புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
69 Posts - 58%
heezulia
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
111 Posts - 60%
heezulia
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
[சிறுகதை] மன உறுதி Poll_c10[சிறுகதை] மன உறுதி Poll_m10[சிறுகதை] மன உறுதி Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[சிறுகதை] மன உறுதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 10:40 pm

[சிறுகதை] மன உறுதி E_63209

சதாசிவத்திடம், ''இந்தாங்க காபி,'' என நீட்டினாள், காமாட்சி அம்மாள்.

''குமாரிடம் மாத்திரைகள் வாங்க சொல்லிட்டியா, காமு?'' என கேட்டார், சதாசிவம்.

''நேத்து ராத்திரியே சொல்லிட்டேன். இன்று வாங்கிட்டு வரேன்னு சொன்னான்,'' என்றாள், காமாட்சி.

சதாசிவம் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ராமகிருஷ்ணன், இளையவன், குமார்.

மூத்தவனுக்கு, படிப்பு வராததால், காலேஜ் முழுமையாக முடிக்கவில்லை. உள்ளூரில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறான்.

இளையவன், டிகிரி முடித்து, உள்ளூரில், கார் ஷோரூமில் வேலை. இருவருக்குமே திருமணமாகி பெரியவனுக்கு, ஒரு ஆணும். இளையவனுக்கு, ஒரு பெண்ணும் உள்ளனர். ஓரளவுக்கு சுமூகமாக சென்று கொண்டிருந்தது, குடும்பம்.

சதாசிவம், சாந்த சொரூபி; காமாட்சி, தடாலடி. மனதில் பட்டதை சட்டென சொல்லி விடுவாள். தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவள். காமாட்சியின் துணிச்சலை கண்டு சதாசிவம், பயந்து, வியந்ததும் உண்டு.

சதாசிவம், சிக்கனக்காரர்; அதே வேளையில் கஞ்சத்தனம் கிடையாது; சேமிக்கும் பழக்கம் உண்டு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதால், பென்ஷன் கிடையாது. ஆனால், பி.எப்., தொகை வந்தது.

காமாட்சி சேர்த்து வைத்திருந்த கொஞ்ச பணத்துடன், பி.எப்., தொகையையும் சேர்த்து, வங்கியில் டிபாசிட் செய்திருந்தார். சதாசிவத்திற்கு உடலில் பல பிரச்னைகள். ஒவ்வொரு மாதமும் மருத்துவச் செலவுக்கு, சேமிப்பிலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை பயன்படுத்திக் கொள்வார்.

மாலை 6:00 மணி. காலையில் கொடுத்து வைத்திருந்த பூவை வாங்கிக் கொண்டு, ''நான் அம்மன் கோவிலுக்கு போயிட்டு, அப்படியே என் தோழி சித்ராவை பார்த்துட்டு வரேன்...'' என்று சொல்லி, கிளம்பினாள், காமாட்சி.

கோவிலுக்கு போய் விட்டு, சித்ரா இல்லாததால், சீக்கிரமே வீடு திரும்பி விட்டாள்.

இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பிய குமார், கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன், மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். காமாட்சியிடம் மாத்திரையை கொடுத்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இரவு, 9:00 மணி.

அனைவரும் சாப்பிடும்போது தான், ''அப்பா, மதுரையில் துவங்கப் போகும் ஷோரூமில், சேல்ஸ் மேனேஜர் புரமோஷனுடன் கூடிய டிரான்ஸ்பர் எனக்கு கிடைத்துள்ளது. வரும், 25-ம் தேதி அங்கு, 'ஜாயின்' பண்ணணும். இங்குள்ளதை விட அங்கு சம்பளம் அதிகம்,'' என்றான், குமார்.

வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம். கடையை பூட்டி விட்டு வந்த ராமகிருஷ்ணனிடமும், விஷயத்தை கூறினர். பேரப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியுடன் இனிப்பு சாப்பிட்டனர்.

அதற்கடுத்த மூன்று நாட்கள், வீட்டில் அமைதி. அண்ணனும், தம்பியும், தங்களது மனைவியரை பார்த்துக் கொண்டனரே தவிர, ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியான அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டாள், காமாட்சி.

''காமு, வீட்ல என்ன நடக்குது?'' என்றார், சதாசிவம்.

''பொறுங்கள், பூதம் வெளியே வரும்,'' என்றாள், காமாட்சி.

''பூதமா?'' ஒன்றும் புரியவில்லை, சதாசிவத்திற்கு.

ஓடிக் கொண்டிருக்கும் பிரச்னை இது தான்...

அம்மா - அப்பாவை யார் பார்த்துக் கொள்வது? ஒருவரால் மட்டும் இருவரையும் கவனிக்க முடியாது. ஆகவே, அப்பாவை ஒருவரும், அம்மாவை ஒருவரும் பார்த்துக் கொள்வதாக பிளான். ஆனால், யாரை யார் பார்த்துக் கொள்வது என்பது தான் வாக்குவாதம்.

அன்று காலை, ''சித்ரா வீடு வரை போகிறேன். வர கொஞ்சம், 'லேட்' ஆகும்,'' என்று சொல்லிப் போனாள், காமாட்சி.

''எதற்கு காமு?'' என கேட்டார், சதாசிவம்.

''சும்மா தான்,'' என்றாள், காமாட்சி.

இதற்கிடையே, குமாருக்கும், ராமகிருஷ்ணனுக்கும் வீட்டில் பனிப்போர்.

இருவரையும் பார்த்துக் கொள்ள மகன்களுக்கு மனது இல்லை. இருவருக்குமே அம்மாவை பராமரிப்பதில் தான் விருப்பம். ஏனென்றால், அம்மாவிற்கு மருத்துவ செலவு கிடையாது. சற்று படபட என பேசுவார். துணிவு உள்ளவர். நல்ல ஆலோசனை தருபவர். அவருக்கு கோவில் ஒன்று தான் பிரதானம்.

பூ வாங்கி, தன் கையால் கட்டிக் கொண்டு போய், சாமிக்கு போட்டு கும்பிட்டு வருவதில், அவ்வளவு சந்தோஷம். மற்றபடி எதற்கும் ஆசைப்பட மாட்டாள்.

ஆகவே, அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டால் செலவு குறைவு என்ற ஒரு மட்டமான யோசனை இருவருக்கும். மேலும், அம்மா தன்னுடன் இருந்தால், மனைவியருக்கு உதவியாக இருப்பார் என்ற எண்ணம்.

ஆனால், அப்பாவுக்கு ஒவ்வொரு மாதமும், டாக்டர், 'செக் - அப்' மற்றும் அடிக்கடி ரத்தப் பரிசோதனை என, குறைந்தபட்சம், 2,000 ரூபாய் செலவாகும். அதுவுமின்றி, அவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதால், எதாவது வாங்கி வரச் சொல்வார்.

படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், தினமும் பேப்பர் மற்றும் சில வார இதழ்கள் வாங்கி வரவேண்டும். அவரை திருப்திப்படுத்துவது பெரிய கஷ்டம்.

அதனால் தான் அப்பாவை அங்கே, இங்கே தள்ளிவிடும் எண்ணத்தில் பந்தாடிக் கொண்டிருந்தனர்.

காலையில் வெளியே சென்ற காமாட்சி, மாலை, 5:00 மணி வரை வீடு திரும்பவில்லை. சற்று கவலையாக இருந்தார், சதாசிவம்.

பெரிய மருமகளிடம், ''சித்ரா வீட்டுக்கு போன் செய்து, காமு ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்,'' என்றார்.

''வருவார்கள் வருவார்கள்... அவர்கள் என்ன சின்ன பிள்ளையா?'' என்று அலட்சியமாக சொல்லிப் போனாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில், அனைவரும் சாப்பிடும் போது பூகம்பம் மெதுவாக ஆரம்பித்தது.

''முடிவா என்ன சொல்ற குமார்?'' ஆரம்பித்தான், பெரியவன்.

''எத்தனை முறை தான் சொல்வது... நான் போகிற இடம் மதுரை. என்னால் இருவரையும் அழைத்து கொண்டு போக முடியாது. நம்மூரை விட அங்கு வீட்டு வாடகை, பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் அதிகம். இரண்டு மடங்கு செலவாகும். முடிந்தால் நீ பார்த்துக் கொள்,'' என்றான், குமார்.

''குமார்... உனக்கு இப்போது சம்பளமும் அதிகம். அதனால், உன்னால் முடியும். என்னால் இருவரையும் எப்படி பார்க்க முடியும். தற்போது, கடையில் அவ்வளவா வியாபாரமும் இல்லை. என் பிள்ளையும், 6ம் வகுப்பு போகிறான். அவனுக்கும் படிப்பு செலவு கூடத்தான் ஆகும். அதனால், வேறு ஏதாவது தொழில் பார்க்கலாமா என்று யோசிக்கிறேன்,'' என்றான்.

''சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?''

இப்படியே வாக்குவாதம் மாறி மாறி போனது.

''இப்படி செய்வோம், வேணும்ன்னா அத்தைய நாங்க பார்த்துக்கிறோம். மாமாவ நீங்க கூட்டிட்டு போங்க,'' என, புதிய அணுகுண்டு போட்டாள், மூத்த மருமகள்.

''ஏன், அத்தையை நாங்க கூட்டிட்டு போறோம். மாமாவை நீங்க பார்த்துக்கோங்க,'' என்றாள், இளையவள்.

அம்மா இல்லாமல், ஒரு நிமிடம் கூட, அப்பா இருக்க மாட்டார் என்பது தெரிந்தும், சுயநலத்திற்காக பொறுப்பை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தனர்.

மருமகள்கள் இருவரும் கோரஸாக, 'அப்படியானால் இருவரையும் ஒரு இல்லத்தில் சேர்த்து விடுவோம்...' என்றனர்.

''என்னது இல்லமா?'' பதறினார், சதாசிவம்.

எந்த சஞ்சலமும் இன்றி அமைதியாக, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், காமாட்சி.

அப்போது பெரிய மருமகள் குறுக்கிட்டு, ''ஏன் நமக்குள்ள பேசிட்டு, அவரிடமே கேட்டு விடுங்கள். அவர்களின் முடிவு என்ன... தனித் தனியே நம்மோடு இருக்காங்களா, இல்லை...'' என்று சொல்லும்போதே, கையை உயர்த்தி, ''போதும் நிறுத்துங்கள்...'' என்று, உரத்த குரலில் சத்தமிட்டாள், காமாட்சி; சதாசிவம் உட்பட அனைவரும் ஆடிப்போயினர்.

''இத்தனை வயதுக்கு பின் அவரையும், என்னையும் பிரித்து... இல்லைன்னா முதியோர் இல்லத்தில் விட பார்க்கிறீர்களா... அவர் எப்படிடா தனிமையில் இருப்பார்... தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தில் தன் தேவையை சுருக்கி, உங்களை எந்த குறையும் இல்லாமல் தானே வளர்த்தார்.

''தனக்கென ஏதாவது ஆடம்பரமா செலவு செய்திருக்கிறாரா... மனசாட்சி இருக்காடா உங்களுக்கு... டேய், அவர் ஒரு குழந்தைடா... குடிக்கிற தண்ணீரிலிருந்து சாப்பிடுகிற மாத்திரை வரைக்கும் நான் தான்டா அவருக்கு எடுத்துக் கொடுக்கணும். இப்ப, அவர் எப்படி போனாலும் உங்களுக்கு பிரச்னை இல்லை, அப்படித்தானே...'' என்று பொரிந்தாள்.

''இல்லம்மா, எங்க சூழ்நிலை...'' என்று ஆரம்பித்த பெரியவனிடம், ''போங்கடா, நீங்களும் உங்கள் சூழ்நிலையும். என் புருஷன நானே பார்த்துக்கிறேன்,'' என்றாள்.

''காமு என்ன பேசற,'' பதற்றத்தில் அலறினார், சதாசிவம்.

''ஆமாங்க, இவங்க யாரும் நம்மள பார்க்க வேண்டாம். ஒரு இல்லத்தில் உங்களை விட்டுட்டு, நானும் இவனுங்க பராமரிப்பில் இருக்க விரும்பல. நான் அன்னைக்கு சித்ரா வீட்டுக்கு ஏன் போனேன் தெரியுமா?

''இவனுங்க இப்படி ஏதாவது முடிவு எடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். அதனால, சித்ராவுக்கு சொந்தமான காம்பவுண்டில் ஒரு சின்ன வீடு பேசியுள்ளேன். வாடகை வேண்டாம்ன்னு தான் சொன்னா, நான் கொஞ்சமாவது வாடகை தருவதாக சொல்லி பேசி வச்சிருக்கேன்.

''அதே மாதிரி, கோவிலுக்கு முன்னாடி பூ விற்றுக் கொண்டிருந்த கற்பகத்துக்கு உடம்புக்கு முடியல, வியாபாரத்தை நிறுத்தப் போறா. அதனால, நான் அங்க உட்கார்ந்து அவளை போலவே பூ வியாபாரம் பார்க்க முடிவு பண்ணிட்டேன்.

''அவளும், 'நீங்க பண்ணுங்கம்மா...'ன்னு சொல்லிட்டா. குமாரின் நண்பன் அந்தோணி கடையில் பூ கேட்டிருக்கேன். அவனும் முன்பணம் இல்லாமல் கொடுத்து உதவுறேன்னு சொல்லியிருக்கான். நிச்சயமா வியாபாரம் நல்லா இருக்கும். உங்களுக்கு வர்ற வட்டிப் பணம், பூக்கடையில் கிடைக்கும் வருமானம், இது போதும் நம் செலவுக்கு.''

''அப்பாவுக்கு மருந்து செலவெல்லாம் இருக்கும்மா... கோபப்படாம பொறுமையா கேளு...'' என்றான், குமார்.

கோபமும், ஆவேசமும் சற்றும் தணியாத காமாட்சி அம்மாள், ''போங்கடா உங்க வேலையை பார்த்துக்கிட்டு... உங்க யாரையும் நம்பி இல்லடா... நம்ம ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு மாசத்துக்கு மொத்தமா மாத்திரையை இலவசமாக வாங்கி விடுவேன்.

''எப்ப அவரையும், என்னையும், நீங்க பிரிச்சு பார்த்துக்கணும்ன்னு மட்டமா யோசிச்சீங்களோ... இனியும் உங்களோடு ஒரு நிமிஷம் இருக்க நானும் விரும்பல... எங்களை நாங்களே பார்த்துக்கிறோம். நீங்க, உங்க இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம்,'' என்று ஆணித்தரமாக, மன உறுதியுடன் சொன்னாள், காமாட்சி.

வழக்கம் போல, இப்போதும் ஒன்றும் சொல்லவில்லை, சதாசிவம்.

க. மோகனசுந்தரம்
வார மலர்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34991
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 29, 2023 11:37 am

வாரமலர் வீட்டில் வருகிறது. சிறுகதைகள் நேரம் இருந்தால் படிப்பேன்.

இன்று ஈகரையில் படித்தேன்.பக்கங்களை திருப்பவேண்டிய அவசியமில்லை. [சிறுகதை] மன உறுதி 1f60e  [சிறுகதை] மன உறுதி 1f60e

போட்டிகளில் ஆர்வம் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக