by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Srinivasan23 |
|
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
Page 2 of 2 • 1, 2
![சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன் - Page 2 NVbP0F5](https://i.imgur.com/nVbP0F5.jpg)
தந்தை: கிருஷ்ணசாமி சுப்பிரமணியம்
தாயார்: சுலோச்சனா சுப்பிரமணியம்
பிறந்த தேதி: 9 ஜனவரி 1955
மனைவி: க்யோக்கோ ஜெய்சங்கர் - ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்
குழந்தைகள்: துருவா ஜெய்சங்கர், அர்ஜுன் ஜெய்சங்கர், மேத்தா ஜெய்சங்கர்
கல்வி: B.Sc., M.A. (Political Science), M.Phil., Ph.D. (International Relations) Educated at University of Delhi, Delhi and Jawaharlal Nehru University, New Delhi
தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், 1955ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியம் சர்வதேச மூலோபாய விவகாரங்களின் ஆய்வாளராக இருந்தார்.
1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த இவர், முதலில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
1985ல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படையின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார்.
2000ல் செக் குடியரசின் இந்திய தூதராக நியமிக்கப்படும் முன்பு, ஹங்கேரி மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
2009ஆம் ஆண்டு சீனாவுக்கான இந்திய தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்காக ஜெய்சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.
டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக பணியாற்றினார்.
மோதியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், மேண்டரின் ஆகிய மொழிகள் தெரியும்.
#சுப்பிரமணியம்_ஜெய்சங்கர் #ஜெய்சங்கர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
அர்ப்பணிப்பை சிறந்த முறையில் அறிந்தே பிரதமர் மோடி இவரை
வெளி உறவு துறை மந்திரியாக நியமித்துள்ளார்.
அவர் தமிழர் என்றே மனம் மகிழ்வோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன் - Page 2 300920231696057326](https://s3.india.com/wp-content/uploads/2023/09/300920231696057326.jpeg)
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம்: எஸ். ஜெய்சங்கர்.
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம் என்று வாழும் கலை அமைப்பின் நான்காவது உலக கலாசார விழாவில் பங்கேற்றுப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
வாஷிங்டன் டிசி-யில் நேஷனல் அரங்கில் நடைபெறும் வாழும் கலை அமைப்பின் நான்காவது உலக கலாசார விழா எனப்படும் மிகப் பெரிய திருவிழாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
வாழும் கலை அமைப்பின் உலக கலாசார விழாவின் ஒரு பகுதியாக 180 நாடுகளைச் சேர்ந்த உலக கலாசாரங்களின் ஒருங்கிணைப்பாக இது அமைந்திருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அமைப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விழாவில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், "நாம் அனைவரும் வளங்களை விரிவுபடுத்தவும் நமது கிரகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முயற்சிக்கும்போது, இயற்கையை ஒடுக்கும் சவால்களை நாம் எதிர்கொள்வது இயற்கையானது. இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட மோதல்கள் அல்லது இடையூறுகள் எதுவாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகில், நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஒன்றுமையுடன் இருக்க வேண்டும். வாழும் கலை அமைப்பு, இந்த விஷயத்தில் ஒரு உத்வேகமான உதாரணம் மற்றும் உக்ரைன் மோதலில் அவர்கள் அண்மையில் செய்த மாற்றத்தை நான் தனிப்பட்ட முறையில் கண்டேன். இன்று, அவர்களின் செய்தி, உங்கள் செய்தி, எங்கள் செய்தி எல்லாம் அக்கறை, பகிர்வு, பெருந்தன்மை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். இதுதான் எங்களை இங்கு ஒன்றிணைத்துள்ளது” என்று கூறினார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், இந்த நிகழ்ச்சி பற்றி கூறுகையில், வாழும் கலை உலக கலாசார விழா 2023-ல் இடம்பெறும் இசை, நடனம் மற்றும் உத்வேகம் மூலம் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற உலகளாவிய செய்தியை தெரியப்படுத்துகிறோம் என்றார்.
சமூகம், வணிகம், அரசியல், மதம், கல்வி என பலவற்றால் ஒருங்கிணையும் நாம், இதனை அனைவரின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முன்னாள் அவைத் தலைவர் நான்சி பெலோசி, கிராமி விருது வென்ற சந்திரிகா டாண்டன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் 180 நாடுகளைச் சேர்ந்த 17,000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கருடன் இணைந்து யோகா பயிற்சியும் இடம்பெறுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 200 கலைஞர்களின் அமெரிக்கா தி பியூட்டிஃபுல் மற்றும் வந்தே மாதரம் போன்ற இசை மற்றும் சிறப்பான நிகழ்ச்சிகளுடன் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் கிளாசிக்கல் சிம்பொனி, உலகளாவிய கிட்டார் இசைக்குழு விருது வென்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஆப்பிரிக்க, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கு முன் நடைபெறாத மற்றும் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் வகையில் சுமார் 10 லட்சம் மக்கள், வாழும் கலை உலக கலாசார விழாவின் ஒரு பகுதியாக கூடுவர், இது உண்மையிலேயே மலர்கொத்து போன்றது. மனிதநேயம், அமைதி மற்றும் கலாசாரத்தின் மிகப்பெரிய திருவிழாவிற்கு 180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடியதன் மூலம், உலகின் கலாசாரங்களும் ஒன்றிணைந்துள்ளன என்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்துகொண்டது, “நமது பன்முகத்தன்மையைக் கொண்டாட இது ஒரு அழகான சந்தர்ப்பம். நமது கிரகம் மிகவும் மாறுபட்டது, ஆனால் நமது மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒற்றுமை உள்ளது. இன்று, இந்த சந்தர்ப்பத்தில், சமூகத்திற்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு நம்மை அர்ப்பணிப்போம். அனைவரின் முகத்திலும் புன்னகையை ஏற்படுத்துவோம். அதுதான் மனிதநேயம். அதைத்தான் நாம் அனைவரும் உருவாக்கப் போகிறோம். ஞானத்தால் ஆதரிக்கப்படாவிட்டால் எந்த கொண்டாட்டமும் ஆழம் பெறாது. மேலும் அந்த ஞானம் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் அனைவரும் தனித்துவமானவர்கள், நாம் அனைவரும் ஒன்று என்பதை அங்கீகரிப்பதே ஞானம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் சொல்கிறேன் - நாம் அனைவரும் ஒருவருக்காக ஒருவர். நாம் அனைவரும் ஒரே உலகளாவிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம் வாழ்க்கையை கொண்டாடுவோம். சவால்களை நடைமுறை ரீதியாக ஏற்று எதிர்கொள்வோம். இதற்கும் வரும் தலைமுறைக்கும் சிறந்த எதிர்காலத்தை கனவு காண்போம் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் பேசுகையில், “கலாசாரம் பாலங்களை கட்டுகிறது, சுவர்களை உடைக்கிறது, உரையாடல் மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் உலகை ஒன்றிணைக்கிறது, மேலும் மக்கள் மற்றும் நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. கலாசாரம் அனைத்து உலகளாவிய குடிமக்களுக்கும் இடையே சக்திவாய்ந்த பரிமாற்றங்களை உருவாக்க முடியும். இன்று, அமெரிக்காவின் நேஷனல் அரங்கில், உலகின் அனைத்து கலாசார செழுமைகளும் ஒன்றாக இணைந்துள்ளன.
இப்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை இப்படித்தான் விடாமுயற்சியுடன் வெல்வோம். இப்படித்தான் நாம் அமைதியைக் கட்டியெழுப்புவோம், மோதல்களைத் தீர்ப்போம், பசியை ஒழிப்போம், ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வோம், தரமான கல்வியை முன்னேற்றுவோம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்போம். இப்படித்தான் நாங்கள் முன்னேறுவோம், யாரையும் விட்டுவிடாமல் என்று நீண்ட கரவொலிகளுக்கு இடையே பேசினார்.
உலக கலாசார விழா 2023-ஐ தொடர்ந்து, நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் மேலும் இரண்டு நாள் கலாசார செழுமை, ஒற்றுமை மற்றும் உலகளாவிய கொண்டாட்டத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் கலைஞர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாஷிங்டனில் உள்ள இந்தியா இல்லத்தில், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்தியா-அமெரிக்க உறவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்த நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பல முன்முயற்சிகளை பட்டியலிட்ட வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியா-அமெரிக்க உறவுகள் எல்லா காலத்தில்ம் உச்சத்தில் இருந்ததாக ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
வாஷிங்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசினார். இந்தியா - அமெரிக்க உறவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்த நரேந்திர மோடி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார், அவர்களது இருதரப்பு உறவுகள் நிலவைத் தாண்டியும் செல்லும் என்று கூறினார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய கூட்டு முயற்சிகள் குறித்து அமைச்சர் கவனத்தை ஈர்த்தார். ‘ஐ’ ('I') என்ற எழுத்தில் தொடங்குவதற்கான பொதுவான தன்மையை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முயற்சிகளில் இந்தியா-மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் ஐ2யு2 (I2U2) (இந்தியா, இஸ்ரேல், யு.எஸ், யு.ஏ.இ), இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் ஐ-சி.இ.டி (I-CET) முயற்சி ஆகியவை அடங்கும். "ஐ' என்ற எழுத்து அமெரிக்காவிற்கு மிகவும் நல்லது” என்று ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
ஜெய்சங்கர் தனது உரையில், இந்தியா-அமெரிக்க உறவுகள் கண்ட விதிவிலக்கான ஆண்டை ஒப்புக்கொண்டதுடன், பல ஆண்டுகளாக இருதரப்பு உறவுகளை மாற்றியமைத்த வரலாற்றுப் பயணங்கள் குறித்தும் வலியுறுத்தினார். 1985-ல் ராஜீவ் காந்தியின் வருகை, 2005-ம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங்கின் வருகை, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது, பிரதமர் நரேந்திர மோடியின் ஏராளமான பயணங்கள் இதில் அடங்கும். இந்த முக்கியமான கூட்டங்கள் அனைத்திலும் ஜெய்சங்கர் தனது இருப்பை எடுத்துரைத்தார். மேலும், அந்த உறவு வெறும் பரிவர்த்தனைகளிலிருந்து கூட்டு முயற்சிகளுக்கு மாறியதை சுட்டிக்காட்டினார். “நம்முடைய உறவு எப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளது. முன்பு இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் சமாளித்துக்கொண்டிருந்தன, இப்போது அவை ஒருவருக்கொருவர் வேலை செய்கின்றன” என்று அவர் கூறினார்.
ஜி20 வெற்றி அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று கூறிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “குறிப்பாக நான் நினைக்கிறேன், நான் சொல்ல வேண்டும், ஏனென்றால், நான் இன்று இந்த நாட்டில் இருக்கிறேன், பங்களிப்பு, ஆதரவு மற்றும் புரிதல் வெற்றிகரமான ஜி20-ஐ உருவாக்க அமெரிக்காவிலிருந்து கிடைத்தது, வாஷிங்டன் டி.சி-யில் பொதுவில் நான் நிச்சயமாக அங்கீகரிக்க விரும்புகிறேன் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
1949-ல் பண்டித ஜவஹர்லால் நேரு அமெரிக்கா சென்றபோது 3,000-ஆக இருந்த இந்திய-அமெரிக்க சமூகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, இன்று 5 மில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சியாக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விளக்கினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மனித பிணைப்பு அவர்களின் உறவின் வரையறுக்கும் பண்பு என்று அவர் வலியுறுத்தினார். இந்த உறவுகளை வலுப்படுத்துவதில் புலம்பெயர்ந்தோர் பாராட்டத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர்.
“1949-ல் பண்டித ஜவஹர்லால் நேரு அமெரிக்கா வந்தபோது 3,000 இந்திய அமெரிக்கர்கள் இருந்தனர், 1966-ல் இந்திரா காந்தி வந்தபோது 30,000 இந்திய அமெரிக்கர்கள் இருந்தனர், 1985-ல் ராஜீவ் காந்தி இங்கு வந்தபோது 3,00,000 இந்திய அமெரிக்கர்கள் இருந்தனர், பிரதமர் மோடி இங்கே வந்தபோது 3 மில்லியன் (30 லட்சம்) இந்திய அமெரிக்கர்கள் இருந்தனர். 3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய அமெரிக்கர்கள் மற்றும் இப்போது கிட்டத்தட்ட 5 மில்லியனாக வளர்ந்துள்ளது. நம் உறவில் ஏதாவது தனித்தன்மை இருந்தால் அது நமக்குள் இருக்கும் மனித பந்தமாகும். இந்தியா-அமெரிக்க உறவில் புலம்பெயர்ந்தோரின் பங்கு, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது” என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சந்திரயான் பயணம், ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, பிற நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அதன் மனிதாபிமான உணர்வை நிரூபித்தது போன்ற சாதனைகளின் திறன் கொண்ட புதிய இந்தியாவின் திறன்களில் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், 5ஜி வெளியீட்டில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜெய்சங்கர், இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் விரும்பத்தக்க கூட்டாளிகளாகக் கருதும், முக்கியமான விஷயங்களில் உரையாடலுக்கான திறந்த வழிகள் வளர்ந்து வரும் உணர்வை எடுத்துரைத்தார். அவர்களின் உறவின் வேதியியலும் ஆறுதலும் எதிர்காலத்திற்கான மகத்தான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார். “பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க அல்லது கவலைகளைப் பகிர்ந்து கொள்ள நாம் ஒருவருக்கொருவர் தொலைபேசியை எடுக்கலாம்” என்று அவர் கூறினார்.
“அதைப் வடிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அடித்தளத்தில் தான் இன்று நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்... அடிவானத்தில் ஒரு புதிய நம்பிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம்... ஆகவே, அடிவானத்தை பார்க்கும்போது, உண்மையில் அற்புதமான சாத்தியக்கூறுகளை நாம் காண்கிறோம் என்று நினைக்கிறேன், அதை இந்த சமூகம்தான் வழங்கப்போகிறது” ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியா-அமெரிக்க உறவில் நம்பிக்கையின் சான்றாக ஜெய்சங்கர், இந்த கூட்டுறவு தொடர்ந்து செழித்து வளரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|