புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் :  நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 01, 2023 2:03 pm


நாளும் ஒரு நற்சிந்தனை
நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


வானதி பதிப்பகம், 23. தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 280 ; விலை : ரூ.300.
*****

நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். வழக்கறிஞராகத் தொடங்கி உச்சநீதிமன்ற நீதியரசர் வரை உயர்ந்தவர். நேர்மையானவர். காந்தியத்தை கடைபிடித்து காந்திய வழி நடப்பவர். ஒரு தீர்ப்பில் காந்தி அருங்காட்சியகம் சென்று சத்திய சோதனை நூல் படிக்க வலியுறுத்தியவர். மதுரை காலேஜ் ஹவுசில் நடந்த உலகத் திருக்குறள் பேரவையில் சிறப்புரையாற்றியவர். தெளிந்த நீரோடை போன்று உரை நிகழ்த்துபவர். மிகச்சிறந்த ஆளுமையாளர் எழுதி உள்ள வாழ்வியல் உணர்த்தும் அறநெறி போதிக்கும் அற்புத நூல் இது.

வானதி பதிப்பகம், பதிப்புச் செம்மல், மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் சிறப்பான பதிப்புரை வழங்கி உள்ளார். உச்சநீதிமன்ற நீதியரசராக இருக்கும் வெ.இராமசுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. உள்ளது உள்ளபடியே எழுதி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் வழக்கறிஞராக இருந்த போதிலிருந்து நீதிமன்றம் செல்வதற்கு நீதியரசர் இராம சுப்பிரமணியன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றதை மறக்காமல் எடுத்து இயம்பி நன்றியுடன் அணிந்துரை வழங்கி உள்ளார்.

நூலில் உள்ள எல்லாக் கருத்துக்களும் சிறந்தவை தான். கடைபிடித்தால் வாழ்க்கையில் சிறக்கலாம். உயரலாம். வாழ்வாங்கு வாழலாம். வாழ்க்கைக்குப் பயன்தரும் கருத்துக்களின் பொன்மொழிகளின் சுரங்கமாக உள்ளது. புகழ்பெற்ற அறிஞர்கள் சொன்னது, பேசியது, நூலாசிரியர் நீதியரசர் மேடையில் பேசியது என அனைத்தையும் தொகுத்து சிக்கனமான வரிகளுடன் தத்துவ விருந்தாக, துன்பம் நீக்கும் மருந்தாக, தன்னம்பிக்கை விதைக்கும் விதையாக வழங்கி உள்ளார்.

பதச்சோறாக நூலிலிருந்து சில வைர வரிகள் மட்டும் இங்கே மேற்கோள்களாக எழுதி உள்ளேன். படித்துப் பாருங்கள். நூலினை வாங்கி முழுமையாகப் படித்துப் பயன் பெறுங்கள்.

நம்மை விரும்புவோருக்காக வாழ வேண்டும்!
நம்மை வெறுப்போருக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்!

என்ன வாழ்க்கை என்று விரக்தி அடையாமல் நம்மை விரும்புபவர்களுக்காக வாழ வேண்டும். நம்மை வெறுத்தவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உந்துசக்தி தரும் ஊட்டக்கருத்துக்களை நூல் முழுவதும் வழங்கி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்கள் ‘ஆயிரம் ஹைக்கூ’ என்று நூலிற்கு நீண்ட நெடிய மதிபுப்ரை வழங்கி என்னை மகிழ்வித்தார்கள். பரபரப்பான நீதியரசராக இருந்த போதும் நேரம் ஒதுக்கி மதிப்புரை அனுப்பி வைத்தார். பண்பாளர், நெறியாளர். எளிமையானவர், இனிமையானவர், இப்படி எழுதிக் கொண்டே செல்லலாம். மிகச்சிறந்த மாமனிதர் நூலாசிரியர்.

ஆரோக்கியத்திற்கு வழிகள் ஏழு!

1. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது.

2. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது.

3. எப்போதும் திருப்தியாக இருப்பது.

4. எப்போதும் புன்னகையோடு இருப்பது.

5. எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது.

6. எப்போதும் பணியில் ஈடுபடுவது

7. எப்போதும் பணிவாக இருப்பது.

இந்த ஏழு வழிகளை வாழ்க்கையில் கடைபிடித்தால் நோய் வராது, நலமான வாழ்க்கை வசமாகும். கவலை, சோகம் மறந்து புன்னகையுடன் மனமகிழ்ச்சியுடன் தொடர்ந்து செயல்பட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும் என்பதை கவிதை நடையில் தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் ரத்தினச் சுருக்கமாக உணர்த்தி உள்ளார்.

அறுபது சொல்வது அனுபவ நிஜம் - அதை
இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்

மூத்தோர் சொல் அமுதம் என்பதை அழகாக எழுதி உள்ளார். அனுபவம் மிக்கவர்களான அப்பா, தாத்தா சொல்வதை மகன், பேரன் என்ற இளைய தலைமுறையினர் கேட்டு நடந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை நன்கு உணர்த்தும் நற்கருத்து.

மரத்தின் பெருமை அதன் உயரத்தில் இல்லை
அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது
மலர்களின் பெருமை அதன் நிறத்தில் இல்லை
அதன் மணத்தைப் பொறுத்தது
மனிதனின் பெருமை அவனது பதவியைப் பொறுத்ததில்லை,
அவன் செய்கிற தொண்டைப் பொறுத்தது!

பெரிய பதவியில் இருப்பது பெருமை அல்ல, அப்பதவியின் மூலம் எவ்வளவு தொண்டை செய்தோம் என்பதே முக்கியம் என்பதை பல உவமைகளுடன் எடுத்து இயம்பியது சிறப்பு.

இயலாமல் தோற்பது வேறு
முயலாமல் தோற்பது வேறு
இயலாமல் தோற்பது இழுக்கு
முயலாமல் தோற்பது பேரிழுக்கு

முயற்சி திருவினையாக்கும் என்பதையும் முயலாமல் இருப்பது முட்டாள்தனம், இழுக்கு என்பதையும் குறைந்த சொற்களின் மூலம் நிறைந்த கருத்துக்களை வலியுறுத்தியது நன்று.

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது

எதையும் முயல வேண்டும், முயன்று தோற்றால் வருந்தாதே, அனுபவமாக எடுத்துக்கொள். அடுத்த முறை வெற்றி காண்பதற்கான பயற்சியாக அனுபவமாக எடுத்துக்கொள் என்று ஆறுதலான வார்த்தைகளின் மூலம் தோல்வியால் துவண்ட நெஞ்சத்திற்கு மருந்து தடவுகிறார்.

அடிபடாத தங்கம் ஆபரணம் ஆவதில்லை
துளை இடாத மூங்கில் புல்லாங்குழல் ஆவதில்லை
உளி படாத கல் சிலை ஆவதில்லை
சவால்கள் இல்லாத வாழ்க்கை சரித்திரம் ஆவதில்லை!

போராட்டம் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் போராடி வெல்ல வேண்டும். தோல்விக்கு துவளக் கூடாது. சவால்கள் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வென்று காட்டுவதே வாழ்க்கை என வலியுறுத்தியது சிறப்பு.

மலர்ந்த முகம் நந்தவனம்!
மலர்ச்சி இல்லாத முகம் ஒரு மயானம்!

முகத்தை மலர்ச்சியாக புன்னகை ஏந்தியபடி இன்புற்று இருப்பது சிறப்பு. உம்மென்றும், உர் என்றும் சோம்பி இருப்பது நன்றன்று என்பதை மிக நுட்பமாக எழுதி உள்ளார். நந்தவனம் மயானம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஒரு நல்ல பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
அருவியின் ஓசை! ஆற்றின் ஓட்டம்!
அலைகடலின் தாளம்!

இவை மூன்றும் கலந்ததாக இருக்க வேண்டும்

நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்களின் உரையும் மேற்கண்டவாறு தான் இருக்கும். பேச்சாற்றலால் சிகரம் தொட்டவர், எழுத்தாற்றலாலும் சிகரம் தொட்டுள்ளார். படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் கவலை, விரக்தி வரும்போதெல்லாம் மறுவாசிப்பு செய்து மனதை செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் சிறந்த நூல் இது. படிக்க, பாதுகாக்க பயன்படும் பண்பு வளர்க்கும் பண்பாளர் நூல். பாராட்டுகள், வாழ்த்துகள்.



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக