புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_m10உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 1:34 pm

First topic message reminder :

உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு - Page 7 Healthy-food

விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன



தலைப்பைப் பார்த்தவுடன், ‘இதைத்தான் தினம்தினம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் பார்க்கிறோமே... நீங்க என்ன புதுசாச் சொல்லப்போறீங்க’ என்று நீங்கள் கேட்கலாம்.

* இந்த உணவைச் சாப்பிட்டால் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகும்!

* இதை எங்கே பார்த்தாலும் உடனடியாக வாங்கிச் சாப்பிடுங்கள்... உங்கள் வம்சத்துக்கே சர்க்கரை நோய் வராது!

* இந்த நான்கையும் அரைத்துச் சாப்பிட்டால் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், இதய பலவீனம் எல்லாமே சரியாகிவிடும்!

* இறைவனின் அரிய படைப்பான இந்த விதையை மட்டும் அரைத்துச் சாப்பிட்டால் 48 மணி நேரத்தில் புற்றுநோய் குணமாகிவிடும்!

வாட்ஸப்பைத் திறந்தாலே இப்படியான செய்திகள் வந்து கொட்டுகின்றன. எதையுமே யோசிக்காமல் இதையெல்லாம் பத்து குரூப்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டு, ஏதோ பெரும் சேவை செய்ததாகத் திருப்தி அடையும் வாட்ஸப் டாக்டர்கள் அதிகம் உண்டு நம்மிடையே!

உணவு பற்றிக் காலம் காலமாகப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்று யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு இளைஞர்கள் சவர்மா, பக்லாவா பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், சங்க காலக் கவிஞர்கள் ஊன்சோறு எனப்படும் பிரியாணி வரைகூட நிறைய பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவர்கூட, ‘சரியான உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை’ என்று சொல்கிறார். உடல் ஆரோக்கியமாக இயங்கவும், மனம் உற்சாகமாகச் செயல்படவும் உணவே அடிப்படையாக இருப்பதால்தான் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணவு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறோம். சமீப காலங்களில் அடுத்தடுத்து வந்து தாக்குகிற வைரஸ் நோய்களில் இருந்து மீளவும் தற்காத்துக்கொள்ளவும் ஆயுதமாகவும் கேடயமாகவும் இருக்கிறது உணவு. அதனால்தான் வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் வருகிற உணவு பற்றிய செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்புகிறோம்.

பிரச்னை என்னவென்றால், விழிப்புணர்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற இதுமாதிரியான செய்திகளில் பெரும்பாலானவை கற்பனையாகவும் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. அதுபற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்தத் தொடர்.

புதிது புதிதாக உணவுப்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கிரீன் டீ; இன்னொரு பக்கம் நாம் பார்த்தும் சுவைத்தும் அறிந்திராத வண்ண வண்ணப் பழங்கள்; வெளிநாடுகளிருந்து வந்திறங்கும் ஓட்ஸ், பெனோவா, கிரனோலா போன்ற பேக்கிங் உணவுகள்; புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள் என உணவு, உணவு சார்ந்த பொருள்கள் சந்தைகளில் விதவிதமாகக் குவிகின்றன. இவற்றைப் பற்றி வசீகரமாகவும், ஆரோக்கியம் பற்றிய ஆசை அல்லது அச்சத்தைத் தூண்டும் விதத்திலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இன்னொரு தரப்பினர், மரபு சார்ந்த நம் பாரம்பர்ய உணவுகளைத் தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களும், ‘இந்த உணவில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது’, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் வராது’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் நவீன உணவுகள், இன்னொரு பக்கம் பாரம்பர்ய உணவுகள்... இவற்றைப் பற்றி வெளிவரும் செய்திகள் உண்மைதானா என்று அறிவியல்பூர்வமாக அலசி ஆராய்வதும் இந்தத் தொடரின் நோக்கம்.

‘டாக்டர், சரியோ தவறோ... எல்லாமே உணவுகள்தானே! அவற்றைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உணவு ஒரு நோய்க்கு மருந்தாகும் என்ற நம்பிக்கையில், அது மருந்தாக இல்லாவிட்டாலும்கூட சாப்பிடுவதால் எந்த பாதிப்புமில்லைதான். பிரச்னை எங்கேயென்றால், ஒரு நோய் இருக்கிறது. அதற்காக மருந்து சாப்பிடும் ஒருவர், அந்த மருந்தையே கைவிட்டுவிட்டு இந்த உணவுக்கு மாறுவது கண்டிப்பாக உடலியக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மலை விளிம்பில் தொங்கியபடி உயிர்ப் போராட்டம் நடத்தும் ஒருவர், வலுவான கிளையை விட்டுவிட்டு செடியைப் பிடித்துக்கொண்டு தப்பிக்க நினைப்பது போன்ற அபத்தம் இது!

நம் உடல் பற்றிய கற்பிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கூடுதலாக ஒரு உணவை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறார். அதற்காக புதிய உணவுப்பழக்கத்துக்கு மாறுகிறார் என்றால் பெரிய பாதிப்பு இல்லை.

தீவிரமான இதய நோய் இருக்கும் ஒருவர், வாட்ஸப்பில் ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இதய நோய் குணமாகிவிடும்’ என்று ஒரு தகவலைப் பார்க்கிறார். அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயாமல் நோய்க்கு இதுவரை எடுத்து வந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு வாட்ஸப்பில் வந்த பரிந்துரையைப் பார்த்துப் புதிய உணவு அல்லது டயட்டுக்கு மாறுகிறார் என்றால், அவர் விபரீதமான பாதையில் செல்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை, அந்த உணவோ டயட்டோ அந்த நோயைக் குணமாக்கும் தன்மை கொண்டிருந்தால் பிரச்னையில்லை. அவை அந்த நோய்க்கு பலனளிக்காமல்போனால் அவரது இதயநோய் தீவிரமாகலாம். இறப்புகூட நேரலாம்.

சிலர், தான் கேள்விப்பட்ட, படித்த செய்திகளை எல்லாம் மற்றவர்களுக்குப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியாக நோய் குணமாகும் என்று சில உதாரணங்களையெல்லாம் சொல்லி மற்றவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிடுவார்கள். எதையும் தன்னளவில் பரிசீலித்துப் பார்க்காமல் மற்றவர்களுக்கு அள்ளிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினர்தான் இருப்பதிலேயே ஆபத்தானவர்கள். இது மிகப்பெரிய சமூகப் பிரச்னை.

உதாரணத்துக்கு நாட்டுச் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம். ‘வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்கள். நாட்டுச்சர்க்கரை எவ்வளவு சாப்பிட்டாலும் எதுவும் ஆகாது. ஐந்து டீஸ்பூன் போட்டு டீ குடிக்கலாம்’ என்று ஒரு கருத்து நம் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

வெள்ளைச் சர்க்கரை கொஞ்சம் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது; நாட்டுச் சர்க்கரை சற்று இயற்கையானது என்பதைத்தவிர, சுக்ரோஸ் என்று சொல்லப்படுகிற மூலக்கூறு இரண்டிலும் ஒரேயளவுதான் இருக்கிறது. பாலீஷ் செய்யப்படுவதுதான் வித்தியாசம். ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் வெள்ளைச் சர்க்கரை 100 சதவிகிதம் கெடுதல் என்றால் நாட்டுச் சர்க்கரை 90 சதவிகிதம் கெடுதல். இதுதான் உண்மை.

இதுமாதிரி பல உணவுப்பொருள்கள் பற்றி மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவையே மருந்தாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் இதைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

நம் உணவு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், இப்போது பயிற்றுவிக்கப்படுகிற உணவுப்பழக்கங்கள், நம்பிக்கைகள், டயட்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பது தெரியவரும். உணவு என்பது, உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கான சக்திக்கும் உதவும் பொருள். அவ்வளவுதான்.

கற்கால மனிதர்களுக்கு உணவு என்பது ஆடம்பரம். தினம் தினமெல்லாம் அவர்களுக்கு உணவு கிடைக்காது. காட்டுக்குப் போய் உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடினால்தான் உணவு. அல்லது விலங்குகள் நடமாடும் காட்டில் கிழங்குகள், பழங்களைத் தேடித் திரிந்து பறித்துவந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் தேடல்தான். அன்று உணவு கிடைக்கவில்லையென்றால் பட்டினி. ‘இந்த உணவு விஷம்; இந்த உணவைச் சாப்பிட்டால் உயிர் போகாது’ என்ற அளவில்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கான தேடல்தான் மனிதர்களை நாகரிகமடையச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் வேளாண்மையைக் கண்டறிந்தார்கள். ஆற்றங்கரையோரங்களில்தான் அறிந்த உணவுகளைத் தன் தேவைக்கு விளைவித்துக்கொண்டார்கள்.

இப்போது உணவில் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட முடிகிறது. உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு கப்பலில் வந்திறங்குகின்றன. உலகத்தின் வகைவகையான உணவுகள் நம் வீட்டுக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன.

அடித்தட்டு மக்கள் முதல் ஆடி காரில் பயணிப்போர் வரை எல்லோருமே உணவு விஷயத்தில் தேடல் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்ய இங்கே விதவிதமான உணவுகள் இருக்கின்றன. யூடியூபில் வரும் வீடியோக்கள் தினம் தினம் புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்கின்றன. இந்தச் சூழலில் உணவு குறித்த சரியான விழிப்புணர்வு ரொம்பவே முக்கியம்.

இன்னொரு பக்கம், ‘இதெல்லாம் நம் பாரம்பரிய உணவுகள். இதைச் சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் பலசாலிகளாக இருந்தார்கள்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுப் பரிந்துரைக்கப்படும் பல உணவுகள் எளிய மக்கள் வாங்கமுடியாத விலையில் இருக்கின்றன.

உணவு என்பது தனி மனிதர்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது. புதிதாக ஒரு சமையல் எண்ணெய் அறிமுகமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது இந்த இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகும், இதயத்தைப் பாதுகாக்கும்’ என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. அதனால் மக்கள் அதைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால், அந்த எண்ணெய் தயாரிப்பதற்கான விதை இந்தியாவில் விளைவதில்லை என்றால் இன்னொரு நாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். நம் நாட்டில் கிடைக்கும் வளங்களையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவதால் நம்மூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம். அந்நியச் செலாவணி இழப்பு இன்னொரு பெரிய பாதிப்பு.

இந்தியாவில் 135 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். அதற்கான உணவுச்சந்தை என்பது பிரமாண்டமானது. அதேபோல உணவைச் சார்ந்த மருத்துவச் சந்தையும் மிகப்பெரியது. உணவுக்குப் பின்னால் மிகப்பெரிய வணிகமும் சர்வதேச அளவிலான அரசியலும் இருக்கிறது. அதனால் உணவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

‘ட்ரெயிலர் எல்லாம் ஓகே... படம், பார்க்கும்படி இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இந்தத் தொடரில் எதையெல்லாம் பேசப்போகிறோம் என்பதை இந்த இடத்திலேயே சொல்லிவிடுகிறேன். இது நல்லது, இது கெட்டது, இது ஆரோக்கியமானது என்று எதையும் ஒற்றை வரியில் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போவதில்லை. உணவு குறித்த நம்பிக்கைகள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

சர்க்கரை நோய் ஏன் சிலருக்கு வருகிறது; ஏன் சிலருக்கு வருவதில்லை; அந்த நோயின் உண்மையான இயல்பு என்ன; எந்தெந்த உணவில் சர்க்கரை நோய்க்கான ஊக்கிகள் அதிக அளவில் இருக்கின்றன; எவற்றையெல்லாம் குறைவாக உட்கொண்டால் சர்க்கரையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்?

புதிது புதிதாக உப்புகள் அறிமுகமாகின்றன. பொதுவாக உப்பில் என்னதான் இருக்கிறது?

எண்ணெய்களில் என்ன இருக்கிறது; அவற்றை உட்கொள்வதால் என்ன பயன்; என்ன இழப்பு?

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப்பொருள்களையும் பகுத்தறியப்போகிறோம். நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த புரட்டுகளையும்கூட நாம் பேசலாம். உணவின் அறிவியலை மட்டுமல்ல, வரலாறு, புவியியல், கணிதம், அரசியல் என எல்லாவற்றையும் பேசுவோம்.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். குழந்தைகள் நலன், வாழ்வியல் நோய்கள், உணவுப்பழக்கங்கள் குறித்து சர்வதேச இதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். இயல்பிலே உணவு குறித்துத் தேடல் கொண்ட இவர், உடல் பருமன், சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, குழந்தையின்மை போன்ற நோய்களை உணவுமுறை மூலமாகவே கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கிவருகிறார். சர்வதேச அளவில் உணவு அறிவியல், அரசியல் குறித்து மருத்துவர்களுக்கான பல்வேறு மாநாடுகளில் உரையாற்றியுள்ள இவர், பொதுவெளியில் இருக்கும் உணவு பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்.


விகடன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:15 am


இமாலயன் இந்துப்பில் பொட்டாசியம் இருப்பதால், அது ரத்த அழுத்தம், தசைப் பிடிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையையும் சேர்த்துக் குறைக்கிறது என்று சொல்லப்படுகிறது. உப்பில் பொட்டாசியம் இருப்பது சரிதான். ஆனால் பொட்டாசியத்தால் கிடைக்கும் பயன்களெல்லாம் உப்பு சாப்பிட்டால் கிடைத்துவிடுமா என்ற கேள்வி முக்கியமானது. ஒரு கிலோ இந்துப்பில் வெறும் மூன்றரை கிராம் அளவுக்குத்தான் பொட்டாசியம் இருக்கிறது. நாம் தினசரி சமையலில் இரண்டு ஸ்பூன், அதாவது சுமார் 10 கிராம் அளவிற்கு உப்பு சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 10 கிராம் இந்துப்பில் வெறும் 33 மில்லி கிராம்தான் பொட்டாசியம் இருக்கும். ஆனால் நம் உடலின் தினசரி பொட்டாசியத் தேவை, கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லி கிராம். நமக்கான பொட்டாசியத் தேவை உப்பு மூலமாகக் கிடைக்கவேண்டும் என்றால் இமாலயன் இந்துப்பை தினமும் 1 கிலோ வரை எடுத்துக்கொள்ள வேண்டும். வெறுமனே பொட்டாசியம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறோமே தவிர, அதில் எந்த அளவுக்கு அந்த சத்து இருக்கிறது என்று கணக்கிடுவதில்லை.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எலும்புக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. முன்பு சொன்னது போல ஒரு கிலோ இந்துப்பில் 4 மில்லி கிராம் அளவுக்குத்தான் கால்சியம் இருக்கிறது. மெக்னீசியம் ஒரு மில்லி கிராமுக்குக் குறைவாகவே இருக்கிறது. தேவையான அளவு கால்சியத்தைப் பெற ஒன்றே கால் கிலோ உப்பும், மெக்னீசியத்தைப் பெற இரண்டு கிலோ உப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை.

இரும்புச்சத்தின் கதை இன்னும் காமெடியானது. ‘ரத்தச்சோகை இருப்பவர்கள் எல்லாம் இந்துப்பு சாப்பிடுங்கள்’ என்பார்கள். நம்முடைய தினசரி இரும்புச்சத்தின் தேவை 10-15 மில்லி கிராம். ஆனால் ஒரு கிலோ இந்துப்பில் இருக்கும் அளவு வெறும் 0.5 மில்லி கிராம் மட்டுமே. எனவே, தேவையான அளவு இரும்புச்சத்தைப் பெற நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய இந்துப்பின் அளவு 20 கிலோ.

அதிர்ச்சியாக இருக்கிறதா? இந்துப்பில் தாதுப் பொருள்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. நாம் சேர்க்கும் இரண்டு ஸ்பூன் உப்பால் மட்டும் அனைத்து சத்துகளும் கிடைக்கப்போவதில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் மற்ற உணவுகள் மூலமாகவே இந்தச் சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. எனவே, ‘இந்தச் சத்துக்காக இந்த உப்பைப் பயன்படுத்துகிறேன்’ என்று சொல்வது அறிவியலுக்குப் புறம்பானது.

இந்துப்பு வயதாவதைத் தடுக்கிறது, நுரையீரலைப் பாதுகாக்கிறது என்பதெல்லாம் போகிற போக்கில் ‘மானே... தேனே...’ என்று அடித்துவிடப்படுவைதான். ‘‘எனில், அனைத்து உப்புகளும் ஒன்றுதானா’’ என்று நீங்கள் கேட்கலாம். இங்கு இதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்கவேண்டி இருக்கிறது.

உப்பைப் பற்றிப் பேசும்போது அயோடின் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. அந்தக் காலத்தில் அயோடின் தட்டுப்பாடு மிகவும் பரவலாக இருந்தது. அதனால் ‘காய்ட்டர்' என்று சொல்லக்கூடிய தைராய்டு சுரப்பி வீக்கமடையும் பிரச்னையும் மிக சகஜமாக ஏற்படும். குறிப்பாக வட இந்தியாவில், அதுவும் இமயமலைப் பக்கம் வசிக்கும் மக்களுக்கு இந்தத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. மேலும் அயோடின் தட்டுப்பாடு இருக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘கிரெட்டினிஸம்' (Cretinism) என்ற பிரச்னையோடு பிறந்தன. மலைப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே ஏற்பட்டது. நம்மூர் மண்ணைவிட இமயமலைப் பகுதியில் உள்ள மண்ணில் இயற்கையாகவே அயோடின் அளவு குறைவு. அதனால், சாதாரணமாக சாப்பிடும் உணவின் வழியாக அவர்களுக்குப் போதிய அளவு அயோடின் கிடைக்காமல்போவதால் ‘காய்ட்டர்' பிரச்னை அதிக அளவில் ஏற்பட்டது. ஆனால், தென்னிந்தியாவில் இந்தப் பிரச்னை அதிகம் கிடையாது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 12:16 am

சரி, இப்போது ‘எந்த உப்பு நல்லது’ என்ற கேள்விக்கு வருவோம். இதை நாம் நிறைய கோணங்களில் இருந்து அணுக வேண்டும். கல்லுப்பு, இமாலயன் இந்துப்பு போன்றவை நல்லது என்று சொல்லப்பட முக்கிய காரணம், அதில் உள்ள மற்ற உப்புச்சத்துகள். அந்தக்கூற்று உண்மையா என்று அலசுவோம்.

இங்குள்ள மண்ணில் போதிய அளவு அயோடின் இருப்பதால், இங்கு விளையும் தாவரங்கள் மூலமாக நமக்குத் தேவையான அளவு அயோடின் கிடைத்துவிடுகிறது. 1931-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலேயே இதெல்லாம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அயோடின் குறைபாட்டைப் போக்க உடலுக்கு எதன்மூலமாக அந்தச் சத்தை அளிக்கலாம் என்று ஆராயப்பட்டு, இறுதியில் உப்பில் சேர்த்து அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. Iodized உப்பை நாம் பயன்படுத்துவதன் காரணம் இதுதான். இதனால் ‘காய்ட்டர்' பிரச்னை வெகுவாகக் குறைந்துள்ளது. அதுவும் சில ஊர்களில் 50%-ல் இருந்து 5% என்ற அளவுக்குக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இதோடு இன்னொரு விஷயத்தையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நம் தைராய்டு ஹார்மோனில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்று அயோடின். அதன் உற்பத்திக்கும் அயோடின் தேவை மிகவும் அவசியம். மக்கள் தினசரி எந்த அளவுக்கு உப்பைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டு அதற்கேற்பவே உப்பில் அயோடின் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு கிராம் உப்பு சாப்பிட்டால் அதில் 45 மைக்ரோ கிராம் அயோடின் சத்து நமக்குக் கிடைக்கும். ஒரு நாளுக்குத் தேவையான அயோடின் அளவு 150 மைக்ரோ கிராம். இதை நாம் 3 கிராம் உப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கான தேவை இவ்வளவுதான். இது நமக்கு அரை ஸ்பூனிலேயே கிடைத்துவிடுகிறது.

இங்குதான் பிரச்னை ஆரம்பமாகிறது. மூன்று கிராம் உப்பு தேவைப்படும் இடத்தில் நாம் 4-5 ஸ்பூன் போட்டு உணவை வெளுத்துக் கட்டுகிறோம். இப்போது அயோடின் தட்டுப்பாட்டால் ஏற்படும் தைராய்டு பிரச்னைகளைவிட ‘Auto-immune தைராய்டு' என்ற பிரச்னை அதிகமாகிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில், தைராய்டு பிரச்னை என்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கூறுவது இதைத்தான். இந்த ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக அயோடின் சேர்த்துக்கொள்வது முக்கியக் காரணங்களுள் ஒன்று. உப்பில் அயோடின் சேர்த்து சாப்பிடுவதால், அயோடின் தட்டுப்பாட்டால் ஏற்படும் பிரச்னையின் எண்ணிக்கை 50%-ல் இருந்து 5% ஆகக் குறைந்துள்ள அதே நேரத்தில், இந்த ‘Auto-immune disease’ 3%-ல் இருந்து 9% சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.


இதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?


தமிழகத்தில் Non-iodized உப்பு விற்பனை செய்யத் தடை உள்ளது. இதுகுறித்து அரசு நிறுவனங்கள் சற்று யோசித்து இதைச் சமநிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அயோடின் உள்ள உப்பை சுமார் 5 கிராம் வரை பயன்படுத்திக்கொண்டு, கூடுதல் தேவைக்கு அயோடின் இல்லாத உப்பைப் பயன்படுத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் நமக்குத் தேவையான அடிப்படை அயோடினும் கிடைத்துவிடும். ‘Auto-immune’ நோய்கள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளலாம். இதுபற்றி மருத்துவத்துறையினர் யோசிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. மற்றபடி உப்பைச் சேர்த்துக்கொள்ளாமலும் இருக்க முடியாது. மிதமான அளவு சேர்த்துக்கொள்வது நம் உடல்நலத்திற்கு நல்லது.



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2023 12:38 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:23 am

உப்பு பற்றி விரிவாகப் பார்த்தோம்.

இப்போது இன்னொரு முக்கியமான உணவுப்பொருளைப் பற்றிப் பார்க்கலாம். பால், நாம் காலங்காலமாகப் பயன்படுத்திவரும் உணவு. பாலூட்டி இனங்கள் அனைத்தும் தாய்ப்பாலை நம்பியே வளர்கின்றன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பால் பற்றி இங்கே நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. அதை ‘வெள்ளை விஷம்' என்று ஒரு தரப்பினர் கூற, இன்னொரு தரப்பினர் அதை ‘அமிர்தம்' என்கின்றனர்.

தவிர, பாலில் நிறைய கலப்படம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். A1, A2 என்றெல்லாம் ஏதேதோ கணக்கீடுகளைச் சொல்கிறார்கள். சிலர் ‘நாட்டுப்பசுவின் பாலே நல்லது' என்கிறார்கள். சிலர் ‘எருமைப் பாலில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன' என்கிறார்கள். இன்னும் சிலர், ‘ஒட்டகப் பாலில் நிறைய இன்சுலின் இருக்கிறது', ‘ஆட்டுப் பாலில் நுண்சத்துகள் நிறைந்திருக்கின்றன' என்றெல்லாம் சொல்கிறார்கள். சில பகுதிகளில் ஒரு லிட்டர் கழுதைப் பால் 5,000 ரூபாய்க்குக்கூட விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.

இப்படி பால் குறித்து நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அதனால் அதன் அடிப்படையிலிருந்து நாம் அலசவேண்டியுள்ளது. மனிதனுக்குப் பால் என்ற உணவு உண்மையிலேயே தேவைதானா? மனிதன் தோன்றிய காலத்திலிருந்து பாலை உணவாக உட்கொண்டானா? இந்தக் கேள்விகளுக்கு முதலில் விடை தேடலாம்.

பாலூட்டி இனங்கள் தம் இரையைத் தாமே தேடி உண்ணத் தொடங்கும் வரை பாலையே பிரதான உணவாக உட்கொள்கின்றன. உணவை சுயமாகத் தேடத் தொடங்கியதும் தாய்ப்பால் அருந்துவதை நிறுத்திக்கொள்கின்றன. வேறொரு விலங்கின் பாலை வாழ்நாள் முழுவதும் ஓர் உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளும் ஒரே உயிரினம் மனிதன்தான்.

இதில் ஒரு முக்கியமான சுவாரஸ்யம் இருக்கிறது. வேறு எந்த விலங்குகளாலும், குறிப்பாக நமக்கு லிட்டர் கணக்கில் பாலைச் சுரந்துதரும் பசுவால்கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாலை அருந்தினால் ஜீரணம் செய்ய இயலாது. தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும் காலத்தைத் தாண்டியபிறகு எல்லா உயிரினங்களுமே பாலை ஜீரணிக்கும் திறனை இழந்துவிடும். காரணம், பாலில் இருக்கும் முக்கிய சர்க்கரைச் சத்து ‘லேக்டோஸ்.’ இந்த லேக்டோஸை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ‘லேக்டேஸ்' என்ற என்ஸைம் இருக்கிறது. பெரும்பாலான விலங்குகளுக்கு இந்த என்ஸைமை உற்பத்தி செய்யும் மரபணு, தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும் காலம் முடியும்போது செயலிழந்துவிடுகிறது. இதனால் பிற உணவுகளை மட்டுமே அந்த விலங்குகளால் சாப்பிட இயலும். மனிதர்களால் மட்டும் எப்படி வாழ்நாள் முழுக்க பாலை எடுத்துக்கொள்ள முடிகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். இதற்கு மனித இனத்தின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பேலியோலிதிக் காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதனின் எலும்புகள் மற்றும் டி.என்.ஏ-க்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சியில் மற்ற விலங்குகளைப் போலவே மனிதர்களுக்கும் இந்த ‘லேக்டேஸ்’ செயலிழந்து போகும் தன்மையே இருந்திருப்பது தெரியவந்தது. காலப்போக்கில் வாழ்நாள் முழுக்க லேக்டேஸ் செயல்படுமாறு மனித உடல் மாற்றமைடைந்தது. நவீனக் கற்காலம் என்று சொல்லக்கூடிய நியோலிதிக் காலம், அதாவது சுமார் 10,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் விவசாயம் பழகியபோது பல விலங்குகளைப் பண்ணைகளில் வளர்க்கத் தொடங்கினார்கள். அவை வெறும் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்பட்டன. ஆனால் அவை வளர நீண்ட காலம் ஆனது. அதனால் தேவைக்கேற்றவாறு அவற்றை உணவாக்கிக்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில் சில மனிதக் குழுக்கள் புதியதொரு முயற்சியை மேற்கொண்டார்கள். ‘மனிதனால் புற்களைச் சாப்பிட இயலாது. ஆனால் அந்தப் புல்லை உண்ணும் ஆடு மாடுகள் தம் குட்டிகளுக்குத் தேவையான அளவைவிட அதிகமாகப் பாலை உற்பத்தி செய்கின்றன. நாம் ஏன் அதைக் குடிக்கக்கூடாது’ என்று பரிசோதித்துப் பார்க்கிறான். பால் மனித உடலுக்கு சிறிது சிறிதாக ஒத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

இப்போது போல அந்தக் காலத்தில் மனிதன் உணவைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்தச் சூழலில் எந்தெந்த மனிதக் குழுக்கள் தங்களின் உணவில் பாலைச் சேர்த்துக்கொண்டார்களோ அவர்களுக்கு வருடம் முழுவதும் குறிப்பிட்ட அளவுக்கு சத்துகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. அதனால், பால் குடிப்பவர்களின் உயிர் பிழைக்கும் சதவிகிதம் இயற்கையிலேயே அதிகமானது. மற்ற உணவுகள் இருக்கின்றனவோ இல்லையோ, ஆடு மாடுகள் தரும் பாலைப் பஞ்ச காலங்களில் எடுத்துக்கொண்டு அவர்கள் உயிர் பிழைத்தார்கள். இதை ஆதரிக்கும் விதமாக மனித உடலில் சில மரபணு மாற்றங்கள் ஏற்பட்டன. உலகின் எந்தெந்தப் பகுதிகளில் மக்கள் அதிகம் பாலை எடுத்துக்கொண்டார்களோ அவர்களின் மரபணுக்கள் மட்டுமே இயற்கைத் தேர்வின்படி பெருகத் தொடங்கி அதிக காலம் உயிர் வாழ்ந்தார்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:25 am


அதுமட்டுமல்லாமல், உடலில் இருக்கும் ‘லேக்டேஸ்’ குறிப்பிட்ட காலத்தில் செயலிழந்து போகாமல், வாழ்நாள் முழுவதும் பாலை ஜீரணிக்கும் விதமாக மரபணு மாற்றம் நிகழ்ந்தது. இந்த மாற்றம் நிகழ்ந்த மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரித்ததால் நம்மால் எந்த வயதிலும் பாலை எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், இம்மாற்றம் உலகம் முழுக்க மாறுபட்ட அளவிலேயே நிகழ்ந்திருக்கின்றன. சுமார் 65 சதவிகித உலக மக்கள், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாலை ஜீரணிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சிறிய அளவு டீ, காபி மட்டுமே குடிப்பதால் இவை எதுவும் நமக்குத் தெரியவில்லை.

பெரும்பாலானவர்களுக்குத் தயிர், மோர் வடிவில் இல்லாமல் பாலாக 150 முதல் 200 மி.லி-க்கு மேல் எடுத்துக்கொண்டால் ஜீரணப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எம்.எஸ்.தோனியைப் போல ஒரு நாளுக்கு இரண்டு லிட்டர் பாலைக் குடிக்கும் திறன் சிலருக்கே இருக்கும். பிறருக்கு தினசரி அரை லிட்டர் பாலை ஜீரணிப்பதே கடினமான காரியம். முன்பு சொன்னதுபோல மிகக்குறைந்த அளவில் டீ, காபியை மட்டும் குடித்துவருவதால் பால் ஒத்துக்கொள்ளுமா இல்லையா என்றே நமக்குத் தெரிவதில்லை. எனவே, 65 சதவிகித மக்கள் இன்னமும் லேக்டோஸ் இன்டாலரன்ஸாகவே (Lactose intolerance) இருக்கிறார்கள்.

அந்த மரபணு மாற்றம் வெறும் 35 சதவிகிதத்தினருக்கு மட்டுமே நடந்திருக்கிறது. இந்தத் தன்மையும் உலகின் பல்வேறு இடங்களில் மாறுபடுகிறது. அதாவது 90 சதவிகித ஐரோப்பிய மக்களுக்குப் பாலை ஜீரணிக்கும் தன்மை இருக்கிறது. பழங்குடிகள் அதிகம் வாழும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது அப்படியே நேர்மாறாக இருக்கிறது. 200 மி.லி-க்கு மேலான பாலை சுமார் 65 சதவிகித மக்களால் ஜீரணிக்க முடியாது என்பதே உண்மை. பாலை மனிதனின் அத்தியாவசிய உணவாகக் கூறுவது தவறு. பாலை உணவாக எடுத்துக்கொள்ளத் தோதான மரபணு மாற்றங்களுக்கு மனித உடல் இத்தனை காலம் எடுத்திருக்கிறது.

பாலில் என்னென்ன சத்துகளெல்லாம் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

சர்க்கரைச் சத்தில் முக்கியமாக இருப்பது லேக்டோஸ். பசு, எருமைப் பாலைவிட தாய்ப்பாலில் இந்த லேக்டோஸ் அதிகம் உள்ளது. கொழுப்பு, புரதம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், தாய்ப்பாலைவிட பசு மற்றும் எருமைப் பாலில்தான் அதிகம். 100 மி.லி தாய்ப்பாலில் 1.2 கிராம் அளவே புரதம் இருக்கிறது. இதே பசு மற்றும் எருமைப் பாலில் 3.5 முதல் 4 கிராம் வரை புரதம் இருக்கிறது. கொழுப்பின் அளவு தாய்ப்பால், பசும்பால் இரண்டிலுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் எருமைப்பாலில் இரண்டு மடங்கு உள்ளது. இவை மட்டுமன்றி நிறைய நுண்சத்துகள், தாதுப்பொருள்களும் உள்ளன.

பால் எடுத்துக்கொள்ள நாம் கூறும் முக்கிய காரணம், கால்சியம். இச்சத்து தாய்ப்பாலைவிட பசு மற்றும் எருமைப் பாலில் நான்கைந்து மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இந்த அளவு இருந்தாலும், கால்சியத்தோடு சேர்த்து பாஸ்பரஸின் அளவு சரிபாதியளவில் இல்லாத காரணத்தால் ஒரு வயது வரையிலான குழந்தைகளால் அனைத்துக் கால்சியத்தையும் உபயோகிக்க இயலாது. குறைவான அளவில் இருந்தாலும் தாய்ப்பாலில் இருக்கும் கால்சியத்தைத்தான் குழந்தைகளால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவும் பலருக்குத் தெரியாது. எனவே, அரை லிட்டர் பாலைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அவர்களுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு.

பெரும்பாலான விலங்குகளின் 100 மி.லி பால் 65-67 கலோரிகளைக் கொண்டிருக்கிறது. தாய்ப்பால், மாட்டுப்பாலிலும் கிட்டத்தட்ட இதே அளவுதான். மேலும் பசுக்களில் பல்வேறு வகையான இனங்கள் உண்டு. அனைத்தும் ஒரே அளவையே கொண்டிருக்கின்றன. ஆனால் எருமைப்பால் இரண்டு மடங்கு அதாவது சுமார் 115 கலோரிகள் வரை கொண்டிருக்கிறது.

எருமைப்பால் குடித்துவிட்டு உடல் மந்தமாக இருக்கிறது என்று சொல்வதற்குக் காரணம், அதன் மூன்று மடங்கு அதிகமான கொழுப்பும், இரண்டு மடங்கு அதிகமான கலோரி சத்தும்தான்.

குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு பாலைக் கொடுக்கக்கூடாது. காரணம், இயற்கையில் நம்முடைய மரபணு, தாய்ப்பாலை மட்டுமே ஜீரணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் A1, A2 பாலைத் தொடர்புபடுத்தி நிறைய பேர் குழப்பிக்கொள்கிறார்கள். ‘‘பிறந்து மூன்று மாதங்களான குழந்தைக்கு நாட்டுப்பசுவின் பால்தான் சார் கொடுக்கிறேன், அதுவும் ஒற்றை மாட்டுப்பால்’’ என நிறைய பேர் ஸ்டைலாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொந்தப் பண்ணையிலேயே வளர்க்கப்பட்ட மாட்டின் பாலைக் கொடுத்தால் அது நமக்கு நன்கு ஒத்துக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். முதல் ஒரு வருடத்தில் அது அமிர்தமாகவே இருந்தாலும் மனித உடல் மாட்டுப்பாலை ஏற்றுக்கொள்ளாது. அதை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

லேக்டோஸ் இன்டாலரன்ஸ் இதற்கு முதல் காரணம். அதுதவிர, இன்னொரு காரணமும் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:27 am

பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) பற்றி நாம் அறிய வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் உள்ளன. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் மறைமுகமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 5-10% குழந்தைகளுக்கு பாலில் இருக்கக்கூடிய புரதங்களால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பசும்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைவாக இருப்பது, மலத்தில் ரத்தம் கலந்து போவது என நிறைய பிரச்னைகள் ஏற்படும். அதேபோல ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து, நிறைய குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும் நிலையும் ஏற்படலாம். எல்லோருக்கும் இப்படி ஆகும் என பயப்படத் தேவையில்லை. தாய்ப்பால் குடிக்காமல் தினமும் அதிகமாகப் பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இதுமாதிரியான பாதிப்புகள் வரலாம். குழந்தைகளுக்கு மாதக்கணக்கில் இரும்புச்சத்தை ஏற்றினாலும் பாலை நிறுத்தாதவரை இது சரியாகாது.

குழந்தைகள் நல மருத்துவர்கள் இதுமாதிரியான பிரச்னைகளை தற்போது அதிகம் சந்திக்கிறார்கள். தாய்ப்பாலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருந்தாலும், அதைக் குழந்தைகளின் உடல் முழுவதுவாக ஏற்றுக்கொள்ளும். பசும்பாலில் இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 5 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்து தேவை என்று சொல்கிறோம். தேவைப்படும் அளவை எடுத்துக்கொள்ள சுமார் 13 லிட்டர் பசும்பாலைக் குழந்தைகள் குடிக்கவேண்டும். இது சாத்தியமே கிடையாது. ஒன்றிரண்டு லிட்டர் குடித்தாலும் அது 10 சதவிகிதத்துக்குக் குறைவான அளவே. இதன் விளைவாக குழந்தைகளுக்கு தீவிர ரத்த சோகை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், பசும்பாலில் இருக்கும் அதிக அளவிலான கால்சியம், அதன் கொஞ்ச நஞ்ச இரும்புச்சத்தையும் கிடைக்காமல் செய்துவிடும். குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் இதுபோன்ற நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

இரண்டு வயது வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் கொடுக்கக்கூடாது என்பதே என் பரிந்துரை. பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 150-200 மி.லி பாலை எடுத்துக்கொள்வது நல்லது. சுமார் 10,000 ஆண்டுகளாகத்தான் நாம் பாலை உணவுப் பொருளாக எடுத்துவருகிறோம். அதற்கு முன்னர் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபணுவே நமக்குக் கிடையாது. கஷ்டப்பட்டு நிறைய பாலைக் குடிக்க எந்த அவசியமும் இல்லை.

‘பால் சார்ந்த மற்ற பொருள்களான தயிர், மோரை சாப்பிடலாமா' என்று கேட்டால் ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றே சொல்வேன். காரணம், பாலில் இருக்கும் லேக்டோஸ் சர்க்கரை, தயிரில் லேக்டிக் அமிலமாக மாறிவிடுகிறது. அதனால், தயிர், மோர் ஓரளவுக்கு ஜீரணமாகும். தீவிர லேக்டோஸ் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தயிர், மோரை ஜீரணிப்பதிலும் சிக்கல் ஏற்படும். மேலும் தயிரில் சில நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் வயிற்றின் நன்மைக்கும் அவை நல்லது. பாலைக் குடித்தவுடன் வயிறு பிரட்டுதல் தொடங்கி அதிக அளவில் ஏப்பம் ஏற்படுதல், நிறைய வாயு வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு லேக்டோஸ் இன்டாலரான்ஸ் இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் பாலை முடிந்த அளவுக்குக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. இவை அனைத்தும் பாலைப் பற்றிய பொதுவான விஷயங்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:28 am

எந்தப் பால் நல்லது?


உலகத்தில் ஓராண்டுக்கு 73 கோடி டன் பால் உற்பத்தியாகிறது என்று சொல்கிறார்கள். இந்தியாவே மிகப்பெரிய பால் உற்பத்தியாளர். கிட்டத்தட்ட 19 கோடி டன் பால் இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 85% பசுமாடுகளில் இருந்தும் 11% எருமை மாடுகளில் இருந்தும் தயாராகிறது. 2% ஆட்டுப்பால். ஒட்டகப்பால் 1.5%. இவைதவிர, கழுதைப்பால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் விலங்குகள் தரும் பாலும் மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்தப் பால் சிறந்தது என்று கேட்டால் அதற்குத் தெளிவான பதில் கிடையாது.

ஏனென்றால், ஆதிமனிதர்கள் தங்களுக்கு அருகில் வாழ்ந்த பாலூட்டிகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நம் மக்கள் ஆடு மாடுகளை வளர்த்தார்கள். அதனால் இங்கு அவற்றின் பால் குடிக்கப்படுகிறது. இமயமலைப் பகுதியில் யாக் என்ற பாலூட்டி விலங்கின் பால் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் ஒட்டகப்பால் குடிக்கிறார்கள். ஒவ்வொரு விலங்கின் பாலுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாக, ஒட்டகத்தின் பாலில் இன்சுலின் இருக்கிறது என்று டைப்-1 சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதைக் குடிக்கிறார்கள். அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒட்டகத்தின் பாலில் இன்சுலின் இல்லை. மேலும், இன்சுலினை வாய்வழியாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் அதைச் செயலிழக்கச் செய்துவிடும். அப்படி எடுக்கும் இன்சுலினால் எந்தப் பயனும் இல்லை.

கழுதைப்பாலில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அதில் ஆன்டி மைக்ரோபியல் (Anti-microbial) தன்மை ஓரளவு அதிகம் என்பதால் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது மட்டுமே கழுதைப்பாலின் சிறப்பு. பெரும்பாலும் நாம் பாலை நன்கு காய்ச்சியே பயன்படுத்துகிறோம் என்பதால் நமக்குக் கழுதைப்பால் அப்படியொன்றும் சிறப்பில்லை. ஆட்டுப் பாலை நிறைய குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆட்டுப்பாலில் ஃபோலிக் ஆசிட் (Folic acid) சத்து குறைவு. எனவே அதிகமாக ஆட்டுப்பால் எடுத்துக்கொண்டால் அது ஒருவித ரத்தசோகையை ஏற்படுத்தும். இதுபோல ஒவ்வொரு பாலிலும் பிரச்னைகள் இருக்கின்றன.

இரண்டாவது, ஆரம்பக்காலத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தில் கிடைத்த பாலைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று பால் மிகப் பெரிய வர்த்தகமாக மாறிவிட்டது. லூயி பாஸ்டர் என்பவர், பாலை டப்பாவில் அடைத்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம் என்பதைக் கண்டறிந்த பிறகுதான் உலகம் முழுக்க பலவிதமான பால்பொருள்கள் கிடைக்கத் தொடங்கின.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:28 am

பாலில் இன்னொரு முக்கியமான கேள்வி: A1 பால் குடிப்பதா, A2 பால் குடிப்பதா?


‘`A1 பால் குடிப்பது ஆபத்து, A2 பால் நல்லது' என்பது போன்ற வதந்திகள் சமீபத்தில் அதிகமாகியுள்ளன. A2 பால் என்ற பெயரில் சாதாரணப் பாலைவிட மூன்று நான்கு மடங்கு அதிக விலை வைத்துக் கடைகளில் விற்பனை செய்தார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை அறிய, A1, A2 என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பாலில் புரதங்கள் இருப்பது குறித்து நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். பாலில் 80 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடிய புரதம் கேசின் (Casein). இந்த கேசினில் 35% இருப்பது ‘Beta Casein’ என்கிற புரதம். இந்த ‘Beta Casein’ புரதத்தில் A1, A2 என்று இரண்டு வகை உண்டு. A1 வகையில் ‘Beta casomorphin-7’ என்று சொல்லக்கூடிய புரதம் இருக்கிறது. ‘அது மிக அரிதாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சர்க்கரை நோயையும் அலர்ஜிகளையும் தூண்டுகிறது... ஆட்டிசம் ஏற்படவும் காரணமாக இருக்கிறது' என்று 1992-ல் நியூசிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்தது. இதுதான் பல குழப்பங்களுக்கும் காரணம். இதற்குப் பிறகு, ‘பால் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும். பால் குடிப்பதும் விஷம் குடிப்பதும் ஒன்று' என்ற அளவுக்கு பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:29 am

உண்மையில் பால் அந்த அளவுக்கு விஷமாகுமா?


A2 என்பது புரதம் என்பதைத் தாண்டி ஒரு பிராண்ட். A2 என்பது நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம். A2 புரதம் நிறைந்த பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் மேற்கொண்டதுதான், மேலே நான் சுட்டிக்காட்டிய ஆராய்ச்சி முடிவுகள். தாங்களே செய்த ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்டு, தாங்கள் தயாரித்த A2 பாலை விளம்பரப்படுத்தினர். அதன்பிறகு இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த ஆராய்ச்சியின் முடிவும், குழந்தைகளிடையே சர்க்கரை நோயைப் பால் தூண்டுகிறது என்றெல்லாம் சொல்லவில்லை. ஐரோப்பாவின் ‘EFSA’ (European Food Safety Authority) என்ற இயக்கம், பால்மீதான மக்களின் இந்த அச்சம் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை நடத்தி 2009-ம் ஆண்டில் வெளியிட்ட முடிவுகள், ‘A1 புரதம் சாப்பிடுவது கெடுதல் ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை' என்று தெளிவாகச் சொல்லின. ‘EFSA’ மிகவும் நம்பகமான நிறுவனம். வேறு சில உணவுகள் குறித்தும் மிகவும் தெளிவான ஆராய்ச்சிகள் செய்து, எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் நடுநிலையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. அதன் ஆராய்ச்சியின் அடிப்படையில் A1 பால் கெடுதல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனினும் சிலர் ‘நான் இதை நம்ப மாட்டேன்' என்று சொல்லலாம். அப்படியானால் எந்தெந்த மாடுகளில் A1 மற்றும் A2 பால் இருக்கின்றன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலை நாட்டு மாடுகளின் பால் எல்லாமே A1 புரதம் கொண்டது என்றும், நம் நாட்டு மாடுகளின் பால் A2 புரதம் கொண்டது என்றும் நம்மில் சிலர் நம்புகிறார்கள். ஆனால் மேலை நாட்டு மாடுகளில் நாம் அனைவரும் அறிந்த ஜெர்சி மாடு A2 பாலே கொடுக்கிறது. ‘ஐயர்ஷயர்’ மற்றும் ‘HF’ மாட்டு இனங்கள்தான் A1 பால் கொடுக்கின்றன. நாட்டு மாடுகள் 98% A2 பால்தான் கொடுக்கின்றன. நம்மூரில் இருப்பவை பெரும்பாலும் கலப்பின மாடுகளே. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலரிடமும் பேசி, தகவல்களைச் சேகரித்தேன். மேலை நாட்டு மாடுகளுடன் நம்மூர் மாடுகள் இணைசேர்க்கப்பட்ட Cross-Breed வகைகளே இங்கு நிறைய இருக்கின்றன.

நம்மூரில் உள்ள 90% கலப்பின மேலை நாட்டு மாடுகளே A2 பாலைத்தான் கொடுக்கின்றன என்பதே அறிவியல் உண்மை. இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. எருமைப் பாலும் சுத்த A2 தான். அதில் A1 வகை இல்லவே இல்லை. எனவே, A2 என்று சொல்லிக்கொண்டு ஏதோவொரு நிறுவனம் நான்கைந்து மடங்கு விலை அதிகமாக விற்கும் பாலை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. A1 மற்றும் A2 இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

அப்படியும் சந்தேகம் தீராதவர்கள், கலப்பின மாடுகளின் பாலைக் குடிக்கலாம். அதில் 90% இந்த வகைதான் இருக்கிறது. அல்லது நாட்டு மாடு, எருமைமாட்டுப் பாலை எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பாலாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 150-200 மி.லி-க்கு மேல் பால் உட்கொள்ள வேண்டாம். அந்த அளவில் ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. A1, A2-க்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

பால் குடித்தால் கேன்சர் முதலிய பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று ஒரு காலகட்டத்தில் நம்பினார்கள். பாலில் Saturated கொழுப்பு இருப்பதால் மாரடைப்பும் ஏற்படலாம் என்று சொல்லப்பட்டது. இவையெல்லாம் தவறான கற்பிதங்கள் என்று ஆராய்ச்சிகளில் தெளிவாகி விட்டன. பாலில் இருப்பவை நல்ல கொழுப்புகளே என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பால் குடிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது என்றுகூட முடிவுகள் வந்தன. அதேபோல பக்கவாதம், சர்க்கரை ஆகியவற்றையும் பால் அதிகரிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும், 200 மி.லி அளவுக்கு தினமும் பால் குடிப்பவர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேநேரம் மிக அதிக அளவில் பால் குடிப்பவர்களுக்கு ‘Prostate cancer' ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம் என்று கூறப்பட்டாலும் அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் அதுவும் நிரூபணமாகவில்லை. அதனால் பாலை ‘வெள்ளை விஷம்' என்று சொல்வதிலும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறுவதிலும் உண்மையில்லை.

சாதாரணமாக தாய்ப்பாலில் ஹார்மோன் இருப்பதுபோல மாட்டுப்பாலிலும் அதன் ஹார்மோன்கள் இருப்பது இயல்புதான். அது மிகக்குறைந்த அளவில் மட்டுமே இருப்பதால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த ஹார்மோன்களால் நம் உடலில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 லிட்டர் பாலை நாம் குடிக்க வேண்டும். எனவே, பாலில் உள்ள ஹார்மோன்களால் உடல் பாதிப்படையும் என்பது உண்மையல்ல.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 30, 2023 12:29 am

பாக்கெட்டில் அடைத்து வரும் பால் பற்றிப் பார்ப்போம்.


பாக்கெட் பாலில் யூரியா கலக்கப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். பாலில் உள்ள சத்துகள், அது சார்ந்த அறிவியல் பற்றி மட்டுமே என்னால் தெளிவாக விளக்க முடியும். கலப்படம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. யூரியா கலந்தால் பால் அதன் இயல்பான சுவையில் இருக்குமா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அரசு நிர்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் இந்தக் கேள்விக்கு விடை சொல்லவேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்பது தெரிய வில்லை.

இறுதியாக, பால் என்பது அத்தியாவசிய உணவா என்று கேட்டால், உண்மையில் இல்லை. அது இல்லாமல் நாம் தாராளமாக உயிர் வாழலாம். பாலில் கிடைக்கக்கூடிய அனைத்து சத்துகளும் நமக்கு மற்ற உணவுகள் மூலமாக தாராளமாகக் கிடைத்துவிடுகின்றன. அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பால் கட்டாயமில்லை. ஆனால் சைவர்கள் சிறிதளவு பாலைச் சேர்த்துக் கொள்வது சில முக்கிய சத்துக்குறைபாடுகளைத் தடுக்கும். நனி சைவர்கள் (vegan) எனப்படும், பால்கூடச் சேர்த்துக்கொள்ளாத மக்கள் சில சத்துக்குறைபாடுகளுக்கு ஆளாவதற்குக் காரணம் பாலைச் சிறிதளவுகூடச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான்.

அதேபோல தயிர், மோரை தினமும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் தீமைகளும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களே!

Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக