ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

Go down

 மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?  Empty மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

Post by சிவா Fri Mar 31, 2023 7:01 pm

 மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?  Incomplete

ஒருவர் எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் கழிக்க வேண்டும்? இந்த கேள்வியை கூகுளில் தேடினால் ஒரு நாளுக்கு மூன்று முறை முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை என பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

ஆனால், இதற்கு உண்மையான பதில்: உங்களுக்கு அதற்கான உந்துதல் ஏற்படும் போதெல்லாம் மலம் கழிக்க வேண்டும் என்பதுதான்.

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனை செய்யாமல் அடக்குவது, காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிதளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூலநோய், ஆசனவாயிலிருந்து நீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை தூண்டுதல்


உணவு உண்பது, மலம் கழிக்கும் எண்ணத்தைத் தூண்டுவதாக, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உடலியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு அந்தத் தூண்டுதல் அதிகரிக்கிறது.

குழந்தைகளுக்கு மலம் கழிக்கும் உந்துதல் ஏற்படும்போது அதனை தாமதிக்காமல் செய்கின்றனர். ஆனால், நடக்கத் தொடங்கிய அதே வயதில், மலம் கழிப்பதை அடக்குவதையும் கற்றுக்கொள்கிறோம்.

மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும்போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கிவிடும். ஆனால், நீண்ட நேரத்திற்கு மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அதாவது,

மலச் சிக்கல்
வயிற்று வலி
வயிறு உப்புவது
வாயுத் தொல்லை
மெதுவாக மலம் வெளியேறுதல்
ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மலம் வெளியேறும் நேரத்தைக் கண்டறிதல்


நீங்கள் உண்ணும் உணவு மலமாக வெளியேற எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

ஏனெனில், உணவு உண்டபின் அது மலமாக வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் தொடர்புடையது.

இந்த நேரத்தைக் கணக்கிடகு மிக எளிய வழி உள்ளது. கையளவு சமைக்காத இனிப்பு சோளத்தை விழுங்கிவிட்டு, பின்னர் மலத்தில் சோளக்கரு தெரிகிறதா என்பதைக் கவனியுங்கள். இனிப்பு சோளத்தை விழுங்கிய எட்டு முதல் 24 மணிநேரத்தில் இது நிகழ வேண்டும்.

நீண்ட நேரம் கழித்து மலத்தை வெளியேற்றினால் என்ன நிகழும்?


வயிற்றுக்குள் மலத்தை அடக்குவது என்பது நீங்கள் உண்ணும் உணவின் எச்சம், உங்கள் உடலில் தேவையானதை விட நீண்ட நேரம் தங்கியிருக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனால், உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நீர், பாக்டீரியா, நைட்ரஜன் பொருட்கள், கார்போஹைட்ரேட், செரிக்கப்படாத தாவரப் பொருட்கள் மற்றும் கொழுப்புகள் அடங்கிய சுமார் ஆறு டன் மலத்தை நம் வாழ்நாளில் உற்பத்தி செய்கிறோம்.

இந்தக் கலவை நீண்ட நேரம் நம் உடலில் தங்கினால், உள்ளுக்குள் நொதித்தல் நிகழ்கிறது. இது வாயுவை மட்டும் ஏற்படுத்தாமல், வளர்சிதை மாற்ற ரசாயனங்களையும் உருவாக்குகிறது.

பண்டைய கிரேக்கர்களின் காலத்திலிருந்தே, குடலில் உள்ள கழிவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான நான்கு உடல் பொருட்களின் (ரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் மற்றும் சளி) சமநிலையின்மைக்கு பங்களிப்பதாக கருதப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மலச் சிக்கல் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மோசமான ஒழுங்கீனங்களைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாக கெலாக்ஸ் தானியம் உருவாக்கப்பட்டது.

உணவு உண்டபின் நீண்ட நேரத்திற்கு பின் மலம் கழிப்பது,

பெருங்குடல் புற்றுநோய்
பெருங்குடல் கட்டிகள்
செரிமான மண்டலத்தில் புடைப்புகள் ஏற்படுவது
பித்தப்பை கற்கள்
மூல நோய்

உள்ளிட்டவை ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

உணவு உண்டபின் குறைவான நேரத்தில் மலம் கழிப்பதும் குடல் சார்ந்த பல்வேறு கேடுகளுக்கு வழிவகுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?


குடல் சார்ந்த இத்தகைய உடல்நலக் கேடுகளுக்கு நார்ச்சத்து மற்றும் திரவ உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம்விட மேலானது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனைச் செய்துவிடுவதே.

மார்ட்டின் வெய்ஸி
பதவி,தி கான்வர்சேஷன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?  Empty Re: மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

Post by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?


நமது அன்றாட கடமைகளில் ஒன்று காலைக் கடன் கழிப்பது. உலகில் உள்ள அனைவரும் மலம் கழிக்கிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளை தவிர அல்லது அவர்களின் பெற்றோரை தவிர அதுகுறித்து வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.

மனிதர்களின் மலம் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு மனிதர் 730 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்; 91 கிலோ மலத்தை வெளியேற்றுகிறார். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்களை நாம் மறந்துவிட்டோமா?

மலம் கழிக்க உதவியவர் உயரிய பதவியில்


பழங்கால ரோமானிய காலத்தில் எந்த மனிதனின் கழிவும் வீணாக போனதில்லை.

மலம் வீட்டுத்தோட்டங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டப்பட்டது. சிறுநீர், துணி தயாரிக்க பயன்பட்டது.

இங்கிலாந்தின், ஹென்ரி ஏழாம் மன்னர் காலத்தில், நாட்டின் உயரிய பதவி என்ன தெரியுமா?

மன்னருக்கு மலம் கழிப்பதில் உதவி செய்பவர்களின் பதவிதான் உயரிய பதவி. மன்னரின் கவனத்தை பெற மலம் கழித்த பின் அவரின் பின்புறத்தை சுத்தம் செய்வது ஒரு நல்ல யோசனையாகதான் அந்த சமயத்தில் இருந்தது.

மனிதர்களின் மலம் இரவோடு இரவாக உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. சிறுநிர் சேகரிக்கப்பட்டு லெதர் பொருட்களை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டது.

இன்றைய காலத்தில் ஆற்றலுக்கான தேவை


நமது முன்னோர்களின் கழிவறை அணுகுமுறையிலிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.

கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பது சூரிய சக்தியை போன்றோ அல்லது காற்றாலையை போன்றோ நிரந்தரமற்றது இல்லை. உடலுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்து கொண்டால் எந்த சிரமமும் இல்லாமல் மலம் கழிக்கலாம்.

கழிவு நீர் சுத்தீகரிக்கப்பட்டு மீதமிருக்கும் சக்கையிலிருந்து மீத்தேன் தயாரிக்கப்படுகிறது. நவீன சுத்தீகரிப்பு இயந்திரங்கள் இந்த சக்கையில் பாக்டீரியாவை சேர்க்கிறது இதன்மூலம் பயோ கேஸ் உருவாகிறது. இதை வீட்டிற்கோ அல்லது வாகனங்களுக்கோ எரிபொருளாக பயன்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் சுத்தமான ஆற்றல் இது.

மனித மலத்தால் பல நன்மைகள் இருந்தாலும், சிறுநீருக்குதான் முதல் இடம். உலகில் 72 சதவீத தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் பருவநிலை மாற்ற பிரச்னை. சில நாடுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதிகப்படியான இடம் பெயர்வும் நடைபெறுகிறது. பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒரு மனிதர் 2 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 140 லிட்டர் நீரை செலவு செய்கிறார்.

நீரை மறு சுழற்சி செய்வது பேராபத்துகளில் இருந்து நம்மை காக்குமா?


நிச்சயமாக. இதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில்தான் உள்ளது. இஸ்ரேலில் கிட்டதட்ட 90 சதவீத பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது 56 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவு.

விவசாயம் குறித்து பேசும்போது பாஸ்பரஸ் குறித்தும் பேசுவோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழ பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அதிகப்படியான சுரங்க நடவடிக்கைகளால் பாஸ்பரஸ் குறைந்து கொண்டே வருகிறது. இந்த இயற்கை வளம் மீண்டும் உற்பத்தி ஆவது கடினம். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அடுத்த தலைமுறையில் பாஸ்பரஸ் விநியோகம் இல்லாமல் போகலாம்.

இந்த சத்து இல்லாமல் விவசாயம் செய்வது கடினம். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி ஆகும் உணவில் பாஸ்பரஸ் இல்லாமல் போனால் பாதி அளவே உற்பத்தி செய்யப்படும்.

தீர்வு என்ன?


நாம் நமது முன்னோர்களை பின்பற்றி கழிவுநீரை மீண்டும் மண்ணில் செலுத்தலாம். மலத்தை உரமாக்கும் உலர் கழிவறைகள் மிகப்பெரிய ஒரு தீர்வு.

தற்போதைய சூழலில் 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறை இல்லாமல் வாழ்கின்றனர். எனவே கழிவறைகளை மாற்றி வடிவமைப்பது அவர்களுக்கும் கழிவறை என்பது சாத்தியமாக்கும்.

அதேபோன்று நீர் இல்லாமல் பயன்படுத்தப்படும் கழிவறையை புதுயுக்தியாக வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் 800 குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம்.

இம்மாதிரியான புதிய வகை கழிவறைகள் உயிர்காக்கும் ஒன்றாக மட்டுமல்ல லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு வாக்கில் கழிவறை என்பது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சந்தையாக மாறும். இதற்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும் ஐந்து டாலர்கள் லாபம் வரும்.

மலம் கழிப்பது என்று கூறும் போது உங்களுக்கு சிரிப்பு வரலாம் அல்லது முகத்தை சுழிக்கலாம் ஆனால் நாம் உடனடியாக சிந்தித்து செயல்பட்டால் மனித மலம் இந்த பூமியை காக்க உதவலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
» கோபம் சாபமானால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum