புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 21, 2023 2:32 am

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? Picsar35

சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது.

நிபுணர் என்று அதில் வரும் சிலர் அனுபவ அறிவைப் பகிர்கின்றனர். இன்னும் சிலர் இவை எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் தகவலை உண்மை என ஏராளமானோர் நம்புகின்றனர்.

ஏன் சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எது சிறந்தது? எது நல்லது எது கெட்டது?

இவை முழுமையாகத் தெரியாத ஒரு குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியின் பயன் என்ன?



நம் உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நமது உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமியைக் கொல்வது தான் நமது உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் முக்கிய வேலை. இத்துடன் நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு முக்கியமானது.

இதுமட்டுமின்றி, தடுப்பூசிகளும் நம் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி "சமமான விகிதத்தில் உணவு" சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, நமது உணவில் போதுமான புரதங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்?



தினமும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த முடியும். யோகா, தியானம் போன்ற முறைகளையும் நாம் பின்பற்றலாம்.

ஆனால் இதைச் செய்யாமல், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம் என்னும் விளம்பரங்களைப் பார்த்தும், கேட்டும் ஏமாறுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

நம் நோய் எதிர்ப்பு சக்தியை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க தினமும் சிறிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அதைச் செய்ய எளிமையான வழிமுறைகள் ஏதுமில்லை. நம் வாழ்வின் கடைசி நாள் வரை செயல்படப் போகும் இந்த உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

உணவை உணவாகக் கருத வேண்டும். அதில் மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டு ஏமாறாதீர்கள்.

Infusion எனப்படும் தண்ணீரில் மூலிகை, பழங்களை வைத்து அருந்துவது எந்த நன்மையையும் அளிக்காது. இப்படிச் செய்வதால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கிறது. அதனால் தேவையில்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளவேண்டாம்.

ஆவி பிடிப்பது, கொதிக்க வைப்பது போன்ற முறைகளால் வைரஸ் இறக்காது. வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை வழியாக நுழையாது.

வைட்டமின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவரை அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.

இருப்பினும், வைட்டமின் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

காய்கறி, பழங்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஊட்டச்சத்தில் சில மாறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு மிகச் சொற்பமானதே.

பிரதானமாக நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையால் தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சிலருக்கு ஏற்படுகிறது.

எதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது?



ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை உண்பது.

அதேபோல போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, உதாரணமாக அலுவலகத்தில் சேரில் அமர்ந்து 8 மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள் நடை பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது.

இது மட்டுமின்றி, குளிர்பானங்கள்(Carbonated drinks) அருந்துவது, வெயிலில் அதிகம் செல்லாமல் இருப்பது, புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற காரணங்களும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன.

மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட பழக்கங்களோ நமது தினசரி வாழ்க்கை முறையில் இருந்தால் அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும்.

தினசரி வாழ்வியல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வராமல், ஒரு மாத்திரையின் மூலமாக மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.

கவனிக்க வேண்டியவை



உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக செம்புக் கோப்பையில்(Copper bottle) தண்ணீர் குடித்துவிட்டு செம்புப் பாத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் அப்படிப் பயன்படுத்தும் நபர்கள், தாமிரக் குறைபாடு(copper deficiency) இருக்கிறதா, அதை அதிகரிக்க வேண்டுமா என யோசிக்கத் தவறுகிறார்கள்.

மேலும், பிளாஸ்டிக் கொள்கலன்களைப்(plastic containers) பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. குறிப்பாக சூடான உணவு, பானம் ஆகியவற்றை அதில் வைத்து சாப்பிடுவது, குடிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம். ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்திலிருந்து கிடைக்கும் சில வைட்டமின்கள் குறைபாடு இருப்பது இயற்கையானது.

வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், செரிமான அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு, சில ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது இயற்கையானது. குறிப்பாக இவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் தேவை. எனவே, அந்தக் குறைபாடுகளை மாத்திரைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆயினும், மேற்கூறிய பல காரணங்களால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு வளரும் பருவத்தில் உள்ள சில குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக உப்பு சத்துக் குறைபாடு காரணமாக இந்த பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவர்களின் தினசரி உணவில் வழங்கும் காய்கறி, பழங்கள் மூலமாக வழங்க வேண்டும்.

உணவு மூலமாக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ள முடியாத நபர்கள் மட்டும் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மாத்திரை மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

குறிச்சொற்கள் #ஊட்டச்சத்து #உடல்நலம் #வைட்டமின்
பிபிசி தமிழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக