Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவணப்படமும் அவசரத் தடையும்
3 posters
Page 1 of 1
ஆவணப்படமும் அவசரத் தடையும்
எந்த ஒரு தடையும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதைவிட, அது குறித்த ஆவலை அதிகரிக்கும் என்பதுதான் அனுபவம் கற்றுத்தரும் பாடம். அதேபோல பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும், விற்பனைக்காகவும் உருவாக்கப்படும் பொய் பரப்புரைகள் முதலில் நிமிர்ந்து பார்க்க வைத்தாலும், கடைசியில் ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம்.
லண்டனின் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'இந்தியா - தி மோடி கொஸ்ட்டின்' (இந்தியா - மோடி கேள்வி) என்கிற ஆவணப்படம் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, 2002-இல் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது கோத்ரா மதக்கலவரத்தை கையாண்ட விதம் குறித்த ஆவணப்படம் அது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல முறை பலராலும், பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்ட பிரச்னைதான் அது. கீழமை நீதிமன்றத்தில் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு தீர்ப்பளித்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிரச்னையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிதான் பிபிசி-யின் ஆவணப்படம்.
சட்டை செய்யாமல் ஒதுக்கியிருந்தால் நீர்க்குமிழியாக மறைந்திருக்க வேண்டிய ஒன்று, ஊடகப் பரபரப்பு பெற்றதற்கு காரணம் ஆவணப்படம் வழங்கியிருக்கும் புதிய தரவுகளோ, வெளிவராத தகவல்களோ அல்ல. அவசரத்திலும் ஆத்திரத்திலும் பாஜக-வின் சமூக ஊடகப் பிரிவின் பதிவுகளும், அதைத் தொடர்ந்து அரசு விதித்த தடையும்தான் நம்பகத்தன்மையற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கின்றன.
மின்னல் வேகத்தில் தகவல்கள் பரவும் தொழில்நுட்ப யுகத்தில், தடையை அமல்படுத்துவது என்பது எளிதல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தடையை மீறி அந்த ஆவணப்படத்தை மாணவர்கள் மத்தியில் திரையிடுகின்றன. ஊடகங்களில் அதுகுறித்த செய்திகளும், கட்டுரைகளும் வெளிவருகின்றன. அதைத் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் கொதித்தெழ வைக்கும் எதுவும் பிபிசி செய்தி நிறுவன ஆவணப்படத்தால் ஏற்பட்டுவிடவில்லை.
பிரிட்டிஷ் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் நூற்றாண்டுகால பழைமையான செய்தி நிறுவனத்தின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், காலனிய மனோபாவத்துடன் தொடரும் அந்த நிறுவனம் குறித்து பிரிட்டிஷாருக்கே நம்பிக்கை இல்லை எனும்போது, உலக அளவிலான மரியாதை குறித்து விவரிக்கத் தேவையில்லை.
1987-இல் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு எதிராக பிபிசி நிறுவனம் நடத்திய பரப்புரைகளை அவர் சட்டை செய்யவே இல்லை. அதையும் மீறி தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.
1995-இல் இளவரசி டயானாவை வற்புறுத்தி ராஜகுடும்பத்திற்கு எதிராக பேசவைத்து பரபரப்பை ஏற்படுத்தியது பிபிசி. இரண்டாம் எலிசபெத் மகாராணி, அது குறித்து தான் எதுவும் பேசத் தயாராக இல்லை என்று மெüனத்தைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டின் பஷீர் என்கிற பத்திரிகையாளரைப் பயன்படுத்தி இளவரசி டயானாவை ராஜகுடும்பத்துக்கு எதிராக பேட்டியளிக்க பிபிசி வற்புறுத்திய தகவல் வெளிவந்தபோது, அந்த நிறுவனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
நார்மன் டெபிட் என்கிற பிரிட்டனின் முன்னாள் அமைச்சர், பிபிசி-க்கு வைத்த பெயர் போல்ஷ்விக் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன். 1986-இல் லிபியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த ஒருதலைபட்ச பிபிசி செய்திகள் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாயின.
1947 முதல் 2008 வரை தெற்காசிய அரசியல் குறித்தும், பொருளாதாரம் குறித்துமான பிபிசி-யின் செய்திகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகள் காணப்பட்டதை லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அலாஸ்டேர் பிங்க்கர்டன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம், பிபிசி-யில் காணப்படும் காலனிய மனோபாவம் என்பதை அவரது ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிங்ஆர்க் என்கிற இந்திய நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்த பிபிசி ஆவணப்படம் 'புலிட்சர்' விருது பெற்றது. அதனால் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டது. 2011-இல் அந்த ஆவணப்படம் புனைவு என்று தெளிவானபோது, பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்து தனது தவறை ஒப்புக்கொண்டது.
இவையெல்லாம்தான் பிபிசி செய்தி நிறுவனத்தின் தரமும், நம்பகத்தன்மையும். ஒருகாலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த நிறுவனம், இப்போது பொய் பரப்புரைகளுக்கான கருவியாக மாறிவிட்டது.
கடந்த 21 ஆண்டுகளில் பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகும், குஜராத் கலவரத்தையும், நரேந்திர மோடியையும் இணைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது முட்டாள்தனம். இப்போது இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்திய வம்சாவளி ஒருவர் பிரிட்டனின் பிரதமராகி இருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது காரணமாக இருக்கக் கூடும். 2024 தேர்தலில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான பரப்புரை முயற்சியாகவும் இருக்கலாம்.
மத்திய அரசு ஏன் அவசரப்பட்டு அந்த ஆவணப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்? ஒருவேளை, அந்த ஆவணப்படத்தால் கிடைக்கும் விளம்பரம், தனது வாக்குவங்கியை அதிகரிக்கக் கூடும் என்று பாஜக நினைக்கிறதோ என்னவோ, யார் கண்டது?
தினமணி
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: ஆவணப்படமும் அவசரத் தடையும்
- Code:
இவையெல்லாம்தான் பிபிசி செய்தி நிறுவனத்தின் தரமும், நம்பகத்தன்மையும். ஒருகாலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த நிறுவனம், இப்போது பொய் பரப்புரைகளுக்கான கருவியாக மாறிவிட்டது.
சென்சேஷனல் செய்தி -வியாபாரத்தை பெருக்க ஒரு உத்தி.
உதாரணமாக ஒரு சினிமா செய்தி --யு ட்யூபில்
- Code:
தனுஷ் மாட்டிக்கொண்டார் வசமாக நடிகை XXX இடம் .(நடிகை பெயர் தெரியவில்லை.பழைய செய்தி என்பதால்.)
கடைசியில் பார்த்தால் தனுஷ் அந்த நடிகை வீட்டில் வேலை செய்யும் வடநாட்டு வேலைக்காரர்.
நடிகை XXX ஒரு துணை நடிகை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: ஆவணப்படமும் அவசரத் தடையும்
மடியில் கனம் இல்லையென்றால் வழியில் என்ன பயம்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|