புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_m10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_m10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10 
2 Posts - 6%
heezulia
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_m10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_m10காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 02, 2023 12:44 pm

காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு! Sea_beach
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!


விசாகப்பட்டினம்: கடல் அரிப்பு, உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு போன்றவை ஆந்திர மாநில கடற்கரைப் பகுதிகளை வெகுவாகத் தாக்கத்தொடங்கியிருக்கிறது.

வடக்கே ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரத்திலிருந்து தெற்கே நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தடா வரை நீண்டிருக்கும், 974 கிலோமீட்டர் நீளமுள்ள நாட்டிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை.

தேசிய கடற்கரை ஆய்வு மையம் வெளியிட்ட ஆந்திர மாநில கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த நிலை என்ற ஆய்வறிக்கை 28.7 சதவிகித கடற்கரைகள் அரிக்கப்பட்டுவருகின்றன.  21.7 சதவிகித கடற்கரைகள் நிலையாக உள்ளன. 49.6 சதவிகிதம் அதிகரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்களை அறிவியல்பூர்வமாகவும், புவியியல் ரீதியாகவும் கூறினால் வேறுவிதமாக இருக்கும். ஆனால், இதற்கு முக்கிய காரணம் மனித பேராசை மற்றும் இயற்கை சீற்றமே எனலாம்.

அலைகளின் சீற்றம், உலக வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, பனிப்பாறைகள் வேகமாக உருகுதல், புயல்கள் மற்றும் மனிதனின் பேராசை காரணமாக செய்யப்படும் கட்டுமானங்கள் மற்றும் வனப்பகுதிகளை அழிப்பது போன்றவை இதற்கான முக்கியக் காரணங்கள்.

உப்படா, விசாகப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் டெல்டா பகுதிகள், கிருஷ்ணபட்டினம் பகுதிகளில் கடல் அரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் சூறாவளியின் போது வேகமாக அடிக்கும் அலை காரணமாக கடல் அரிப்பு அதிகரிக்கிறது. அதற்கு உதவும் வகையில், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் அனைத்தும் அதுவும் கடற்கரையை ஒட்டி சில தொழிற்சாலைகளை அமைக்கும் போது, அது இயற்கையான மண் வளத்தை மாற்றிவிடுகிறது. இதனால், கடல் அரிப்பை அங்கு தடுக்க முடியாமல் போய்விடுகறிது.

கடலையொட்டி வண்டல் மண் வெளியேறும்போது இது மேலும் அதிகரிக்கிறது. துறைமுகங்கள் அமைத்தல், தொழிற்சாலைகளிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தல் போன்றவை கடலின் தன்மையை மாற்றுகிறது. இது கடல் அரிப்புக்கு கூடுதலாக உதவுகிறது.

காக்கிநாடா மாவட்டம் உப்படா பகுதி கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஓராண்டுக்கு 1.23 மீட்டர் நிலப்பகுதி கடலால் அரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடல்அரிப்பிலிருந்து நிரந்தர தீர்வைக் காண ஏராளமான கிராமங்கள் கடற்கரையோரம் காத்திருக்கின்றன. ஆனால், அதுவரை கடல் அரிப்பு காத்திருக்குமா என்று தெரியவரவில்லை.

பல சமயங்களில் அதிக அலை எழுந்து தங்கள் வீடுகளை கடல் அலை அடித்துக் கொண்டு செல்லும் போது, வெறுங்கையோடு வேறு இடங்களுக்கு இடம்பெயரும் நிலையில்தான் உள்ளனர் இந்த  கிராம மக்கள்.

தங்களது எதிர்காலம் பற்றிய ஆயிரம் கேள்விகளுடன் பலரும் இப்பகுதிகளில் அச்சத்தோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆந்திர பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் கடல்சார் துறையின் தலைவர் டாக்டர் பி சுனிதா கூறும்போது, ​​“கடலோர மண்டல மேலாண்மை (CZM) நடைமுறைகளை புறக்கணித்து, வளர்ச்சி, தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக கடற்கரைகளில் பல்வேறு கட்டுமானங்களை எடுத்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சதுப்புநில காடுகளை அழிப்பதும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளால் கடல் மாசுபடுவதும் இதற்கு மற்ற முக்கிய காரணிகளாகும். இதை கட்டுப்படுத்த, நாம் கடலோர மண்டல மேலாண்மை செயல்முறைகள், கடற்கரை ஊட்டச்சத்து, கடல் சுவர்கள் மற்றும் க்ரோயின்கள் கட்டுமானம் மற்றும் கடலோர பகுதிகளில் காடு வளர்ப்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடலோர அரிப்பு, புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை தீவிரமானவை. அவற்றை மிகக் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக