ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி & பாடல் வரிகள்

Go down

இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Empty இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி & பாடல் வரிகள்

Post by சிவா Tue Mar 14, 2023 5:28 pm



விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா இசையில் வெளிவந்த இந்த படத்தின் இரண்டாவது பாடல் இது.

அனன்யா குரலில் இந்த பாடல் மிகச் சிறந்த மெலோடியாக இருக்கிறது.

ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா.  இந்த வழி  நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில்,  இன்னொரு முல்லை நிலப்பாடல்

ராஜாவின் "காட்டு வழிப்  பாடல்கள்" என்று நிறைய பாடல்களை ஒரே மாலையில் தொகுக்கலாம். "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே " "காட்டு வழி கால் நடையா போற பொண்ணே" இப்படி நிறைய முல்லை நிலப் பாடல்கள். ஒவ்வொன்றும் ஒரு காட்டு மல்லிப் பூ. இவற்றில் முதலிடம் வகிக்கிறது இந்த "வழி நெடுக காட்டுமல்லி" பாடல்.

ராஜாவின் இசை ராஜாவின் வரிகளை சுமந்து ராஜாவின் குரலில் தவழ்ந்து வருகிறது, நம்மனதை வருட. சமீபத்தில் இப்படி ஒரு இலக்கியத்தரம் வாய்ந்த பாடல் யாரும் எழுதியதாக தெரியவில்லை.

"ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்" என்கிறாள் காதலி.

"காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க" -இது அவன்.

நாமளும் காதல் செய்யாமல் போய் விட்டோமே என்ற ஏக்கம் மெலிதாக எட்டிப்பார்க்கிறது, இந்தப் பாடலைக் கேட்ட பின் . Too late you say...?
பாடல் முழுதும் ஒரே மாதிரியான, அமைதியான, தாளம்   காட்டு மல்லிப்பூ  வாசம் போல நிற்காமல் தொடர்கிறது. முல்லைநிலத்தின் அடையாளமான மாயோனின் குழல் இல்லாத குறையை வயலின்,செல்லோ போக்குகிறது முழுவதுமாக.

காதலனும் காதலியும் கானகத்தில்  தனியாக பயணம் செய்யும்பொழுது என்னென்ன எண்ணம் வரும்? அனைத்தையும், விரசம் ஒரு துளியும் இல்லாமல், பாடுகிறது இந்தப் பாடல்.   கண்ணியம் காதலின் முதல் தகுதி.

"ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது"

என்று அவன் பாட, "யாருக்கும் தெரியாது என்றா நினைக்கிறாய்? இந்தக் காட்டுக்கும் காட்டில் திரியும் காற்றுக்கும் உயிர் இருக்கிறது". எனவே
"சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்" என்கிறாள் காதலி.

80வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா. அனன்யா பஃட் மிகவும் அழகான உச்சரிப்புடன் அருமையாக பாடி இருக்கிறார்.  

"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன" (ஒரு பூ எங்களுக்கிடையே வந்துவிட்டாலும் ஒரு ஆண்டு கழிந்தது போல பிரிவுத்துயர் வருகிறது)  என்பது போல இந்தப்பாடலைக் கேட்காமல் இருந்தால் ஒரு ஆண்டு கழிந்தது போல இருக்கிறது.

ராஜா ரசிகர்களுக்கு மருந்தும் அவரே விருந்தும் அவரே. "மருந்து எனின் மருந்தே. வைப்பு எனின் வைப்பே".

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ? எங்கள்  இளையராஜாவைப் போல இன்னொரு இசையமைப்பாளரை எங்கேனும் கண்டதுண்டா?

இப்படி இசையைக் கேட்கும்பொழுதெல்லாம் மனதில் தோன்றுவது ஒன்றே "அவரை பத்தடி தூரத்தில் பார்த்தவர்கள், மோக்ஷம்  அடைவராக!"
இறுதியாக ஒரு ஆசை. "ChatGPTயிடம் இளையராஜா மாதிரி இப்படி ஒரு பாடல் கம்போஸ் பண்ணேன் பார்க்கலாம்" என்று கேலி பேசி சிரிக்க வேண்டும்.

-ச. சண்முகநாதன்

பாடல் வரிகள்


வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்காளியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மனகுத்து வாசத்துல
என்னோட கலக்குத்து நெசத்துல
வழி நெடுக கட்டு மல்லி
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்க்கும் கவனமில்லை
பூக்குற நீரம் தெறியது
காத்திருப்பேன் நான் சளிக்காது
போ மனம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிகுதம்மா
வழி நெடுக காட்டுமல்லி
கனவெனக்கு வந்தது இல்ல
இது நெசமா கனவு இல்ல
கனவா போனது வாழ்கை இல்ல
வாழ்கையா நெனச்சி வளர்த்தது இல்லை
மஞ்சு மொதமா மனசுக்குள்ள
போகுரா வருகிற நினைவுகளே
ஓரங்குது உள்ள ஒரு விசையும்
ஓரக்கம் கழஞ்ச நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
கட்டுமல்லி யில்ல அரும்பேடுக்கா
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்க்கும் கவனமில்லை
காடே மனகுத்து வாசத்துல
என்னோட கலக்குத்து நெசத்துல
கிட்ட வரும் நேரத்துல
ஏட்டி போற தூரத்துல
நீ இருக்கா உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்க மூலையில
இருக்கிறா இருந்தா கட்டுக்குள்ளே
இரு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்த காடறியும்
காட்டுல வீசும் காத்தறியும்
வழி நெடுக கட்டு மல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
பூ மனம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிகுதம்மா
வழி நெடுக காட்டுமல்லி

Vazhi neduga kaattumalli
Yaarum adha paakaliye
Enakka pooththathu kaattukulla
Varuma varuma veettukulla
Kaade manakuthu vaasathula
Ennoda kalakuthu nesathula
Vazhi neduga kattu malli
Vazhi neduga kaattumalli
Kan parkum kavanamillai
Pookura neeram theyriyathu
Kaathirupen naan salikkaathu
Po manam puthusa theriuthamma
En manam karumba inikuthamma
Vazhi neduga kaattumalli
Kanavenakku vanthathu illa
Ithu nesama kanavu illa
Kanawa ponathu vazhkai illa
Vazhkaiya nenachi valththathuilla
Manju motama manasukulla
Pogura varukira ninaivugale
Orankuthu ulla oru vissaiyum
Orakkam kalanja nessam theriyum
Kathiruppen naan thirumbi vara
Kattumalli yilla arumbedukka
Vazhi neduga kaattumalli
Kann parrkum kavanamillai
Kaadae manakuthu vaasathula
Ennoda kalakuthu nesathula
Kitta varum nerathula
Etti pora thoorathula
Nee irruikka ullukullla
Unna vittu povathilla
Olagathil engo mulaiyila
Irukkira irunda kattuklle
Iiru siru uyiru thudikirathu
Nesama yarrukum theriyaathu
Satchi sollum intha kaadarium
Kaattula veesidum kaathariyum
Vazhi neduga kattu malli
Kann parththum kavanamilla
Enakkaa pooththathu kaattukulla
Varuma? varuma veettukulla
Poo manam puthusa theriuthamma
En manam karumba inikuthamma
Vazhi neduga kaattumalli

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Empty Re: இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி & பாடல் வரிகள்

Post by சிவா Fri Apr 28, 2023 3:25 pm



ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

காத்தில் வரும் புழுதிய போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கி விட நெனைக்காது

முன்னேரி போக முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்தொணைக்கு நாந்தான்
எந்தொணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ஏத்திவச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேர்த்துவச்ச கனவுகள
நிறவேத்திவிட யாருமில்லையே

நிக்காத காலம் நேராக ஓடும் எப்போது மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum