புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 6:27 pm

வடகொரியாவில் நடப்பது என்ன? - கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்...


விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர்.



கடும் உணவுப் பஞ்சம் நிலவும் ஒரு நாட்டில், அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டதாக இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என வம்படியாக அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது உணவுப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் வடகொரியா. அதிபர் கிம் ஜாங் உன், வறுமையில் வாடும் வடகொரிய மக்களைக் கண்டுகொள்ளாமல், தன் நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்குக் காட்டவே முயன்றுவருகிறார். என்ன நடக்கிறது வடகொரியாவில்?

செயற்கைக்கோள் புகைப்படங்கள்!



பல உணவுப் பஞ்சங்களைச் சந்தித்த நாடுதான் வடகொரியா என்றாலும், 1994 முதல் 1998-ம் ஆண்டு வரை அந்த நாடு கண்ட உணவுப் பஞ்சம் மிகக் கடுமையானது. அதில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மீண்டும் அப்படியான பஞ்சத்தை நோக்கித்தான் தற்போது அந்த நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது.

தன் அண்டை நாடான வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் கடும் உணவுப் பஞ்சம் குறித்து முதலில் வெளியுலகுக்குச் சொன்னது தென்கொரியாதான். 2021, 2022-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு, வடகொரியாவில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை விளக்கியிருக்கின்றனர் தென்கொரிய அதிகாரிகள். 2021-ம் ஆண்டைவிட 2022-ல் சுமார் 1,80,000 டன் அளவுக்கு உணவு உற்பத்தி குறைந்திருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்திருக்கிறது.

தென்கொரியாவின் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ., ``விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர். நாட்டில் அதிகரித்துவரும் விவசாயப் பிரச்னைகளுக்கு மத்தியில், இது ஓர் அவசரமான கூட்டம்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

எப்படி ஏற்பட்டது உணவுப் பஞ்சம்?



வறட்சி, வெள்ள பாதிப்பு, காலநிலை மாற்றம் போன்ற தீவிரப் பிரச்னைகளால் வடகொரியாவின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் அதிபர் கிம் ஜாங் உன் தேவையற்ற, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். “கொரோனா தொற்றுக்குப் பிறகு, தன் நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது வடகொரியா. இதனால் பிற நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. `உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவருவதால், பல நாடுகள் வடகொரியாமீது பொருளாதாரத்தடைகளை விதித்தி ருக்கின்றன. இதனால், வடகொரியாவுக்குக் கிடைத்துவந்த மனிதநேய உதவிகளும் குறைந்துவிட்டன. எனவேதான், தற்போது வறட்சியால் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது வடகொரிய அரசு’’ என்கிறார்கள் வடகொரியப் பிரச்னைகளை உற்றுநோக்கும் பத்திரிகையாளர்கள்.

வடகொரியாகடும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக வடகொரிய மக்கள் மக்காச்சோளத்தை வாங்கி உண்பதால், மக்காச்சோளத்தின் விலை 20% அதிகரித்துவிட்டது. தட்டுப்பாடு காரணமாக மற்ற உணவுகளின் விலையும் விண்ணை முட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்கொரியா, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அகதிகளாக வாழும் வடகொரிய மக்களின் மறுவாழ்வுக்கு வேண்டியதைச் செய்துவருகிறது `லிபர்ட்டி இன் நார்த் கொரியா’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தென்கொரியக் கிளையின் இயக்குநர் சோகீல் பார்க் (Sokeel Park), ``வடகொரிய மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருப்பதாக எங்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன’’ என அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார். இருந்தும், மக்கள் படும் அவதிகளையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதச் சோதனைகளை இடைவிடாமல் நடத்திவருகிறார்.

தொடரும் அணு ஆயுதச் சோதனைகள்!



2022-ம் ஆண்டில் மட்டும் சுமார் 70 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி 23 அன்றுகூட, கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய நான்கு சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து விண்ணில் ஏவியிருக்கிறது வடகொரியா. இதை, அந்நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுபோக, சொந்த நாட்டு மக்களையே அச்சுறுத்தும் சில சட்டங்களையும் வகுத்துவருகிறது வடகொரியா. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, `வடகொரிய மக்கள் யாரும் என்னுடைய மகளின் பெயரான `ஜு ஏ’ என்ற பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது. வைத்திருப்பவர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என கிம் சட்டம் கொண்டுவந்ததாகச் செய்திகள் வெளியாகின.

``மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல், ராணுவத்துக்கு அதிக அளவு பணம் செலவழிப்பதும், கடுமையான சட்டங்கள் விதிப்பதற்கு நேரம் செலவழிப்பதும்தான் தற்போது வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவுப் பஞ்சத்துக்கும் முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் தென்கொரியப் பத்திரிகையாளர்கள்.

கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Vikatan%2F2023-02%2F6a1e7004-06fa-4cf6-930f-dcbce3c0f1cc%2F63fd93cee57c8.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

இந்த நிலையில், வடகொரிய அரசு நாளிதழான Rodong Simmun, ``உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் உதவி கோருவது என்பது விஷ மிட்டாயை உண்பதற்குச் சமம். ஏகாதிபத்தியவாதிகள் நமக்கு உதவி செய்வதைப்போல பொறிவைத்து, நம்மை அடிபணியவைப்பதற்கும், நம்மிடம் கொள்ளையடிப்பதற்கும் முயல்வார்கள்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ``சில ஏகாதிபத்திய நாடுகள், உதவி செய்வதைப்போல மற்ற நாடுகளை அடிமைப்படுத்த முயல்வது உண்மைதான் என்றாலும், பஞ்சத்திலிருந்து மீள தற்போது வடகொரியாவுக்குக் கட்டாயமாக மற்ற நாடுகளின் உதவி தேவை’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

உலக நாடுகளின் உதவிகளை உதறித்தள்ளும் வடகொரியா, இந்தப் பெரும் பஞ்சத்திலிருந்து எப்படி மீளப்போகிறது என்ற கேள்விக்கான விடையை, காலம்தான் சொல்ல வேண்டும்!



விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக