புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
Page 1 of 1 •
பூளை என்பது ஒரு செடி வகை, அதன் பூ - #பூளைப்பூ
சொல் பொருள்
ஒரு செடி வகை, அதன் பூ, பேப்பூளை, குரீஇப்பூளை, தேங்காய்ப்பூக் கீரை, சிறுபீளை, பூளாப்பூ, பூளைப்பூ (பீளைப்பூ), பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை, பூலாச்செடி, கண்ணுப்பீளை, சுண்ணாம்புக் கீரை
சொல் பொருள் விளக்கம்
பொங்கல் திருநாளில் காப்புக் கட்டுதல் முதலான சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பூளாப்பூ
இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் கற்பேதி என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் கண்பீளை என்றும் பெயர் உருவாயின
ஒருவர் நோயுற்ற கண்ணினராக இருந்தால், தூங்கும்போது அவரின் கண்களில் ஒருவித வெண்மையான பசை சுரக்கும். அது கண்களின் ஓர இடுக்குகளின் வழியாகப் பிதுக்கிக்கொண்டு ஒரு சிறு வெண்மையான உருண்டையாகத் தெரியும். அதனை இப்போது பீளை என்பர். அதுவே பூளை எனப்படும்.
முற்றின இலவங்காய் வெடித்து, அந்த வெடிப்புகளின் வெளியே வெண்பஞ்சு உருண்டையாக பிதுக்கிக்கொண்டு தெரியவரும். அதனை இங்கு #பூளை என்கிறார் பெரும்பாணாற்றுப் புலவர்.
மொழிபெயர்ப்புகள்
മലയാളം: ചെറൂളрусский: Эрва шерстистаяසිංහල: පොල්පලාதமிழ்: பூளைతెలుగు: పిండిదొండ中文: 绵毛白毛苋中文(简体): 绵毛白毛苋中文(繁體): 綿毛白毛莧
mountain knot-grass, woolly aerva, woolly illecebrum • Bengali: ছায়া chaya • Hindi: छाया chaya, गोरखबूटी gorakhbuti, गोरखगांजा gorakhganja, कपूरीजड़ी kapurijadi, खली khali, खरी khari • Kannada: ಬಿಳಿ ಹಿಮ್ಡಿ ಸೊಪ್ಪು bili himdi soppu • Konkani: तांडलो tamdlo • Malayalam: ചെറൂള cherula • Marathi: कापूरमाधुरी kapurmadhuri • Punjabi: bui-kaltan • Rajasthani: भूई bhui • Sanskrit: अश्मःभेदः ashmahabhedah, भद्र bhadra, गोरक्षगञ्जा gorakshaganja, पाषाणभेद pashanabheda, शतकभेदी shatakabhedi • Sindhi: bhui, jari • Sinhalese: polpala • Tamil: சிறுபூளை ciru-pulai, உழிஞை ulinai • Telugu: పిండిదొండ pindidonda
desert cotton, Javanese wool plant, kapok bush, pillow-weed, snow bush • Gujarati: બૂર bour • Hindi: सफेद बूई safed bui • Kachchhi: બૂર bour • Kannada: ದೊಡ್ಡ ಹಿಂಡಿ ಗಿಡ dodda hindi gida • Marathi: कल kal, खुल khul • Rajasthani: बूई bui • Tamil: சிமிலி cimili, பெரியபூளை periya-pulai • Telugu: మగబీర magabira, పెద్ద పిండి pedda pindi, పిండి కొండ pindi konda
ஆங்கிலம்
Aerua lanata, mountain knotgrass, Aerua javanica, kapok bush, desert cotton, Javanese wool plant,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணில்லொடு கருப்பை ஆடாது – பெரும் 83-85
நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,
wool plant, aerua எனப்படும் இந்தச் செடிவகை தமிழில் பூளை எனப்படுகிறது. கண்களின் ஓரங்களில்
படியும் பீளை என்ற ஒருவித வெண்ணிறக் கழிவுப்பொருளே பூளை. இது பூளைப்பூவைப் போல் இருப்பதால்
இப்பெயர் பெற்றது எனலாம். பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பூ சிறுசிறு உருண்டைகளால் ஆனது. ஒவ்வொரு உருண்டையும் மிகச்சிறிய வெண்மையான கடுகுபோன்ற பொருளால் ஆனது. எனவே இதனை வரகரிசிச் சோறுக்கு உவமிக்கிறார் பெரும்பாணாற்றுப்படைகாரார்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 192,193
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
இதன் சிறுதன்மையை நோக்கி, இதனைக்
குரீஇப்பூளை
என்கிறது மதுரைக்காஞ்சி (அடி 72)
பகைவரின் கோட்டை மதிலை வளைத்துப் போரில் ஈடுபடுவோர் உழிஞைப் பூவோடு
பூளைப் பூவையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொள்வர் என்கிறது பட்டினப்பாலை.
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
————————- ————————————
முனை கெட சென்று முன் சமம் முருக்கி – பட் 235-238
(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
—————————————- ——————————————————
பகைப்புலம் கெடும்படி சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து
இது வறண்ட வெட்டவெளியில் வளரும் என்கிறது புறநானூறு.
பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/20
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 235
என்கிற அடியால் பூளையில் பல்வேறு வகை உண்டு என அறிகிறோம். அவற்றைப் படத்தில் காண்க.
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 235
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன - பெரும் 84
நெடும் குரல் பூளை பூவின் அன்ன - பெரும் 192
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலி 138/9
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த - கலி 140/4
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை - அகம் 297/14
பூளை நீடிய வெருவரு பறந்தலை - புறம் 23/20
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய - அகம் 199/10
கோடை பூளையின் வாடையொடு துயல்வர - அகம் 217/5
சொரிதரு பூளை ஒத்திடுவர் சொல்லினே - சீறா:1814/4
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் - சீறா:4210/3
சேடல் நெய்தல் பூளை மருதம் - மது:22/69
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ - சிந்தா:7 1628/4
தீயின் முன் பூளை போலும் திடனின் முன் பொய்யும் போலும் - தேம்பா:14 117/2
வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை - தேம்பா:9 102/1
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் - தேம்பா:28 90/4
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் - தேவா-சுந்:407/1
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை - தேவா-சம்:2039/3
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் - தேவா-சம்:3258/1
பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் - 4.மும்மை:4 22/2
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை - நாலாயி:1343/1
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு - திருப்:113/9
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே - திருப்:122/3
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார - திருப்:245/6
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே - திருப்:648/7
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே - திருப்:730/8
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் - திருப்:979/15
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே - திருப்:1294/3
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே - வில்லி:29 54/3
பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன - உஞ்ஞை:40/333
புடை இடு பூளை பூ புறம் மடுத்து - உஞ்ஞை:56/19
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் - உஞ்ஞை:43/186
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் - வத்தவ:12/42
பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன் - பால:7 1/3
பூளை வீ புரை பனி புயற்கு தேம்பிய - பால:10 47/2
பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல் - பால-மிகை:9 35/2
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே - ஆரண்:12 59/4
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் - சுந்:13 25/3
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு - யுத்2:15 255/2
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி - யுத்4:32 17/4
பூளையே சூடுவானை பொருவும் மா முனிவன் போனான் - யுத்4-மிகை:42 22/4
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பூளை பூ வின் மருத்துவ பயன்கள்!
ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட தாவரங்களில் ஓன்று பூளைப் பூ. சிறு கண் பீளை. ‘பூளைப்பூ, ’#பொங்கல்_பூ’, ‘*சிறு_பீளை’ எனவும் இது பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
மழைக்காலம் முடிந்ததும் பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும். இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. மார்கழி மாதத்தில், அதாவது பொங்கல் நெருங்கும் சமயத்தில் இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். இலையைக் கண்ணாகவும், அதையொட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் கற்பிதம் செய்தே இதற்குச் ‘சிறுகண் பீளை’ என்று பெயர் வைத்துள்ளனர். பொங்கலுக்கு முதல் நாள், வீட்டு வாசல் நிலையில் சிறு கண் பீளைப் பூங்கொத்தைச் செருகி வைக்கும் பழக்கம் இன்றும் உண்டு. இச்செடியை ஒத்த இன்னொரு தாவரமும் உண்டு, அது பாடாண பேதி. சிறுகண் பீளையைப் போலவே கொஞ்சம் பெரிய இலைகளையும், பெரிய பூவையும் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் ‘பெருங்கண் பீளை’. இவற்றுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால்ஞ் இவை மூன்றுக்குமே சிறுநீரக நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை உண்டு. கல் கரைத்தல் மற்றும் நீர் பெருக்குதல் ஆகியவற்றுக்காக இம்மூன்று செடிகளையும் நமது தமிழ் சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இம்மூன்று செடிகளையுமே பொதுவாக, #பீளைப்பூ என ஒரே பெயரில்தான் அழைக்கிறார்கள்.
இம்மூன்று மூலிகைகளின் வேர்களுக்கும் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் தன்மை உள்ளது. பூ, தண்டு, இலை ஆகியவை சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இம்மூலிகைகளைச் சமூலமாக வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரைப் பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றன. சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்துஞ் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்ஞ் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டுஞ் கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
அக்காலங்களில் நாட்டு மருத்துவமும் செய்யுள் வடிவில் யாப்பிலக்கணம் சுத்தமாக
வந்துள்ளது , தமிழின் பெருமையை பறைசாற்றுகிறது.
வந்துள்ளது , தமிழின் பெருமையை பறைசாற்றுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|