புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_m10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_m10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_m10சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 10, 2023 7:29 pm

சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக JT1AwH7

பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி தொல்லை தரும் விஷயம், நீர் கடுப்பு மற்றும் சிறுநீர்த் தொற்று பிரச்னை. இந்த சிறுநீர்த் தொற்று அதிகரிக்கும்போது, அரிப்பு ஏற்படுகிறது. இதனால், வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெரும் தொந்தரவை பலரும் சந்திக்கின்றனர். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, இயற்கைமுறையில் தீர்வு சொல்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா.

சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும்போதுதான், எரிச்சல் உணர்வுடன் சிறுநீர் கழித்தல் வலியுடன் சிறுநீர் போவது, சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் வருவது. சிறுநீர்ப் பையில் எப்போதும் சிறுநீர் தேங்கியிருப்பது போன்ற உணர்வினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது அல்லது ரத்தம் கலந்து போவது அடி முதுகில் வலி ஏற்படுவது மற்றும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாவது போன்றவை ஏற்படுகிறது.

சிறுநீர்த் தொற்று யாருக்கெல்லாம் வருகிறது.. எதனால் வருகிறது.



பொதுவாக, சிறுநீர்த் தொற்று உடலில் பேக்டீரியா அதிகரிக்கும்போதுதான் இதுபோன்ற சிறுநீர் வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்கே சிறுநீர்த் தொற்று அதிகளவில் வருகிறது. ஏனென்றால், ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் குழாயின் அளவு சற்று குறைவாக இருக்கும். இதனால், பெண்களுக்கு அதிகளவில் சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

இது ஏற்பட என்ன காரணம் என்று பார்த்தால், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது. சுத்தமில்லாத கழிவறையை பயன்படுத்தும்போது, சிறுநீர் தொற்று இருப்பவர்கள் பயன்படுத்திய கழிவறை சரியாக சுத்தமாகாமல் இருந்து, அது தெரியாமல் அடுத்தவர் போகும்போதுதான் இதுபோன்ற சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

அதுபோன்று சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு சீக்கிரம் தொற்று தொற்றிக் கொள்ளும். மேலும், அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உபாதை இருப்பதால், அவர்களால் வெகுநேரம் சிறுநீரை அடக்க முடியாது. எனவே, பொது இடங்களை அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். இதுவும் அவர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட காரணமாகிறது.

நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர்த் தொற்று நீங்க தீர்வு


தண்ணீர்



சிறுநீர் எரிச்சலாக போகிறது என்றாலே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று அர்த்தம். இதனால் சிறுநீர் அடர்த்தி அதிகமாகி, துர்நாற்றத்துடன் போகிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது, எரிச்சல் உணர்வு இருந்தால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நேரடியாக அதிகளவில் குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகளாகவோ, மோராகவோ, இளநீராகவோ தினசரி குடித்து வரும்போது, சிறுநீர்ப் பாதை சீராகி தொற்று விரைவில் குணமாகும்.

மேலும், சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது. வெந்தயம் கொதிக்க வைத்த தண்ணீராகவோ அல்லது வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சில துளிகள் விட்டு குடித்து வருவது மிகவும் நல்லது. மேலும், சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர்த் தொற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

பார்லி அரிசியுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்து வர, தொற்றுகள் விரைவில் குணமாகி எரிச்சல், வலி போன்றவற்றை கட்டுப்படுத்தும். அதனால், நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதுபோன்று பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளும்போது, வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், பனங்கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து குடிக்க வேண்டும். ஏனென்றால், பனைவெல்லம் குளிர்ச்சித் தன்மை உடையது என்பதால், உடலின் சூட்டை வெகுவாகக் குறைத்து விரைவில் நிவாரணம் தரும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள்



வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ள பழங்களான, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பைனாப்பிள், கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. இதனை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

சீரகம் கொதிக்க வைத்த தண்ணீருடன் திராட்சை சேர்த்து கொதிக்கவிட்டு அருந்தலாம்.

நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகள்



நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்,செளசெள , முள்ளங்கி முட்டைகோஸ், வெண் பூசணிக்காய் போன்ற நீர்ச் சத்து அதிகமுள்ள காய்கறிகளை தொற்று இருக்கும்போது உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அதுபோன்று, வாழைத்தண்டுடன், சுரைக்காய் துண்டுகள் சிலவற்றை சேர்த்து, ஜூஸாக செய்து எடுத்துக் கொள்ளலாம்.

ப்ரோ பயாடிக்ஸ்



ப்ரோ பயாடிக் என்பது தயிர், மோரில் உள்ள லாக்டோ பாசில்ஸ் என்கிற நல்ல பாக்டீரியாதான். எனவே, மோர் அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, லாக்டோ, பாசிலஸ் எனும் நல்ல பாக்டீரியா உள்ளே சென்று, உடலில் தங்கியிருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது. அதுபோன்று சர்க்கரை நோயாளிகள், மோருடன் கால் தேக்கரண்டி வெந்தயம் வறுத்துப் பொடித்ததை சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூலிகைகள்


தினசரி, நெருஞ்சில்பொடி 1 தேக்கரண்டி அளவு எடுத்து 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.அல்லது, புனர்னவா என்கிற முக்கிரட்டை கீரை, கீரைக்காரர்களிடம் கிடைக்கும். அதனை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது முக்கிரட்டைப் பொடியை வாங்கியும் பயன்படுத்தலாம். இதுவும், 1 டம்ளர் தண்ணீருக்கு 1 தேக்கரண்டி என்ற விதத்தில், கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

அடுத்து நீர்முள்ளி மூலிகை சிறந்த நிவாரணம் தரும். இது சிறுநீர் தொற்று மட்டுமில்லாமல், சிறுநீர் பையில் உள்ள கல்லடைப்பு மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் பிரிவது போன்றவற்றிற்கும் நல்ல நிவாரணம் தரும்.

2 டம்ளர் தண்ணீரில் 1 துண்டு பட்டை,, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிக்கட்டிக் கொண்டு, அதனுடன், எலுமிச்சைப் பழம் அரை மூடி பிழிந்து அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர, சிறு நீர் எரிச்சல், சிறுநீர் தொற்று விரைவில் குணமாகும்.

அரிப்பு குணமாக..



சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட தொற்றுதான் காரணம், அதனால் தொற்றை சரி செய்தாலே, அரிப்பு நீங்கிவிடும். அதற்கு , திரிபலா சூரணம் 1 தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அந்த நீரால், அலசிவிட்டு, ஈரம் இல்லாமல், டிஸுவை வைத்து அந்த இடத்தை துடைத்துவிட வேண்டும்.

மேலும், அருகம்புல் எண்ணெயை வீட்டிலேயே தயார்செய்து வைத்துக்கொண்டு அந்த எண்ணெய்யை இரவில் படுக்கும் முன்பு அந்த இடத்தில் தடவி வர, அரிப்பு நீங்கி அதனால் ஏற்பட்ட புண்களும் ஆறிவரும்.

குறிச்சொற்கள் #சிறுநீர்த்_தொற்று #நீர்க்கடுப்பு #Urinary_tract_infection #UTI
குங்குமம் டாக்டர்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 10, 2023 8:57 pm

பயனுள்ள தகவல்கள் . பொது ஜன கழிவறைகள் மூலம் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக