ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ்

Go down

2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Empty 2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ்

Post by சிவா Sat Feb 18, 2023 8:01 pm


``சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி’’ - ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி



தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, ராஜபாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘அறிவோம் வரலாறு’ என்ற தலைப்பிலும், 'ஸ்டார்டப் டி.என்' (StartupTN) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ‘தடை அதை உடை' என்ற தலைப்பிலும் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், ``தமிழர்களுக்கென்று நம் வரலாறு முழுமைக்கும் பெரும் கனவு இருக்கிறது. ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்று நமது இலக்கியங்கள் சொல்கின்றன.

நமக்கு மிக அருகிலிருக்கும் கீழடி நகரமானது நாகரிகத்தின் தொட்டிலாக இருந்துள்ளது. இதன்மூலம் கீழடி நமக்குச் சொல்லும் செய்தி, எதையும் தொழில் நேர்த்தியோடு செய்யக்கூடிய வளமையும், ஆற்றலும் பொருந்தியவர்கள் தமிழர்கள் என்பதுதான்" எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ``வரலாறு என்பது தெரிந்தவற்றை மட்டுமல்லாமல் தெரியாதவற்றையும் சேர்த்து அறிவதே. நமது குடும்பப் பரம்பரை பற்றி அதிகமாக 150 ஆண்டுகளாக நான்கு அல்லது ஐந்து பரம்பரை வரை மட்டுமே அறிந்து கொண்டிருக்கும் நாம், 2500 ஆண்டுகள் முந்தைய திருவள்ளுவரை பற்றி அறிந்திருக்கிறோம். இதற்கான காரணத்தை சொல்லுவது தான் வரலாறு.

அசோகரின் காலத்திற்கும் 200 ஆண்டுகள் முன்பாக இந்தியாவில் முதன்முதலில் கல்லிலே எழுதப்பட்ட பெயர், அந்துவன் ஆகும். வரலாற்று நுண்ணறிவு, வரலாற்றின் அவசியம் தெரிந்த நிலமாக தமிழ்நிலம் இருந்தது. அந்துவன் நடுகல்லில் கால்கோள் என்ற ஒரு சொல் இருக்கிறது. அது இன்றளவும் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இல்ல விழாக்களின் போதும் கால்கோள் நட்டு தொடங்கி வைத்து ஆரம்பிப்பார்கள் என்பது வழக்கு.

உலகத்தில் உள்ள பழமையான எழுத்துகளில் பெண் எழுத்தாளர்கள் குறைவு. சம்ஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி. உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வியறிவு கொண்ட ஒரே மொழி தமிழ் தான். தமிழ் இலக்கியங்களில் அசாதாரணமான பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அது பெண்ணின் அறிவு, பெண் கல்வி, பெண் சமத்துவம் ஆகியவற்றை உணர்த்துவதாக இருக்கிறது. வரலாற்றிலிருந்து நீங்கள் கற்று கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. நமது வரலாற்றிலிருந்து தான் நமது வாழ்க்கையை தொடங்குகிறது" என பேசினார்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum