புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
73 Posts - 47%
heezulia
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_m10ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Mar 2023 - 15:18

ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் Picsar33

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

இந்திய நேரப்படி திங்கள் கிழமையன்று காலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95வது அகாடெமி விருதுகளில் அசல் பாடல் பிரிவில் இது ஆஸ்கர் விருதை வென்றது.

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டுக்கூத்து' பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் தங்கள் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு வேகம் சேர்த்துள்ளனர்.

நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பில் தேஜாவின் மெட்டுகளால் பாடலை வேறு லெவலுக்கு கொண்டு சென்றனர்.

ஏற்கெனவே பல விருதுகளை குவித்த பாடல்



இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் அசல் பாடல் பிரிவில் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அகாடெமி ஜனவரி 24 அன்று அறிவித்தது.

மற்ற மூன்று பாடல்களுடன் இருந்த கடும் போட்டியில் ஆர்ஆர்ஆர் பாடலான 'நாட்டுக்கூத்து' அகாடமி விருதைப் பெற்றது.

'நாட்டுக்கூத்து' பாடல் ஏற்கெனவே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று சிறந்த அசல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் படைத்தது.

இது ஜனவரி 15 அன்று 'சிறந்த பாடல்' பிரிவில் விமர்சகர்களின் சாய்ஸ் விருதை வென்றது. ஜனவரியில் ஆன்லைன் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது, பிப்ரவரியில் ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த அசல் பாடல் மற்றும் ஹூஸ்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள்.

அப்போது ஏ.ஆர்.ரஹ்மான்.. இப்போது கீரவாணி



இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2008ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் ஜெய் ஹோ பாடலுக்காக 'சிறந்த ஒரிஜினல் பாடல்' பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றார். இப்படத்தை பிரிட்டனை சேர்ந்த டேனி பாயில் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்போது இந்திய மொழி திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்திற்காக கீரவாணி அந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, தெலுங்கு மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பிரபலமான இசை அமைப்பாளராக அங்கீகாரம் பெற்றுள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார்.

பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். 1997இல் வெளியான அன்னமய்யா தேசிய விருது பெற்றது. இதுவரை 11 நந்தி விருதுகளையும் 13 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெளியான போதே பரபரப்பு



'நாட்டுக்கூத்து' பாடல் முதலில் 10 நவம்பர் 2021 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியானதில் இருந்து, பாடலின் மெட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதுபற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல் தெரியுமா?

இந்த நாட்டு நாட்டு பாடலின் காணொளி யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் காலபைரவா பாடியுள்ளனர். அவர்களில் காலபைரவா கீரவாணியின் மகன். முன்னதாக பாகுபலி படத்திலும் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை காலபைரவா தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

மாஸ் பாடல்களை பாடுவதில் ராகுல் சிப்லிகஞ்ச் புகழ் பெற்றவர். அந்த ட்ராக்கை தான் முதலில் பாடியதாகவும், அது பிடித்ததாகவும், அதனால் அசல் பாடலை பாடியதாகவும் ராகுல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். பின்னர், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகளிலும் ராகுல் பாடலைப் பாடினார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டுக்கூத்து பாடல் இடம்பெற முக்கிய காரணம் ராம் சரண், ஜூனியர் என்டிஆர். இதை இயக்குநர் ராஜமௌலியே பலமுறை கூறியிருக்கிறார்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே நல்ல நடனக் கலைஞர்கள் என்பதால், இருவரும் சேர்ந்து ஆட வேண்டும் என்று ராஜமௌலி நினைத்தார்.

இதை ராஜமௌலி கீரவாணியிடம் கூறினார். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸை அழைத்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.

முதலில் 'நாட்டு... நாட்டு...' என்ற கொக்கி வரியில் தொடங்கும் பாடலை எழுதினார்கள்.

சந்திரபோஸ் 90 சதவீத பாடலை இரண்டு நாட்களில் எழுதியிருந்தாலும், அதை முழுமையாகத் தயாரிக்க 19 மாதங்கள் ஆனது.

பிரேம் ரக்ஷித்தின் நடனம்



பிரேம் ரக்ஷித் ஒரு நடன இயக்குனராக திரையுலகில் நன்கு அறியப்பட்டவர். ஆனால், இந்தப் பாடலுக்கு சுமார் 95 மெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராம்சரண், என்டிஆர் இருவரும் கைகோர்க்கும் சிக்னேச்சர் நடன அசைவுகள் 30 பதிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட வெளியீட்டின்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிரேம் ரக்ஷித் இவ்வாறு கூறியுள்ளார்.

ராம்சரண் மற்றும் என்டிஆரின் சினேச்சர் நடன அசைவுக்காக 18 டேக்குகளை எடுத்தனர். ஒருமுறை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஜூனியர் என்டிஆர் “எத்தனை முறை எடுத்தாலும் சரி, இருவரின் கால்களும் ஒத்துப்போகவில்லை என்று கூறினார்கள்.

இரண்டு முகங்களையும் ஒரே நேரத்தில் திருப்ப முடியாது என்றார்கள். அதனால் நடன அசைவுகளை ஒரே நேரத்தில் 18 டேக்குகள் எடுத்தோம். ஆனால் எல்லாவற்றையும் செய்த பிறகும், கடைசியில், இரண்டாவது டேக்கே படத்தில் இறுதியானது," என்றார்.

என்டிஆர், சரண், நடன இயக்குனர், ராஜமௌலி ஆகியோர் பாடலுக்காக கடுமையாக உழைத்தார்கள் என்று சொல்லலாம்.

குறிச்சொற்கள் #நாட்டுக்கூத்து #RRR #ராம்சரண் #என்டிஆர் #ராஜமௌலி #கீரவாணி #நாட்டு_நாட்டு #ஆஸ்கர்_விருது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Mar 2023 - 15:23

ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி

ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் 7d6040a0-c15e-11ed-be17-c9ad49d8211e

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை முணுமுணுக்க வைத்த 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெலுங்கில் மட்டுமின்றி, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இயற்பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி என்பதாகும். அவரது தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியராக இருந்தவர்.

அறிமுகம் 1990, திருப்பம் தந்த 1991



கீரவாணி இசையின் மீதான காதலால் தனக்கு அந்த பெயரையே தந்தை சூட்டிவிட்டதாக எம்.எம்.கீரவாணி பல நேர்காணல்களில் கூறியுள்ளார். தந்தையால் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், 2 ஆண்டுகளில் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்ததன் மூலம் சினிமா வாழ்க்கையை கீரவாணி தொடங்கினார். 1990-ல் 'கல்கி' என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு மெளலி இயக்கத்தில் வெளியான 'மனசு மகாத்மா' என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது.

எம்.எம். கீரவாணியின் திரையுலக பயணத்தில் 1991-ம் ஆண்டு முக்கியமான ஒன்றாக அமைந்தது. அந்த ஆணடு வெளியான 'சீதாராமையா காரி மனவராலு' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'ஷனா ஷனம்' என்ற திரைப்படத்தின் மூலம் எம்.எம்.கீரவாணி பெரும் புகழை அடைந்தார்.

அதன் பிறகு அவரது திரைப்பயணத்தில் தொடர்ந்து ஏறுமுகம்தான். தெலுங்கு திரைப்பட இசையுலகின் அசைக்க முடியாத மன்னராக அன்று முதல் அவரே திகழ்கிறார்.

மெலடி இசையே ரசிகர்களை கவரும், மெலடி பாடல்களே வெற்றிபெறும் சாத்தியங்கள் கொண்டவை என்று ஒரு நேர்காணலில் கீரவாணி குறிப்பிட்டார். துள்ளல் இசைப் பாடல்கள் நடனம், துடிப்பான இசை மூலம் வெற்றியடைகின்றன, ஆனால் மெலடிப் பாடல்களோ ரசிகர்களின் இதயத்தை வெல்கின்றன என்பது அவரது கருத்து.

தெலுங்கு, தமிழ், இந்தியில் அவரது இசையில் வெளியான பல பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவை.

தமிழில் மரகதமணி என்ற பெயரில்...



1990-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது 'அழகன்' படத்தின் மூலம் தமிழில் கீரவாணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா', 'சாதி மல்லி பூச்சரமே' போன்ற காதல் மெலடி பாடல்கள் ரசிகர்களிடையே இன்றும் முணுமுணுக்கப்படுகின்றன. 'துடிக்கிறதே நெஞ்சம்' என்ற துள்ளல் இசைப்பாடல், 'கோழி கூவும் நேரம் ஆச்சு' என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.

அதுமுதல் சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக மரகதமணி திகழ்ந்தார். 1992-ல் பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்திலும் இவர் கொடுத்த அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. பாலச்சந்தர் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் 'நீ பாதி நான் பாதி' படத்துக்கும், பாலச்சந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' ஆகிய படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.

அர்ஜுன் நடித்து இயக்கிய 'சேவகன்', 'பாட்டொன்று கேட்டேன்', 'கொண்டாட்டம்' ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி - ஸ்ரீதேவி நடித்த 'தேவராகம்' படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் தமிழில் 2k கிட்ஸ்கள் மத்தியில் அவர் அதிக பிரபலமடைந்தார்.

இந்தியில் க்ரீம் என்ற பெயரில்...



தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் வெளிப்பட்ட இவர் பாலிவுட்டில் க்ரீம் என்ற பெயரில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 1994-ம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் இந்தியில் அவர் அறிமுகமானார்.

2002-ம் ஆண்டில் வெளியான சர்: தி மெலடி ஆஃப் லைஃப் திரைப்படம் இவரை இந்தி ரசிகர்களிடையே வெகுவாக கொண்டு சேர்த்தது. அந்த படத்தில் இடம் பெற்ற அபிஜா... அபிஜா... என்ற பாடல் வட மாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

2003-ம் ஆண்டு ஜிஸ்ம் படத்தில் இடம் பெற்ற மெலடி பாடல்கள் இந்தி ரசிகர்களை உருகச் செய்தன. ஜாடு ஹாய் நஷா ஹாய். ச்சலோ டும்கோ லெகர், ஆவார பன் ஆகிய பாடல்கள் இந்தி சினிமா ரசிகர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டவையாக இருந்தன.

இந்தி பட ரசிகர்களின் உதடுகள், இவரது இசையில் உருவான டும் மைல் தில் கிலே, ஜாடு ஹாய் நஷா ஹாய் போன்ற பாடல்களை முணுமுணுக்காமல் இருந்திருக்கவே முடியாது.

2005-ம் ஆண்டு ஷாரூக் கான் நடிப்பில் வெளியான பஹெலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் இசை பேசப்படும் ஒன்றாக இருந்தது. அதில் இடம் பெற்ற தீரே ஜல்நா தீரே ஜல்நா பாடல் சூப்பர் ஹிட்டானது.

இந்தியில் 'கிரிமினல்', ஷாருக் கான் நடித்த 'பஹேலி', பிபாஷா பாசு நடித்த 'ஜிஸ்ம்' உள்பட 26 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

ராஜமௌலியுடன் இணைந்து சிகரம் தொட்ட கீரவாணி



இந்திய திரையுலகில் மாபெரும் இயக்குநராக உருவெடுத்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலியின் அனைத்துப் படங்களுக்கும் எம்.எம்.கீரவாணியே இசையமைத்துள்ளார். இருவருமே நெருங்கிய உறவினர்கள் ஆவர். அதாவது, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும், கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தாவும் சகோதரர்கள்.

2001-ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ்.ராஜமௌலியின் தொடர் வெற்றிகளில் எம்.எம்.கீரவாணியும் இணைந்தே பயணப்பட்டார். மகாதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 என இருவரது கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பாகுபலி பெற்றுத் தந்த பெரும்புகழ்



2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக சாதனை படைத்த 'பாகுபலி' படங்கள் மூலம் தேசிய, சர்வதேச கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

அதன் பிறகு, இருவர் கூட்டணியில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்த, அதில் இடம் பெற்ற பாடல்களும் பெருவெற்றி பெற்றன. குறிப்பாக, நாட்டு நாட்டு பாடல் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த மக்களையும் ஆட்டம் போட வைத்தன. இன்றும் கூட பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்ட வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர் என பன்முகம்



நாடு போற்றும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ள எம்.எம்.கீரவாணி பாடலாசிரியர், பின்னணி பாடகர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். அவர் இசையமைத்த பல பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார். தெலுங்கு, சமஸ்கிரும் ஆகிய மொழிகளில் தேர்ந்த அவர், 15 தெலுங்கு படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் பிரபல பாடலாசிரியரான வெட்டூரி சுந்தர ராமமூர்த்தியே தனது குரு என்றும், அவரிடம் இருந்தே இலக்கியத்தைக் கற்றுக் கொண்டதாகவும் கீரவாணி கூறுகிறார்.

பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒகா ப்ராணம், கன்னா நிடுரிஞ்சாரா, தன்டலய்யா ஆகிய 3 பாடல்களும் எம்.எம்.கீரவாணியின் கைவண்ணத்தில் உருவானவையே. ஆஸ்கரை வென்று பெருமை சேர்த்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஜனனி என்று தொடங்கும் பாடலையும் அவர் எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் என்று குறிப்பிடுவதையே பெருமையாக கருதுவதாக நேர்காணல் ஒன்றில் எம்.எம்.கீரவாணி கூறியுள்ளார். சிறந்த எழுத்தாளர் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதே அதற்குக் காரணம் என்கிறார் அவர்.

பல சிறுகதைகளையும் எழுதியுள்ள கீரவாணி, அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

எம்.எம்.கீரவாணி வென்றுள்ள விருதுகள்


தெலுங்கு திரைப்பட இசையுலகில் இன்று முடிசூடா மன்னனாக திகழும் எம்.எம்.கீரவாணிக்கு சிறப்பான இசைத் திறமைக்காக விருது கொடுத்து முதலில் கௌரவித்தது தமிழ்நாடுதான். 1991-ம் ஆண்டு அழகன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.

1997-ம் ஆணடு அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த இசைக்காக, ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 11 முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை 13 முறையும் அவர் வென்றிருக்கிறார்.

பாகுபலி-2 திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி, தற்போது அதே பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் இசை பிரிவில் ஆஸ்கரையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Mar 2023 - 15:27

19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டுக் கூத்து’ பாடல் உருவான கதை

ஆஸ்கர் விருது வென்றது RRR படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் 66032e30-91c6-11ed-9a1a-f3662015ae8e

வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டுக்கூத்து’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இந்த ‘நாட்டுக்கூத்து’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன.

கோல்டன் க்ளோம் விருதை வென்ற இந்த பாடல் பிறந்த கதையைப் பார்ப்போம்.

ர் எஸ் எஸ் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரின் மனதில் இந்த பாடல் எப்படி உருவானது?

‘மூலப்பாடல்’ என்பது என்ன?



‘நாட்டுக் கூத்து’ பாடல் பிறந்த கதைக்கு முன், ‘மூலப்பாடல்’ பிரிவு என்பது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ‘மூலம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப, உலகின் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும், அந்தத் திரைப்படத்திற்காகவே உருவாக்கப்பட்ட, வேறு எங்கிருந்தும் எடுக்கப்படாத பாடல் என்பதே மூலப்பாடல். ஏற்கெனவே இருக்கும் வேறு எந்தப் பாடலின், இசையின், பொருளின் தாக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்

தகுதி பெற்ற 81 பாடல்களில் 15 அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அவதார்: த வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ‘நத்திங் இஸ் லாஸ்ட்(யூ கிவ் மீ ஸ்ட்ரெங்க்த்)’ பாடல் உட்பட இன்னும் 14 பாடல்கள் இந்த ‘நாட்டுக் கூத்து’ பாடலுடன் போட்டியில் இருந்தன.

கலையுலகில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக, பெருமைமிகு விருதாக கோல்டன் க்ளோப் விருது கருதப்படுகிறது.

பாடல் பிறந்த கதை



‘நாட்டு நாட்டு’ என்ற தெலுங்கு வார்த்தைகளின் படி, வெகுஜன மக்களுக்கான பாடலாக இது உருவாகியுள்ளது.

ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் நடனத் திறமைகளைப் பல முறை நிரூபித்துள்ளனர். அந்த இருவரும் கால் உடையும் அளவுக்கு ஆடினால் எப்படி இருக்கும்? அதைப் பார்க்கும் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று சிந்தித்தார் எஸ் எஸ் ராஜமௌலி.

இதை அவர் இசையமைப்பாளர் கீரவாணியிடம் கூறியுள்ளார்.

“அண்ணே, ரெண்டு பெஸ்ட் டான்ஸர்கள் தங்கள் திறமை முழுவதையும் காட்டக்கூடிய ஒரு பாடல் வேண்டும்” என்று ராஜமௌலி தன்னிடம் கூறியதாக பிபிசி-யிடம் தெரிவித்தார் கீரவாணி.

இந்தப் பாடலுக்கான வரிகளை எழுத, கீரவாணி தேர்ந்தெடுத்தது, தற்காலத் தெலுங்குப் பாடலாசிரியர்களில் தனக்குப் பிடித்த சந்திரபோஸை.

“இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனங்களின் மூலம் மக்களைப் பரவசப் படுத்த வேண்டும். என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள். ஆனால், இந்தக் கதை 1920-களில் நடப்பதாக இருப்பதால், அந்தக் கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாக இருக்கட்டும்.” என்று கீரவாணி, சந்திரபோஸிடம் கூறியுள்ளார்.

அப்போது பாடலுக்கான இசை தயாராகவில்லை. விவரமாகப் பின்னணிக் கதையும் சந்திரபோஸுக்குத் தெரியாது.

பாடல் இறுதி செய்யப்பட்டது எப்படி?



ராஜமௌலி, கீரவாணி மற்றும் சந்திரபோஸ் மூவரும் ஹைதராபாத்தில் உள்ள அல்லுமினியம் ஃபேக்டரியில் உள்ள ஆர்ஆர்ஆர் அலுவலகத்தில் 2020 ஜனவரி 17 அன்று இந்தப் பாடலுக்கான முதல் பணியைத் தொடங்கினர்.

ராஜமௌலியும் கீரவாணியும் கூறிய விஷயங்களை மனதில் கொண்டு தனது காரில் ஏறி அமர்ந்தார் சந்திரபோஸ். அலுமினியம் ஃபேக்டரியிலிருந்து ஜூப்லி ஹில்ஸ் நோக்கி ஊர்ந்தது அந்த கார். அவரது கைகள் ஸ்டியரிங் வீலில் இருந்தாலும் அவர் நினைவு முழுவதும் அந்தப் பாடலின் மீது தான் இருந்தது. அப்போது தான் ‘நாட்டு நாட்டு’ என்ற முக்கிய வரி அவரது மனதில் மின்னலாகத் தோன்றியது.

அது வரை எந்த இசையும் உருவாகாததால், ‘6-8 தகிட தகிட திஸ்ர கதியில் அதைப் பின்னத் தொடங்கினார். அதுதான் கீரவாணிக்கு மிகவும் பிடித்தது என்று காரணம் கூறுகிறார் சந்திரபோஸ்.

“மக்களின் உற்சாகத்தைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்படும் பாடல் இந்த வகையில் தான் இருக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே, தனக்குக் கீரவாணி அறிவுறுத்தியிருப்பதாக பிபிசியிடம் பேசிய சந்திரபோஸ் குறிப்பிடுகிறார்.

கதைப்படியும் இந்த இரு முன்னணி நடிகர்களும் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் காட்சியில் இந்தப் பாடல் வருகிறது. எனவே அவர் இதை அமைத்திருந்தார். இரண்டு நாட்களில் மூன்று பாடல் அறிமுகங்களை உருவாக்கிக் கொண்டு கீரவாணியைச் சந்தித்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த பத்தியை இறுதியில் படித்துக் காட்டினார். அதற்கு முன்னால், மற்ற இரண்டு பத்திகளைப் படித்துக்காட்டினார்.

சந்திரபோஸ் பரிந்துரைத்த பாடல் அறிமுகம் கீரவாணிக்கும் பிடித்துப்போய் விட்டது. அது இறுதி செய்யப்பட்டது.

காளைகள் வயலில் துள்ளிக் குதிப்பதுபோல்

போலேரம்மா பண்டிகையில் பொத்தராஜு ஆடுகிறார்

ஒலியெழுப்பும் காலணிகளை அணிந்து சிலம்பம் சுற்றுகிறார்

ஆலமர நிழலில் இளவட்டங்கள் கூடி நிற்கின்றனர்

சிவப்புச் சோள ரொட்டியில் மிளகாய் தொக்கு சேர்ந்ததுபோல

90% பாடல் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிட்டது.

ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில மாற்றங்கள் செய்வதில் 19 மாதங்கள் பிடித்தது.

படப்பிடிப்பு முழுவதும் சந்திரபோஸும் கீரவாணியும் இந்தப் பாடல் குறித்த விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

சமூக-பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு



கதையின் படி பீம்(ஜூனியர் என்டிஆர்) தெலுங்கானாவையும் ராம்(ராம் சரண்) ஆந்திராவையும் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த இரு பிராந்தியங்களில் வட்டார வழக்கும் இந்தப் பாடலில் விரவிக் கிடக்கின்றன.

இந்தப் பாடலை உன்னிப்பாகப் பொருள் உணர்ந்து கேட்டால், அப்போதைய, அந்தப் பிராந்தியங்களின் சமூக- பொருளாதார நிலையையும் பிரதிபலிப்பதை உணரலாம்

‘மிரப்ப தொக்கு’ (மிளகாய்த் தொக்கு), துமுகுலாடட்டம்(மேலும் கீழும் குதிப்பது) போன்றவை தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான வழக்கு மொழிகள்.

அந்தக் காலகட்டத்தில் தெலுங்கானாவின் முக்கிய உணவாக சோளம் இருந்தது. அது மிளகாய்த் தொக்குடன் உண்ணப்பட்டது.

பாடல் என்பது, வரிகள் மறைந்து காட்சிகள் மேலோங்கி இருப்பது என்பது சந்திரபோஸின் விளக்கம். அது இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

தெலுங்கு மக்களிடையே புழங்கிய பல வார்த்தைகள், முக்கியக் குறியீடுகள் இந்தப் பாடலில் இடம்பெறுகின்றன. பொத்தராஜு(கிராமத் திருவிழாக்களில் முக்கிய பாத்திரம்), ரச்சபந்தா(கிராம சதுக்கம்) போன்றவை உதாரணங்கள்

இந்தப் பாடலைப் பாடியவர்கள் காலபைரவா மற்றும் ராஹுல் சிப்லிகுஞ்ச்.

யுக்ரேனில் பாடல் படப்பிடிப்பு



‘நாட்டு நாட்டு’ பாடல் என் டி ஆர், ராம்சரண் இருவரின் நடனத் திறமைக்கும் சவாலாக இருந்தது. நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்காக சுமார் 95 அசைவுகளை உருவாக்கினார்.

என்டிஆரும் ராம் சரணும் கை கோர்த்து ஆடும் காட்சிக்கு 30 வகையாக அசைவுகள் அமைத்தார். இந்தக் குறிப்பிட்ட அசைவுக்கு மட்டும் 18 டேக்குகள் ஆனதாகத் திரைப்படக் குழுவினர் கூறுகின்றனர்.

ஆனால், படத்தொகுப்பின் போது, இரண்டாவது டேக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘ஒரு காட்சியை ஓகே சொல்லி ஒப்புக்கொண்ட பின்னரும் ராஜமௌலி ‘ஒன் மோர்’ என்று கேட்பார் என்று ப்ரேம் ரக்ஷித் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

தானே கண்டுபிடிக்க முடியாத வேறுபாடுகளை, ஒரு திரைக்கு முன்னால் அமர்ந்து ராஜமௌலி அடையாளம் கண்டுவிடுவார் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தப் பாடல் யுக்ரேன் அதிபர் மாளிகைக்கு எதிரில் படமாக்கப்பட்டது.



யுக்ரேனில் படப்பிடிப்பின் போது, ராஜமௌலியும் கீரவாணியும் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றியமைக்க முடிவு செய்தனர்.

அப்போது சந்திரபோஸ் புஷ்பா திரைப்படத்தில் படு பரபரப்பாக இருந்தார்.

காணொளி அழைப்பில் சந்திரபோஸுடன் பேசிய ராஜமௌலியும் கீரவாணியும் அந்தக் கடைசி பத்தியை மாற்றித் தரக் கோரினர்.

19 மாதங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பாடலின் இறுதிப் பத்தியை மாற்றுவது 15 நிமிடத்தில் முடிந்தது.

மாற்றப்பட்ட அந்தப் பாடல் பிறகு பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தப் பாடல், ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரணின் நடனத் திறமையை வெளிப்படுத்தியதுடன், பீம், ராம் இருவரிடையே இருந்த நட்பு, பீமுக்காக ராம் செய்த தியாகம், தெலுங்கு மக்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு எதிர்த்தனர், பீம் எப்படி ஆங்கிலப் பெண்ணின் மனதைக் கவர்ந்தார் என்று அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக