வைத்து உயரத்தில் தொங்கவிட்டு, அதை அடித்து உடைக்கும் போட்டி நடத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கென தயாரிக்கப்படும் பானைகள் உறிப்பானை எனப்பட்டது.

இரும்பை உருக்கி வார்க்கவும், ஒருவகை பானைகளை நம் மூதாதையர்கள் தயாரித்துள்ளனர். இதற்கு எக்குப்பானை என்று பெயர்.

கர்நாடக இசைக்கருவியான கடம், பானை வடிவம் கொண்டதுதான். தட்டித்தாளம் உருவாக்குவதற்கேற்ப இது கெட்டியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பொங்கல் பண்டிகைக்கு தயாரிக்கப்படும் பானைகளில் வண்ணங்கள் பூசப்பட்டு, அழகுப்பொருளாக விற்கப்படுகிறது. ஓவியம் வரையப்பட்ட பானைகள், ஓவியப்பானை என்றும், எழுத்துகள் எழுதப்பட்ட பானை எழுத்துப்பானை என்றும் அழைக்கப்பட்டன.

பானைகளைக் கொண்டு மிதவை செய்து பயன்படுத்தி உள்ளனர். மிதவையின் ஓரத்தில் கட்டப்பட்ட பானைகள் கட்டுப்பானைகள் என்று அழைக்கப்பட்டன.

கோவில் பண்டிகையில் கரகம் எடுப்பதற்கு தனியே கரகப்பானைகள் தயாரிக்கப்பட்டன.

தானியங்களை அலசிய நீரை ஊற்றி கால்நடைகளுக்கு வழங்குவதற்காக தனியே ஒருவகை பானையை பயன்படுத்தினர். இதுவே கழுநீர்ப் பானை என்றும் கழனிப் பானை என்றும் அழைக்கப்பட்டது. காடிப்பானை என்றும் சிலர் அழைப்பதுண்டு.

வளைந்த விளிம்பிற்குப் பதிலாக பிடித்து தூக்க வசதியாக காது வைத்து உருவாக்கப்பாட்ட பானைகள், காதுப்பானை எனப்பட்டன.

கூடை வடிவிலும், பானை செய்து பயன்படுத்தி உள்ளனர். இவை கூடைப்பானைகள் எனப்பட்டன.

இறந்தவர்களை அடக்கம் செய்ததும் பானையில்தான். இவை சவப்பானை அல்லது ஈமத்தாழி எனப்பட்டன.

சுவற்றில் தொங்கவிடும் வகையிலும் பானைகள் வனையப்பட்டன. இவை தோற்பானை என்று அழைக்கப்பட்டன. தரையில் வைக்கும்போது உருளாமல் இருப்பதற்காக 4 கால்கள் கொண்ட நாற்கால் பானைகளும் இருந்துள்ளன.

காற்று புகும் வகையில் துளையிடப்பட்ட பானைகளை பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகித்தனர். இவை பொள்ளற்பானை எனப்பட்டது.

மடங்களில், திருமண வீடுகளில் சமைப்பதற்கு இன்று பெரிய பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது பெரிய வடிவ பானைகள் இதற்காக தயாரிக்கப்பட்டன. அவை மடைக்கலப் பானை எனப்பட்டது.

மண்பானைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. பயன்படுத்த எளிதானவை. ஆரோக்கியமும் தரக்கூடியவை. மண்பானையின் மகத்துவம் அறிந்து அதைப் பயன்படுத்தி நன்மை பெறலாம்.

புதையல் பானைகள்


மண்பானைகளை நாணயங்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தினார்கள். தரைக்கு அடியில் குழி தோண்டிவைத்து காசுகளை போட்டு வைத்தனர். மன்னர்களும், மக்களும் இப்படி ரகசியமாக பயன்படுத்த்திய காசுப்பானைகள், பொற்பானைகள் பிற்காலத்தில் புதையலாக தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன.

பெருமையின் ரகசியம்


மண்பானைகள் இன்று மடிந்துவிட்டதாகச் சொல்லலாம். அவற்றை அருங்காட்சியகங்களில்தான் பார்க்க முடிகிறது. ஆனால் நம் நமது மூதாதையர்கள் 69 வகையான பானைகளை பயன்படுத்தி உள்ளனர். நாம் எல்லாவற்றையும் பொதுவாக பானை என்றே அழைக்கிறோம். ஆனால் முன்னோர் பயன்படுத்திய ஒவ்வொரு பயன்பாட்டிற்கான பானையிலும் சிறிது வித்தியாசம் இருக்கும். அதற்கென் தனி பெயர்களும் உண்டு. உதாரணமாக தானியங்களை சேமித்து வைக்கப்பயன்படும் பானைகளை அகப்பானை என்று அழைத்தனர். அகம் என்பது தானியங்கள், தவசங்களைக் குறிக்கும் இன்னொரு சொல்லாகும்.

மண்பானை சமையல் ருசி நிறைந்தது. மண்பானையில் உள்ள நுண்துளைகள் வெப்பத்தையும், நீராவியையும் சீராக பரவச் செய்வதால் உணவு சுவை நிறைந்ததாக மாறுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் மண்பானையில் வைக்கப்படும் நீரும், நுண்துளைகளால் குளிர்ச்சியாக பராமரிக்கப்படுகிறது. மண்பானை சமையல் நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

பானை வகைகள்


1. அஃகப் பானை - தவசம் (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப்பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை
63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Empty Re: மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by கண்ணன் Mon Apr 03, 2023 6:25 pm

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Empty Re: மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by T.N.Balasubramanian Mon Apr 03, 2023 7:10 pm

ஆஹா ! பானையிலும் இவ்வளவு வகைகளா?

பயன்பாட்டிற்கு தக்கபடி உருவ அமைப்புகள் கொண்ட பானைகள்.

நம் முன்னோர்களின் புத்திகூர்மை என்னென்று கூறுவது!

தலைவணங்குவோம்.  நன்றி நன்றி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  Empty Re: மண்பானைகள் மற்றும் அதன் 69 வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum