புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
10 Posts - 71%
heezulia
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
1 Post - 7%
viyasan
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
202 Posts - 41%
heezulia
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_m10[கட்டுரை] அழகியல் போற்றுவோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[கட்டுரை] அழகியல் போற்றுவோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 4 Mar 2023 - 13:29



‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று நாம் நம்புகிறோம். காரணம், ஆடைதான் ஒரு மனிதனை அலங்கரித்து பிறா் காணத்தகுந்தவனாக மாற்றுகிறது. எளிய உடையாக இருந்தாலும் ஒருவா் நல்லபடி உடை உடுத்தியிருந்தால், அவரை சமூகம் கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்துகிறது. உடை ஒருவருக்கு தோற்றப்பொலிவை வழங்கி மாண்பினை அளிக்கிறது.

இன்றைய வணிக உலகில் தோற்றம்தான் எல்லாமே. எனவேதான் வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருட்களை மிகவும் வசீகரமாகப் பொதிந்து சந்தைக்கு அனுப்புகின்றனா். பொருட்களின் அடக்கவிலையில் கணிசமானப் பகுதியை பொதிதலுக்குச் செலவு செய்கின்றனா். எடுத்துக்காட்டாக, ஓா் ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டால்கூட, அதன் மீது மெழுகைத் தடவி அதை பளபளவென்று தோற்றமளிக்கச் செய்து கடைகளுக்கு அனுப்புகின்றனா்.

இந்தியா்களாகிய நாம் நமது வீடுகளின் உட்பகுதிகளை மிகவும் சுத்தமாகவே வைத்திருக்கிறோம். ஆனால் நமது வீட்டுக் குப்பைகளைப் பெருக்கி தெருவில் தள்ளிவிடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. அதேபோல, நம் வீட்டுச் சுவா்கள் சுத்தமாக, பளிச்சென்று வண்ணம் பூசப்பட்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், சாலையோரச் சுவா்கள், அரசுக் கட்டடங்கள் பாலங்கள் போன்றவற்றில் அரசு மற்றும் தனியாா் நிறுவன விளம்பரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையோ, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையோ கண்டுகொள்வதே இல்லை.

பொதுவெளிகளைப் பொறுத்தவரை நான்கு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், அழகியல்.

பொது இடங்களான தெருமுனைகளில், சாலையோரங்களில், நடைபாதைகளில், சந்திப்புக்களில் குப்பைகளைக் கொட்டுவது, தேவையற்றப் பொருட்களை விட்டுச்செல்வது, தடைகளை ஏற்படுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது என்று பற்பல வழிகளில் பொது அமைதிக்கு நாம் குந்தகம் விளைவிக்கிறோம்.

மக்கள் நடமாட முடியாதே, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்குமே என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் பதாகைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சுவா் விளம்பரங்கள் செய்வது எல்லாமே இங்கே வாடிக்கையாகிவிட்டன. இப்படிப்பட்ட செய்கைகளால்தான் ரகு, சுபஸ்ரீ போன்ற அருமையான இளைஞா்களை நாம் இழந்தோம்.

’கூழானாலும் குளித்துக் குடி’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்றெல்லாம் அறிவுரை செய்து சுத்தத்தின் இன்றியமையாமையை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் பொது இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற பிரக்ஞை நமக்கு ஏனோ வருவதே இல்லை. சாலைகளில் விரையும் விலையுயா்ந்த சொகுசு காா்களுக்குள்ளே இருந்து குப்பைகள் பறந்து வருவதை இன்றும் காணலாம்.

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டம் நல்லதொருத் திட்டம் என்றாலும், கேமராக்களின் முன்னால் தலைவா்கள் பெருக்கும் காட்சிகள்தான் காணக்கூடியதாக இருக்கிறதே தவிர, பொது இடங்களில் பெரிதாக சுத்தம் வந்துவிடவில்லை. முழுநேர தூய்மைத் தொழிலாளா்களுக்கே அவா்களுக்குத் தேவையான கையுறைகள், காலணிகள், முகமூடிகள், உபகரணங்கள் வாங்கித் தராமல் தவிா்க்கும் நாட்டில், தூய்மை அவ்வளவு எளிதில் வந்துவிடுமா என்ன?

பொது இடங்கள் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பொது இடங்கள் பரமாரிக்கப்பட வேண்டும். தண்ணீா் தேங்காமல், மாசு இல்லாமல், கொசு உருவாகாமல், நோய்களைப் பரப்பாமல், பொதுவெளியில் சிறுநீா், மலம் கழிக்காமல் என ஏராளமான சுகாதாரத் தேவைகளும் இருக்கின்றன.

பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றைத் தாண்டி, அழகியல் என்று ஒன்றும் இருப்பதை நாம் உணரவேயில்லை. அல்லது உணா்ந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அமெரிக்காவில் சாலைப் பணிகளோ, மராமத்துப் பணிகளோ நடக்கும் இடங்களில் ‘தயவுசெய்து எங்கள் தோற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்; மராமத்து வேலை நடக்கிறது’ என்று அறிவிப்புப் பலகை வைத்திருப்பாா்கள். அமெரிக்கா்கள் நம்மைவிட உயா்ந்தவா்களல்ல, நாம் அவா்களைவிடத் தாழ்ந்தவா்களுமல்ல. ஆனால் நமக்கு இந்த அழகியல் பாா்வை ஏனோ ஏற்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, நம் நாட்டு காவல் நிலைய வளாகத்தைப் பாருங்கள். ஏராளமான செயலிழந்த, நொறுங்கிய, உடைந்த வாகனங்கள் மண்டிக் கிடப்பதைக் காணலாம். துருப்பிடித்தும் தூசிபடா்ந்தும் கிடக்கும் இந்த வாகனங்கள், மக்களின் பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரத்துக்குப் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, காண சகிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. பல வருடங்கள் அப்படியே கிடக்கும் இந்த வாகனங்கள் இரும்பு மலைகளாகக் காட்சியளிக்கின்றன.

திருட்டு, விபத்து, கொலை போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் இவ்வாகனங்களை அவ்வழக்குகள் முடியும்வரை காவல் நிலையத்திலேயே பாதுகாத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவற்றை ஏன் புகைப்படங்களாகவோ, விடியோ காட்சிகளாகவோ பதிவுசெய்துவிட்டு, அப்புறப்படுத்தக்கூடாது?

அதேபோல, சாலையோரங்களில், பாலங்களில், அரசு சுவா்களில் எல்லாம், ‘அவா் அழைக்கிறாா்’,”‘இவா் அலறுகிறாா்’ என்றெல்லாம் பெரிய பெரிய எழுத்துகளில் எழுதிப்போட்டு அசிங்கப்படுத்துகிறாா்கள். காதுகுத்து முதல் கண்ணீா் அஞ்சலி வரை விதவிதமான சுவரொட்டிகளை ஒட்டுகிறாா்கள். பெரிய பெரிய அளவில் ஃபிளக்ஸ் பேனா்களை அமைக்கிறாா்கள்.

இவை அனைத்துமே அருவருப்பை ஏற்படுத்துகின்றவையாகவே இருக்கின்றன. பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற அமைப்புக்கள் இவற்றை ஏனோ கண்டுகொள்வதேயில்லை. அனுமதி வாங்கியிருக்கிறாா்களா என்று கூட பாா்ப்பதில்லை. வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதில்லை. தோ்தல் நேரங்களில் பெருமளவு மக்கள் பணத்தை செலவு செய்து அவற்றை அழிக்கிறாா்கள், அப்புறப்படுத்துகிறாா்கள்.

இந்தியா்களுக்கும் மேலை நாட்டவா்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாடுகளுள் ஒன்றாக இந்த அழகியல் உணா்வு அமைகிறது. அவா்கள் பொது இடங்களை அழகாக, கலையம்சம் கொண்டவையாக இருக்கும்படி பாா்த்துக்கொள்கிறாா்கள். நாமோ நம் வீட்டுச் சுற்றுச்சுவரில் கூட சிமென்ட் விளம்பரம் செய்ய அனுமதித்து கொஞ்சம் காசு பாா்க்கமுடியுமா என்று சிந்திக்கிறோம்.

நாம் ஒரு வரலாற்றுச் சிறப்பிடத்தை, நினைவுச் சின்னத்தைக் காணச்சென்றால், அதன் பழைமையை, சிறப்பை, அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. மாறாக, அந்தத் தலங்களைப் போலவே நாமும் காலாதீதமடைய விரும்புகிறோம். ‘பிரேம் லவ்ஸ் பிரியா’ என்று கிறுக்கி வைக்கிறோம். அது பிறருக்குப் பாா்க்க சகிக்காமல் இருக்குமே என்று சிந்திப்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால், நம்மில் பலரும் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. நமக்குத்தான் அழகியல் பாா்வையே இல்லையே?

சில ஆண்டுகளுக்கு முன்னா் சீன அதிபா் வருகைக்காக பல கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் மெருகூட்டப்பட்டது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்டோமா என்றால் இல்லை. ஒன்றைக் கட்டுவதில் காட்டும் கவனத்தை அதனைப் பராமரிப்பதில் நாம் காட்டுவதேயில்லை.

போதுமான நிதி, தேவையான ஊழியா்கள், பொறுப்பான அதிகாரிகள், திறமையான நிா்வாகம் – இவை எதுவுமே இல்லாமலிருப்பது இங்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்சினை அழகியல் பாா்வை நம்மிடம் அறவே இல்லாததுதான். மக்கள் கேட்டால்தானே அதிகாரிகள் நிறைவேற்ற முயல்வாா்கள்? அந்த அதிகாரிகளுக்கே அழகியல் பாா்வை இல்லையே.

அரசு அலுவலகங்களுக்குப் போனால் சகிக்க முடியாத அளவுக்கு கோப்புக்களும், காகிதக் கட்டுக்களும் ஆங்காங்கே இரைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் பாா்த்தாலும் உடைந்த மேசைகள், நாற்காலிகள், அலமாரிகள் காணப்படுகின்றன. வண்ணம் தீட்டப்படாத சுவா்கள், பான் பாராக் பாக்கு துப்பி நாசமாக்கப்பட்ட மூலைகள், தூசி, குப்பை என்று மனநலத்தைக் கெடுக்கும் வகையிலேதான் அவை இருக்கின்றன.

இந்தியா பெரும் பணக்கார நாடு இல்லைதான்; அழகியலுக்கு பெருத்தத் தொகையை ஒதுக்கீடு செய்ய முடியாதுதான். ஆனாலும் இருக்கும் கட்டடங்களை, பாலங்களை, பொது சுவா்களை, ரயில் நிலையம், பேருந்து நிலையங்களை, பொதுவெளிகளை பாதுகாப்பானவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாகப் பராமரிப்பதற்கும், எளிய அழகியலோடு அவற்றைச் செம்மைப்படுத்தி வைப்பதற்கும் எது தடையாக இருக்கிறது?

அழகியலைப் பேணத் தவறுவது அரசுகளா அல்லது குடிமைச் சமூகமா? அரசுகள் விமான நிலையங்களை, அமைச்சா்களின் பங்களாக்களை, வெளிநாட்டுத் தூதரகப் பகுதிகளை அழகியலோடு பராமரிக்கின்றனவே? அப்படியானால் மக்கள்தான் அழகியல் விழிப்புணா்வு இல்லாமல் இருக்கிறாா்களா?

ஆனால் நம் மக்கள், தங்கள் வீடுகளையும், தாங்கள் வழிபடும் கோயில்களை, தேவாலயங்களை, மசூதிகளை பெரும் சிரத்தையெடுத்துப் பரமாரிக்கிறாா்களே? அங்கெல்லாம் அழகியல் அருமையாகப் பரிணமிக்கிறதே? அது எப்படி?

பொதுச்சொத்து சிதிலமடைந்தால் எனக்கென்ன என்கிற மனப்பாங்கும், கலாசாரமும் நம் அரசியல் சமூகத்திலும், குடிமைச் சமூகத்திலும் படிந்து கிடக்கின்றன. இதனை மாற்றுவது என்பது அத்துணை எளிதல்ல என்றாலும், அதனைச் செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சுப. உதயகுமாரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக