புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
Page 1 of 1 •
உ.பி-யின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு இந்தியாவுக்கே மாடலாக மாறியிருக்கிறது. ஏன், உலகத்துக்கே இது மாடலாக மாறியிருக்கிறது
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எந்த வகையான குற்றத்தை எடுத்துக்கொண்டாலும், முன்வரிசையில் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். அத்தகைய மாநிலத்தை, 10,000-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் செய்து, ‘அமைதிப் பூங்கா’வாக முதல்வர் #யோகி மாற்றிவிட்டார் என்ற பிரசாரத்தை பா.ஜ.க-வினர் முன்னெடுத்துவருகிறார்கள். ஆனால், உண்மையான உ.பி-யின் முகம்தான் என்ன?
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்களின்போது, சட்டம்- ஒழுங்கு பெரிய பிரச்னையாக எதிரொலிக்கும். 2012 முதல் 2017 வரையிலான அகிலேஷ் யாதவ் ஆட்சியில் குண்டர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்ததாக 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரிய அளவுக்குப் பிரசாரம் செய்தது. அந்தத் தேர்தலில் பெரும் வெற்றியைப்பெற்ற பா.ஜ.க., யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது. `உ.பி-யில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவேன்’ என்று சபதமெடுத்தார் யோகி. அங்கு, 2022 தேர்தலிலும் வெற்றிபெற்று ஆறு ஆண்டுகளாக யோகி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் சமீபத்தில், “உ.பி-யில் குற்றங்கள் குறைந்துவிட்டன” என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
‘தீமைகளை அழிக்கும் கிருஷ்ண பகவான்!’
அண்மையில் கோரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது, “முதல்வர் #யோகி_ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டார். பூமியில் தீமைகளை அழிக்க வந்த கிருஷ்ண பகவான்தான் யோகி” என்று பேசினார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, “பா.ஜ.க ஆட்சியில் உ.பி-யின் முகம் மாறியிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார். “யோகி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. டெலஸ்கோப் மூலமாகக்கூட ‘பாகுபலி’யைக் காண முடியவில்லை. உ.பி-யில் எங்கு பார்த்தாலும் ‘பஜ்ரங்பலி’யைத்தான் பார்க்க முடிகிறது”என்றார் அமித் ஷா.
‘உ.பி-யின் தோற்றம் மாறிவிட்டது!’
பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தமது ஆட்சியைப் புகழும்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் சும்மா இருப்பாரா... “உ.பி-யின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு இந்தியாவுக்கே மாடலாக மாறியிருக்கிறது. ஏன், உலகத்துக்கே இது மாடலாக மாறியிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி குறித்துப் பேசும்போது, உடனடியாக நம் நினைவுக்கு வருவது உ.பி மாடல்தான். சமீபத்தில், ஒரு பள்ளி மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த மாணவி, ‘சூரியன் மறைந்த பிறகு எந்த பயமும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறது’ என்று உ.பி-யின் சட்டம்-ஒழுங்கைப் பாராட்டினார்” என்று பெருமையுடன் பேசினார் யோகி. உண்மையில், உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா?
பாலியல் வன்கொடுமை மாடல்!
பெண்களைக் கடத்திச் செல்வது, கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, கடைசியில் கொலைசெய்து மரத்தில் தொங்கவிடுவது போன்ற குற்றங்கள் உ.பி-யில் தொடர்ந்து நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. 2020-ம் ஆண்டு, ஹத்ராஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. உ.பி-யில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், தன் வீட்டில் வேலை செய்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரமும் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லக்கிம்பூர் கேரிக்கு அருகேயுள்ள நிகாசன் என்ற கிராமத்தில் இரண்டு சிறுமிகள் (சகோதரிகள்) கொலைசெய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரப் புகைப்படத்தைக் கண்டு இந்தியாவே கொதித்தது. நூற்றுக்கணக்கான சம்பவங்களில், ஒருசிலதான் தேசிய அளவில் கவனம் பெறுகின்றன. மற்றவை ‘லோக்கல் லெவலிலேயே’ அமுக்கப்படுகின்றன. இப்படி, பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலையும் செய்யும் பாணியில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 48 சம்பவங்கள் உ.பி-யில் பதிவாகியிருக்கின்றன. 2022 - 2023-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் வெளியாகும்போது, இன்னும் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வரலாம். ஆனால், “பெண்களும், எருமைகளும், மாடுகளும் உ.பி-யில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று எகத்தாளமாகப் பேசிவருகிறார் முதல்வர் யோகி.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்!
நடக்கும் குற்றங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இருக்கிறது உபி-யில். யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு, அங்கு 12 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள்மீது 138 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் பத்திரிகையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக, ‘பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான குழு’ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ‘யோகி முதல்வரான பிறகு, நவீன் குப்தா, ராஜேஷ் மிஸ்ரா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் 2017-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டு, ராகேஷ் சிங், சூரஜ் பாண்டே, உதய் பாஸ்வான், ரத்தன் சிங், விக்ரன் ஜோஷி, பராஸ் அஸ்லம், சுபம் மணி திரிபாதி ஆகிய ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்துச் செய்திகள் வெளியிட்டதற்காக மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்’ என்கிறது அந்த அறிக்கை.
உபி-யில், யோகியை ‘புல்டோசர் பாபா’ என்று அழைக்கிறார்கள் “அமைதி, வளர்ச்சி ஆகியவற்றின் குறியீடாக புல்டோசர் இருக்கிறது” என்கிறார் யோகி. “உ.பி-யில் கடந்த ஆறு ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில், 179 கிரிமினல்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்கிற தகவல் அரசுத் தரப்பிலிருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையால், கிரிமினல்களும் மாஃபியாக்களும் உ.பி-யைவிட்டு ஓடிவிட்டார்கள் என்று பெருமையுடன் பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள்.
அமைதிப் பூங்காவில் எதற்கு புல்டோசரும் என்கவுன்ட்டரும்? |
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
புல்டோசர் அவசியம்தான்.
அவசியம் ஏற்படும் போது உபயோகிக்க அண்டை மாநிலத்திற்கா ஓடமுடியும் ?
அண்டை மாநிலம் எதிர் கட்சியினர் ஆண்டுகொண்டு இருந்தால் தேவை ஏற்படும்போது
அது கிடைக்குமா?
எல்லாம் இருக்கவேண்டும். அவசியம் என்றால் உபயோகிக்கவேண்டும்.
அவசியம் ஏற்படும் போது உபயோகிக்க அண்டை மாநிலத்திற்கா ஓடமுடியும் ?
அண்டை மாநிலம் எதிர் கட்சியினர் ஆண்டுகொண்டு இருந்தால் தேவை ஏற்படும்போது
அது கிடைக்குமா?
எல்லாம் இருக்கவேண்டும். அவசியம் என்றால் உபயோகிக்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
» இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
» காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்
» தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையிலடைப்பு
» 5 வது முறை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா ? ராணுவம்- பிரதமர் கருத்து மோதல் முற்றுகிறது
» இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
» காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்
» தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையிலடைப்பு
» 5 வது முறை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா ? ராணுவம்- பிரதமர் கருத்து மோதல் முற்றுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|