ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லாரை கீரையின் மகிமைகள்

3 posters

Go down

வல்லாரை கீரையின் மகிமைகள் Empty வல்லாரை கீரையின் மகிமைகள்

Post by சிவா Sun Mar 19, 2023 9:29 pm

வல்லாரை கீரையின் மகிமைகள் YEpVbUV

"சென்டெல்லா அசைசிட்டா' எனும் கொடியினத்தைச் சார்ந்த வல்லாரைக் கீரை நீங்கள் குறிப்பிடுவதுபோல, தோல் புண்களை விரைவாக ஆற்றக் கூடிய குணம் நிறைந்த ஒரு சத்துள்ள கீரையாகும்.

'ஸூஸ்ருத சம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிய வர்ணனையில், "ரத்தக் கசிவு உபாதைகளைக் குணப்படுத்தும். இதயத்தை வலுவூட்டும். செரிப்பதில் லேசானது. தோல் சார்ந்த குஷ்ட உபாதை, சர்க்கரை வியாதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், நாக்கில் ஏற்படும் ருசியின்மை போன்ற உபாதைகளை நன்கு குணப்படுத்தக் கூடியது. அதனுடைய துவர்ப்புச் சுவையினால் பித்தம் சார்ந்த உபாதைகளை நீக்கும். சுவையிலும், சீரண இறுதியிலும் சுவையில் இனிப்பை வெளிப்படுத்துவதால் குளிர்ச்சியானது'' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள்.

"சரக ஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிக் குறிப்பிடுகையில், "கபம் மற்றும் பித்தம் சார்ந்த வெளிப்புற- உட்புற உபாதைகளைக் கண்டிக்கும். கசப்பு, குளிர்ச்சி, சீரண இறுதியில் கார்ப்புச் சுவையுடையது'' என்று கூறியிருக்கின்றனர்.

"அஷ்டாங்க ஹிருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் "மலக்கட்டை ஏற்படுத்தும், வாயுவைத் தூண்டும். கப- பித்த உபாதைகளுக்கு மிகவும் நல்லது'' என்ற மற்ற நூல்களில் குறிப்பிடாத கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

"சாலிக்கிராம நிகண்டு' எனும் நூலில், பேதியை ஏற்படுத்தும் என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார்கள்.

#வல்லாரை கீரையினுடைய இடித்துப் பிழிந்த சாற்றை தோலில் தடவினால் நீர்கோர்த்த கொப்பளங்கள் வாடும் என்ற ஒரு புதிய செய்தி "ஷோடல நிகண்டு'வில் காணப்படுகிறது.

சரக ஸம்ஹிதையில்,மேலும் கூறப்பட்டிருப்பதாவது "வல்லாரைக் கீரையின் சாற்றைக் குடித்தால், ஆயுள் வளரும். உடல் பலம் பெருகும். பசியைத் தூண்டும். உடல் நிறத்தைக் கூட்டும். குரல் வளம் நன்றாகும். அறிவாற்றலை வளர்க்கும்'' என்று வல்லாரையைப் பாராட்டி வர்ணித்திருக்கிறார்கள்.

நெய்யில் வறுத்த வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து ஒரு மாதம் உண்டு வர, வாழ்நாள் முழுவதும் உடல் புஷ்டி, அறிவு, இளமை, வனப்பு போன்றவை உடனிருக்கும் என்ற ஓர் அதிசயமான புகழை அஷ்டாங்கஹிருதய நூல் எடுத்துரைக்கிறது.

பொதுவாகவே, வல்லாரையைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல உறக்கம் ஏற்படும். இதயத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நரம்புகளை வலுவூட்டும். பசியைத் தூண்டும்; குடல்வாயுவை வெளியேற்றும். தோல் உபாதைகளைக் கண்டிக்கும். சிறுநீரை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்தும். காக்காய் வலிப்பு, குரல் கம்முதல், ஆஸ்துமா, இருமல், விக்கல், மன வளர்ச்சி குன்றிய நிலை, வயிற்று உபாதைகள், குஷ்ட நோய் ஆகியவற்றில் உணவாக ஏற்று குணப்படுத்திக் கொள்ள பயன்படும் சிறந்த கீரையாகும்.

அரைத்து இதை கொண்டு பல்துலக்கினால் பல்லில் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்கும் மற்றும் பல் ஈறுகளைப் உறுதியாக்கும்.

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து - சுண்ணாம்புச்சத்து - உயிர்சத்து A - C மற்றும் தாதுஉப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அன்றாடம் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும் மூளை நரம்புகளின் செயல் திறன் மேம்படும்.

வீக்கம் - கட்டிகள் குணமாக வல்லாரை இலைகளை விளக்கெண்ணையை கொண்டு வதக்கி வீக்கம் - கட்டிகள் மீது கட்டி வந்தால் சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும்.

இளைப்பு - இருமல் - தொண்டைக்கட்டு போன்ற உபாதைகளை வல்லாரை குணமாக்கும். காசநோயாக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வல்லாரை நல்ல மருந்தாகும். வல்லாரை கண் எரிச்சல் - கண்ணில் நீர் வருதல் போன்ற பிரச்சினைகளை சரியாக்கும். கண் நரம்புகளுக்கு வலிமை அளிக்கும்.

சக்கரை நோயாளிகள் வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. வல்லாரை மலச்சிக்கலைப் குணமாக்கும் வயிற்றுப் புண் - குடல்புண்ணை விரைவில் ஆற்றும்.

வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து இதனுடன் சிறிய வெங்காயம் -பூண்டு - மிளகு போன்றவற்றை சேர்த்து அரைத்து சட்னியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாணவ - மாணவிகளுக்கு உண்டாகும் மூளைச் சோர்வை அகற்றி ஞாபகமறதியைக் சரிசெய்யும். வல்லாரை சட்னி செய்யும் போது புளியை முற்றாக தவிர்க்க வேண்டும்.

வல்லாரை கீரையை பச்சையாக மென்று விழுங்கினால் குடல் புண் -குடல் நோய் - வாய்ப்புண் - வாய் நாற்றம் போன்ற பினிகள் நீங்கும். இந்த கீரையானது தொண்டைக்கட்டு - காய்ச்சல் - சளி போன்றவற்றை குணப்படுத்தும் உடற்சோர்வு - பல்நோய்கள் - படை போன்ற சரும நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது இந்த வல்லாரை.

இந்தக் கீரையை மாத்திரை வடிவத்தில் கொண்டு வந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது. முக்கியமாக, புண்களை விரைவாக ஆற்றி குணப்படுத்தும் நோக்கில் மாத்திரை விற்கப்படுகிறது.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வல்லாரை கீரையின் மகிமைகள் Empty Re: வல்லாரை கீரையின் மகிமைகள்

Post by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:46 pm

வல்லாரை கீரையின் மகிமைகள் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வல்லாரை கீரையின் மகிமைகள் Empty Re: வல்லாரை கீரையின் மகிமைகள்

Post by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

வல்லாரை கீரை உபயோகங்கள் தகவலுக்கு நன்றி.

பொதுவாக ஞாபக சக்தியை மேன்படுத்தும் என்பர்.

சந்தையில் கண்டால் மறக்காமல் வாங்கி வரவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வல்லாரை கீரையின் மகிமைகள் Empty Re: வல்லாரை கீரையின் மகிமைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum