ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?

2 posters

Go down

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது? Empty உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?

Post by சிவா Thu Mar 23, 2023 12:48 am

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது? TMw38TU


உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

பதில் - பின்லாந்து.

இது எப்படி முடிவு செய்யப்பட்டது என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு நாட்டின் மகிழ்ச்சியை எப்படி அளவிட முடியும்? உணர்வை அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் உணர்வை எப்படி அளவிட முடியும்?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. எந்த நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அடிப்படையில் நாடுகளும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கை கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

'உலக மகிழ்ச்சி அறிக்கை' என்று பெயரிடப்பட்ட இந்த ஆண்டறிக்கையை, ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு என்ற பிரிவு வெளியிடுகிறது.

இந்த அறிக்கை உலகின் பல்வேறு நாடுகளின் மகிழ்ச்சியை பல தேசிய மற்றும் சர்வதேச அம்சங்களின் அடிப்படையில் அளவிடுகிறது. மகிழ்ச்சிக் குறியீடு, நாடுகளின் மகிழ்ச்சியை 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் வரிசைப்படுத்துகிறது.

பின்லாந்து தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 7.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியவை முதல் 10 பட்டியலில் உள்ள மற்ற நாடுகள்.137 நாடுகளில் ஆப்கானிஸ்தான் எல்லாவற்றையும் விட கீழே உள்ளது . அதாவது இது மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு என்று அறிக்கை கூறுகிறது.

இந்த ஆண்டு இந்தியா 125வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் பட்டியலில் அதன் இடம், அண்டை நாடுகளான நேபாளம், சீனா மற்றும் வங்கதேசத்தை விட கீழே உள்ளது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே சண்டை நடந்துவரும் போதும்கூட இந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட முன்னே உள்ளன. ரஷ்யா 70வது இடத்திலும், யுக்ரேன் 92வது இடத்திலும் உள்ளன.

ஆனால் இது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?


உலக மகிழ்ச்சிக் குறியீட்டின் வரிசை, ஆய்வு தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஆய்வை கெல்லப் வேர்ட் கணக்கெடுப்பு முகமை நடத்துகிறது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது அதன் மாதிரி அளவு ஆகும். இவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில், தரவு தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் பதிலளிக்க வேண்டும். 0 என்றால் மோசம் மற்றும் 10 என்றால் மிகச்சிறந்த அனுபவம்.

இந்தக் கேள்விகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெருந்தன்மை, சமூக ஆதரவு, சுதந்திரம் மற்றும் ஊழல் போன்ற ஆறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதுபோன்ற சில கேள்விகள் ஆய்வில் கேட்கப்படுகின்றன.

நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்தார்களா? இதற்கான பதிலை, நீங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மதிப்பிட வேண்டும்.

உதவிக்காக உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை இந்த அளவு காட்டுகிறது. உங்கள் பதில் 10 என்றால் நீங்கள் அவர்களை 100% நம்புகிறீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கையில் நமக்கு விருப்பமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நம் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது. தொழிலைப் போலவே, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான உணவை உண்ணும் சுதந்திரம், விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியும் கேட்கப்படுகிறது. இது 0 முதல் 10 வரையிலான அளவிலும் மதிப்பிடப்பட வேண்டும்.

இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தீர்களா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார் என்று நம்பப்படுகிறது. ஆய்விலும் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுவதற்கு இதுவே காரணம்.

ஊழல் தொடர்பான கேள்வியும் இருக்கும். உங்கள் நாட்டின் ஆட்சியில் எவ்வளவு ஊழல் இருக்கிறது, வியாபாரத்தில் எவ்வளவு ஊழல் இருக்கிறது? ஏனெனில் நாட்டில் ஊழல் இல்லாதது செழிப்பைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.

இது போன்ற பல கேள்விகளை கேட்டு, இந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையில் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி குறியீட்டின் நோக்கம் என்ன?


2011 ஜூலையில் ஐக்கிய நாடுகள் சபை, "மகிழ்ச்சி: வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை நோக்கி" என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லா அரசுகளிடமும் ஐநா கூறியது.

2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிஷனை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது, அதை பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையும் இந்த கமிஷனுக்கு இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என்றும் இந்த கமிஷன், ஐநா பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே மற்றும் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி.சாக்ஸ் ஆகியோர் தலைமையில் உலக மகிழ்ச்சி தினத்தின் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசை அனைவரின் பேசுபொருளாக இருந்துவருகிறது.

குறிச்சொற்கள் #மகிழ்ச்சி #அரோக்கியம் #உலக_மகிழ்ச்சி_குறியீடு
பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது? Empty Re: உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?

Post by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 4:55 pm

மேற்படி கட்டுரையை படிக்கையில் மனதில் தோன்றிய அவ்வையின் பாடல் ..


வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

இதை ஒரு அடிகோலாக கொண்டு,

வீட்டில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால் 
வீடு உயரும் 
அவர்கள் சமூகம் உயரும்.
இருக்கும் கிராமங்கள் உயரும் 
மாநிலம் உயரும்,
நாடே உயரும்.

நாமும் முதல் (நம் தேசமும்) பட்டியலில் முதல் இடம் பிடிக்கும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது? Empty Re: உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?

Post by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

T.N.Balasubramanian wrote:மேற்படி கட்டுரையை படிக்கையில் மனதில் தோன்றிய அவ்வையின் பாடல் ..


வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

இதை ஒரு அடிகோலாக கொண்டு,

வீட்டில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால் 
வீடு உயரும் 
அவர்கள் சமூகம் உயரும்.
இருக்கும் கிராமங்கள் உயரும் 
மாநிலம் உயரும்,
நாடே உயரும்.

நாமும்  (நம் தேசமும்) பட்டியலில் முதல் இடம் பிடிக்கும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: undefined

இந்த பாடலை படிக்கும் பொழுது மோடிஜியின் குரல் தான் நினைவுக்கு வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது? Empty Re: உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....
» ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
» குங்குமமோ உன் குறியீடு!!!!
» குறியீடு – ஒரு பக்க கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum