புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆயிரத்தில் ஒருவன் Poll_c10ஆயிரத்தில் ஒருவன் Poll_m10ஆயிரத்தில் ஒருவன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:01 am

அது ஒரு சிறிய காடு.​ அங்கே கொய்யா மரம் ஒன்று இருந்தது.​ அதற்கு சற்றுத் தள்ளி சவுக்கு மரம் ஒன்றும் இருந்தது.

பறவைகளும்,​​ அணில்களும் கொய்யா மரத்தை நாடிச் சென்று பழங்களைத் தின்று பசி நீங்கி மகிழ்ந்துச் சென்று கொண்டிருந்தன.​ சவுக்கு மரத்தில் பழங்கள் இல்லாததால் அதனை நாடி எதுவும் செல்வதில்லை.

சவுக்கு மரம்,​​ கொய்யா மரத்தைப் பார்த்து,​​ ""நானும் காய்க்கிறேன்.​ நீயும் காய்க்கிறாய்.​ நீயோ சுவையானப் பழங்களாக்கி,​​ பசியுடன் வரும் பச்சைக் கிளிகள்,​​ குருவிகள்,​​ அணில்கள் போன்றவற்றுக்கு உணவாகக் கொடுக்கிறாய்.​ நான் கொடுப்பதில்லை. அப்படிக் கொடுப்பதால் உனக்கு என்ன பயன்?'' என்று கேட்டது.

அதற்கு கொய்யா மரம்,​​ ""பசியுடன் என்னை நாடி ​ வருபவர்களுக்கு என்னிடம் உள்ள பழங்களைக் கொடுத்து உதவுகிறேன்.​ நான் கொடுப்பது அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்து அல்ல.​ பயனை எதிர்பார்த்துக் கொடுத்தால் அது வியாபாரம்.​ எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதுதான் உதவி'' என்றது.

""உன்னிடம் வந்து உண்டு போவோர்க்கு நன்றி இருக்கும் என்று நான் நம்பவில்லை.​ நீதான் வருபவர்களுக்கெல்லாம் கொடுத்து உனது சக்தியை வீணே இழந்துக் கொண்டிருக்கிறாய்'' என்றது சவுக்கு மரம்.

""எல்லோருமே நன்றி இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.​ ஆயிரத்தில் ஒருவருக்காவது நன்றி இருக்கும்'' என்றது கொய்யா மரம்.

""எனக்கு நம்பிக்கை இல்லை'' என்று சொல்லிவிட்டு,​​ தன்னிடம் இருந்த காய்களை தரையில் உதிர்த்துக் கொண்டிருந்தது சவுக்கு மரம்.

ஒருநாள் ​ -

நீலன் எனும் நாய் தொலைவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குப் போவதற்காக அந்த வழியில் வந்துக் கொண்டிருந்தது.​ நீலன் தனது வீட்டிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டது.​ நேரம் போகப் போக பசி வருத்தியது.​ அதனால் நீலனின் நடை தளர்ந்தது.

"இந்தக் காட்டில் உண்பதற்கு எதுவும் கிடைக்காதே...​ என்ன செய்வது?' என்று கலக்கத்துடன் நடந்துக் கொண்டிருந்தது,​​ நீலன்.

அப்போது பச்சைக் கிளிகள் மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு உயரே பறந்துக் கொண்டிருந்தன.​ அதைப் பார்த்த நீலன்,​​ பக்கத்தில் பழ மரம் ஏதேனும் இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் ஒலி வந்த இடத்தை நோக்கி நடந்தது.

அந்தக் கொய்யா மரத்தை அடைந்த நீலன்,​​ மரத்தின் கிளைகளில் பழங்கள் நிறைந்து இருப்பதையும்,​​ கிளிகள் பறந்து வந்து உட்கார்ந்தும்,​​ அணில்கள் மரத்தில் ஏறி கிளைகளில் தாவியும் பழங்களை உண்டுகளிப்பதைப் பார்த்தது.

"என்னால் பறக்க முடியாது.​ மரம் ஏறவும் தெரியாது.​ என்ன செய்வது?' என்று ஏக்கத்துடன் கொய்யாப் பழங்களைப் பார்த்தது நீலன்.

கீழே நிற்கும் நீலனின் நிலையை உணர்ந்துக் கொண்ட கொய்யா மரம்,​​ அதன் பசிக்கு உதவிட எண்ணியது.

அப்போது,​​ காற்று சற்று வேகமாக வீசியது.​ உடனே பழங்கள் நிறைந்த தனது கிளைகளில் ஒன்றை அசைய வைத்து,​​ பழங்களை உதிர்த்தது கொய்யா மரம்.​ கொய்யாப் பழங்கள்,​​ நீலனின் அருகில் விழுந்தன.​ அந்தப் பழங்களை வயிறு நிறைய உண்ட நீலன்,​​ சற்று நேரம் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறி விட்டு பயணத்தைத் தொடர்ந்தது.

மாதங்கள் கடந்தன.

உறவினர் வீட்டில் தங்கியிருந்த நீலன்,​​ தன் ஊருக்குப் போவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டது.

கடுங்கோடை.​ மழை இல்லை.​ வறட்சியினால் மரங்கள் பட்டுக் கொண்டிருந்தன.

மற்ற மரங்களைப் போலவே அந்தக் கொய்யா மரமும்,​​ சவுக்கு மரமும் வேருக்கு நீர் இல்லாமல் செத்துக் கொண்டிருந்தன.

மரங்களின் நிலையைப் பார்த்து வருந்திக் கொண்டே நடந்துக் கொண்டிருந்த நீலனுக்கு அந்தக் கொய்யா மரத்தின் நினைவு வந்தது.

"கொய்யா மரம் எப்படி இருக்கிறதோ?' என்ற கவலையுடன் வேகமாக நடந்தது.

நீலன் கொய்யா மரத்தைப் பார்த்த போது,​​ அந்த மரத்தில் இருந்த இலைகளெல்லாம் கருகிக் கொட்டிவிட்டதால் மொட்டை மரமாக இருந்தது.​ அதன் கிளைகளும் பட்டுக் கொண்டிருந்தன.

"மரத்தில் உயிர் இருக்கிறதா?' என்று கால்களால் சுரண்டிப் பார்த்தது நீலன்.​ சுரண்டிய இடத்தில் பச்சை தெரிந்தது.​ எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குமிங்கும் ஓடிப் பார்த்தது நீலன்.

சற்று தூரத்தில் ஒரு சிறிய குட்டை இருந்தது.​ அதில் நீர் இருந்தது.​ அந்தக் குட்டையை அடைந்த நீலன்,​​ பக்கத்தில் கிடந்த குழியான ஓடு ஒன்றை எடுத்து,​​ அதில் நீரை ஏந்திக் கொண்டு போய் கொய்யா மரத்தின் வேரில் ஊற்றத் தொடங்கியது.

கொய்யா மரத்தின் அடியில் நீர் தேங்கி நின்றது.​ அதன் வேருக்கு நீர் இறங்கியதால் "சில்'லெனும் உணர்வு பெற்ற கொய்யா மரம்,​​ தன்னைப் பிழைக்க வைப்பதற்காகத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிக் கொண்டிருந்த நீலனைப் பார்த்தது.

""நண்பா! ​ நான் நல்ல நிலையில் இருந்த போது பலர் என்னை நாடி வந்து பல தடவைகள் பழங்களை உண்டு சென்றிருக்கிறார்கள்.​ இப்போது என்னிடம் பழங்கள் இல்லை.​ அதனால்,​​ அவர்களில் எவருமே இங்கே வருவதில்லை.​ உனக்கு ஒரே முறை தான் உதவி இருக்கிறேன்.​ நீயோ பெரும்பாடுபட்டு என்னைப் பிழைக்க வைத்திருக்கிறாய்.​ நீ மிகவும் நல்லவன்'' என்றது,​​ கொய்யா மரம்.

""நல்லவர் ஒருவர் வாழ்ந்தால் பலருக்கு நன்மை கிடைக்கும்.​ நீ நீண்ட நாள் வாழ வேண்டும்'' என்ற நீலன்,​​ ""எனக்கு நேரமாகி விட்டது,​​ புறப்படுகிறேன்'' என்றது.

அப்போது, ​​ திடீரென மேகம் கருத்தது.​ பெரும் காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது.​ மழை நீர் அந்தக் காட்டில் ஆறு போல் ஓடியது.​ உயிர் போகும் நிலையில் இருந்த மரங்களெல்லாம் உணர்வு பெற்று விழிக்கத் தொடங்கின.

""அருமை நண்பனே!​ நான் விரைவில் துளிர் விட்டு தழைத்து,​​ காய்க்கத் தொடங்கி விடுவேன்.​ உனக்காகப் பழங்களை வைத்துக் கொண்டு காத்திருப்பேன்...'' என்று நெகிழ்ச்சியுடன் கூறி,​​ நீலனுக்கு விடை கொடுத்தது கொய்யா மரம்.

""ஆயிரத்தில் ஒருவராவது நன்றியுடையவராய் இருப்பார் என்று நீ சொன்ன போது,​​ அதை நான் மறுத்துப் பேசியதற்காக வருந்துகிறேன்.​ நீ சொல்லியது உண்மை என்பதை இப்போது உணர்கிறேன்'' என்றது சவுக்கு மரம்.



ஆயிரத்தில் ஒருவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக