ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_c10அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_m10அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_c10 
mruthun
அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_c10அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_m10அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்

2 posters

Go down

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Empty அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்

Post by சிவா Sun Mar 19, 2023 12:33 am


அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Vikatan%2F2023-03%2Fc6045fac-83e2-4ead-9465-77a786a9a851%2F6414069ca9eca.jpg?rect=0%2C0%2C4167%2C2344&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான வார்த்தைப்போர் தொடர்ந்துவரும் நிலையில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை’ குறித்த கேள்விகளோடு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

“தமிழ்நாட்டில், பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றனவே... தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடருமா?”

“தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர வேண்டுமென்பதில் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரிக்கு வந்த தேசியத் தலைவர்கூட எங்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும்’ என எங்களுக்குச் சில அறிவுரைகளையும் கூறிச் சென்றிருக்கிறார்.”

‘‘ஆனால், ‘ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.க-வினாலேயே சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டதாக’ செங்கோட்டையன் சொல்கிறாரே..?’’

“ஒருகாலத்தில் பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி, அவர்களது வாக்குகள் பா.ஜ.க-வுக்குக் கிடைக்காது என்கிற நிலைமை இருந்தது. ஆனால், இப்போது அது பெருமளவில் மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், வடகிழக்கு மாநிலத் தேர்தல்கள். 99% கிறிஸ்தவர்கள் இருக்கும் நாகாலாந்திலும் மேகாலயாவிலும் இன்றைக்கு பா.ஜ.க கூட்டணியில்தான் ஆட்சி அமைந்திருக்கிறது. சிறுபான்மையின மக்கள் வாக்களிக்காமல் இது நடந்திருக்குமா... இதெல்லாம் ஒரு மாயை. இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலேயே பா.ஜ.க-வை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்திலும் இந்தச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இதை அ.தி.மு.க-வினர் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“ ‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலக வேண்டும்’ என்று திருமாவளவனும் தொடர்ந்து சொல்லிவருகிறாரே?”

“திருமாவளவன் இருக்கும் தி.மு.க கூட்டணி என்பது முழுக்க முழுக்க பட்டியலின மக்களுக்கு எதிரான கூட்டணி. திருமாவளவனையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க கூட்டணியினர் மதிப்பதில்லை. எனவே, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திருமாதான் வர வேண்டும். மேலும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘கூட்டணி தொடர்கிறது’ என்று தெளிவு படுத்தியிருக்கிறார்களே.”

“ ‘நான் தலைவன்... மேனேஜர் இல்லை’ என்பதோடு, ஜெயலலிதாவோடு தன் குடும்ப உறுப்பினர்களை ஒப்பிட்டெல்லாம் அண்ணாமலை பேசிவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தை ஏற்கெனவே அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதற்கு மேல் அர்த்தம் வேண்டுமென்றால், அவரிடம்தான் கேட்க வேண்டும். இதற்காக நான் பதவுரை எழுத முடியாது; பொழிப்புரை சொல்ல முடியாது!”

“ ‘அரசியலில் பொறுப்பும் பொறுமையும் வேண்டும்’ என்று அண்மையில் நீங்கள் பேசியிருப்பது அண்ணாமலையை மனதில் வைத்துத்தானா?”

“பெண்கள் அரசியலுக்கு வரும்போது எவையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அர்த்தத்தில்தான், ‘அரசியலில் பொறுப்பும் பொறுமையும் அவசியம்’ என்று நான் பேசினேன். பெண்கள் எப்போதும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அப்படி உணர்ச்சிவசப்பட்டால் அரசியலில் நீடிப்பது கஷ்டம் என்ற அர்த்தத்தில் பேசினேன். இதை ‘அவருக்குச் சொன்னேன், இவருக்குச் சொன்னேன்’ என நீங்கள் புரிந்துகொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.”

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, காலம் கடந்து திருப்பியனுப்பிய ஆளுநரின் மெத்தனப்போக்கை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?’’

“ஒவ்வொரு நாளும் உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மியைக் கட்டாயம் தடைசெய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதற்கு முன்பாக இருக்கக்கூடிய வழக்குகளின் தீர்ப்புகளை முதலில் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் புதிதாகக் கொண்டுவரக்கூடிய சட்டத்தை, நாளை நீதிமன்றங்கள் ரத்துசெய்துவிடக் கூடாது. அதனால்தான் ஆளுநரும் அந்த மசோதாவை, எல்லாவிதச் சட்டச் சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஒரு விஷயமாக எதிர்பார்க்கிறார். இது புரியாமல், ஆளுநரைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!”

‘‘தமிழ்நாட்டில், பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதே பீகார் பா.ஜ.க-வினர்தானே... உண்மைநிலையை நீங்கள் பீகார் பா.ஜ.க-வினரிடம் விளக்கியிருக்க வேண்டும்தானே?”

“ ‘தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. எந்தவிதமான தவறான எண்ணத்தையும் உருவாக்கிட வேண்டாம்’ என்று நான்கு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். எங்கள் கட்சியின் டெல்லி தலைவர்களிடமும் பேசினேன். சமீபத்தில்கூட உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றபோது அந்த மாநில முதல்வரிடமும் இது குறித்துப் பேசியிருக்கிறேன். அதேசமயம், அண்மையில் என் தொகுதியில்கூட வடமாநிலத் தொழிலாளர் ஒருவர்மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தி.மு.க அரசு இதுபோன்ற நிகழ்வுகளில், ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்? அதனால் வந்த விளைவுகள்தான் இவையெல்லாம்!”

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Empty Re: அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்

Post by சிவா Sun Mar 19, 2023 4:46 pm

தமிழக பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில்தான் அண்ணாமலை தன் கருத்தை சொன்னாரே தவிர தமிழகத்துக்கான அறிவிப்பாக அவர் எதையும் சொல்லவில்லை

அந்த கூட்டம் பூட்டிய அறையில் நடந்தது, அங்கே எவனோ ஸ்டிங் ஆப்பரேஷனாக விஷயத்தை கடத்திவிட்டான் அல்லது வேண்டுமென்றே கசியவிடபட்டது

ஒருவகையில் அண்ணாமலை சொன்னது சரி, தமிழக வரலாறு அது

இங்கு டெல்லியின் அலை பெரிதாக வீசும்பொழுதெல்லாம் திராவிட கட்சிகளே பலன் பெற்றன, உதாரணம் இந்திராவின் கொலை, அந்நேரம் காங்கிரஸ் தமிழகத்தில் எளிதாக ஆட்சியினை பிடித்திருக்கலாம்

ஆனால் கூட்டணி என தவறவிட்டது

அதே தவறை மறுபடியும் 1991ல் ராஜிவ் சம்பவத்தில் செய்தது, காங்கிரசுக்கு வரவேண்டிய வாய்ப்பு ஜெயாவுக்கு சென்றது

1997ல் ஜெயாவின் பெரும் ஊழலால் மூப்பனார் பெரிய கவனம் பெற்றார் வரவேற்பு இருந்தது ஆனால் கூட்டணி என கருணாநிதி தனக்கு சாதகமாக மாற்றினார்

வாஜ்பாய்க்கான பெரும் வரவேற்பும் திமுகவுக்கே சேர்ந்தது

அண்ணாமலை இதைத்தான் சுட்டிகாட்டுகின்றார், ஒவ்வொரு தேச எழுச்சி நேரமும் காங்கிரஸ் எப்படி இங்கு ஏமாந்து அழிந்ததோ அந்த வலையில் நாம் சிக்க கூடாது என்கின்றார்

வானதி அம்மையார் இதனை மறுத்ததாக சொல்கின்றார்கள், அப்படி நடந்தால் இது வெறும் அதிமுக கூட்டணியில் இரு எம்பி தொகுதிகளை வென்று அமைச்சராகும் கனவில் சொன்னதாகத்தான் கருத முடியும்

சி.பி ராதாகிருஷ்ணன் இல்லா கோவையில் அதிமுக கூட்டணி இருந்தால் தான் எம்பி ஆகி அமைச்சராகலாம் எனும் கணக்கு வானதிக்கு இருக்கலாம்

இப்படி யாரெல்லாம் அதிமுக கூட்டணியால் தனக்கு ஆதாயம் என கருதுகின்றார்களோ அவர்கள் கூட்டணியினை எதிர்கின்றார்கள், யார் கட்சி முக்கியம் வளர்ச்சி முக்கியம் என கருதுகின்றார்களோ அவர்கள் ஆதரிக்கின்றார்கள்

இதுதான் நிஜம்

இது அவர்கள் உட்கட்சி பிரச்சினை, அங்கு அண்ணாமலையினை விரட்டிவிட்டு தங்களுக்கு சாதகமான தலமையினை கொண்டு வர சில கோஷ்டிகள் சிண்டிகேட் அமைத்து நிற்கின்றன‌

இங்கு திமுக அதிமுக என மாயகரங்களும் உண்டு

ஆனால் டெல்லி அண்ணாமலையினை முடிவோடுதான் அனுப்பியிருக்கின்றது, இல்லாவிடில் இப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கமாட்டார்கள்,மோடி அண்ணாமலையோடு ஒரே காரில் ஒரு மணி நேரம் பயணித்திருக்கமாட்டார்

அண்ணாமலையினை மோடி நினைத்தால் ரகசியமாகவே டெல்லியில் சந்தித்திருக்கமுடியும் மாறாக தமிழகத்தில் ஊரறிய ஒரே காரில் வந்ததெல்லாம் அண்ணாமலை என் மனதின் குரல் என காட்டியதே அன்றி வேறல்ல‌

அதனால் எம் அனுமானத்தை சொல்கின்றோம்

பாஜக ஒரு முடிவோடுதான் இருக்கின்றது, இங்கு கட்சியினை இடித்துகட்ட விரும்புகின்றார்கள், அப்படி இடிக்கும்பொழுது ஓசை வரத்தான் செய்யும்

பாழடைந்த வீட்டில் இருந்த நாகங்களும் கரப்பான் பூச்சும் பூரான்களும் அலறி ஓடத்தான் செய்யும்

அதற்காக வீட்டுக்காரன் விடமாட்டான், அவன் ஓங்கி ஓங்கி அடிக்கத்தான் செய்வான் எல்லாவற்றையும் விரட்டத்தான் செய்வான்

90 வருடகாலம் போராடி தேசத்தின் ஆட்சியினை பிடித்தவர்களுக்கு தமிழக மாகாணத்தை பிடிக்க எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருக்க தெரியும்

இதனால் இந்த சலசலப்பெல்லாம் அதிமுவுடன் சேர்ந்தால் தனக்கென்ன லாபம் என கவலைபடும் கும்பலால் வந்ததே அன்றி உண்மையாக நாட்டையும் மக்களையும் தமிழகத்தையும் நேசிப்பவர்களால் வந்த கவலை அல்ல‌

அதனால் அண்ணாமலை அவர்போக்கில் தன் பணியினை செய்கின்றார், அப்படி எல்லோரும் அவரவர் பணியினை செய்வதுதான் நல்லது

#பிரம்ம_ரிஷியார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Empty Re: அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்

Post by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

ஒவ்வொரு கட்சியிலும் ஓரிரு உளவாளிகள் இருப்பது தொன்றுதொட்டு இருப்பதுதான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன் Empty Re: அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டப்பேரவையில் என் 'முதல் பேச்சு - வானதி சீனிவாசன்
» இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் வழங்கிய வானதி சீனிவாசன்!
» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
» சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சை அறிமுகப் பேச்சாக மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum