ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

3 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Fri Mar 03, 2023 1:34 pm

First topic message reminder :

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Healthy-food

விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன



தலைப்பைப் பார்த்தவுடன், ‘இதைத்தான் தினம்தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பார்க்கிறோமே... நீங்க என்ன புதுசாச் சொல்லப்போறீங்க’ என்று நீங்கள் கேட்கலாம்.

* இந்த உணவைச் சாப்பிட்டால் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகும்!

* இதை எங்கே பார்த்தாலும் உடனடியாக வாங்கிச் சாப்பிடுங்கள்... உங்கள் வம்சத்துக்கே சர்க்கரை நோய் வராது!

* இந்த நான்கையும் அரைத்துச் சாப்பிட்டால் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், இதய பலவீனம் எல்லாமே சரியாகிவிடும்!

* இறைவனின் அரிய படைப்பான இந்த விதையை மட்டும் அரைத்துச் சாப்பிட்டால் 48 மணி நேரத்தில் புற்றுநோய் குணமாகிவிடும்!

வாட்ஸப்பைத் திறந்தாலே இப்படியான செய்திகள் வந்து கொட்டுகின்றன. எதையுமே யோசிக்காமல் இதையெல்லாம் பத்து குரூப்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டு, ஏதோ பெரும் சேவை செய்ததாகத் திருப்தி அடையும் வாட்ஸப் டாக்டர்கள் அதிகம் உண்டு நம்மிடையே!

உணவு பற்றிக் காலம் காலமாகப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்று யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு இளைஞர்கள் சவர்மா, பக்லாவா பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், சங்க காலக் கவிஞர்கள் ஊன்சோறு எனப்படும் பிரியாணி வரைகூட நிறைய பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவர்கூட, ‘சரியான உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை’ என்று சொல்கிறார். உடல் ஆரோக்கியமாக இயங்கவும், மனம் உற்சாகமாகச் செயல்படவும் உணவே அடிப்படையாக இருப்பதால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணவு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறோம். சமீப காலங்களில் அடுத்தடுத்து வந்து தாக்குகிற வைரஸ் நோய்களில் இருந்து மீளவும் தற்காத்துக்கொள்ளவும் ஆயுதமாகவும் கேடயமாகவும் இருக்கிறது உணவு. அதனால்தான் வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் வருகிற உணவு பற்றிய செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்புகிறோம்.

பிரச்னை என்னவென்றால், விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. அதுபற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்தத் தொடர்.

புதிது புதிதாக உணவுப்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கிரீன் டீ; இன்னொரு பக்கம் நாம் பார்த்தும் சுவைத்தும் அறிந்திராத வண்ண வண்ணப் பழங்கள்; வெளிநாடுகளிருந்து வந்திறங்கும் ஓட்ஸ், பெனோவா, கிரனோலா போன்ற பேக்கிங் உணவுகள்; புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள் என உணவு, உணவு சார்ந்த பொருள்கள் சந்தைகளில் விதவிதமாகக் குவிகின்றன. இவற்றைப் பற்றி வசீகரமாகவும், ஆரோக்கியம் பற்றிய ஆசை அல்லது அச்சத்தைத் தூண்டும் விதத்திலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இன்னொரு தரப்பினர், மரபு சார்ந்த நம் பாரம்பர்ய உணவுகளைத் தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும், ‘இந்த உணவில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது’, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வராது’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் நவீன உணவுகள், இன்னொரு பக்கம் பாரம்பர்ய உணவுகள்... இவற்றைப் பற்றி வெளிவரும் செய்திகள் உண்மைதானா என்று அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்வதும் இந்தத் தொடரின் நோக்கம்.

‘டாக்டர், சரியோ தவறோ... எல்லாமே உணவுகள்தானே! அவற்றைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உணவு ஒரு நோய்க்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையில், அது மருந்தாக இல்லாவிட்டாலும்கூட சாப்பிடுவதால் எந்த பாதிப்புமில்லைதான். பிரச்னை எங்கேயென்றால், ஒரு நோய் இருக்கிறது. அதற்காக மருந்து சாப்பிடும் ஒருவர், அந்த மருந்தையே கைவிட்டுவிட்டு இந்த உணவுக்கு மாறுவது கண்டிப்பாக உடலியக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மலை விளிம்பில் தொங்கியபடி உயிர்ப் போராட்டம் நடத்தும் ஒருவர், வலுவான கிளையை விட்டுவிட்டு செடியைப் பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைப்பது போன்ற அபத்தம் இது!

நம் உடல் பற்றிய கற்பிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கூடுதலாக ஒரு உணவை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறார். அதற்காக புதிய உணவுப்பழக்கத்துக்கு மாறுகிறார் என்றால் பெரிய பாதிப்பு இல்லை.

தீவிரமான இதய நோய் இருக்கும் ஒருவர், வாட்ஸப்பில் ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இதய நோய் குணமாகிவிடும்’ என்று ஒரு தகவலைப் பார்க்கிறார். அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயாமல் நோய்க்கு இதுவரை எடுத்து வந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு வாட்ஸப்பில் வந்த பரிந்துரையைப் பார்த்துப் புதிய உணவு அல்லது டயட்டுக்கு மாறுகிறார் என்றால், அவர் விபரீதமான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை, அந்த உணவோ டயட்டோ அந்த நோயைக் குணமாக்கும் தன்மை கொண்டிருந்தால் பிரச்னையில்லை. அவை அந்த நோய்க்கு பலனளிக்காமல்போனால் அவரது இதயநோய் தீவிரமாகலாம். இறப்புகூட நேரலாம்.

சிலர், தான் கேள்விப்பட்ட, படித்த செய்திகளை எல்லாம் மற்றவர்களுக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியாக நோய் குணமாகும் என்று சில உதாரணங்களையெல்லாம் சொல்லி மற்றவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடுவார்கள். எதையும் தன்னளவில் பரிசீலித்துப் பார்க்காமல் மற்றவர்களுக்கு அள்ளிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினர்தான் இருப்பதிலேயே ஆபத்தானவர்கள். இது மிகப்பெரிய சமூகப் பிரச்னை.

உதாரணத்துக்கு நாட்டுச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். ‘வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். நாட்டுச்சர்க்கரை எவ்வளவு சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது. ஐந்து டீஸ்பூன் போட்டு டீ குடிக்கலாம்’ என்று ஒரு கருத்து நம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

வெள்ளைச் சர்க்கரை கொஞ்சம் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது; நாட்டுச் சர்க்கரை சற்று இயற்கையானது என்பதைத்தவிர, சுக்ரோஸ் என்று சொல்லப்படுகிற மூலக்கூறு இரண்டிலும் ஒரேயளவுதான் இருக்கிறது. பாலீஷ் செய்யப்படுவதுதான் வித்தியாசம். ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் வெள்ளைச் சர்க்கரை 100 சதவிகிதம் கெடுதல் என்றால் நாட்டுச் சர்க்கரை 90 சதவிகிதம் கெடுதல். இதுதான் உண்மை.

இதுமாதிரி பல உணவுப்பொருள்கள் பற்றி மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவையே மருந்தாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

நம் உணவு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், இப்போது பயிற்றுவிக்கப்படுகிற உணவுப்பழக்கங்கள், நம்பிக்கைகள், டயட்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியவரும். உணவு என்பது, உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கான சக்திக்கும் உதவும் பொருள். அவ்வளவுதான்.

கற்கால மனிதர்களுக்கு உணவு என்பது ஆடம்பரம். தினம் தினமெல்லாம் அவர்களுக்கு உணவு கிடைக்காது. காட்டுக்குப் போய் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடினால்தான் உணவு. அல்லது விலங்குகள் நடமாடும் காட்டில் கிழங்குகள், பழங்களைத் தேடித் திரிந்து பறித்துவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேடல்தான். அன்று உணவு கிடைக்கவில்லையென்றால் பட்டினி. ‘இந்த உணவு விஷம்; இந்த உணவைச் சாப்பிட்டால் உயிர் போகாது’ என்ற அளவில்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கான தேடல்தான் மனிதர்களை நாகரிகமடையச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் வேளாண்மையைக் கண்டறிந்தார்கள். ஆற்றங்கரையோரங்களில்தான் அறிந்த உணவுகளைத் தன் தேவைக்கு விளைவித்துக்கொண்டார்கள்.

இப்போது உணவில் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட முடிகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு கப்பலில் வந்திறங்குகின்றன. உலகத்தின் வகைவகையான உணவுகள் நம் வீட்டுக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன.

அடித்தட்டு மக்கள் முதல் ஆடி காரில் பயணிப்போர் வரை எல்லோருமே உணவு விஷயத்தில் தேடல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்ய இங்கே விதவிதமான உணவுகள் இருக்கின்றன. யூடியூபில் வரும் வீடியோக்கள் தினம் தினம் புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்கின்றன. இந்தச் சூழலில் உணவு குறித்த சரியான விழிப்புணர்வு ரொம்பவே முக்கியம்.

இன்னொரு பக்கம், ‘இதெல்லாம் நம் பாரம்பரிய உணவுகள். இதைச் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் பலசாலிகளாக இருந்தார்கள்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுப் பரிந்துரைக்கப்படும் பல உணவுகள் எளிய மக்கள் வாங்கமுடியாத விலையில் இருக்கின்றன.

உணவு என்பது தனி மனிதர்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது. புதிதாக ஒரு சமையல் எண்ணெய் அறிமுகமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது இந்த இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகும், இதயத்தைப் பாதுகாக்கும்’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. அதனால் மக்கள் அதைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால், அந்த எண்ணெய் தயாரிப்பதற்கான விதை இந்தியாவில் விளைவதில்லை என்றால் இன்னொரு நாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். நம் நாட்டில் கிடைக்கும் வளங்களையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதால் நம்மூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம். அந்நியச் செலாவணி இழப்பு இன்னொரு பெரிய பாதிப்பு.

இந்தியாவில் 135 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்கான உணவுச்சந்தை என்பது பிரமாண்டமானது. அதேபோல உணவைச் சார்ந்த மருத்துவச் சந்தையும் மிகப்பெரியது. உணவுக்குப் பின்னால் மிகப்பெரிய வணிகமும் சர்வதேச அளவிலான அரசியலும் இருக்கிறது. அதனால் உணவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

‘ட்ரெயிலர் எல்லாம் ஓகே... படம், பார்க்கும்படி இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இந்தத் தொடரில் எதையெல்லாம் பேசப்போகிறோம் என்பதை இந்த இடத்திலேயே சொல்லிவிடுகிறேன். இது நல்லது, இது கெட்டது, இது ஆரோக்கியமானது என்று எதையும் ஒற்றை வரியில் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போவதில்லை. உணவு குறித்த நம்பிக்கைகள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

சர்க்கரை நோய் ஏன் சிலருக்கு வருகிறது; ஏன் சிலருக்கு வருவதில்லை; அந்த நோயின் உண்மையான இயல்பு என்ன; எந்தெந்த உணவில் சர்க்கரை நோய்க்கான ஊக்கிகள் அதிக அளவில் இருக்கின்றன; எவற்றையெல்லாம் குறைவாக உட்கொண்டால் சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்?

புதிது புதிதாக உப்புகள் அறிமுகமாகின்றன. பொதுவாக உப்பில் என்னதான் இருக்கிறது?

எண்ணெய்களில் என்ன இருக்கிறது; அவற்றை உட்கொள்வதால் என்ன பயன்; என்ன இழப்பு?

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் பகுத்தறியப்போகிறோம். நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த புரட்டுகளையும்கூட நாம் பேசலாம். உணவின் அறிவியலை மட்டுமல்ல, வரலாறு, புவியியல், கணிதம், அரசியல் என எல்லாவற்றையும் பேசுவோம்.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். குழந்தைகள் நலன், வாழ்வியல் நோய்கள், உணவுப்பழக்கங்கள் குறித்து சர்வதேச இதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். இயல்பிலே உணவு குறித்துத் தேடல் கொண்ட இவர், உடல் பருமன், சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, குழந்தையின்மை போன்ற நோய்களை உணவுமுறை மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கிவருகிறார். சர்வதேச அளவில் உணவு அறிவியல், அரசியல் குறித்து மருத்துவர்களுக்கான பல்வேறு மாநாடுகளில் உரையாற்றியுள்ள இவர், பொதுவெளியில் இருக்கும் உணவு பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்.


விகடன்


Last edited by சிவா on Mon Mar 27, 2023 12:25 am; edited 5 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:32 am

தானியம், சிறுதானியம் தொடங்கி தண்ணீர், பால் வரை தனித்தனியாக அலசி ஆராய்ந்தோம்.

அடுத்த சில வாரங்களுக்கு உணவுமுறைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

உணவுமுறை என்றவுடன் எல்லோருக்கும் தோன்றுவது டயட். ‘நான் டயட்டில் இருக்கிறேன்' என்று ஏதாவது ஒரு டயட் பேரைச் சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. பெரும்பாலும் பலரும் டயட் முறையைப் பின்பற்றுவதற்கு மிகமுக்கிய காரணம், உடல் பருமன். உணவுகள் தொடர்பான ஒரு தொடரில் உடல் பருமன் பற்றிப் பேசாமல் இருக்க முடியாதல்லவா?

இவ்வளவு முக்கியமான விஷயத்தை இத்தனை வாரங்கள் கழித்துப் பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதலில் உணவுகள் பற்றிய அடிப்படைப் புரிதல் நமக்கு வேண்டும். உணவுகளைப் பற்றி அலசி ஆராய்ந்துவிட்டு, உடல் பருமன் பற்றியும், அதைச் சரி செய்வதற்கான உணவுமுறைகள் பற்றியும் பார்ப்பதே சரியாக இருக்கும். உடல் பருமனுக்காகப் பின்பற்றப்படும் உணவு முறையைத்தான் பெரும்பாலும் ‘டயட்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். ஒருவர் டயட்டில் இருக்கிறேன் என்று கூறினால் அவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு நாமாகவே வந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு டயட்டும் உடல் பருமனும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.

உடல் பருமனைக் குறைக்க மக்கள் பல்வேறு விதமான விஷயங்களைக் காலங்காலமாகப் பின்பற்றிவருகிறார்கள். அதில் சில விசித்திரமான பழக்கங்களும் உண்டு. 11-ம் நூற்றாண்டில் வில்லியம் பாண்டிங் என்ற அரசரைப் பற்றிய குறிப்புகளில் ‘டயட்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஆரோக்கியமாக இருந்த அவர், கடைசிக் காலத்தில் உடல் பருமனால் அவதிப்பட்டிருக்கிறார். அதைக் குறைக்க மூன்றுவேளைகளும் வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் வெறும் மதுவை மட்டும் குடிக்கத் தொடங்கினார். உடல் எடை குறைந்திருக்கிறது. ஒருமுறை மது அருந்திவிட்டு குதிரையில் பயணம் செய்தபோது விபத்து ஒன்றில் சிக்கி இறந்திருக்கிறார் அவர்.

இப்படிப் பல வித்தியாசமான டயட்களை மக்கள் பின்பற்றியிருக்கிறார்கள். லார்டு பைரன் என்ற ஆங்கிலக் கவிஞர், ‘உடல் பருமனைக் குறைப்பதற்கு வினிகர், தேன் மற்றும் தண்ணீரை மட்டுமே குடித்தேன்' என்று கூறியுள்ளார். முட்டைகோஸ் சூப் தொடங்கி குடற்புழுக்களை விழுங்கி அதன்மூலமாக உடல் எடையைக் குறைத்தது வரை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல பல திகைப்பூட்டும் டயட் முறைகளைப் பல்வேறு நாடுகளில் முற்கால மனிதர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

இதுமாதிரியான விசித்திரங்கள் ஒருபுறம் இருக்க, 1864-ம் ஆண்டில் வில்லியம் பாட்டிங் என்பவர் டயட் பற்றி முதன்முதலில் ஒரு புத்தகத்தை எழுதுகிறார். ‘Letter on Corpulence’ என்ற அந்தப் புத்தகத்தில், பருமனான தன் உடல் எடையைக் குறைக்கப் பின்பற்றிய வழிமுறைகளை அவர் விளக்கியுள்ளார். பிரட், சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நிறுத்திவிட்டு இறைச்சி, காய்கறி மற்றும் மீனை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்று அதில் பதிவு செய்கிறார். அது மிகப்பெரிய விவாதத்தை அக்காலத்தில் ஏற்படுத்தியது.

அதன்பிறகு நிறைய டயட் வகைகள் புழக்கத்திற்கு வந்தன. ‘GM Diet' என்ற ஏழு நாள்களுக்கு ஏழுவித உணவுகளைச் சாப்பிடும் முறை, ‘Atkins Diet' என்ற மாவுச்சத்தை முழுவதுமாகக் குறைத்து, கொழுப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் முறை என்று பல டயட்கள் அறிமுகமாகின. தற்போது அதிகம் புழக்கத்தில் இருக்கும் ஒன்று, ‘Paleo Diet.' மாவுச்சத்துகளைக் குறைத்துவிட்டு காய்கறிகள், கொழுப்பு உணவுகள், புரத உணவுகள், அசைவ உணவுகள், முட்டை ஆகியவற்றை எடுத்துக்கொள்வதுதான் இந்த டயட். ஒவ்வொரு உணவு முறைக்கும் பலவித பயன்கள் இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் டயட் என்பதைத் தொடர்புபடுத்துவது உடல் எடைக்குறைப்பிற்குத் தான்.

உடல் பருமன், தற்போது உலகின் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. அதற்காக கண்ட, கேட்ட பலவற்றையும் பின்பற்றுகிறார்கள். தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்படும் மாத்திரை தொடங்கி ‘அமேசான் காட்டில் பறிக்கப்பட்ட மூலிகை', ‘உடலில் உஷ்ணமேற்றி கொழுப்பு கரைக்கும் பெல்ட்' என எதைச் சொன்னாலும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய் ‘இந்த ஜெல்லை வயிற்றில் தடவினால் உடல் எடை குறைந்துவிடும்' என்ற அளவுக்கு விளம்பரங்கள் வந்துவிட்டன.

நாம் தினம்தினம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறையைத் தவிர்த்து வேறு ஒரு புதிய முறையைக் கடைப்பிடிக்க ஒருவித ஒழுக்கம் அவசியம். அதைச் செய்யாமல் மாத்திரைகளை விழுங்கியோ, மூலிகையைத் தின்றோ, ஜெல்லைத் தடவியோ எடையைக் குறைக்கமுடியாது. கவர்ச்சியான பல்வேறு விளம்பரங்களில் மயங்கி மக்கள் பணத்தை இழக்கிறார்கள. சில ஊர்களில் எடை குறைக்கும் சென்டர்களே இயங்குகின்றன. 5 கிலோவுக்கு 5,000 ரூபாய், 10 கிலோவுக்கு 10,000 ரூபாய் என்று பொருள்களை விற்பதுபோல விலை சொல்கிறார்கள். கொழுப்பைக் குறைக்கும் பானம் என்ற பெயரில் ஒன்றைக் குடிக்கக் கொடுப்பது, கயிற்றைக் கட்டிச் சுற்றவிடுவது எனப் பல சித்துவேலைகளைச் செய்கிறார்கள். இதெல்லாம் பலனளிக்குமா என்று யோசிக்காமல், முயற்சி செய்துதான் பார்ப்போமே எனப் பலரும் இதில் வீழ்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அப்பாவி பொதுமக்கள்தான் இதை அறியாமையில் செய்கிறார்கள் என்றால், சில மருத்துவர்களும் இந்த வினோதமான மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பின்பற்றுகிறார்கள்.

உடல் பருமன் ஏற்படுவதற்கு உண்மையான காரணம் என்ன, அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் எவை, நாம் பின்பற்றவேண்டிய வாழ்க்கைமுறைகள் என்னென்ன என்பவை பற்றி அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம். உணவுமுறையைப் பற்றிப் பேசுகையில் வாழ்க்கைமுறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குக் காரணம் உண்டு. டயட் என்பது வெறும் உணவோடு மட்டும் தொடர்புடையது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ‘Diaita’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்த இந்த டயட்டின் உண்மையான பொருள் 'வாழ்க்கைமுறை' என்பதுதான். உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள் என அனைத்தும் சேர்ந்ததுதான் டயட். இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் உடல் பருமன் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடமுடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:34 am


உடல் பருமன் என்றால் என்ன?


உடல், அளவில் பெரிதாய் இருந்தால் உடல் பருமன் என்று பெரும்பாலானோர் நினைப்பதுண்டு. நான் இப்போது சில விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறேன். அவற்றில் அதிக உடல் பருமனுடன் இருப்பது எது என்பதை நீங்களே யூகியுங்கள். யானை, நீர் யானை, பெரிய பசு இவற்றோடு சேர்த்து ஒரு மனிதனையும் எடுத்துக்கொள்வோம். இதில் யாருக்கு உடல் பருமன் என்று கேட்டால் நிறைய பேர் யானை அல்லது நீர் யானை என்பார்கள். காரணம், அவை அளவில் பெரிதாய் இருக்கின்றன.

ஆனால், உண்மை அதுவல்ல. உடலில் இருக்கக்கூடிய அதீத கொழுப்புதான் உடல் பருமனைத் தீர்மானிக்கிறது. அதாவது, ஓர் உயிரினத்துக்குக் குறிப்பிட்ட விகிதத்தைவிட கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் அதுவே உடல் பருமன். கொழுப்பு விகிதத்தை அளப்பதற்குச் சில வழிமுறைகள் உண்டு. அந்த அளவீடுகளைக் கொண்டு பார்த்தால், நான் முன்பு கூறிய விலங்குகளின் பட்டியலில் இருப்பதிலேயே ஒல்லியானது யானை.

`இதெல்லாம் ஓவர் டாக்டர்' என்று நீங்கள் சிரிப்பது என் காதில் கேட்கிறது. ஆனால், உண்மை அதுதான்.

யானையின் உடலில் வெறும் 10% கொழுப்பு மட்டுமே உள்ளது. நீர் யானையின் உடல் கொழுப்பு விகிதம் 12% - 14%. பசுமாட்டின் அளவும் கிட்டத்தட்ட இதேதான். பிறகு ஏன் இந்த விலங்குகள் அனைத்தும் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன?

அவை அனைத்தும் பெரிய தசைப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், அவை தாவர உண்ணிகள் என்பதால் அவற்றின் வயிறு ஏகப்பட்ட புற்களை ஜீரணம் செய்ய வேண்டியிருக்கிறது. வயிற்றுப் பகுதி பெரிதாக இருப்பதால் அவற்றின் மொத்த உடலும் பெரிதாக இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், இருப்பதிலேயே உடல் பருமனான உயிரினம் மனிதன்தான். ஜிம்முக்குச் சென்று சிக்ஸ்பேக் வைத்திருப்பவர்களின் உடலிலேயே 10% சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது. ஓரளவுக்கு உடல் தகுதியோடு இருப்பவர்கள் 15% கொழுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் யானை, நீர் யானையைவிட ஃபிட்டான ஒரு மனிதனின் கொழுப்பு விகிதம் அதிகம். இதுவே, உடல் பருமன் இருப்பவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் மொத்த எடையில் சுமார் 30% - 40% கொழுப்பால் மட்டுமே நிறைந்திருக்கும். அவர்கள் உலகில் உள்ள எல்லா விலங்குகளைவிடவும் கொழுப்பு நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்து `யானை மாதிரி இருக்கிறாய்' என்று சொல்வது பெரிய முரண். ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து வேண்டுமானால் `யானை மாதிரி ஒல்லியாக இருக்கிறாய்' என்று சொல்லலாம். ஒருவேளை யானைகளுக்கு உடல் பருமன் ஏற்பட்டால், `மனிதர்களைப் போல பருமனாக இருக்கிறாயே' என்று சொல்லலாம்.

உடலின் கொழுப்பு விகிதம் அதிகமாக இருப்பதுதான் உடல் பருமன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். அதனால்தான், உடலில் தசைகள் அதிகம் கொண்ட, உடல் எடை அதிகமுள்ள பாடி பில்டரைப் பார்த்து நாம் `பருமனாக இருக்கிறார்' என்று சொல்வதில்லை.

இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்துவிடுகிறேன். சிலருக்கு உடல் எடை நார்மலாக இருக்கும். ஆனாலும் உடல் பருமன் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு வயிற்றில் அழகான தொப்பை இருக்கும். கேட்டால் `மாப்பிள்ளை தொந்தி' என்பார்கள். வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகமாக இருந்து உடல் எடை நார்மலாக இருந்தால் அதை ‘Abdominal obesity’ என்று சொல்லுவோம். இதுவும் மிக ஆபத்தானதுதான். இது பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது.

உடல் எடை மற்றும் உயரத்தைக் கணக்கிட்டு BMI என்று ஒரு அளவீட்டு முறை இருக்கிறது. இந்த அளவு 25-க்கு மேல் இருந்தால் அதிக எடை என்பார்கள். 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த BMI அளவீட்டு முறையைவிட உடல் பருமனைச் சரியாகத் தெரிந்துகொள்ள உடல் கொழுப்பு அளவை அளவிடுவதே சரியாக இருக்கும். இதற்குச் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். BMI அளவு மற்றும் ‘waist hip ratio’ இரண்டையும் பயன்படுத்தலாம்.

நம் எடையை கிலோ கிராமில் வைத்துக்கொண்டு உயரத்தை மீட்டரில் அளக்கவேண்டும். எடையின் அளவை உயரத்தின் அளவோடு இரண்டு முறை வகுத்தால் கிடைக்கும் மதிப்புதான் BMI அளவு. இந்த முறை கடினமாக இருந்தால் இன்னொரு வழிமுறை இருக்கிறது. நம் உயரத்தை சென்டிமீட்டரில் அளந்துகொண்டு, அதில் 100-ஐக் கழித்தால் கிடைக்கும் மதிப்பு ஒருவரின் சராசரி எடை என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக ஒருவரின் உயரம் 170 செ.மீ என்றால் அதில் 100-ஐக் கழித்தபின் கிடைக்கும் 70 என்ற மதிப்பு அவருடைய சராசரி எடையாக இருக்கலாம். இது தோராயமான ஒரு கணக்கிடல் முறைதான்.

நான் சொன்னபடி BMI கணக்கிட்டுக் கிடைக்கும் மதிப்பு 25-க்கு மேல் இருந்தால் ‘over weight’ என்று சொல்லலாம். BMI மதிப்பு 18-23 இருப்பவர்களை ஆரோக்கியமான உடல் எடை உள்ளவர்கள் என்று சொல்லலாம். ஆனால் இது மட்டும் போதாது. காரணம், நிறைய பேருக்கு BMI மதிப்பு நார்மலாக இருந்தாலும் வயிற்றுப்பகுதிக் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதைக் கண்டறிவதற்கு ‘waist hip ratio’-வைப் பயன்படுத்தலாம். இன்ச் டேப் எடுத்துக்கொள்ளுங்கள். சுவாசத்தை நார்மலாக வைத்துக்கொண்டு தொப்புளுக்கு நேராக வயிற்றின் சுற்றளவை அளந்துகொள்ளுங்கள். அடுத்தது இடுப்பின் சுற்றளவை அளந்துகொள்ளுங்கள். இந்த இரண்டு அளவுகளும்தான் ‘waist hip ratio.’ இந்த அளவுகளை வகுக்கும்போது கிடைக்கும் மதிப்பு ஆண்களுக்கு 0.9-க்கு மேல், பெண்களுக்கு 0.85-க்கு மேல் இருந்தால் வயிற்றுப்பகுதிக் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:36 am

உடல் பருமன் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதைக் குறைப்பதற்காக மக்கள் கடைப்பிடிக்கும் வினோதமான பழக்கவழக்கங்களையும் அலசினோம். அடுத்து, உடல் பருமனுக்கு ஏற்ற சரியான உணவுமுறையை அறியவேண்டும். அதற்கு முன்பாக, உடல் பருமன் ஏற்படுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

உடலில் அதிக அளவில் கொழுப்பு தேங்கியிருக்கும் நிலையையே நாம் உடல் பருமன் என்கிறோம் என்று பார்த்தோம். இந்தக் கொழுப்பு நம் உடலில் எதற்காக அதிக அளவில் தங்குகிறது? இதைப் பற்றியும்கூட முன்பே பார்த்துள்ளோம். கொழுப்பு நம் உடலில் கெடுதல் செய்வதற்காக இருப்பதல்ல. நாம் சாப்பிடும் உணவை வைத்து மட்டுமே நாம் உயிர்வாழ முடியும் என்றிருந்தால், ஓரிரு நாள் உணவு இல்லாத நிலை ஏற்பட்டாலே மனிதன் இறந்துவிடுவான். அதனால், பரிணாம வளர்ச்சியின்படி பெரும்பாலான விலங்குகள் அதன் உடலில் கூடுதல் எரிசக்தியைச் சேமித்து வைக்கும் அமைப்பைக் கொண்டுள்ளன. அதற்குக் காரணமாக இருக்கும் முக்கியமான பொருள்தான் கொழுப்பு. மாவுச்சத்தும் புரதச்சத்தும் நம் உடலுக்கு எரிசக்தியை அளித்தாலும், அதை ஓரளவுக்கு மேல் உடலில் தேக்கிவைக்க இயலாது. அதற்காகவே படைக்கப்பட்டதுதான் கொழுப்பு. மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ, அதன்மூலம் கிடைக்கக்கூடிய கூடுதல் சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கிவைக்கப்படும். தேவைப்படும் நேரத்தில் உடல் அதைப் பயன்படுத்திக்கொள்ளும்.

சில வருடங்களுக்கு முன் தாய்லாந்து குகை ஒன்றில் குழந்தைகள் 9 நாள்கள் வரை உணவு இல்லாமல் தண்ணீரை மட்டும் குடித்து உயிர் பிழைத்தார்கள். அந்த 9 நாள்கள் அவர்களின் உடலுக்கு சக்தி கொடுத்தது கொழுப்புதான். புரியும்படி சொல்லவேண்டுமென்றால், நல்ல மழை பெய்கையில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியே விட்டால் எல்லாத் தண்ணீரும் கடலில் கலந்துவிடும். வறட்சிக் காலத்திலும் நமக்குத் தேவை என்பதற்காக அணைக்கட்டுகளை உருவாக்கி நீரைத் தேக்கி வைத்திருக்கிறோம் அல்லவா, அதுபோலதான் உடல் கொழுப்பும்.

அந்தக் காலத்தில் உணவு என்பது அரிதாகக் கிடைக்கும் விஷயம். உணவுக்காகக் காடுகளிலும் மேடுகளிலும் மனிதர்கள் அலையவேண்டும். விவசாயம் செய்யத் தொடங்கியபிறகு மனிதன் தனக்கான உணவைத் தானே தயாரிக்கக் கற்றான். ஆனாலும், அதற்குக் கடும் உடல் உழைப்பைச் செலவிட வேண்டியிருந்தது. இதற்கேற்ற எரிசக்தியும் பயன்படுத்தப்பட்டு சரியான அளவில் உடல் பேலன்ஸ் ஆனது. ஆனால் இப்போது நமக்கு எல்லா வகை உணவுகளும் எந்நேரத்திலும் கிடைக்கின்றன. உலகின் எந்த மூலையில் தயாராகும் உணவையும் நம் வீட்டுக்கு அருகிலேயே வாங்கமுடிகிறது.

இதன் காரணமாக தேவைக்கு அதிகமான எரிசக்தி தேக்கநிலை நம் உடலில் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2-3 வேளைகள் சாப்பிட்டது போய் இன்று 7-8 முறை வரை சாப்பிடுகிறோம். இதில் கிடைக்கக்கூடிய சத்துகளை எரிக்கும் அளவிற்கு வேலைகளும் நமக்குப் பெரிதாக இருப்பதில்லை. இதன் விளைவு... உயிர் காப்பதற்காக நம் உடலில் இருக்கும் கொழுப்பு அளவுக்கு அதிகமாகத் தேங்கி, நம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறிவிட்டது.

ஏன் உடல் பருமனாக இருக்கிறது என்று கேட்டால், ‘எனக்கு ரொம்பவும் ஸ்ட்ரெஸ்' என்பதில் தொடங்கி ‘அதிக வேலைப்பளு' என்பது வரை பல காரணங்களைச் சொல்வார்கள். ‘எங்க குடும்பத்தில் எல்லாருமே இப்படித்தான்', ‘நீர் உடம்பு சார் இது', ‘தைராய்டு சார், உடல் பருமனைத் தவிர்க்கமுடியாது'... இப்படி யெல்லாம்கூட சிலர் என்னிடம் சொல்கிறார்கள். மட்டன், பிராய்லர் கோழி, நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதால் உடல் பருமனாகிவிடுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அவர்களாகவே சில உணவுகளைத் தவிர்ப்பதும் உண்டு. உடல் பருமனுக்குச் சரியான காரணம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். என்றாலும், உடல் பருமன் ஏற்படுவதற்கு உண்மையான காரணம்தான் என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:36 am


உடலில் அதிக கொழுப்பு தேக்கப்படுவதே உடல் பருமனுக்குக் காரணம் என்று இப்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. அதனால், அதிகமாகக் கொழுப்பு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று மக்கள் மட்டுமல்லாமல் நிறைய மருத்துவர்களும்கூட நினைக்கிறார்கள். அதற்காக அசைவம் தவிர்ப்பது, எண்ணெயைக் குறைப்பது, நான்-ஸ்டிக் சமையல் என ரொம்பவே கட்டுப்பாடாக இருக்கிறார்கள்.

கொழுப்பைக் குறைவாகச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வந்த பிறகுதான் உடல் பருமன் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றால், நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம்? இதற்கு விடை காண மீண்டும் அடிப்படையான சில விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

தேவைக்கும் அதிகமான கொழுப்பை நம் உடல் சேமித்து வைப்பதாகப் பார்த்தோம் அல்லவா? நாம் சாப்பிடும் கொழுப்பு உணவுகள் மட்டும் கொழுப்பாகச் சேமிக்கப்படுவதில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் மாவுச்சத்து, புரதங்கள், கொழுப்பு என மூன்றுமே தேவைக்கு அதிகமாக உடலில் இருக்கும்போது கொழுப்பாக மாறிவிடும். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் தினம்தினம் செய்யும் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் எரிசக்தி தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் வைத்து, நம் உடலில் உள்ள ‘Calorie Imbalance'தான் உடல் பருமனுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள். உணவு மூலம் தேவைக்கு அதிகமான எரிசக்தியை உட்கொண்டாலோ அல்லது சரியான அளவில் உணவு உட்கொண்டு குறைவான அளவில் எரிசக்தியை எரித்தாலோ அதுவே உடல் பருமனுக்கான காரணம். இதைத்தான் ‘Calorie in - Calorie Out' கோட்பாடு என்று கூறுவார்கள். இந்தப் புரிதல் சரியா? இதில் என்ன சிக்கல்? பார்ப்போம்.

இந்தக் கோட்பாட்டின்படி உடல் எடையைக் குறைக்க பொதுவாக இரண்டு விஷயங்களைச் சொல்வார்கள். சரியான அளவில் உணவு உட்கொள்ளுதல். நல்ல உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல். இந்தக் கோட்பாட்டைத்தான் பிரபல கோலா நிறுவனம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன், `எங்கள் குளிர்பானத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நன்கு ஓடியாடி உடற்பயிற்சி செய்தால் உடல் எடை கூடாது' என்று விளம்பரப்படுத்தினார்கள். அப்படிப் பார்த்தால், ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் பயங்கர உடல் உழைப்பை அளிப்பவர்கள் என்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்கள் என்றும் அர்த்தமாகிவிடுகிறதல்லவா? இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். துரித உணவு என்ற பெயரில் தரப்படும் குப்பை உணவுகளைச் சாப்பிட்டும்கூட சிலர் ஒல்லியாகவே இருக்கிறார்கள். அதேபோல சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்ளும் சிலர் உடல் பருமனாக இருக்கிறார்கள். அதனால்தான் ‘இத்தனை கலோரி சாப்பிடு கிறார்கள்... அதில் இவ்வளவு எரிக்கிறார்கள் என்பதை வைத்து மட்டும் உடல் பருமனை முடிவு செய்வது சரியானதல்ல’ என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதைத் தாண்டி ஏகப்பட்ட விஷயங்கள் நம் உடலில் இருக்கின்றன. அவைதான் உடல் பருமனைத் தீர்மானிக்கின்றன.

நம் உடல் ஏகப்பட்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவு, சமூகச் சூழல், மனநிலை என ஹார்மோன்கள் சுரப்புக்குப் பல காரணங்கள் உண்டு. சிலர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகம் உண்பார்கள். சிலர் சோகத்தில் அதிக உணவு சாப்பிடுவார்கள். உடல் பருமனுக்கான காரணிகளில் இவையும் அடக்கம். இன்சுலின், லெப்டின் ஹார்மோன் முதல் மூளையில் சுரக்கும் சில பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் வரை சுரப்பதில் கோளாறு இருப்பவர்களுக்கு அதீத உடல் பருமன் ஏற்படுவதுண்டு. சிலர் 300 கிலோ, 500 கிலோ என்றெல்லாம் இருப்பதற்கும், ஐந்து வயதுக் குழந்தை 100 கிலோ இருப்பதற்கும் தீவிர ஹார்மோன் கோளாறுகளே காரணம். மிதமான உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு இந்தக் குறைபாடு சிறிய அளவில் இருக்கும். சிலருக்கு பசியை அடக்கக்கூடிய ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு இருக்கக்கூடும். அவர்களுக்கு எளிதில் பசி அடங்காது என்பதால் உடல் பருமனுக்கான வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. ‘எல்லோரையும் போல நானும் சரியான அளவில்தான் சாப்பிடுகிறேன், இருந்தும் வெயிட் போடுகிறதே' என்று சிலர் சொல்லக் கேட்கலாம். பெரிய குறைபாடுகள் ஏதும் இல்லை யென்றாலும், இதுபோன்ற சின்னச் சின்னக் கோளாறுகளும் இதற்கான காரணமாக அமையலாம். ‘உடல் பருமன் எங்கள் குடும்பச்சொத்து... அதைப்பற்றி யோசித்துக் குழம்பாமல் அடுத்த வேலையைப் பார்ப்போம்' என்றுகூட சிலர் கூறுவார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:37 am


நன்கு சாப்பிட்டு அதற்கேற்றவாறு நன்கு உழைத்தால் உடல் எடை குறைந்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். உடல் உழைப்பிற்கும் உடல் பருமனுக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று கூற மாட்டேன். தொடர்பு இருக்கிறது. நல்ல உடல் உழைப்பை மேற்கொள்பவர்களால் தங்கள் உடலை பருமனாக விடாமல் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், பெரிதாக உடலுழைப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தால் நீங்கள் உடல் பருமனாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, உங்களைப் போலவே உங்கள் அலுவலகத்தில் உடலுழைப்பு இல்லாமல் இருக்கும் சிலர் உடல் பருமன் இல்லாமல் இருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன? அதேபோல, விவசாய வேலை செய்பவர்கள், முழுநேர விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் உடல் பருமனாக இருக்கிறார்களே, ஏன்? உடல் பருமனைத் தீர்மானிப்பதில் உடல் உழைப்பு ஒரு காரணியாக இருந்தாலும் அதுவே மிக முக்கியமான ஒன்றல்ல.

அப்படியென்றால் உடல் பருமனுக் கான மிக முக்கிய காரணம் என்ன? நாம் சாப்பிடும் உணவும் அது உள்ளே தூண்டும் ஹார்மோன்களும்தான் முக்கியகாரணம். நாம் சாப்பிடும் உணவில் எது உடல் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதை நாம் முன்பு கூறிய கலோரி கான் செப்ட்டை வைத்து அணுகக் கூடாது. மருத்துவ உலகமும் இதை இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.

அதாவது நாம் சாப்பிடும் எல்லா உணவுகளும் ஒரே அளவில் கொழுப்பை அதிகரிப்பதில்லை. ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. இதற்கான அடிப்படை அறிவியல் இன்சுலினிலிருந்து தொடங்குகிறது.

உடலில் கொழுப்பு சேர்வதன் காரணத்தை உயிர் வேதியியலின்படி பார்ப்போம். எந்த உணவு மிகுதியாக இருந்தாலும் அதை Fatty Acid ஆக மாற்றி அதை நம் உடலில் கொழுப்பாகப் படியவைக்கும் வேலையைச் செய்வது இன்சுலின் தான். நம் உடலில் கொழுப்பைச் சேகரிக்கக்கூடிய மிக முக்கிய ஹார்மோன் இன்சுலின்.

எனவே, இன்சுலினை எதெல்லாம் தூண்டி அதிகப்படுத்துகிறதோ, அதெல்லாம்தான் உடல் பருமன் அதிகரிக்கக் காரணம். நாம் எடுத்துக்கொள்ளும் மூன்று வகை சத்துகளில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துவது கொழுப்புச்சத்தே என்று நிறைய பேர் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மாவுச்சத்து உணவுகளை சாப்பிடுகையில்தான் நம் உடலில் அதிக அளவு இன்சுலின் சுரக்கிறது. இட்லி, தோசை, சப்பாத்தி தொடங்கி சிறுதானியங்கள் வரை எல்லாமே மாவுச்சத்து உணவுகள்தான். காலையில் நான்கு இட்லி சாப்பிடும் நமக்கு உணவு விரைவாக ஜீரணமாகிக் கொழுப்பாக மாறிவிடுவதால் 11 மணிக்கெல்லாம் மறுபடியும் பசியெடுக்கத் தொடங்குகிறது. ஆனால், புரத உணவுகளும் அதைவிட ஒருபடி மேலே கொழுப்பு உணவுகளும் இன்சுலினை மிகக்குறைவாகவே சுரக்கச் செய்கின்றன. இதே இட்லிக்கு பதில் இன்சுலினைக் குறைவாகச் சுரக்க வைக்கும் புரத அல்லது கொழுப்பு உணவுகளை சாப்பிட்டுப் பாருங்கள். உதாரணத்துக்கு 4 இட்லிக்கு பதில் 2 இட்லி, 2 முட்டை அல்லது வேகவைத்த நிலக்கடலையை எடுத்துக் கொண்டால், இவை மிகக்குறைந்த அளவு இன்சுலினையே தூண்டும். இதனால் குறைந்த பசியே ஏற்படும். இதைத்தான் ‘Hormonal Theory of Obesity’ என்று கூறுகிறோம்.

மட்டன் பிரியாணி சாப்பிட்டால் அதிலிருக்கும் மட்டனைவிட ரைஸ்தான் உடல் எடையை அதிகரிக்கும் காரணி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நம் மக்கள் பஜ்ஜி சாப்பிடுகையில் அதில் உள்ள மாவுச்சத்தை விட்டுவிட்டு எண்ணெயைச் செய்தித்தாள் வைத்துப் பிழிவார்கள். அதேபோல, பிரியாணியில் கறித்துண்டுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறேன் என்று குஸ்காவை வெளுத்துக் கட்டுவார்கள். இன்சுலின் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணம்.

அதே சமயத்தில், அதிக மாவுச்சத்தோடு அதிக கொழுப்புகளையும் கலந்து எடுத்துக்கொண்டால், அது வெறும் மாவுச்சத்தைக் காட்டிலும் இன்சுலின் அளவை அதிகமாகத் தூண்டும். உதாரணத்துக்கு, வெறும் சாப்பாட்டைவிட மட்டன் பிரியாணி சாப்பிட்டால் இன்சுலின் அளவு அதிகமாகும். வெறும் இட்லி தோசை சப்பாத்தியைவிட அத்துடன் அசைவம் அல்லது பனீர் போன்ற உணவுகளைச் சேர்த்து எடுத்துக்கொண்டால், இன்னும் மோசமாக இன்சுலின் அளவுகளை அதிகப்படுத்தும். மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பைச் சேர்த்து எடுத்துக்கொண்டால் அது இன்னும் மோசமான காம்பினேஷன்தான்.

எல்லாம் சரி, நம் தாத்தா, பாட்டி அனைவரும் இட்லி, தோசை போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுதான் கடைசிவரை ஆரோக்கியமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் என்ன? உடல் எடையைக் குறைக்க சிறந்த வழிதான் என்ன? நாம் சாப்பிடும் தினசரி உணவின் மூலமாகவே உடல் எடையைக் குறைக்க முடியுமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:38 am

உடல் பருமனைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதுதான் இன்று மக்கள் அதிகம் தேடும் கேள்விகள்.

உடல் பருமனைக் குறைக்க நீங்கள் எந்தவித புதிய உணவு முறையைப் பின்பற்ற விரும்பினாலும் அதற்கு முன்பாக உங்கள் குடும்ப நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். காரணம், உடல் பருமனுள்ள 50 - 75% பேருக்கு அதனால் ஏற்படும் மற்ற உடல் கோளாறுகளும் சேர்ந்தே இருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நம்பும் பலருக்குப் பரிசோதனை மேற்கொண்டால் ஆரம்பக்கட்ட சர்க்கரை நோய் தொடங்கி, அதிக ரத்தக்கொழுப்பு வரை பலவித குறைபாடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. எனவே, மருத்துவர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

கலோரி கான்செப்ட்டைத் தாண்டி, இன்சுலின் அளவைக் கூட்டும் காரணிகளே உடல் பருமன் ஏற்படக் காரணம் என்று முன்பு பேசியிருந்தோம். அதன்படி, இன்சுலின் அளவுகளைக் கட்டுக்குள் வைக்கும் உணவுகளே உடல் பருமனைக் குறைக்க ஏற்ற உணவுகள். இதையறியாமல் பலர், கணக்கு போட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கணக்கையே லோ கலோரி டயட் (Low-Calorie Diet) என்கிறோம். நாள் ஒன்றுக்கு மனிதனுக்கு 2,000 கலோரிகள் தேவை என்றால், அதற்கு பதில் 1,200 அல்லது 1,300 கலோரி மட்டும் சாப்பிடுங்கள் என்று அட்டவணை போட்டுக் கொடுப்பதுதான் இந்த லோ-கலோரி டயட். உடல் எடையைக் குறைக்க ஆயிரக்கணக்கான உணவுமுறைகளை இணையத்தில் கண்டெடுக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் ஒன்றிரண்டு கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியும். ஒன்று, `நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என்று கணக்குப் போட்டு குறைவாகச் சாப்பிடும் முறை. அல்லது மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிடும் முறை. இவற்றைப்பற்றி விரிவாகப் பேசுவோம்.

லோ-கலோரி உணவுமுறை பற்றி இப்போது அதிக விளம்பரங்கள் வருகின்றன. நீங்கள் சமோசா சாப்பிட்டபடி உடல் எடையைக் குறைக்க முடியும் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். மக்கள் அவற்றால் ஈர்க்கப்பட்டு பின்பற்றுகிறார்கள். நீங்கள் நினைப்பதுபோல இது அவ்வளவு சிம்பிளான விஷயம் இல்லை.

கணக்குப் போட்டு சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பது உண்மையாகவும் எளிமையாகவும் இருந்தால் இன்று உலகில் உடல் பருமனுடன் யாரும் இருக்கமாட்டார்கள். லோ-கலோரி டயட் என்று சொல்லக்கூடிய கணக்குப் போட்டு உணவை எடுத்துக்கொள்வது நீண்டகாலப் பயனை அளிக்காது. கணக்குப் போட்டு குறைவான உணவைச் சாப்பிடும்போது, அதை ஈடுகட்ட நம்மைச் சோர்வாக்கி பசியை அதிகப்படுத்தும் வகையிலே நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டி ருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று அது 20,000 வரை குறைக்கப்பட்டால் அதற்கேற்றவாறு உங்களின் செலவுகளைக் குறைத்துக்கொள்வீர்கள் அல்லவா? மேலும் குறைக்கப்பட்ட தொகையை ஈடுகட்ட கூடுதல் வேலை ஏதாவது பார்க்கலாம் என்று நீங்கள் நினைக்கக்கூடும். இதையேதான் நம் உடலும் செய்கிறது. பிரியாணி, சமோசா என அனைத்து உணவுகளையும் சேர்த்து 1,200 கலோரிகள் எனக் கணக்கு ரீதியான டயட்டைப் பின்பற்ற முயலும்போது அது தோல்வியில் முடிவதற்கான காரணம் இதுதான்.

நான்கைந்து நாள்கள் தீவிரமாகப் பின்பற்றுவார்கள். பின்னர் அதிக பசி எடுக்கும். அதைத் தாங்கமுடியாமல் பொறுத்தது போதும் என ஒருநாள் ஃபுல் கட்டுக் கட்டிவிடுவார்கள். பின்னர் நமக்கு மனவலிமை இல்லை என நினைத்து வருத்தப்படுவார்கள். சிலர் கடும் மன அழுத்தம் வரைக்கும் செல்வதுண்டு. டயட்டை ஆரம்பிப்பது, நிறுத்துவது, மீண்டும் ஆரம்பிப்பது, பின்னர் நிறுத்துவது என இதைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் குழப்பநிலையிலேயே இருப்பார்கள். இந்த டயட் முறையைப் பற்றிய சரியான புரிதலின்மையே இதற்கான காரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:39 am


லோ-கலோரி முறை, பேசுவதற்கு நன்றாகவும் ஆசையைத் தூண்டும் வகையிலும் இருந்தாலும் நம் உடல் ஹார்மோன்கள் அதை இயற்கையில் அனுமதிக்காது. இம்முறையில் ஏற்படும் சவால்களை மனவலிமையுடன் எதிர்கொண்டு தீவிரமாகப் பின்பற்றி எடையைக் குறைப்பவர்கள் குறைவு. இம்முறையை நான் பரிந்துரை செய்யாததற்கான காரணம் இதுதான். பின் எதைப் பின்பற்றுவது என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதிலைக் கண்டறிய சென்ற வாரம் நான் கூறிய ஹார்மோன் தியரியைப் பார்க்கலாம். அதாவது, நம் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகள் உதவுகின்றனவோ, அவற்றைச் சாப்பிடுவதே சரி.

இன்சுலின் அளவை எவையெல்லாம் குறைக்கின்றன? அதிக அளவு மாவுச் சத்து உள்ள உணவுகளை உண்பதும், அல்லது, அதோடு புரதம், கொழுப்பைச் சேர்த்துக்கொள்வதும் அதிக அளவில் இன்சுலின் சுரக்கக் காரணமாகிறது என்று சென்ற வாரத்தில் பார்த்தோம். புரதம் மற்றும் மாவுச்சத்தைத் தனித்தனியாக எடுத்துக்கொண்டால் இன்சுலின் மிகக்குறைந்த அளவில் மட்டுமே சுரக்கும் என்பதையும் பார்த்தோம். இதை வைத்துப் பார்க்கையில், மாவுச்சத்தை நாம் முடிந்தவரையில் குறைத்துக்கொண்டு அதற்குப் பதில் மற்ற சத்துகள் நிறைந்த உணவுகளைத் தனியாகச் சாப்பிடுவதே சரியான உணவுமுறை.

மாவுச்சத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு அதற்கு பதில் புரதக் கொழுப்பு உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதைத்தான் நாம் ‘பேலியோ டயட்' (Paleo Diet) என்று கூறுகிறோம். வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த உணவுமுறையை நம் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய சிறப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வு முகநூல் குழுமத்தைச் சேர்ந்த நியாண்டர் செல்வனையே சேரும். அவரின் உழைப்பு இல்லாமல் நான் உட்பட பலருக்கும் இதன் மகத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் அவரின் பெயரைக் குறிப்பிடுவது முக்கியமெனக் கருதுகிறேன். இதை ‘லோ-கார்போஹைட்ரேட் (LCHF) டயட்’ எனவும் கூறுகிறோம். அதாவது, மாவுச்சத்து குறைவான உணவுமுறை. மாவுச்சத்து குறைவான உணவுகள் என்றால், இட்லி தோசை சாப்பாடு சிறுதானியங்கள் மட்டுமல்ல, தீனி வகைகள், இனிப்பு வகைகள், ஏன், பழங்களைக்கூடத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் நிலக்கடலை, தேங்காய்... வாய்ப்பிருந்தால் பாதாம் பருப்பு அல்லது மூன்று முட்டை ஆகியவற்றை மட்டும் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். மதியத்தில் வெறும் காய்கறிகள் அதனுடன் ஒரு ஆம்லெட்... சைவம் சாப்பிடுபவர்கள் சிறிது தயிர் அல்லது பருப்பை எடுத்துக்கொள்ளலாம். இரவில், அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன் அல்லது மட்டன் அல்லது முட்டைகளை மட்டும் அவரவருக்குப் போதுமான அளவில் எடுத்துக்கொள்ளலாம். சைவத்தில் பனீர் அல்லது காளான் ஓகே. சிறிது மாவுச்சத்து இருப்பினும், சுண்டல் பயிறுகளை வேறு எதையும் சேர்க்காமல் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இதைத்தான் லோ கார்போ ஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து குறைவான உணவுமுறை என்கிறோம்.

இதைப் பின்பற்றுகையில் கஷ்டப்பட்டு நம் பசியைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை, தானாகவே பசி கட்டுப்பட்டுவிடும். இதனால் உடல் எடையும் குறையும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தொடங்கி பெரிய பெரிய நடிகர்கள் வரை பலரும் இந்த உணவு முறையை இப்போது கடைப்பிடிக்கிறார்கள். `நான் விளையாடத் தொடங்கிய காலத்தில் ஆரோக்கியமில்லாமல் இருந்தேன். ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் சப்பாத்திகளைச் சாப்பிட்ட நான், பின்னர் நாள் ஒன்றுக்கு ஒன்று மட்டுமே சாப்பிட்ட பிறகுதான் உடற்பயிற்சி செய்து என்னால் ஃபிட் ஆக முடிந்தது' என விராட் கோலியே இதுபற்றிப் பேசியிருக்கிறார். இரண்டாவது, உடல் பருமன் என்ற விஷயத்தைத் தாண்டி அதனால் வரும் சர்க்கரை நோய், கல்லீரல் கொழுப்பு, அதிக ரத்தக் கொழுப்பு, பெண்களுக்கு பிசிஓடி பிரச்னை போன்ற மற்ற பிரச்னைகளையும் சேர்த்து இது சரி செய்யும்.

எனவேதான் இந்த உணவுமுறையைப் பின்பற்றினால் நல்லது என்று வலியுறுத்துகிறோம். இது அருமையான விஷயமாக இருந்தாலும், இட்லி தோசையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்று நினைப்பவர்கள் பாதிக்குப் பாதி மாவுச்சத்தைக் குறைத்தாலே நல்ல பலன் பெறலாம். உதாரணத்துக்கு காலையில் நான் சொன்ன உணவுகளை எடுத்துக்கொண்டு, மதியம் நிறைய காய்கறிகளுடன் கொஞ்சம் சாதம் எடுத்துக்கொள்ளலாம். இரவில் சப்பாத்தி அல்லது தோசையைக் குறைவாக சாப்பிட்டு, அத்துடன் சிக்கன், மட்டன், பயறு வகைகள், பனீர் சாப்பிடலாம். அதில் உள்ள புரதம், கொழுப்பு வயிறை நிறைத்துவிடும். மாவுச்சத்தைக் குறைப்பதுதான் முதன்மையான விஷயம். அதைச் செய்யாமல் கலோரி எண்ணிக்கையைக் கணக்கு போட்டுக்கொண்டு நாள்களை ஓட்டினால் பசி அடங்காது. உடல் எடையும் குறையாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:39 am


சரி, இன்சுலின் அளவை அதிகரிக்கும் உணவுகளையும் குறைக்கும் உணவுகளையும் பார்த்துவிடுவோம். உணவுகளில் எனர்ஜி டென்ஸ் (Energy Dense), நியூட்ரியன்ட் டென்ஸ் (Nutrient-dense) என்ற வகைகள் உண்டு. அதாவது 100 கிராம் மைசூர்ப்பாகு சாப்பிடுகையில் அது உங்களுக்கு 500 கலோரி எரிசக்தியைக் கொடுக்கும். குறைந்த அளவு, ஆனால் மிக அதிக கலோரி தரக்கூடிய இது ஒரு எனர்ஜி டென்ஸ் உணவு. ஆனால், இதே கலோரியை கேரட்டை பச்சையாக சாப்பிட்டு மட்டும் பெறவேண்டுமென்றால் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் கிலோ சாப்பிட்டாக வேண்டும். இந்த 500 கலோரியைப் பெறுவதற்கு இந்த இரண்டில் எது எளிது என்று யோசித்தால் மைசூர்ப்பாகு சாப்பிடுவதே எளிதாகப்படும். இதுதான் நான் கூறவந்த கான்செப்ட்.

அதாவது காய்கறிகள் மாதிரியான உணவுகளை மிக அதிக அளவில் சாப்பிட்டாலும் குறைவான கலோரியை மட்டுமே கொடுத்து நம் வயிற்றையும் நிரப்பிவிடும். 300 கிராம் கேரட்டுக்கு மேல் நம்மால் சாப்பிட இயலாது என்பதே நிதர்சனம். சிறிய மைசூர்ப்பாகுத் துண்டுகள் வெறும் சர்க்கரை சத்துகளை மட்டும் கொண்டிருப்பதால் அவை எளிதில் ஜீரணமாகி சிறிது நேரத்தில் மீண்டும் பசியைத் தூண்டிவிடும். ஸ்நாக்ஸ், இனிப்புகள், குளிர்பானங்கள் முதலிய அனைத்தும் குறைவாக சாப்பிட்டாலும் வெறுமனே கலோரிகளை அதிகப்படுத்தும் உணவுகள். இவற்றைத் தவிர்த்துவிட்டு நியூட்ரியன்ட் டென்ஸ் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய பேர் பழங்களை ஜூஸ் ஆக்கி அருந்துவார்கள். அது தவறு. பழங்களை நார்ச்சத்தோடு முழுமையாகச் சாப்பிடுவதே சிறந்தது.

சர்க்கரை தொடர்பான சில பிரச்னைகள் இருந்தால் மட்டும் பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் காய்கறி, கீரைகளை நிறைய சேர்த்துக்கொள்ளலாம். அவை நம் வயிற்றை நிறைத்து நம் பசியையும் கட்டுப்படுத்தும். இதைத்தாண்டி, இன்சுலின் அளவுகளைக் கட்டுப்படுத்தும் இன்னொரு அருமையான விஷயம் உடற்பயிற்சி. என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு அதை ஓடியே குறைத்துவிடலாம் என்ற கருத்து மக்களிடம் உள்ளது. இது தவறான எண்ணம். நாம் சாப்பிடும் உணவுகளால் வரும் கலோரிகளின் அளவும் நாம் உடற்பயிற்சியின் மூலம் எரிக்கும் கலோரிகளின் அளவும் வேறு வேறு. உதாரணத்திற்கு சுமார் 500 கலோரி வரை அளிக்கக்கூடிய மைசூர்ப்பாகை நீங்கள் ஒரு நிமிடத்திற்குள்ளாகச் சாப்பிட்டு விடுவீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் அதே அளவு கலோரியை எரிக்க நீங்கள் 2 மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதே ஜாகிங் செய்தால் ஒரு மணி நேரம். நடைப்பயிற்சி செல்லும் சிலர் நடந்து முடிந்ததும் டீ, வடை சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் அந்த உணவு அதற்கு முன் செய்த அனைத்தையும் பயனில்லாமல் செய்துவிடும். ஏன், கூடுதல் கலோரியைக்கூட அது அளித்துவிடும். தொடர்ந்து பல வருடங்களாக நடைப்பயிற்சி செய்பவர்கள் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். எனவே, கண்டதைச் சாப்பிட்டு உடல் உழைப்பின் மூலம் எடையைக் குறைப்பது சாத்தியம் இல்லை.

உடல் பருமனால் அவதிப்படும் பலரும் அலுவலகங்களில்தான் பணி செய்வார்கள். அவர்கள் உடற்பயிற்சிக்காக அதிகபட்சம் ஒரு மணிநேரமே செலவிட இயலும். அந்த ஒரு மணி நேரத்தில் எரிக்கும் 300 கலோரியை வைத்துக் கொண்டு கண்ட உணவுகளையும் சாப்பிட்டால் எந்தப் பயனும் இல்லை. உடற்பயிற்சி அவசியம். உணவுமுறையும் அவசியம்.

உடற்பயிற்சியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம் இதயத் துடிப்பை அதிகப்படுத்தி கலோரிகளை எரிக்கச் செய்யும் கார்டியோ முறை. ஓட்டம், நீச்சல், சைக்கிளிங் ஆகிய அனைத்தும் இந்த வகையில் வரும். மற்றொன்று, ஸ்ட்ரென்த் டிரெயினிங் (Strength Training). ஜிம்முக்குச் சென்று தசைப்பகுதிகளை வலுவேற்றும் விதமான பயிற்சிகள். இந்த இரண்டுமே இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைத்து அதன் அளவுகளைக் கட்டுப்படுத்தும். உடற்பயிற்சியில் மற்றொரு கூடுதல் நலனும் உண்டு. உடற்பயிற்சி செய்தபின்பு நம் உடலின் ரெஸ்டிங் மெட்டபாலிக் ரேட் (Resting Metabolic Rate) அதிகரித்துவிடும். அதாவது அமைதியாக உட்கார்ந்திருக்கையில் நம் உடலின் எரிசக்தி செலவிடும் அளவு அதிகரித்துவிடும். உடற்பயிற்சிக்குப் பின்பு நம் உடல் உஷ்ணமாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

‘You cannot outrun a bad diet' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது மோசமான உணவுமுறையைக் கடைப்பிடித்துக்கொண்டு வெறும் உடற்பயிற்சியின் மூலம் எதுவும் செய்ய இயலாது. நான் கூறியபடி மாவுச்சத்தை ஓரளவோ அல்லது முற்றிலுமாகவோ குறைத்து, ஆரோக்கியமான புரதங்கள், கொழுப்புகள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொண்டு, அதோடு நல்ல உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடையை தாராளமாகக் குறைக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:41 am


விரதம் என்பது யாருக்கும் புதிய விஷயம் கிடையாது. ‘இதைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது' என்று நீங்கள் கேட்கலாம். உலகின் பல சமயங்கள் ஏதோ ஒரு வகையில் விரதங்களை வலியுறுத்துகின்றன. ஆனால் இப்போதுள்ள தலைமுறை விரதங்களைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. ‘சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வரும்... தேவையான சத்துகள் நமக்குக் கிடைக்காது, நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால். சர்க்கரை, BP மாத்திரைகளை சாப்பிட இயலாது' என்றெல்லாம் எனக்குத் தெரிந்த பலர் காரணங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விரதத்தைக் கடைப்பிடிப்பதால் உண்மையில் நமக்கு என்னென்ன பலன்கள் ஏற்படுகின்றன? அதை ஒரு வாழ்க்கைமுறையாகவே பின்பற்றி நம் உடலின் சர்க்கரை முதலிய அளவுகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? விடை தேடுவோம்.

நன்கு யோசித்துப் பாருங்கள். மனிதனைத் தவிர நேரத்திற்குச் சாப்பிடும் உயிரினம் உலகில் வேறெதுவும் இல்லை. காலை எழுந்தவுடன் வேட்டையாட மான் எதுவும் கிடைக்கவில்லை என்று எந்த சிங்கமும் ஸ்விக்கியில் கறி ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. மாடுகள் காலை இத்தனை புல்கட்டு, மதியம் இவ்வளவு வைக்கோல் என்று கணக்கு வைத்து சாப்பிடுவதில்லை. விலங்குகளை விடுங்கள்... ஆதிமனிதர்களே Fasting and Feasting என்றுதான் வாழ்ந்தார்கள். எப்போது விலங்குகள், பழங்கள், கிழங்குகள் தட்டுப்படுகின்றனவோ அப்போதுதான் உணவு கிடைக்கும். அவர்கள் உடலில் இருக்கும் கொழுப்புச் சத்துகளே எரிசக்தியை வழங்கின. இப்படித்தான் அவர்கள் வாழ்க்கைமுறை இருந்தது.

வேளாண்மையைக் கண்டறிந்தபிறகு, எல்லா நேரத்திலும் உணவு கிடைக்கக்கூடும் என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம் நமக்கு வந்தது. எனவே நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பது தவறு. 2016-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற ஜப்பானின் யோஷினோரி ஓசூமி என்பவர், நம் உடல் செல்களில் நடக்கக்கூடிய ‘ஆட்டோபேஜி' (Autophagy) என்ற விஷயத்தைக் கண்டறிந்தார். செல்களில் இருக்கும் பழைய கழிவுகளைச் சுத்தம் செய்வதே, ‘ஆட்டோபேஜி.’ இது புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதாக அவர் கூறுகிறார். மேலும், ‘சர்க்கரை மற்றும் சில வயோதிக நோய்கள் ஏற்படவும், இந்த ஆட்டோபேஜி சரியாக நடக்காமல் இருப்பதே காரணம்' என்கிறார்.

இந்த ‘ஆட்டோபேஜி’யைத் தூண்டிவிட்டு கேன்சர் செல்களை அழிக்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்க சில மருந்து நிறுவனங்கள் 500 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியிருக்கின்றன. உண்மையில் ‘ஆட்டோபேஜி'யை நம் உடலில் எளிதாகத் தூண்டக்கூடிய விஷயம் விரதம். எனவே, விரதத்தைச் சரியாகப் பின்பற்றினாலே பல பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளலாம் என்பதையும் யோஷினோரியே கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்.

விரதம், பட்டினி இரண்டுக்குமான வித்தியாசம் பலருக்குத் தெரிவதில்லை. எதுவும் உண்ணாமல், தண்ணீர்கூடக் குடிக்காமல் இருந்தால் அது பட்டினி. நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, உப்புச்சத்து முதலியவற்றை எடுத்துக்கொண்டு அதை ஒரு உணவுமுறையாகவே பின்பற்றுவது விரதம். உணவு உண்ணாமல் ஒரு மனிதனால் எத்தனை நாளுக்கு உயிர் வாழ முடியும் என நினைக்கிறீர்கள்? தண்ணீர் மற்றும் உப்புகூட எடுக்கவில்லை என்றால் 3-4 நாள்களுக்கு மேல் உயிர் வாழ இயலாது. ஆனால் தண்ணீரும், நமக்குத் தேவையான உப்புச் சத்துகளும் கிடைத்தால் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் உயிர்வாழ முடியும். தாய்லாந்து குகையில் சிக்கிய குழந்தைகள் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து உயிர்வாழ்ந்ததைப் பற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஏன்ஜஸ் பார்பேரி என்பவர், உடல் பருமனைக் குறைக்க தண்ணீர், உப்புச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கணக்குப்போட்டு எடுத்துக்கொண்டு சுமார் 382 நாள்கள் விரதம் இருந்தார். 207 கிலோவில் இருந்த அவர், 80 கிலோவுக்குக் குறைந்தார். இந்த அளவுக்குத் தேவையில்லை. மேலும் இதுமாதிரியான முயற்சிகளில் அதிக அளவிலான தசை இழப்புகள் ஏற்படுவதும் உண்டு. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; சர்க்கரை மற்றும் உடல்பருமன் இருந்தால் அது கட்டுக்குள் வரவேண்டும் என்பதே விரதம் இருப்பதற்கான நம் தேவை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by சிவா Sun Apr 30, 2023 12:41 am


விரதம் எவ்வாறு வேலை செய்கிறது?


நம் உடலில் கொழுப்பைச் சேகரிக்கும் ஒரு ஹார்மோன் இன்சுலின் மட்டுமே என்பதைப் பார்த்தோம். எவையெல்லாம் இன்சுலினைத் தூண்டுகின்றன என்பதையும் பார்த்தோம். நாம் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் அது இன்சுலினைத் தூண்டுவது இயல்புதான். உணவே எடுக்காமல் இன்சுலினைக் கட்டுக்குள் வைக்க வழி, விரதம் மட்டும்தான். எப்போதெல்லாம் ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் உணவின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் எரிபொருளாக மாறுவதற்கு பதிலாக உடலில் உள்ள கொழுப்புகள் எரிசக்தியாக மாற்றப்படுகிறது. அதனால்தான் சொல்கிறேன், இன்சுலினைக் கட்டுப்படுத்துவதற்கு நான் முன்பு கூறிய முறைகள் அனைத்தையும் தாண்டி முக்கியமானது இந்த விரதம்.

அதிலும் நம்மூரில் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. காலை உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரத்தில் தீனி... மீண்டும் மதிய உணவு... பிறகு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என நாம் சாப்பிடச் சாப்பிட அது உடலில் இருக்கக்கூடிய இன்சுலினைத் தூண்டிவிட்டு கொழுப்பை எரியவிடாமல் செய்யும். நாம் தூங்கும் நேரத்தில் நம் கல்லீரலில் இருக்கும் க்ளைகோஜன் (Glycogen) எரிசக்தியாக மாறியிருக்கும். காலையில் விரதம் மேற்கொண்டு சாப்பிடாமல் இருக்கையில், இன்சுலின் குறைந்து நம் கொழுப்பு எரிவதால், நம் உடலில் உள்ள கொழுப்பு குறையும். அதற்கு பதில் நான்கு இட்லியை எடுத்துக்கொண்டால் இன்சுலின் அளவு அதிகமாகி கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.

எனவே இரு வேறு உணவுவேளைகளுக்கு எவ்வளவு இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவுக்கு நம் உடலில் கொழுப்பு சேராது. அடிக்கடி உணவு எடுத்துக்கொண்டால் நம் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இன்னொரு விஷயத்தையும் பார்த்துவிடலாம்... உடல் பருமனைத் தாண்டி சர்க்கரை நோயைப் போக்க விரதம் ஏதேனும் உதவி செய்யுமா? சர்க்கரை நோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை விரதம் முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உதவும். அதுமட்டுமல்லாமல், சர்க்கரை நோயால் உறுப்புகள் பாதிக்கப்படக் காரணமாய் இருக்கும் ‘Advanced Glycation End Products' என்று சொல்லக்கூடிய பல ரசாயனங்களை இந்த விரதம் கட்டுக்குள் கொண்டுவரும்.

லோ-சுகர் ஏற்பட்டுவிடும் என சர்க்கரை நோயாளிகள் பலரும் விரதமே இருப்பதில்லை. அவர்களும் முறையாக, அதாவது அவர்களின் உடல் தன்மைக்கு ஏற்றாற்போல விரதத்தைக் கடைப்பிடித்தால் பல பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இதுமட்டுமல்லாமல் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் வரும் உயர் ரத்த அழுத்தம், ஃபேட்டி லிவர் (Fatty Liver), பெண்களுக்கு ஏற்படும் PCOD போன்ற பிரச்னைகளும் விரதம் இருப்பதன் மூலம் கட்டுப்படும். அதேபோல, சொரியாசிஸ் போன்ற ஆட்டோ-இம்யூன் நோய்கள் இருப்பவர்களுக்கும் விரதம் மிக அருமையான பயன்களைத் தரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 8 Empty Re: உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum