ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
யாரை மணப்பது Poll_c10யாரை மணப்பது Poll_m10யாரை மணப்பது Poll_c10 
heezulia
யாரை மணப்பது Poll_c10யாரை மணப்பது Poll_m10யாரை மணப்பது Poll_c10 
mini
யாரை மணப்பது Poll_c10யாரை மணப்பது Poll_m10யாரை மணப்பது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரை மணப்பது

5 posters

Go down

யாரை மணப்பது Empty யாரை மணப்பது

Post by சிவா Mon Apr 13, 2009 11:40 pm

யாரை மணப்பது Title10
யாரை மணப்பது Title11

வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுப்பதில் குறைந்தது ஏழு காரியங்களைக் கவனிக்கவேண்டும்.

1. ஆன்மீக நிலை

விசுவாசி ஒருபோதும் அவிசுவாசியை மணக்கக் கூடாது. பழைய புதிய ஏற்பாடுகள் இதை அழுத்திச் சொல்லுகின்றன. மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக (உபா 22:10). அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6:15). விசுவாசிகள் தேவனது பிள்ளைகள்: அவிசுவாசிகளின் தந்தையோ பிசாசு (யோ 8:42-44). விசுவாசியாகிய நீ ஒரு அவிசுவாசியை மணந்தால் உன் மாமனாரோடு உனக்கு எப்பொழுதும் பிரச்னைதான்

அவிசுவாசிகள்தான் பெரும்பான்மையோர் (மத் 7:13). அவிசுவாசியான வாலிபரையும் கன்னியரையும் அவிசுவாசிகளுக்கு விட்டுவிடுங்கள். சிறுபான்மையான தமது பிள்ளைகளுக்குள் தேவன் உனது மணமகனை மணமகளை வைத்திருக்கிறார். அவர்களுக்குள் அவரது வித்து உண்டு. அந்த ஆசீர்வாதத்தை இழந்துவிடாதே. மணமுடித்தபின் அவர்களைக் கிறிஸ்துவிடம் வழி நடத்திவிடாலாமே என வாதாடுவோர் உண்டு ஆனால் ஆயிரக்கணக்கானோர் பரிசுத்தமற்ற பிணைப்பினால் தங்கள் இரட்சிப்பின் மகிழ்ச்சியையே இழந்துவிட்டனர் தெரியுமா? ஒருசிலர் மணமுடித்தபின் மனமாறியிருக்கலாம். ஆனால் இதை மாதிரியாகக் கொள்வது பேராபத்து.

திருமணத்திற்காகவே திருந்துதலையெல்லாம் குறித்து எச்சரிக்கை பொதுவாக ஒரு நடிப்புதான். ராகேல் மீதுள்ள காதலால் யாக்கோபு இன்னும் ஏழு ஆண்டு வேலை செய்யவும் ஒத்துக் கொண்டான் காதலுக்காகத் திருமுழுக்குகூட எடுத்துக்கொள்வோரும் உண்டு. இதெல்லாம் உதவாது உண்மையாயிராது. உனக்காய்ப் பேசப்படும் நபரின் ஆன்மீக வாழ்வைக் குறித்து நன்கு தெரிந்த உள்ளுர் விசுவாசிகள், மூப்பரிடம் கேட்டுத் தெரிந்துகொள்.

அந்நபர் மறுபடி பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் அவனது, அவளது விருப்பங்களைத் தெரிந்துகொள்ளுதல் நல்லது. உனது வாஞ்சையெல்லாம் ஊழியம் அவளது விருப்பமெல்லாம் ஊதியம் துலைந்தாய் நீ ஆத்துமாக்களைத் தேடி அந்தமான் செல்ல விரும்புவாய் அவள் ஆஸ்தியை நாடி அபுதாபி செல்லத் துடிப்பாள்

2. உடல் தோற்றம்.

மணமகன் அல்லது மணமகள் அழகாயிருக்க வேண்டுமென விரும்புவது தவறல்ல, அது இயல்பு ஆபிரகாமின் மனைவி பார்வைக்கு அழகுள்ள பெண்ணாயிருந்தாள் ஈசாக்கின் மனைவி மகா ரூபவதியாயிருந்தாள் யாக்கோபின் மனைவியாகிய ராகேல் ரூபவதியும் பார்வைக்கு அழகான வளுமாயிருந்தாள் கரைதிரை முதலானவைகள் ஒன்றுமில்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையை மணக்கவே கிறிஸ்து வருகிறார் (எபே 5:27). ஆனால் வெறும் அழகு வஞ்சித்துவிடும். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப்போகும் (நீதி 31:30)

பெண்ணின் உடல் ஆரோக்கியமானதா எனத் தெரிந்துகொள்ளுதல் முக்கியம். எல்லா வேளையும் 100 சதவீதம் ஆரோக்கியம் எவருக்கும் கிடையாது. அதே வேளையில் இதய நோய் அல்லது சிறுநீரகக் கோளாறுள்ள ஒருவரை மணப்பது ஞானமல்ல. துயிலெழுதல், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டுப்பொறுப்புகள் இவை யாவற்றிற்கும் ஆரோக்கியமும் பலமும் தேவை. நீதிமொழிகள் 31:13-25ஐ வாசித்துப்பார் பரம்பரை வியாதிகள் மூளைக் கோளாறு போன்றவற்றைத் தவிர்க்க அந்தக் குடும்பத்தைக் குறித்த மருத்துவ வரலாற்றைத் தெரிந்துகொள்ளுதல் நன்று. நெருங்கிய உறவினரை மண்கக் கூடாது. புள்ளிவிபர ஆராய்ச்சியின்படி இ;வ்விதத் திருமணங்களில் பிள்ளைகளுக்குப் பிறவி நோய்களும் குறைகளும் ஏராளம் என்று மருத்துவ ரிதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு பாட்டி, தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றப்போய் நமது பிள்ளைகள் அவதியுற வேண்டாம்.

உயரம் முக்கியமல்ல, ஆனால் பெண் தன்னைவிட உயரமாகவோ, அதிகக் குள்ளமாகவோ இருந்தால் பின்னர் ஒருசில வாலிபர் மனச் சங்கடத்துக்குள்ளாகின்றனர்.

உடலழகையே முக்கியமாய்க் கருதினால் நல்ல தேவ பக்தியானதொரு பெண் உனக்குக் கிடைக்காமற்போகலாம் அழகெல்லாம் தோலாழம்தான் என்பதை நினைவிற்கொள்.

3. கல்வி அறிவு

வாழ்க்கையின் முக்கிய தீர்மானங்களுக்குக் கணவனே பொறுப்பென்பதும், மனைவி அவனிடமிருந்து கற்றுக்கொள்வேண்டுமென்பதும் திருமறையின் தாற்பரியம் (1கொரி 14:35) ஞானமும் கல்வியும் ஒன்றல்ல ஆனால் ஒருவருக்கொருவர். ஏற்படக்கூடிய உயர்வு தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும். அறிவு நிலையில் ஓரளவாவது ஒப்புமை இருக்கவேண்டும். பள்ளி இறுதியாண்டைக்கூட முடிக்காத பெண்களை மணந்துகொள்ளும் அதிகப் படித்த வாலிபர் பலர் பின்னர் வருந்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வினால் தங்கள் துணைவியோடு காரியங்களைப் பகிர்ந்துகொண்டு உரையாடுவதில் சிரமம் ஏற்படுகிறது. நாளாவட்டத்தில் அப்படியே மனைவியைக் கண்டுகொள்ளாது, தனித்தியங்கத் துவங்கிவிடுகின்றனர். தன்னால் ஒரு பயனுமில்லையென மனைவி தன்னைத்தானே நொந்துகொள்கிறாள். வாலிபனே, உனது வீட்டைக் கட்டக்கூடிய புத்தியுள்ள பெண்ணைக் கண்டுகொள் ஜெபி.

அதே வேளையில், அதிகம் படித்த பெண்களுக்கு வீட்டில் இல்லக் கிழத்தியாயிருக்க முடிவதில்லை. கணவருக்கும் பிள்ளைகளுக்கும் எப்பொழுதும் அன்பைச் சொரிய புத்துணர்வுடன் வீட்டில் இருக்கவேண்டுமென்பது பெண்களைக் குறித்த தேவனது திட்டமாகும் (தீத் 2,4-5) ஆனால் இன்றையப் பொருளாதார நிலையானது பெண்களையும் வேலை தேடிச் செல்ல நெருக்குகிறது. இந்நிலையில் பாதிப்பு பிள்ளைகளுக்குத்தான். அப்படியே, களிப்பு நாடி வீடு திரும்பும் களைத்த கணவனுக்குக் கிடைப்பது? கோபம், கடுஞ்சொல், குழப்பம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by சிவா Mon Apr 13, 2009 11:43 pm

4. பொருளாதார நிலை

பொருளாதார ரிதியில் ஏறத்தாழ உனது தரத்திலேயே உள்ள பெண்ணை மணப்பது சிறந்தது. அதிக வசதியான குடும்பத்திலிருந்து வரும் பெண் உனது வாழ்க்கைத் தரத்திற்கு இறங்கிவரச் சிரமப்படுவாள். வீணான பிரச்னைகள் உருவாகும்.

மனப்பூர்வமாக மணமகன், மணகள் வீட்டார் ஒருவருக்கொருவர் வெகுமதிகளைக் கொடுத்துக்கொள்வது மெச்சத்தக்கது. தனது மகள் ஈசாக்கின் பெண்ணுக்கும் ஆபிரகாம் ஏராளம் நகைகளைத் தனது வேலையாள் மூலம் கொடுத்தனுப்பினான். சபையாகிய தமது மணவாட்டிக்குக் கிறிஸ்து தமது தந்தையிடமிருந்து வரங்களைப் பெற்றளித்தார். அப்படியே தமது விண்ணக மாளிகைக்கு அவளை அழைத்துச் செல்ல வெகுமதிகளோடு வரவிருக்கிறார். ஆனால் இந்தியாவிலுள்ள வரதட்சணைப் பழக்கமானது வேதத்திற்குப் புறம்பானது சட்டத்துக்கு விரோதமானது. மணப்பெண்கள் தீக்கிரையாக்கப்படவல்ல என்ற தலைப்பில் வந்த தேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மண்பெண்கள் பெரும்பாலானோர் தற்கொலை செய்துகொள்வது வரதட்சனைப் பிரச்னையினால்தான் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மட்டுமல்ல இ;ப்பழக்கத்தில் கையாளப்படும் ரொக்கப் பணமெல்லாம் பெரும்பாலும் கறுப்புப் பணம்தான். திருமணச் சந்தையில் கிராக்கியும் பேரமும் பெருத்துள்ளதால் கண்ணீர் சிந்தித் தவிக்கும் பெற்றோரும் பெண்களும் ஏராளம். பழியையெல்லாம் முழுவதுமாக மணமகன் தனது பெற்றோர்மீது போட்டுவிட முடியாது. வசதியில் ஏழ்மையாயிருந்து, விசவாசத்திலோ செல்வந்தராயிருப்போர் திரளானோர் (யாக் 2:5) தேவ மக்களாய் அழைக்கப்பட்டோரில் பிரபுக்கள் அநேகரில்லை என்பது வேதாகம உண்மை.

5. கலாச்சாரப் பின்னணி

சபையிலும் சமுதாயத்திலும் ஜாதி வேறுபாடு தீராத நோயாயுள்ளது. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். (கலா 3:28 ரோ 10:12 கொலோ 3 : 11)

நமது நாட்டில் திருமணமென்றால் இரு தனி நபர் மட்டுமல்ல, இருகுடும்பங்கள் இணைவதாகும். எனவே, கலாச்சார வேறுபாடுகளால் ஏற்படும் பிரச்னைகளைக் காணாது இருந்துவிட முடியாது. எல்லாரும் மாற்றுக் கலாச்சாரத்திலேயே மணமுடிக்கவேண்டுமென நான் சொல்லுவதில்லை. ஆனால், ஜாதி வேறுபாடு என்ற ஒரே காரணத்தினால் ஒருவரை மணக்க மறுப்பது நிச்சயமாகத் தவறாகும் இதை முற்போக்கு இனத்தவர் என்றழைக்கப்படுவோரில் பின்தங்கிய மனப்பான்மை என்பேன்.

6. வயது வித்தியாசம்

ஏவாளைவிட ஆதாம் மூத்தவன் மனைவி கீழ்ப்படியவும், சார்ந்திருக்வும், கணவன் நேசிக்கவும், புரிந்துகொள்ளவும் இது உதவியாயிருக்கிறது. சாராளைவிட ஆபிரகாம் மூத்திருந்தான் அவள் அவனை ஆண்டவனே என்றழைத்தாள் ஒரே வயதாயிருந்தால் பரவாயில்லை ஆனால் மணமகனைவிட மணமகள் மூத்தவளாயிருப்பது நல்லதல்ல. அப்படியே பெண்ணின் வயது அதிகமாய்க் குறைவாயிருந்தாலும் பிரச்னைகள் உருவாகும்.

முப்பது வயதுக்குமுன் வாலிபரும், இருபத்தைந்துக்குமுன் கன்னியரும் மணமுடிப்பது நல்லது. முப்பத்தைந்து வயதுக்குப்பின் பெண்கள் பிள்ளை பெறுவது உசிதமல்ல என்று மருத்துவ ரீதியில் கூறப்படுகிறது. இது ஒரு பொதுவான ஆலோசனை. குடும்பப் பொறுப்புகளின் மிகுதியால் சிலர் பிந்தித்தான் மணமுடிக்க முடியும்.

7 தேவ சித்தம்.

முதற் குறிப்பைத் தவிர மீதியெல்லாம் கர்த்தரின் கட்டளைகளல்ல ஆனால் அறிவிலும் அனுபவத்திலும் கண்டவற்றின் தொகுப்பாகும். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று என்ணுகிறேன் (1கொரி 7:40) மேற்குறிப்பிட்டுள் அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பது எப்பொழுதும் சாத்தியமாயிராது. வாலிபரும் கன்னியரும் இக்குறிப்புகளைப் பொதுவான ஆலோசனைகளாக வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லுகிறவைகளை சிந்தித்துக்கொள் கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். (2தீமோ 2:7)

உனக்கு விருப்பமான, கர்த்தருக்குட்பட்ட எவரையும் மணந்து கொள்ள வேதம் உனக்கு விடுதலை தருகிறது (1 கொரி 7 : 39) பெண்ணையோ மாப்பிள்ளையையோ யாரும் உனக்குக் காட்டட்டும் ஆனால் இவரைத்தான் நீ மணக்கவேண்டுமென தேவன் சொல்லுகிறாரென்று யாரும் உனக்குச் சொல்லவிடாதே. இந்தப் பகுதியில் தீர்க்க தரிசனம் என்று சொல்லப்படுபவைகளைக் குறித்து எச்சரிக்கை உன் காரியத்தைக் கர்த்தரிடம் இப்படைத்து அவருக்குக் காத்திரு. அவர் அதை வாய்க்கப்பண்ணுவார். திருமணத்தில் கரத்தைப் பிடிக்குமுன்னால், அல்லது கொடுக்குமுன்னால், இருவரது இதயங்களிலும் முழு நிச்சயம் இருக்கவேண்டும். இது சாதாரண காரியமல்ல உயிர் வரும், அல்லது போகும்

தேவையில்லாத கலக்கங்களை அகற்றுங்கள். பெண் தேடி வேலையாள் போயிருக்கையில் ஈசாக்கு தியானம் பண்ண வயல்வெளிகளில் நடந்து கொண்டிருந்தான் (ஆதி 24:63) ஒரு நபரை உனக்காகப் பேசும்போது முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டபின் ஒரு சில நாட்களாவது ஜெபித்துக்கொண்டிரு. அந்நபரையும் ஜெபித்துக்கொண்டிருக்கச் சொல். இக்காரியத்தைக் குறித்து உங்கள் இருவரின் உள்ளத்திலும் ஒரு அமரிக்கையும் சமாதானமும் இருக்கிறதாவெனப் பாருங்கள். ஓரிரு தடவை இருவரும் சந்தித்துப் பேசுங்கள். உணர்ச்சிவசப் பட்டுவிடாதிருங்கள் திருமணத்திற்குமுன் தொட்டுப் பழகவேண்டாம். பெற்றோர் மூப்பர் முன்னிலையில் ஜெபித்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். கடிதத் தொடர்பு கொண்டு மண நாளுக்காய் மண வாழ்வுக்காய் ஆயத்தப்படுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by சபீர் Mon Apr 12, 2010 9:41 pm

அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by Sundararajan Fri Aug 20, 2010 11:43 am

நல்ல ஆலோசனைகள்.வாழ்க்கைத் துணை தேடும் வாலிபர் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை. நன்றி


Last edited by Sundararajan on Fri Aug 20, 2010 11:45 am; edited 1 time in total (Reason for editing : mistake)
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by தமிழ் Fri Aug 20, 2010 11:47 am

அன்பு மலர் அன்பு மலர்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by சிவா Fri Aug 20, 2010 11:59 am

Sundararajan wrote:நல்ல ஆலோசனைகள்.வாழ்க்கைத் துணை தேடும் வாலிபர் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை. நன்றி

நீங்களும் வாழ்க்கைத் துணை தேரும் வலிபர் லிஸ்டில் உள்ளீர்களா?


யாரை மணப்பது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by ரபீக் Fri Aug 20, 2010 12:44 pm

ஆமாமா, எனக்கும் இது ரொம்ப பயனுல்லதா இருக்கும் ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by Sundararajan Sat Aug 21, 2010 4:05 pm

நான் வாலிபன்தான் எனக்கு வயது திருப்பிப் போட்ட ௨௬. ஆனால் திருமணமாகி 33 வருடங்களாகிவிட்டது.
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by சிவா Sat Aug 21, 2010 4:08 pm

Sundararajan wrote:நான் வாலிபன்தான் எனக்கு வயது திருப்பிப் போட்ட ௨௬. ஆனால் திருமணமாகி 33 வருடங்களாகிவிட்டது.

நாம் இருவருக்குமே ஒரு வயதுதான்! யாரை மணப்பது 359383


யாரை மணப்பது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by Sundararajan Sat Aug 21, 2010 4:41 pm

என்ன ஒற்றுமை !
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

யாரை மணப்பது Empty Re: யாரை மணப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum