புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_m10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10 
6 Posts - 60%
heezulia
ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_m10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_m10ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தியின் லண்டன் உரை - பொறுப்பின்மையா? புரிதலின்மையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 10, 2023 4:52 pm

ராகுல் காந்தியின் லண்டன் உரை  - பொறுப்பின்மையா? புரிதலின்மையா? IK875au

அரசியல் தலைவர்களுக்கு தேசத்தின் கெளரவத்தையும் மாண்பையும் பாதுகாப்பதில் மிகப்பெரிய பொறுப்பு உண்டு. உள்நாட்டு அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த மனமாச்சரியங்களை அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிக்காட்டும் வழக்கம் இல்லை. இந்திய ஜனநாயகத்தைக் களங்கப்படுத்தும் விதத்திலும், தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலும் இதுவரை எந்தவொரு தலைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று விமர்சனங்களை முன்வைத்ததில்லை.

1971-இல் வங்கதேசப் போருக்குப் பிறகு இந்தியாவின் நிலைமை குறித்து விளக்குவதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை நினைவுகூர வேண்டும். அதே போல, தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற, அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா, இந்தியாவுக்குப் பெருமை சோ்க்கும் விதத்தில் நிருபா்களிடம்பேசியதையும் குறிப்பிட வேண்டும்.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த நாகரிகத்தை குலைப்பதாக அமைகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் ஜனநாயக நாடுகள், இந்தியாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள் குறித்து கவலைப்படுவதில்லை என்கிற அவரது கருத்து வருத்தத்துக்குரியது.

பிபிசி அமைப்பின் மீது வருமான வரித் துறை நடத்திய சோதனை உள்பட ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்பதும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் நீதித்துறையின் மாண்பையும், மரியாதையையும் குலைக்கும் விதத்தில் பேசுகிறாா்கள் என்பதும், நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன என்பதும் ராகுல் காந்தி லண்டனில் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை.

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது உண்மை. அதே நேரத்தில், விமர்சனங்களை முன்வைக்கும் உரிமை பறிக்கப்படவில்லை என்பது அதைவிட உண்மை. அரசியல் அமைப்பு நிறுவனங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் புதிதொன்றும் அல்ல. ராகுல் காந்தி சாா்ந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் நீண்ட காலம் இயங்கிய காங்கிரஸ் கட்சியும் அந்த குற்றச்சாட்டுக்கு விதிவிலக்கானது அல்ல.

ஊடகங்கள் மீதான தாக்குதலும், அடக்குமுறையும் இன்றைய நரேந்திர மோடி ஆட்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளின், கூட்டணிகளின் ஆட்சியிலும் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. மாா்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கும் கேரளத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் மீது, ‘ஊடகங்களுக்கு கடிவாளம் போடுகிறது’ என்கிற குற்றச்சாட்டை ராகுல் காந்தி சாா்ந்த காங்கிரஸ் கட்சியே தொடா்ந்து முன்வைப்பது அவருக்கு தெரியாது போலும்.

அதேபோல, நீதித்துறையின் மீதான விமர்சனங்களும் இந்திய ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. இந்திரா காந்தி காலத்தில் பணி மூப்பு அடிப்படையை ஒதுக்கிவைத்து நடத்தப்பட்ட தலைமை நீதிபதி நியமனங்களும், நீதிமன்றத் தீா்ப்புகளை எதிா்கொள்ள கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற சட்டங்களும் வரலாற்று நிகழ்வுகள். எதிா்க்கட்சி என்கிற நிலையில் இந்தியாவில் ஆளுங்கட்சியின் வரம்புமீறல்களை விமர்சிக்கும் கடமை மக்களவை உறுப்பினரும், எதிா்கட்சியின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்திக்கு உண்டு. ஆனால் வெளிநாடுகளில் இதையெல்லாம் முன்வைத்து இந்தியாவைக் களங்கப்படுத்தும் போக்கு தவறானது.

இந்திய ஜனநாயகம் எத்தனையோ தாக்குதல்களை எதிா்கொண்டு வலிமை பெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாத்தது மேலை நாடுகளல்ல. ஜனநாயகத்தின் பாதுகாவலா்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் ஜனநாயகம் வேரூன்றவும், வலிமையாக செயல்படவும் உதவியதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த நாடுகள் பெரும்பாலும் சா்வாதிகாரத்தையும், அடிப்படைவாதத்தையும் சாா்ந்த தலைமைகளைத்தான் ஆதரித்திருக்கின்றன. சமீபகாலம் வரை தொடா்ந்து ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானுக்கு மேலை நாடுகள் உதவினவே தவிர இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதுகூடவா ராகுல் காந்திக்கு தெரியாது? இன்றைய ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கும், ஈரான், லிபியா உள்ளிட்ட நாடுகளின் பிரச்னைகளுக்கும் காரணமானவர்களிடம் ஜனநாயகம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தும் ராகுல் காந்தியின் அறியாமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த காங்கிரஸின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின்போதுதான் மிகக் கடுமையான தாக்குதலை எதிா்கொண்டன. அடிப்படை சுதந்திரம்கூட ஊடகங்களுக்கு அப்போது வழங்கப்படவில்லை.

நீதித்துறை பழிவாங்கப்பட்டது. எதிா்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இவையெல்லாம் தெரிந்தும்கூட ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று அயல்நாடுகளில்போய் அபயக் குரல் எழுப்புவது, அவரது பலவீனத்தின் வெளிப்பாடே தவிர ஜனநாயகத்தின் மீதான அக்கறையாகத் தெரியவில்லை.

3,500 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு சாமானிய இந்தியர்களை சந்தித்தும்கூட அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் அந்நியர்களின் ஆதரவை ராகுல் காந்தி நாடியிருப்பது பொறுப்பின்மையா? புரிதலின்மையா?

தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 10, 2023 6:14 pm

இவர்கள் எல்லாம் ஒரு தேசத்தின்  கட்சி தலைவர்கள் என்பதை மறந்து 
சுயநலத்திற்காக ஆளும் கட்சியை வெளிநாட்டில் குறை கூறுவது 
அறியாமை என சொல்வதா? திமிர்த்தனம் என சொல்வதா?

வருந்தத்தக்க விஷயம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 10, 2023 6:21 pm

T.N.Balasubramanian wrote:இவர்கள் எல்லாம் ஒரு தேசத்தின்  கட்சி தலைவர்கள் என்பதை மறந்து 
சுயநலத்திற்காக ஆளும் கட்சியை வெளிநாட்டில் குறை கூறுவது 
அறியாமை என சொல்வதா? திமிர்த்தனம் என சொல்வதா?

வருந்தத்தக்க விஷயம்.


இத்தாலி பெண்ணுக்கு பிறந்தவருக்கு இந்திய நாட்டின் மீது பற்று இருக்கும் என எண்ணுவது நாம் தவறு. இந்தியாவின் எதிரி நாடுகள் அனைத்துடனும் இவருக்கு சிறந்த நட்பு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 11, 2023 9:04 pm


இத்தாலி பெண்ணுக்கு பிறந்தவருக்கு இந்திய நாட்டின் மீது பற்று இருக்கும் என எண்ணுவது நாம் தவறு. இந்தியாவின் எதிரி நாடுகள் அனைத்துடனும் இவருக்கு சிறந்த நட்பு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

வருந்தத்தக்க விஷயம் .
மக்கள் புரிந்துகொண்டால் நாட்டிற்கு நல்லது.
மக்கள் புரிந்துகொள்ளவில்லையெனில் ,
இத்தாலி பெண்ணின் குடும்பத்திற்கு நல்லது.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக