Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
2 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
First topic message reminder :
!['மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - Page 2 RHWzLmA](https://i.imgur.com/RHWzLmA.jpg)
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன
ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும்,
அதே சமயம் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
!['மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - Page 2 RHWzLmA](https://i.imgur.com/RHWzLmA.jpg)
'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் |
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி என்ன பேசினார்? இந்த வழக்கில் பின்னணி?
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன. |
இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன
ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார் |
அதே சமயம் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
ராகுல் காந்திக்கு மம்தா ஆதரவு: அமைதியாக இருக்க மாட்டோம் என காங்கிரஸ் எச்சரிக்கை
Rahul Gandhi Tamil News: பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த லோக்சபா சபாநாயகரின் முடிவை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேவைப்பட்டால், நாட்டைக் காப்பாற்ற கட்சியினர் சிறைக்குச் செல்வார்கள் என்று கூறினார். இதேபோல், ராகுலை தகுதி நீக்கம் செய்த நடவடிக்கை நமது ஜனநாயகத்திற்கு தீங்கானது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறினார்.
இது தொடர்பாக டெல்லியில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “அவர்கள் (பாஜக) அவரை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் முயன்றனர். உண்மையைப் பேசுபவர்களை அவர்கள் வைத்திருக்க விரும்பவில்லை, ஆனால் நாங்கள் தொடர்ந்து செய்வோம். ஜேபிசிக்கான (JPC) எங்கள் கோரிக்கையைத் தொடர்வோம். தேவைப்பட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற சிறைக்கு செல்வோம்.” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதிமன்ற தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், வழக்கு மேல்முறையீடு செயல்பாட்டில் இருப்பதாக அறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை மற்றும் அதன் வேகத்தால் நான் திகைத்துவிட்டேன். இது கையுறைகளை அணைத்த அரசியல், இது நமது ஜனநாயகத்திற்கு தீங்கானது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
I’m stunned by this action and by its rapidity, within 24 hours of the court verdict and while an appeal was known to be in process. This is politics with the gloves off and it bodes ill for our democracy. pic.twitter.com/IhUVHN3b1F — Shashi Tharoor (@ShashiTharoor) March 24, 2023 |
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் போரை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடத்துவோம். நாங்கள் மிரட்டப்பட மாட்டோம், அமைதியாக இருக்க மாட்டோம். பிரதமருடன் இணைக்கப்பட்ட அதானி மகாமேகா ஊழல் வழக்கில் ஜேபிசிக்கு பதிலாக, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய ஜனநாயகம் ஓம் சாந்தி.” என்று கூறியுள்ளார்.
“மார்ச் 23 அன்று தீர்ப்பு, மார்ச் 24 அன்று தகுதி நீக்கம். கணினி கால வேகம் வியக்க வைக்கிறது. பிரதிபலிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அல்லது சட்ட மறுஆய்வுக்கு நேரத்தை அனுமதிப்பதற்கும் எந்த நேரமும் செலவிடப்படுவதில்லை. வெளிப்படையாக, பாஜக கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ மிதவாதக் குரல்கள் இல்லை. இதன் மொத்த விளைவு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றொரு கொடூரமான அடியை சந்தித்துள்ளது,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், தகுதி நீக்கத்தின் அவசர தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தியின் உண்மைக்கான போராட்டத்தை தடுக்கும் சதி என்று கருத்து தெரிவித்துள்ளார். அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளில், அவரை அமைதிப்படுத்த இந்த சதி தொடங்கப்பட்டது. இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் தெளிவான நிகழ்வு” என்று அவர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியுள்ளது. “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காகிவிட்டனர். கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்கு தகுதியற்றவர்கள். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய தாழ்வை நாங்கள் கண்டுள்ளோம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் போரை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடத்துவோம். நாங்கள் மிரட்டப்பட மாட்டோம், அமைதியாக இருக்க மாட்டோம். பிரதமருடன் இணைக்கப்பட்ட அதானி மகாமேகா ஊழல் வழக்கில் ஜேபிசிக்கு பதிலாக, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய ஜனநாயகம் ஓம் சாந்தி.” என்று கூறியுள்ளார்.
“மார்ச் 23 அன்று தீர்ப்பு, மார்ச் 24 அன்று தகுதி நீக்கம். கணினி கால வேகம் வியக்க வைக்கிறது. பிரதிபலிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அல்லது சட்ட மறுஆய்வுக்கு நேரத்தை அனுமதிப்பதற்கும் எந்த நேரமும் செலவிடப்படுவதில்லை. வெளிப்படையாக, பாஜக கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ மிதவாதக் குரல்கள் இல்லை. இதன் மொத்த விளைவு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றொரு கொடூரமான அடியை சந்தித்துள்ளது,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், தகுதி நீக்கத்தின் அவசர தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தியின் உண்மைக்கான போராட்டத்தை தடுக்கும் சதி என்று கருத்து தெரிவித்துள்ளார். அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளில், அவரை அமைதிப்படுத்த இந்த சதி தொடங்கப்பட்டது. இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் தெளிவான நிகழ்வு” என்று அவர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியுள்ளது. “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காகிவிட்டனர். கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்கு தகுதியற்றவர்கள். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய தாழ்வை நாங்கள் கண்டுள்ளோம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தகுதி நீக்கம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அவர்கள் விரக்தியில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் குரலை அடக்க விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் எல்லாவிதமான தாழ்வுகளுக்கும் செல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது மிகக் குறைவு – 1950க்குப் பிறகு மிகக் குறைவு. பயங்கரம். பார்லிமென்ட் ஜனநாயகத்தில் மிகக் குறைவானது…பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில். பா.ஜ.க., எவ்வளவு கீழ்த்தரமாக போக முடியும்? திரு மோடியும் திரு ஷாவும்… பாஜக… வெட்கப்படுகிறோம். அவமானம்.”
இந்த முடிவு வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்ஜேடி எம்பி மனோஜ் கே ஜா கூறினார். “பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இது மிகப்பெரிய கருப்பு கறை என்று நான் நம்புகிறேன். இந்த முடிவு எடுக்கப்பட்ட தீவிரம்… ஆதாரமற்ற உண்மைகள் மற்றும் வாதங்களின் அடிப்படையில். ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது என்று ராகுல் காந்தி கேம்பிரிட்ஜில் பேசியதை… சரி என்று நிரூபித்துவிட்டீர்கள்… ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு மரியாதை இல்லை. இந்த சர்வாதிகார மனநிலையை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும்… சிவில் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தியைப் பற்றி… இது ஜனநாயகத்தின் மரணத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு,” என்று ஜா கூறினார்.
பாஜகவுடன் முரண்பட்டு வரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஜனநாயகத்தைக் கொல்லும் செயல் என்று கூறினார். “திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டார். இது ஜனநாயக படுகொலை. அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன,” என்று உத்தவ் கூறினார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், இது “பழிவாங்கும் மற்றும் வெட்கக்கேடான செயல்” என்று கூறினார். “இந்த தகுதி நீக்கம், கூண்டில் அடைக்கப்பட்ட ஜனநாயக காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ஆதரித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் எஸ்.பி.எஸ்.பாகெல், இது “சட்டபூர்வமானது” என்றும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் தலைவரை கடுமையாக தாக்கி, நாடாளுமன்றத்தில் உண்மைக்கு வெகுதூரம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். “நேஷனல் ஹெரால்டு தொடர்பான ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ராகுல் காந்தி… நாடாளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்… நாடாளுமன்றம், சட்டம், நாடு, சிறப்புரிமை மற்றும் காந்தி குடும்பத்துக்கு மேலானவர் என்று ராகுல் காந்தி நம்புகிறார். அவரால் எதையும் செய்ய முடியும்,” என்றார்.
“மார்ச் 23 அன்று தீர்ப்பு, மார்ச் 24 அன்று தகுதி நீக்கம். கணினி கால வேகம் வியக்க வைக்கிறது. பிரதிபலிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அல்லது சட்ட மறுஆய்வுக்கு நேரத்தை அனுமதிப்பதற்கும் எந்த நேரமும் செலவிடப்படுவதில்லை. வெளிப்படையாக, பாஜக கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ மிதவாதக் குரல்கள் இல்லை. இதன் மொத்த விளைவு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றொரு கொடூரமான அடியை சந்தித்துள்ளது,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், தகுதி நீக்கத்தின் அவசர தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தியின் உண்மைக்கான போராட்டத்தை தடுக்கும் சதி என்று கருத்து தெரிவித்துள்ளார். அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளில், அவரை அமைதிப்படுத்த இந்த சதி தொடங்கப்பட்டது. இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் தெளிவான நிகழ்வு” என்று அவர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியுள்ளது. “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காகிவிட்டனர். கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்கு தகுதியற்றவர்கள். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய தாழ்வை நாங்கள் கண்டுள்ளோம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தகுதி நீக்கம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அவர்கள் விரக்தியில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் குரலை அடக்க விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் எல்லாவிதமான தாழ்வுகளுக்கும் செல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது மிகக் குறைவு – 1950க்குப் பிறகு மிகக் குறைவு. பயங்கரம். பார்லிமென்ட் ஜனநாயகத்தில் மிகக் குறைவானது…பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில். பா.ஜ.க., எவ்வளவு கீழ்த்தரமாக போக முடியும்? திரு மோடியும் திரு ஷாவும்… பாஜக… வெட்கப்படுகிறோம். அவமானம்.”
இந்த முடிவு வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்ஜேடி எம்பி மனோஜ் கே ஜா கூறினார். “பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இது மிகப்பெரிய கருப்பு கறை என்று நான் நம்புகிறேன். இந்த முடிவு எடுக்கப்பட்ட தீவிரம்… ஆதாரமற்ற உண்மைகள் மற்றும் வாதங்களின் அடிப்படையில். ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது என்று ராகுல் காந்தி கேம்பிரிட்ஜில் பேசியதை… சரி என்று நிரூபித்துவிட்டீர்கள்… ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு மரியாதை இல்லை. இந்த சர்வாதிகார மனநிலையை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும்… சிவில் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தியைப் பற்றி… இது ஜனநாயகத்தின் மரணத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு,” என்று ஜா கூறினார்.
பாஜகவுடன் முரண்பட்டு வரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஜனநாயகத்தைக் கொல்லும் செயல் என்று கூறினார். “திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டார். இது ஜனநாயக படுகொலை. அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன,” என்று உத்தவ் கூறினார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், இது “பழிவாங்கும் மற்றும் வெட்கக்கேடான செயல்” என்று கூறினார். “இந்த தகுதி நீக்கம், கூண்டில் அடைக்கப்பட்ட ஜனநாயக காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ஆதரித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் எஸ்.பி.எஸ்.பாகெல், இது “சட்டபூர்வமானது” என்றும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் தலைவரை கடுமையாக தாக்கி, நாடாளுமன்றத்தில் உண்மைக்கு வெகுதூரம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். “நேஷனல் ஹெரால்டு தொடர்பான ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ராகுல் காந்தி… நாடாளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்… நாடாளுமன்றம், சட்டம், நாடு, சிறப்புரிமை மற்றும் காந்தி குடும்பத்துக்கு மேலானவர் என்று ராகுல் காந்தி நம்புகிறார். அவரால் எதையும் செய்ய முடியும்,” என்றார்.
Union Min Anurag Thakur says, "Rahul Gandhi is on a bail in a corruption case of National Herald…He is habitual of going far from truth in Parliament…I think Rahul Gandhi believes he's above Parliament, law, country, he's privileged & Gandhi family can do anything." pic.twitter.com/31X5kxOeuK — ANI (@ANI) March 24, 2023 |
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னை: ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன். இத்தோடு, அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும். நாட்டையாளும் பாஜக அரசு தனது அதிகாரப்பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும்.
மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பாஜக அரசின் இப்படுபாதகச்செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும். இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது.
அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமைப் பயணம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தகுதி நீக்கத்திற்கு ஒரு காரணம் என்று முதல்வர மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த தகுதி நிக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது. ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மேல்முறையீடு செய்வது என்பது அடிப்படை உரிமை அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது எம்.பி.யின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை கிடையாது என்று மிரட்டும் தொனியில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீண்டும் ராகுலை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால் தங்களது அரசியலுக்கு நெருக்கடி என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வாய்த்த குற்றசாட்டுகளுக்கு சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல என்று முதல்வர் கூறியுள்ளார். மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு; ஐகோர்ட்டில் மேல்முறையீடு இருக்கிறது இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில்தான் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ம் தேதி தீர்ப்பு , 24-ம் தேதி பதவி பறிப்பு என்று நடவடிக்கையை பாஜக அரசு எடுத்துள்ளது.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
டெல்லி: ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது. நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை. ராகுலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதை தடுக்கவே, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சமின்றி ராகுல் பேசி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ராகுல் காந்தியின் பேச்சால் அரசு கலக்கம் அடைந்துள்ளது, அச்சமின்றி பேசியதற்கான விலையை அவர் கொடுத்துள்ளார். ராகுல் காந்தியின் பேச்சை முடக்க புதிய வழிமுறைகளை பாஜக அரசு கண்டுபிடித்துள்ளது. உண்மைகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதால் பாஜக அரசு அரண்டு போயுள்ளது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது சட்டப்படியானது என்று கூறுவதற்கு முன், அது அரசியல் ரீதியானது.
ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நாட்டுக்கும் முக்கியமான பிரச்சனை. திட்டமிட்டு, அடுத்தடுத்து ஜனநாயக அமைப்புகளை, ஆளும் பாஜக சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமானது எனவும் கோரினார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
அமைச்சர் உதயநிதி கண்டனம்
சென்னை: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர் என்று பேசியுள்ளார்.
ராகுலின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனிடையே பாஜ எம்எல்ஏ குஜராத் முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ம் தேதி முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை 23-ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி அவதூறு வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 499 மற்றும் 500-ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
எம்.பி பதவியில் இருந்து. 2019 தேர்தல் பேச்சுக்காக ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரால் இது தூண்டப்பட்டது. இத்தகைய மிரட்டல்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்காது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல்காந்தியை 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
சென்னை: காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.
இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பாஜக இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது.
விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்தது சரியான நடவடிக்கையே: பாஜக
புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒவ்வொருவரும் இதனை ஏற்கத்தான் வேண்டும். ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் சமூகங்களை சிலர் இழிபடுத்துகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பு நாடு முழுவதற்கும் ஒரு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ், ''ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படி திருடர்கள் என ராகுல் காந்தி கூறலாம்? பேச்சு சுதந்திரம் என்பது எந்த சமூகத்தையும் அவமதிப்பதற்கான உரிமை அல்ல. ராகுல் காந்தி ஓபிசி சமூகத்தை அவமதித்திருக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை. வெளிநாடு சென்றபோதும் அங்கு நாட்டுக்கு அவப்பெயெரை ஏற்படுத்தி உள்ளார்'' என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், ''தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும். ராகுல் காந்தி என்ன செய்தாரோ அதற்கான விளைவுகளை தற்போது அவர் அனுபவிக்கிறார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
அரசியல் மேடையில் கண்ணியம் காக்கப்படவேண்டும்.
மேலும் உயர் மட்ட அரசியல் தலைவர்கள் தொண்டர்களுக்கு
ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
எதிர் கட்சிகள், ஜனநாயக படுகொலை என்று கூறுவது எதிர்பார்த்த ஒன்றுதான்.
மேலும் உயர் மட்ட அரசியல் தலைவர்கள் தொண்டர்களுக்கு
ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
எதிர் கட்சிகள், ஜனநாயக படுகொலை என்று கூறுவது எதிர்பார்த்த ஒன்றுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
"இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், என்ன விலையையும் கொடுக்கத் தயார்"
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருவதால் அவரது குரலை அரசு ஒடுக்குகிறது என்றும் எம்.பி பதவி பறிப்பு விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தியை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.
இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே எம்.பி தகுதி நீக்க அறிவிப்புக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். இதற்காக என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தி அச்சமின்றி ஆவேசமாக பேசி வருகிறார். சமூக பிரச்னை, பொருளாதார பிரச்னை, அரசியல் பிரச்னைகள் குறித்து அவர் வெளிப்படையாக பேசி வருகிறார். தனது பேச்சுக்கான விலையை ராகுல் கொடுத்துள்ளார். பணமதிப்பிழப்பு, சீனா விவகாரம் போன்றவை தொடர்பாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் பேசி வருவதால் அவரை கண்டு அச்சம் கொண்டுள்ள மத்திய அரசாங்கம் அவரை வதைக்கிறது. ராகுலின் குரலை ஒடுக்க புதிய உத்திகளை அரசு கண்டுபிடித்து வருகிறது," என்றார்.
ராகுல் காந்தி மீது கடந்த ஏப்ரல்16, 2019ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தவே என்பவர் நீதிபதியாக இருந்தார். 2021ல் ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். மார்ச் 2022ல் புகார்தாரர் ஒருவர் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மனுதாரர் உடனடியாக உயர் நீதிமன்றத்தை நாடி தனது மனுவை நிறுத்தி வைக்க அனுமதி பெறுகிறார். அதாவது மனு தாக்கல் செய்தவரே தனது மனுவுக்கு எதிராக தடை உத்தரவை பெறுகிறார்.
அதே மனுதாரர் 11 மாதங்கள் கழித்து 16 பிப்ரவரி 2023 அன்று தனது மனுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில், நிலுவை காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.
இதையடுத்து தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக் கொள்கிறது.
மனுதாரர் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தை நாடுகிறார், பின்னர் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மாறிவிடுகிறார்.
நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தாலும் அரசியலமைப்பின் 103ஆம் விதியின்படி குடியரசு தலைவர் தான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை.
இந்த தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்” என்கிறார் அபிஷேக் மனு சிங்வி.
இந்த சட்டப்போராட்டங்கள் ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சவாலாக இருக்குமா என்று செய்தியாளர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேக் மனு சிங்வி, “2024க்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. இன்னும் ஒருசில நாட்களில் நீதிமன்றத்தை நாடி தண்டனையை நிறுத்தி வைக்க கோருவோம். இதில் எதேனும் தாமதம் ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ நாடுவோம்” என்கிறார்.
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்பார்ந்த ராகுல் காந்திக்கு
» ராகுல் காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் - பிரார்த்தனை செய்த சாத்வி பிராச்சி
» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
» ராகுல் காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் - பிரார்த்தனை செய்த சாத்வி பிராச்சி
» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|