புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
467 Posts - 54%
heezulia
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
27 Posts - 3%
prajai
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
5 Posts - 1%
mini
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
போபால் சமஸ்தானம்  Poll_c10போபால் சமஸ்தானம்  Poll_m10போபால் சமஸ்தானம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போபால் சமஸ்தானம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 7:46 pm

போபால் சமஸ்தானம்  66904ed0-bdbf-11ed-a9bc-7599d87091be
நவாப் சுல்தான் ஜஹான் பேகம்


போபால் சமஸ்தானத்தின் வரலாற்றைச் சற்றே நோக்கினால், இங்குள்ள பெண் ஆட்சியாளர்கள் ஆண்களால் செய்ய முடியாத அனைத்தையும் சாதித்தார்கள்.

போபால் சமஸ்தானத்தின் அஸ்திவாரம் சர்தார் தோஸ்த் முகமது கான் என்பவரால் ஃபதேகர் கோட்டையில் போடப்பட்டது. ஆனால் இந்த இடத்தின் பேகம் நவாப்களால் அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சுமார் 107 ஆண்டுகள் நீடித்த குத்சியா பேகம் காலம் தொட்டு இந்த ஆட்சி தொடங்குகிறது. அதிகாரம் 1819 முதல் 1926 வரை பேகத்தின் கைகளில் இருந்தது.

குத்சியா பேகம் தான் முதல் பெண் நவாப் ஆவார். அவர் கௌஹர் பேகம் என்றும் அழைக்கப்படுகிறார். 1819 இல் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவர் 18 வயதில் நவாப் ஆனார்.

அவர் படிப்பறிவில்லாதவளாக இருந்தாலும் வரலாற்றாசிரியர்கள் அவரை தன் காலத்தைத் தாண்டிய ஒரு பெண் என்றே புகழ்கிறார்கள். அவர் தன் படையுடன் பல போர்களையும் சந்தித்துள்ளாள்.

அவர் கட்டிய கௌஹர் மஹால் இன்றும் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. அவர் போபாலின் ஜமா மசூதியையும் கட்டினாள்.

சைஃபியா கல்லூரியின் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான அசார் கித்வாய் விளக்குகிறார், "இன்றும் மக்கள் பெண்களைத் தங்களை விட உயர்வான இடத்தில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் பெண்கள் ஆட்சி செய்து முழு மாநிலத்தையும் எல்லா வகையிலும் முன்னெடுத்துச் சென்ற ஒரு மாகாணமாக போபால் இருந்தது."

மேலும், "இந்தப் பெண்கள் ஆட்சி செய்தது மட்டுமின்றி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."

இரண்டாவதாக ஆண்ட சிக்கந்தர் ஜஹான் பேகத்திற்கும் சவால்கள் குறையவில்லை என்கிறார் அசார் கித்வாய். அப்போது அவருக்கு உதவியாக அவரது தாய் மாமா ஃபவுஜ்தார் முகமது கானும் அமைச்சராக்கப்பட்டார். ஆனால் இதன் காரணமாக நிர்வாகத்தை நடத்துவதில் அவர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டார். கடைசியில் ஃபவுஜ்தார் முகமது கான் பதவி விலக வேண்டியதாயிற்று.

சிக்கந்தர் ஜஹான் பேகத்தின் சிறப்பு என்னவென்றால், அவர் குதிரையில் அமர்ந்து முழு சமஸ்தானத்தையும் சுற்றிப்பார்வையிடுவது வழக்கம்.

டெல்லி ஜமா மசூதியை ஆங்கிலேயர்களிடம் இருந்து முஸ்லிம்களிடம் திரும்பப் பெற்றுத் தருவதில் பெரும் பங்கு வகித்தார் அவர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு ஜமா மஸ்ஜித் மூடப்பட்டது. முஸ்லிம்கள் மசூதியில் கூடித் தங்களுக்கு எதிராகச் சதி செய்யலாம் என்று ஆங்கிலேயர்கள் கருதினர்.

கித்வாய் விளக்குகிறார், "சிகந்தர் ஜஹான் பேகம் தனது சமஸ்தானத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அனைத்தையும் வரைபடமாக்கினார். இந்த வரைபடம் கையால் செய்யப்பட்டது, அதில் எல்லாம் எழுதப்பட்டது. சமஸ்தானத்தில் மலைகள், நீர் ஆதாரங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாக வரையப்பட்டது.

அந்த காலகட்டத்தில் முதல் முறையாக ஒரு நவாப் இந்த வேலையைச் செய்தார் என்று அவர் கூறுகிறார்.

சிக்கந்தர் ஜஹான், கல்விக்காகவும் நிறையப் பணிகளைச் செய்தார், மேலும் கல்வியை மேம்படுத்த வெளியில் இருந்து அறிஞர்களையும் அழைத்தார்.

மற்றொரு வரலாற்றாசிரியர் டாக்டர் ஷம்புதயாள் குரு, 'சிகந்தர் ஜஹான் பேகம் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தினார், மேலும் அவரது திறமையின் காரணமாக, போபால் சமஸ்தானத்தின் 30 லட்சம் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்தினார்,’ என்று பதிவிடுகிறார்.

அப்போது ஒப்பந்த முறையில் வசூலிக்கப்பட்ட வருவாய் வசூலை சிக்கந்தர் ஜஹான் பேகம் ஒழித்துவிட்டார்” என்கிறார் அவர்.

பெண் நவாப்களின் வரிசையில் மூன்றாவதாக ஷாஜகான் பேகத்தின் பெயர் வருகிறது. ஷாஜஹான் பேகமும் இரண்டு நவாப்களின் பணியை முன்னெடுத்துச் சென்றார், ஆனால் அவர் கட்டடங்கள் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

ஆக்ராவைப் போலவே போபாலில் ஷாஜஹான் பேகத்தால் கட்டப்பட்ட தாஜ்மஹால் என்ற கட்டடமும் உள்ளது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். இதனுடன், தாஜுல் மஸ்ஜித் கட்டும் பணியையும் அவர் தொடங்கினார், ஆனால் அதை முடிக்க முடியவில்லை.

தாஜுல் மஸ்ஜித் நாட்டின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். அவரது மரணத்திற்குப் பிறகுதான் அது முடிந்தது.

அதே நேரத்தில், ஷாஜஹானி மசூதி என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் முதல் மசூதியையும் அவர் கட்டினார். ஷாஜஹான் பேகம் ஒரு திறமையான நிர்வாகி என்பதைத் தவிர, ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருந்தார். உருது மொழியில் பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

ஹிந்துக்களின் பாதுகாப்பிற்காகவும் பல சட்டங்களை இயற்றியதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்து சொத்து அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.

அவர் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார், ஆனால் குர்ஆன் மற்றும் தீன் ஆகியவை அங்கு கற்பிக்கப்பட்டன. இந்து பெண்கள் அங்கு படிக்க முடியாததால், இந்து பெண்களுக்காக ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.

போபாலின் கடைசி பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் ஆவார். 1901இல் அரியணையை கைப்பற்றியவர். சுல்தான் ஜஹான் பேகமும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

போபாலை நவீனமயமாக்கிய பேகம்


கல்வி பற்றிப் பேசும்போதெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் பெண்கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது பற்றியே அவர் கூறியதாக கித்வாய் கூறுகிறார்.

அந்தக் கால கட்டத்தில், தனது சமஸ்தானத்தில் நவீன விஷயங்களைக் கொண்டுவர வலியுறுத்திய பெண்ணாக கித்வாய் இவரைக் கருதுகிறார்.

அவர் காஸ்ர்-இ-சுல்தானி அரண்மனையைக் கட்டினார், இது இப்போது போபாலில் அகமதாபாத் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இதனுடன், அவர் மிண்டோ ஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னர் அது நீண்ட காலமாக மத்தியப் பிரதேச சட்டமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், சுல்தானியா பெண்கள் பள்ளியையும் அப்போது கட்டியெழுப்பினார், அது இன்னும் இயங்கி வருகிறது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகவும், அகில இந்திய கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் அவர் இருந்தார்.

போபாலின் நவாபி காலத்துக் கட்டடக்கலை குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்ட ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் பேராசிரியர் சவிதா ராஜே கூறுகையில், போபாலில் இந்த பேகம்கள் கட்டிய அரண்மனைகள் மற்றும் பிற பொருட்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார்.

"நாட்டில் உள்ள மற்ற அரண்மனைகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் தனித்தனி பகுதிகளைக் காணலாம். ஆனால் இங்கே, போபால் நகரத்தில் பெண்களே ஆண்கள் போல வேலை செய்கிறார்கள்” என்கிறார்.

இங்குள்ள அரண்மனைகளின் இந்த சிறப்பே அதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்று ராஜே கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் யாத்-இ-பேகமாத் நிகழ்ச்சியை நடத்தும் பர்கத்துல்லா இளைஞர் மன்றத்தின் போபால் ஒருங்கிணைப்பாளர் அனஸ் அலி கூறுகையில், “இந்தப் பெண் நவாப்கள் நகரத்திற்கு வித்தியாசமான அடையாளத்தைக் கொடுத்தனர். கடைசிப் பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் போபாலில் கிங் ஜார்ஜ் மருத்துவமனையைக் கட்டினார், இது இப்போது ஹமிதியா மருத்துவமனை என்று அழைக்கப்படும் இது, நகரத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாகும்.”என்றார்.

மேலும், “இந்தப் பெண்கள் கட்டடங்கள் கட்டினார்கள், அமைதியை நிலைநாட்டினார்கள், தொழிற்சாலைகள் அமைத்தார்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறந்தார்கள். இப்படிப்பட்ட புகழ்பெற்ற வரலாற்றை நினைவுகூருவதும், அதைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் நமது கடமை" என்கிறார் அனஸ் அலி.

பிபிசி தமிழ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 10, 2023 12:36 pm

“இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."”-
இன்றைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 10, 2023 12:43 pm

Dr.S.Soundarapandian wrote: “இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."”-
இன்றைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்!


மக்கள் மதங்களாலும் ஜாதிகளாலும் பிரிந்து கிடப்பதையே இன்றைய அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். காரணம் மக்கள் ஒன்றாக இருந்துவிட்டால் அவர்களால் பதவிக்கு வர முடியாது.

அதனால் தான் சூழ்ச்சி செய்து மதங்களையும் ஜாதியையும் பிரித்து வைத்துள்ளார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக